|
யாழில் பொலிஸார் இரவில் ரோந்து நடவடிக்கை: 22 பேர் கைது
யாழ் மாவட்டப் பொலிஸார் இரவு நேரத்தில் மேற்கொண்டுவரும் ரோந்து நடவடிக்கைகள் காரணமாக நீதிமன்றத்தினால் பிடியானை பிறப்பிக்கப்பட்டவர்களும் மற்றும் இரவு நேரத்தில் போதிய காரணங்கள் இன்றி நடமாடியவர்களும் கடந்த 6 ஆம் திகதிக்கும் 12 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட ஒரு வார காலத்தில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரீ குகணேசன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக யாழ். மாவட்டப் பொலிஸ் நிலையங்கள் தமது பகுதிகளில் இரவு வேளைகளில வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமின் டி சில்வாவின் பணிப்புரைக்கு ஏற்ப யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இரவு ரோந்து சேவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்ட சந்தேக நபாகள் 12 பேரும் போதிய காரணங்கள் இன்றியும் தம்மை அடையாளப்படுத்த முடியாதவர்கள் என சந்தேகத்தின் பெயரில் 22 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். கொடிகாமம் பொலிஸாரால் 4 பேரும் சாவகச்சேரிப் பொலிஸாரால் 2 பேரும் ஊர்காவற்துறைப் பொலிஸாரால் 8 பேரும் தெல்லிப்பழை பொலிஸாரால் 3 பேரும் பருத்தித்துறை பொலிஸாரால் 7 பேரும் நெல்லியடி பொலிஸாரால் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
_____________________________________________________________________________________________________________________________________
கிழக்கில் முன்னாள் புலிகள் கைது செய்யப்படவில்லை, தகவல் மாத்திரமே திரட்டப்படுகிறது - கருணா
மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர்களை கைதுசெய்யும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகியோர் தொடர்பில் விபரங்கள் மட்டுமே சேகரிக்கப்படுவதாகவும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அவ்வாறு யாரும் கைதுசெய்யப்பட்டிருந்தால் அது தொடர்பில் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் பிரதியமைச்சர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பிரதேசமான வடமுனை மற்றும் ஊத்துச்சேனை ஆகிய பிரதேசங்களுக்கு நேற்று விஜயம் செய்த பிரதியமைச்சர் முரளிதரன் அப்பிரதேச மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தினார். அண்மையில் இப்பகுதியை தாக்கிய சூறாவளி காரணமாக பலர் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவே பிரதியமைச்சர் அப்பகுதி விஜயம் செய்திருந்தார். இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்பாளரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளருமான ருத்திரமலர் ஞானபாஸ்கரன், இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன், குறித்த பகுதியின் வடமுனை கிராம சேவையாளர் எஸ்.ராகல் உட்பட பலர் கலந்துகொண்டனர். அச்சமயம் வடமுனைப்பகுதியில் சிவிலுடையில் படைப்புலனாய்வுத்துறையினரும் பொலிஸாரும் இணைந்து முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் தொடர்பில் விபரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் இதன் காரணமாக தாம் அச்ச நிலையில் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் பிரதியமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். “நேற்று காலை திடிரென அப்பகுதிக்கு வந்தவர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று அவர்கள் தொடர்பிலான விபரங்களை சேகரித்துள்ளதுடன் அவர்களை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறும் அழைத்துள்ளனர். இது எங்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது”. (மேலும்) 17.05.12
_____________________________________________________________________________________________________________________________________
பெருமையால் வந்த சிறுமை
எம். மணிகண்டன்
கிரேக்கம் என்றால் மாவீரன் அலெக்சாண்டரின் உலகைக் கைப்பற்றும் வேட்கையும், ஒலிம்பிக் போட்டிகளும்தான் நினைவுக்கு வரும். ஆனால், அதெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய் மெல்லப் போய்க்கொண்டிருக்கிறது. உலக நாகரிகத்தின் பிறப்பிடம் என்று மார்தட்டிக் கொண்டிருந்த அந்த நாட்டின் இன்றைய நிலை கேலிக்குரியதாகவும் பரிதாபகரமாகவும் மாறிவிட்டது. ஒலிம்பிக் தீப ஓட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி ஒலிம்பியா நகரில் கடந்த வாரம் நடந்தபோது அந்த நாட்டின் பெருமையையும் தாண்டிய கவலைகள் வெளிப்பட்டதைக் காண முடிந்தது. ஒருபுறம், 2600 ஆண்டுப் பழமைவாய்ந்த ஹீரா ஆலயத்தில் தலைமைக் குருபத்தினியாக நடிகை மேனகாகி நடிக்கும் நிகழ்ச்சியை உலகின் பெரிய ஊடகங்கள் அனைத்தும் அந்தத் தருணத்தைப் படம்பிடிக்க, மறுபுறம் சலுகைகளை இழந்த, வேலையில்லாத மக்கள் வீதியில் இறங்கிப் போராடிக் கொண்டிருந்தார்கள். தலைமை இல்லாமல் நிர்வாகம் ஸ்தம்பித்துக் கிடந்தது. கிரேக்கத்தின் தலைமை என்கிற முள்கிரீடத்தை யார் ஏற்கப்போகிறார்கள் என்கிற குழப்பம் உலகையே ஆக்கிரமித்திருந்தது. கிரேக்கத்துக்குப் பெருமையாக இருந்த அதே ஒலிம்பிக் போட்டிகள்தான் இந்த இழிநிலைக்கும் காரணமாகியிருக்கின்றன. பொருளாதார நிலையைப் பொருத்தவரை இந்த நூற்றாண்டு, கிரேக்கத்துக்கு மகிழ்ச்சிகரமாகத்தான் தொடங்கியது. அதன் பிறகுதான் கிரேக்கம் தாமாகச் சென்று வலையில் சிக்கியது. கடன் வாங்குவதும், வர்த்தகம் செய்வதும் எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, 2002-ஆம் ஆண்டில் தனது சொந்த நாணயமான டிராக்மாவைக் கைவிட்டுவிட்டு, யூரோவுக்குத் தாவியது. இதுதான் இப்போதைய பிரச்னைக்கு அஸ்திவாரம். (மேலும்) 17.05.12
_____________________________________________________________________________________________________________________________________
யுத்தத்தினால் முகமிழந்து போன கிராமம்
1956 ஆம் ஆண்டு ஒரு தனியாரால் அமைக்கப்பட்டதுதான் இந்த முருகமூர்த்தி ஆலயம் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் இத்தாவில் கிராமத்தில் உள்ள இந்த முருகன் கோவில் யுத்தத்தின் கொடூர விளைவுக்கு ஒரு சாட்சியாகவும் காட்சியாகவும் கானப்படுகிறது யுத்தம் இடம்பெற்ற காலத்ததில் இருதரப்பினர்களினதும் முன்னரங்க பகுதிகளாக கானப்பட்ட முகமாலை நாகர்கோவில் வேம்பொடுகேணி போன்ற கிராமங்களின் வரிசையில் இத்தாவிலும் ஒன்று. இருதரப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் கொடூரத்திற்கு இந்த இத்தாவில் முருகனும் ஒரு சாட்சி ஆனால் அதைவிட இந்த முருகனுக்கு பின்னால் இன்னுமொரு முக்கிய கதையும் உண்டு. முருகன் என்றால் இந்துக்கள் மனங்களில் நினைவுக்கு வருவது சிவபெருமானின் மகன்தான். ஆனால் ராஜீவ் காந்தி கொலைக்கு பின்னர் இந்துக்கள் மட்டுமல்ல இந்தியா உள்ளிட்ட தெற்காசியா தொடக்கம் ஓரளவுக்கு உலக நாடுகள் வரை நினைவுக்கு வருவது ராஜீவ் கொலை குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட வெற்றியின் மகன் முருகன். தமிழ் மக்களின் மனங்களில் இப்பொழுது சிவபெருமானின் மகனைவிட வெற்றியின் மகனே அதிகமதிகம் ஞாபகத்தில் இருக்கின்றார் இந்திய மக்களுக்கும் இது பொருந்தும் வெற்றி என்ற அந்த நபர் இந்த முருகமூர்த்தி ஆலயத்தில் தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என நேர்த்தி வைத்த பின்னர் பிறந்த குழந்தை என்பதால் அந்த முருகனின் பெயரையே வைத்துள்ளார்.இது சம்பவம். (மேலும்) 17.05.12
_____________________________________________________________________________________________________________________________________
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு புதிய அரச அதிபர்கள் பதவியேற்பு .
யாழ்ப்பாண அரசாங்க அதிபராக, மட்டக்களப்பு முன்னாள் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மட்டக்களப்பு அரசாங்க அதிபராக வவுனியாவின் முன்னாள் அரச அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸும் நேற்று புதன்கிழமை காலை பதவியேற்றனர்.யாழ்.மாவட்ட அரச அதிபராக நியமிக்கப்பட்ட சுந்தரம் அருமைநாயகம் நேற்றுக் காலை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.இவர் பதவியேற்கும் நிகழ்வும் யாழ்.மாவட்ட நலன்புரிச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.இதன் போது உரையாற்றிய யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ்ப்பாணத்தில் எழும் சாவல்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றேன். யாழ்.மாவட்டத்திற்கு அரச அதிபராக நியமிக்கப்பட்டதை நான் பெருமையாகக் கருதுகின்றேன்.யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டவன் என்ற வகையில் குடாநாட்டு புவியியல் சார்நிகழ்வுகளை விளங்கிக் கொண்டுள்ளேன். இந்த மாவட்டத்தில் அரச அதிபராக கடமையாற்றுவது என்பது மிகவும் வரப்பிரசாதம் என்றே நினைக்கின்றேன்.சர்வதேசத்தில் மிகவும் முக்கியம் பெற்று விளங்கும் யாழ்ப்பாணம் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. அந்த சவால்களுக்கு முகம் கொடுக்க நான் தயாராக இருக்கின்றேன்.இந்த மாவட்டத்தில் அபிவிருத்தி பெற்று விளங்கும் யாழ்ப்பாணம் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. அந்த சவால்களுக்கு முகம்கொடுக்க நான் தயாராக இருக்கின்றேன்.இந்த மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பேன். இதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றேன்.அனைத்து உத்தியோகத்தர்களும் ஒரு இலக்கை அடைவதற்காக முயற்சிக்க வேண்டும். அபிவிருத்தி தொடர்பாக நீண்ட கலந்துரையாடல்களை நடத்தி செவ்வனே செய்வதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன்’ என்று கூறினார். இதேநேரம், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிதாக நியமனம் பெற்று வந்த அரச அதிபர் திருமதி பி.எல்.எம்.சார்ள்ஸ் நேற்று மட்டக்களப்பு மாவட்ட கச்சேரியில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.கச்சேரி முன்றிலில் மேலதிக அரச அதிபர் கே.விமலநாதன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், உத்தியோகஸ்தர்கள் மற்றும் நலன்புரிச் சங்கத்தினரால் வரவேற்பளிக்கப்பட்டு சமய வழிபாடுகள் இடம்பெற்ற பின்பு தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
_____________________________________________________________________________________________________________________________________
மாண்புமிகு ஜனாதிபதி: ஓர் இந்திய கண்ணோட்டம்
என்.சத்தியமூர்த்தி
இந்தியாவில் ஜனாதிபதி தேர்தல் வந்தாலும் வந்தது, நாட்டின் பல்வேறு கட்சிகளின் உட்கட்சி விவகாரங்களும் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன. தேர்தல் முடியும் காலத்தில், அவர்களுடைய உட்கட்சி அழுக்குகள் எல்லாம் வெளியே அலசப்படும் என்றல்ல. ஆனால், அந்த உட்கட்சி விவகாரங்கள் ஒருசில கட்சிகளின் கட்டுக்கோப்பான 'இமேஜை' உடைத்து விடுமோ என்ற எண்ணம் உருவாகி வருகிறது. அப்படியே, நாட்டின் மிக உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவியையும் அவை பதம் பார்த்து விடுமோ என்ற பயமும் எழுகிறது. இந்தியாவின் ஜனாதிபதியாக ஆவதற்கு, முப்பத்தைந்து வயது நிரம்பிய நாட்டின் பிரஜை யாருக்கும் தகுதி உண்டு. ஆனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நாட்டின் அனைத்து மாநிலங்களின் சட்டப் பேரவைகளிலும் உள்ள உறுப்பினர்கள் பங்கெடுக்கும் தேர்தலில் வெற்றிபெற்றவரே ஜனாதிபதியாக முடியும். இது ஜனநாயக விதி, தேர்தல் விதிமுறை. அவ்வாறு ஜனாதிபதியாக பதவி ஏற்பவர் தன்னையோ, தான் சார்ந்திருந்த அரசியல் கட்சியையோ அல்லது தனது மாநிலத்தையோ மட்டும் பிரதிநிதித்துவப் படுத்துவது இல்லை. அவர் இந்திய திருநாட்டிற்கும், அதன் இறையாண்மைக்கும். மாட்சிமைக்கும் உயிரோட்டமுள்ள சின்னம், அடையாளம். ஆனால், ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தல் நேரத்திலும் நடப்பது என்ன? பெருமைக்கும் பெருமதிப்பிற்கும் உள்ள அந்த பதவியை அரசியல் கட்சிகள் கூறு போட்டு விற்கும் அளவிற்கு நிலைமை போய்விட்டது. அதுவும். கூட்டணி ஆட்சி என்று வந்த பிறகு, அனைத்து தரப்பினரையும் அனுசரித்து போகவேண்டும் என்ற பெயரில் அந்த அரும்பெரும் பதவி அரசியல் பேரத்திற்கான ஒரு கருவியாக மாறிவிட்டது. தற்போதைய சூழ்நிலையில், மத்தியில் ஆளும் கூட்டணியின் காங்கிரஸ் தலைமை, அதே அணியில் அங்கம் வகிக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனார்ஜியை எப்படி சரி கட்டி, ஜனாதிபதி தேர்தலில் அவரது ஆதரவை பெறுவது என்ற குழப்பத்தில் இருக்கிறது. மத்தியில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்த போதும் இதே நிலைமை தான் நிலவியது. (மேலும்) 17.05.12
_____________________________________________________________________________________________________________________________________
ஸ்ரீலங்காவில் போரினால் விதவையாக்கப்பட்ட பெண்கள் பாலியல் தொழிலுக்கு திரும்பியுள்ளார்கள்.
- பெய்சல் சமாத்
வரும் மே மாதம் 18 ந்திகதி, ஸ்ரீலங்காவின் வடபகுதியில் உள்ள ஏறத்தாழ சுமார் 800 வரையான பெண்கள், கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக இங்கு நடைபெற்ற ஆயுதம் தாங்கிய தமிழ் பிரிவினைவாத மோதலை துடைத்தழிக்கும் முயற்சி இடம்பெற்றபோது,காணாமற்போன அல்லது இராணுவத்திடம் சரணடைந்த தங்கள் கணவன்மார்களின் நலன்வேண்டி இந்துமதச் சடங்குகளை நடத்த இருக்கிறார்கள். “அவர்களின் கணவர்களைப் போன்ற அநேக தமிழ் ஆண்கள் இறுதி நாட்களில் நடந்த போரில் கொல்லப்பட்டிருந்தபோதிலும், இந்தப் பெண்கள் தொடர்ந்தும் தங்கள் கணவன்மார்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்”, என்று சொல்கிறார் ஸ்ரீலங்காவின் வடபகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மத்தியில் பணியாற்றிவரும் முன்னணி மனித உரிமைகள் செயற்பாட்டாளரான சிறீன் அப்துல் சறூர். “மறுபக்கத்தில் அவர்களுடைய துணைவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டாலும்கூட, தாங்கள் விதவைகள் என்பது வெளியே தெரியக்கூடாது என்றே அவர்கள் விரும்புகிறார்கள், ஏனெனில் அதன்விளைவாக சமூகத்தில் அவர்களைப்பற்றிய ஒரு எதிர்மறையான தோற்றம் உருவாகிவிடும் என்பதே அதன் காரணம்” என்று இன்டர் பிறஸ் சேவிஸ் (ஐ.பி.எஸ்) என்கிற சர்வதேச தகவல் தொடர்பு நிறுவனத்திடம் சறூர் விளக்கிக் கூறினார்.” அவர்கள் தங்களை தனித்து வாழும் பெண்கள் அல்லது குடும்பத் தலைமையை வழிநடத்தும் பெண்கள் என வெளிப்படுத்தவே விரும்புகிறார்கள்.மரபு வழக்கப்படி, இந்துக்கள் விதவைகளை அமங்கலமானவர்களாகக் கருதுவதுடன் இந்துசமயம் மறுமணத்துக்கு ஆதரவு வழங்குவதில்லை. ஸ்ரீலங்காவின் 20 மில்லியன் சனத்தொகையில் 12விகிதமான தமிழர்கள், பெரும்பாலும் இந்துசமயத்தை பின்பற்றி வரும் அதேவேளை சனத்தொகையின் 74விகிதமான சிங்களவர்கள் பௌத்தமதத்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்டுள்ளார்கள்.அரசாங்கத்தின் மதிப்பீடுகளின்படி, இனமோதல்கள் 59,000 பெண்களை விதவைகளாக்கியுள்ளது அவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். (மேலும்) 16.05.12
_____________________________________________________________________________________________________________________________________
சகலவித இனவாதத்தையும் நிராகரிக்கிறோம்: ஊடகங்களில் இனவாதம் தலைதூக்க இடமளிக்க வேண்டாம் - ஜனாதிபதி
தேசிய ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய சாதி, மத, பிரதேச பேதங்களை ஏற்படுத்தும் செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வேண்டுகோள் விடுத்தார். நேற்றுக் காலை அலரி மாளிகையில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடிய போது அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். இந்த சந்திப்பில், இலங்கையின் அனைத்து இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் தலைவர்கள் பங்கேற்றனர். பரஸ்பர நம்பிக்கையையும் நட்புறவையும் மக்களிடையே ஏற்படுத்தக்கூடிய செய்திகளை வெளியிடுவது மிகவும் அவசியமென்று ஜனாதிபதி கேட்டுக் கொண்டார். விசேடமாக பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்கள் மேற்கொள்ளும் வன்முறைகள் பற்றிய படங்களுடனான சிறிய செய்திகளை கூட பெரிதுபடுத்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டு மென்றும், இவ்விதம் செய்வது பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்களின் வன்முறைகளுக்கு மதிப்பளிக்கக்கூடியதாக அமையலாம் என்று ஜனாதிபதி மேலும் சுட்டிக் காட்டினார். “சிங்களவர்களாக இருந்தாலும் தமிழர்கள் அல்லது முஸ்லிம்களாக இருந்தாலும் அனைத்துவிதமான இனவாதத்தையும் நாம் நிராகரி க்கிறோம். இலங்கையில் எந்தவித இனவாத சக்திகளும் தலைதூக்க நாம் இடமளிக்க மாட்டோம்” என ஜனாதிபதி கூறினார். இலங்கையின் முன்னேற்றத்தையும் அதன் நல்லிணக்க நடவடிக்கைகளையும் இனவாதம் சீர்குலைத்துவிடுவதன் காரணமாக வானொலி, தொலைக்காட்சி அலைவரிசைகள், பத்திரிகைகள் ஆகியவற்றின் ஊடாக எந்தவிதத்திலும் இனவாத ஆக்கக்கூறுகள் தலைதூக்க இடமளிக்க வேண்டாமென அனைத்து ஊடக தலைவர்களையும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். இலங்கையிலிருந்து பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் இலங்கை வாழ் மக்கள் அனைவரும் சமாதானமாகவும், ஐக்கியமாகவும் வாழ்வதையே தான் பார்க்க விரும்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
_____________________________________________________________________________________________________________________________________
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவிய குற்றத்தை ஒப்புக்கொண்ட தமிழருக்கு விடுதலை
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆயுத கொள்வனவு முயற்சியில் ஈடுபட்டதாக தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேடிய பிரஜையான இலங்கைத் தமிழர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ரமணன் மயில்வாகனம் என்ற நபர் அமெரிக்க நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கனடா மற்றும் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ள புலிகள் அமைப்பிற்கு ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட ரமணன் மயில்வாகனம் என்பவருக்கு 15 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும் என அமெரிக்காவின் நீதித்துறை திணைக்களம் கோரியிருந்தது. இருந்தபோதிலும் தமது குற்றத்தை ஏற்றுக்கொண்டு மனந்திருந்தியுள்ள தமது தரப்பு வாதியான ரமணன் மயில்வாகனத்தை விடுதலை செய்யுமாறு அவரது வழக்கறிஞர் தமது வாதத்தை முன்வைத்திருந்தனர். இந்த நிலையில் ரமணன் மயில்வாகனம் ஏற்கனவே சிறையில் தடுத்து வைக்கப்பட்ட காலத்தை அவரின் தண்டனையாக கருதி விடுதலை செய்ய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி உதவி செய்த குற்றச்சாட்டில் கைதான கருணாகரன் கந்தசாமி என்ற அமெரிக்க பிரஜையும் கடந்த வாரம் நியூயோர்க் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
_____________________________________________________________________________________________________________________________________
குமுதினிப் படகுப் படுகொலையின் 27ஆவது ஆண்டு நிறைவு இன்றாகும்
யாழ்.குடாநாட்டைச் சூழவுள்ள சப்த தீவுகளில் ஒன்று நெடுந்தீவு. தீவகத்தில் வாழும் மக்கள் தமது பெரும்பாலான தேவைகளை நிறைவு செய்ய யாழ்.குடாநாட்டுடன் தொடர்புபட்டிருந்தனர். தீவையும் யாழ்ப்பாணத்துடன் தொடர்புபட்டிருந்த குறிகட்டுவானையும் பிரித்திருந்த 9 மைல் கடலாக இருந்தபடியால் தீவுக்கான அனைத்துத் தொடர்புகளும் கடல் மார்க்கமாகவே இடம்பெற்றன. பொது மக்களின் அன்றாட கடல் போக்குவரத்துக்கு குமுதினிப் படகே முக்கிய சாதனமாக இருந்தது. அவர்களது வாழ்வோடு இணை பிரியாத ஒன்றாக இருந்தது எனலாம். ஆனால் இன்று படுகொலையின் இரத்தச் சாட்சியாக வரலாறாகி நிற்கிறது இப்படகு. 1985 மே 15 காலை 7 மணிக்கு நெடுந்தீவு மாவிலி துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினிப் படகு அரைமணி நேர பயணத்தின் பின் இரு பிளாஸ்ரிக் படகுகளில் முக்கோண கூர்க்கத்திகள், கண்டங் கோடரிகள், இரும்புக் கம்பிகள் சகிதம் ஆயுதம் தாங்கி வந்த சீருடை தரித்தவர்களால் வழிமறிக்கப்பட்டது. இதன்பின் ஈவிரக்கமின்றி கத்தியால் குத்தியும் கோடரிகளால் வெட்டியும் அவர்கள் கொல்லப்பட்டனர். குற்றுயிரானவர்கள் குரல் எழுப்ப முடியாது இறந்தவர்கள் போல் கிடந்தனர். பயணிகளில் சிலர் கடலில் பாய்ந்து தப்பிக்க முயன்றனர். அவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவ்வாறான வெறித்தனமான தாக்குதலின் பின் காயமடைந்தோர் புங்குடுதீவு வைத்தியசாலை, யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களைத் தேடி அந்த வன்முறையாளர்கள் சாட்சிகளை அழித்திட மேற்படி வைத்தியசாலைகளில் அலைந்ததும் உண்டு. ஏழு மாதக் குழந்தை முதல் வயோதிபர்கள் வரை ஈவிரக்கமின்றி நடுக்கடலில் படுகொலை செய்யப்பட்டமை குறித்து இதுவரை இந்த ஜனநாயக(?) நாட்டில் உரிய நீதி கிடைக்காது வருடாவருடம் அந்த அப்பாவி மக்களை நினைவுகூருவது மட்டுமே யதார்த்தமாகியுள்ளது.
_____________________________________________________________________________________________________________________________________
கூட்டமைப்பு பங்கேற்க்காவிட்டால் தெரிவுக்குழுவுக்கு ஜ.தே.க. வராது
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை எட்ட அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பங்கேற்கச் செய்வதற்கு அரசு முழு முயற்சிகளை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தெரிவுக்குழுவில் பங்கேற்று தீர்வை எட்டுவதற்கு அரசுக்கு ஒத்துழைக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரில் தெரிவித்தார். அத்துடன் 13ஆவது அரசியல் திருத்தச்சட்டத்தை உடன் நடைமுறைக்குக் கொண்டுவருமாறும் ஜனாதிபதியிடம் அவர் கோரினார்.தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்காக பொது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்பது தொடர்பிலும், அதற்குச் சாதகமான சூழலை உருவாக்குவதற்கான ஒழுங்குப் பத்திரமொன்றைத் தயாரிப்பது தொடர்பிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு சிறந்த களம் எனவும், அதில் அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்கவேண்டுமெனவும் அரசு தொடர்ந்தும் அழைப்பு விடுத்து வருகின்றது. அந்த வகையில் நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டிய கடப்பாட்டில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பாரிய பொறுப்புள்ளது. அதனால் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்கவேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அக்கட்சிக்குப் பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டது. . (மேலும்) 16.05.12
_____________________________________________________________________________________________________________________________________
பிரெஞ்சு அதிபராகப் பதவி ஏற்றார் ஹொலாந்த்
பாரீஸ், மே 15: உலகிலேயே ஐந்தாவது பெரிய வல்லரசான பிரெஞ்சு நாட்டின் அதிபராக பிரான்ஷுவா ஹொலாந்த் (57) தலைநகர் பாரீஸில் செவ்வாய்க்கிழமை பதவியேற்றார். 1995-ம் ஆண்டுக்குப் பிறகு சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் இப்போதுதான் மீண்டும் அதிபராகியிருக்கிறார். அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான எலிஸி மாளிகைக்கு ஹொலாந்தும் அவருடைய சிநேகிதி வலேரி திரியர்வெய்லரும் வந்தபோது பதவியிலிருந்து விலகும் நிகோலஸ் சர்கோஸியும் அவருடைய மனைவி கார்லா புரூனியும் வரவேற்றனர். வலேரிக்கு கார்லா முத்தம் தந்தார். வெளிநாட்டுத் தலைவர்கள் யாரும் இல்லை: பதவியேற்பு விழா மிகவும் எளிமையாகவும் சுருக்கமாகவும் நடந்தது. வெளிநாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. அதே சமயம் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த அனைத்து தரப்பாரும் வந்திருந்தனர். பதவி ஏற்பு முடிந்ததும் பிரெஞ்சு நாட்டின் அணு ஆயுதங்கள் பற்றிய தகவல்களையும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான ரகசிய சமிக்ஞைகள் அடங்கி ஆணைத் தொகுப்புகளையும் புதிய அதிபரிடம் ஒப்படைத்தார் சர்கோஸி. பிறகு சர்கோஸியையும் அவருடைய துணைவியாரையும் ஹொலாந்தும் வலேரியும் கார் வரை அழைத்துச் சென்று வழியனுப்பிவைத்தனர். சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள், தேவாலயங்களின் திருச்சபை உறுப்பினர்கள், பிரெஞ்சு அரசின் நிர்வாகிகள் என்று ஏராளமானோர் திரண்டிருந்த கூட்டத்தில் பதவியேற்று முடித்ததும் ஹொலாந்த் உரையாற்றினார். (மேலும்) 16.05.12
_____________________________________________________________________________________________________________________________________
விடுதலைப் புலிகளுக்கு இந்தியா உதவியது: இலங்கை அதிகாரி
கொழும்பு, மே 14: 1980-களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சிக்கு இந்தியா உதவியதாக இலங்கையின் உயர் அதிகாரி தெரிவித்தார். மூத்த பத்திரிகையாளர் சி.ஏ.சந்திரபிரேம எழுதிய "கோத்தபயவின் போர்' என்கிற புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி கொழும்பு நகரில் திங்கள்கிழமை நடந்தது. இதில் இலங்கையின் மிக மூத்த அதிகாரியும் அதிபரின் செயலருமான லலித் வீரதுங்க கலந்து கொண்டு பேசினார். புத்தகத்தில் இடம்பெற்றிருந்த விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறித்துப் பேசிய அவர், ""1987 ஜூன் மாதத்தில் "பூமாலை நடவடிக்கை' மூலமும், இந்திய-இலங்கை ஒப்பந்தம் மூலமாகவும் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவதை இந்தியா தடுத்து நிறுத்தியது'' என்றார். 1980களில் இந்திய உளவுத்துறையின் நிர்பந்தம் காரணமாக முக்கியக் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவரை இலங்கை அரசு விடுவிக்க நேர்ந்தது என்றார் வீரதுங்க. எனினும் 2008-ல் மகிந்த ராஜபட்ச ஆட்சிக்கு வந்தபிறகு இலங்கை மீதான இந்தியாவின் அணுகுமுறையில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது. இலங்கை அதிகாரிகளுடன் இந்தியா அவ்வப்போது பேச்சு நடத்தியதால், 2006 முதல் 2009 வரையிலான போரை இலங்கை ராணுவம் வெற்றிகரமாக நடத்தியது என்று வீரதுங்க மேலும் தெரிவித்தார்.
_____________________________________________________________________________________________________________________________________
சிரியா மீது ஐரோப்பிய யூனியன் புதிய தடை
பிரஸல்ஸ், மே 14: ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சிரியா மீது திங்கள்கிழமை புதிய தடையை விதித்தனர். அந்நாடு போர்நிறுத்த உடன்பாட்டை கடைப்பிடிக்கவில்லை எனில் சிரியா அரசுக்கு எதிராக மேலும் நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிரியாவுக்கு எதிராக தடை விதிக்க 27 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் ஒப்புக் கொண்டதாக ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. இரண்டு நிறுவனங்களின் சொத்துகளை முடக்கியுள்ளதுடன், அந்நிறுவனங்களுக்கு விசா வழங்குவதற்கும் தடைவிதித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சிரியாவுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் விதிக்கும் 15-வது தடையாகும். சிரியாவில் போர்நிறுத்த உடன்பாடு முழுமையாக அமல்படுத்தப்பட வில்லை என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹெகு தெரிவித்தார். சிரியாவில் கொலைகளும், சித்ரவதைகளும் தொடர்கின்றன. எனவே ஆஸப்த் அரசை நிர்பந்திப்பது அவசியமாகிறது. சிரியாவுக்கு எதிரான அரசியல் நிர்பந்தங்களை தொடர்ந்து பிரயோகிக்க வேண்டும் என்று லக்ஸம்பர்க் வெளியுறவு அமைச்சர் ஜீன் அசல்பான் தெரிவித்தார். சிரியாவில் கடந்த 14 மாதங்களாக அரசுக்கு எதிராக வன்முறை நிகழ்ந்து வருகிறது. கடந்த மாதம் ஐரோப்பிய யூனியன் மேற்கொண்ட நடவடிக்கையில், அதிபர் ஆஸப்த் மற்றும் அவரது குழுவினர் பயன்படுத்தும் ஆடம்பர பொருள்களை சிரியாவுக்கு ஏற்றுமதி செய்ய தடைவிதிக்கப்பட்டது. சிரியா முழுவதும் உடனடியாக போர்நிறுத்த பார்வையாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தினர். (மேலும்) 15.05.12
_____________________________________________________________________________________________________________________________________
இராஜதுரை யார்?
எம்.ஆர்.ஸ்ராலின்
பகுதி - 1
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் நினைவுதின நிகழ்வுகளின் போது முதுபெரும் அரசியல்வாதியான இராஜதுரை அவர்கள் அவமதிக்கப்பட்டமை சம்பந்தமாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைமை இன்றுவரை எதுவித கண்டனங்களையும் வெளியிடவில்லை. அரசியல் விமர்சனங்களை எப்படி முன்வைப்பது என்கின்ற அவை நாகரீகம் கூடத் தெரியாதவர்கள் எல்லாம் அரசியல் தலைவர்கள் என்பது ஒருபுறமிருக்க யார் துரோகி? அதை யார் தீர்மானிப்பது. இராஜதுரை எப்படித் துரோகியாவார்? என்பதுபற்றி கேள்விகளை எழுப்புவதோடு துரோகி என்கின்ற ஒற்றைச் சொல்லாடலில் இராஜதுரை போன்றவர்களில் வரலாறுகள் தமிழ் தேசிய பெருங்கதையாடல்களுக்குள் மூடி மறைக்கப்பட்டிருக்கின்ற இத்தருணத்தில் யார் இந்த இராஜதுரை என்பதுபற்றி தமிழ் மக்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு இக்கட்டுரை எழுதப்படுகின்றது. இலங்கையின் சுந்திரத்திற்கான கோரிக்கைகள் வலுப்பெற்றிருந்த காலகட்டத்தில் சுதந்திர உணர்வையும் ஏகாதிபத்திய எதிர்ப்புக்கலாசாரத்தையும் மட்டக்களப்பு மக்களிடம் பரப்புவதில் இருந்து இராஜதுரையின் அரசியல் பிரவேசம் நிகழ்கின்றது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை ஆண்ட 6 ஆம் ஜோர்ச் மன்னனின் பிறந்ததின விழா இலங்கையெங்கும் கொண்டாடப்பட ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது. மட்டக்களப்பு நகரில் அவ்விழா நடாத்தக்கூடாது என்று திட்டமிட்ட பல பள்ளி மாணவர்களுக்கு தலைமையேற்று மட் - மத்தியகல்லூரியின் உயர்தர மாணவனாக இருந்த இராஜதுரை களமிறங்கினார். நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. கறுப்புக்கொடிகள் வீதிகளை அலங்கரித்தன. பொலிசாரால் யார் இந்த சதிகாரர்கள் என்ற கேள்வியோடு சம்பந்தப்பட்டவர்கள் தேடப்படுகின்றார்கள். அன்றில் இருந்து மட்டக்களப்பின் ஒரு புரட்சிகர இளைஞனாக இராஜதுரை பரிணமிக்கத் தொடங்கினார். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கின்ற பழந்தமிழ் பாராம்பரியம் தமிழ் தேசியக் காவலர்களுக்கு இன்றுவரை அன்னியமாகவே இருக்கின்றது. சாதி பெயர்சொல்லி திட்டடித்திரியும் சண்டித்தனங்களை கண்டிக்கத்தயங்குகின்ற தமிழ் தேசிய ஒற்றுமை இன்றுவரை எம்மை மெய்சிலிர்க்க செய்கிறது. ஆனால் சாதி வேறுபாடுகள் எமது சமூகத்தை பிடித்தாழும் பெருவியாதி என்ற பெரியாரின் கர்ஜனையை அன்றே மட்டக்களப்பு மண்ணில் பிரதிபலிக்க முன்வந்தவர் இராஜதுரைதான். அவர் ஆரம்பித்த “அறிவே கடவுள்” எனும் பகுத்தறிவு இயக்கம் ஏற்படுத்திய சமூக சீர்திருத்தங்கள் பற்பல. (மேலும்) 15.05.12
_____________________________________________________________________________________________________________________________________
தமிழ்பேசும் மக்களின் அரசியல் இலக்குகளும் முரண்பாடுகளும்
- கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்
தமிழீழம் என்பது என்ன? அது ஒரு கனவா? அல்லது அது தேவையான ஒரு அடிப்படையா? அல்லது தேவை என்ற புனைவா? அல்லது தேவையாக இருக்கின்ற போதும் அதை அடையக் கடினமாக உள்ள ஒரு அரசியல் இலக்கா? அல்லது மாற்றுக்களைக் குறித்துச் சிந்திக்கவே முடியாத ஒரு அடையாளமா? அல்லது யதார்த்தத்துக்கும் தேவைக்கும் அப்பால் நின்று சிந்திக்கப்பட்டதன் தண்டனைத்தளமா? அல்லது தேவைக்கு அதிகமாகச் சிந்திக்கப்பட்ட ஒன்றா? இதில் எது சரியானது, எது ஏற்புடையது? இந்தக் கேள்விகள் இன்று தவிர்க்க முடியாதவை. அதேவேளை விடைகாணப்படவேண்டியவையும்; கூட. ஏனெனில் இன்னும் இன்னும் ‘தமீழீழம்’ என்றும் ‘தனி நாடு’ என்றும் நடைபெறும் அரசியல் முழக்கங்கள் இந்தக் கேள்விகளையே எழுப்புகின்றன. இவற்றுக்குப் பதில் காண வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகின்றன. ஆகவே, இந்தப் பத்தி இந்த உணர்ச்சிகரமான விசயத்தைச் சுருக்கமாக இங்கே விளக்க முற்படுகிறது. இன்று தமிழர்கள் அல்லது தமிழ் பேசும் மக்கள் தங்களுடைய அரசியல் இலக்கு எது? எனத் தீர்மானிப்பதில் ஏகப்பட்ட முரண்பாடுகள் உருவாகியுள்ளன. ஒரு தரப்பு அரசியல் உரிமைப் போராட்டத்தில் கடந்த கால அனுபவங்களைப் பாடமாகக் கொள்ள முற்படுகிறது. அந்த அனுபவங்களின் வழியாகப் பெற்றுக் கொண்ட அறிவை, பொதுத் தளத்தில் வைத்து உலக அனுபவங்களோடும் யதார்த்தத்தோடும் இணைத்துப் பார்த்துப் புதிய அரசியற் பாதையை வகுத்துக் கொள்ள வேண்டும் என்று சிந்திக்கிறது. இன்னொரு தரப்பு அனுபவங்களைப் புறந்தள்ளிவிட்டுத் தொடர்ந்தும் தனது நிலைப்பாட்டிலேயே நிற்க முற்படுகிறது. இது எல்லாவற்றுக்கும் அப்பால் தொடர்ந்து ஒரே குரலில், இலட்சியவாதமாக நின்று முழக்கமிடுகிறது. (மேலும்) 15.05.12
_____________________________________________________________________________________________________________________________________
ஸ்காட்லாந்து போலீசில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள்: போலீசாருக்கு பயிற்சி அளித்தது அம்பலம்
ஸ்காட்லாந்து போலீசார் உலகிலேயே மிகவும் திறமை வாய்ந்தவர்கள் என பெயர் எடுத்தவர்கள். அந்த போலீஸ் துறைக்குள்ளும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து இருப்பதை இங்கிலாந்தின் 'எம்.15' உளவுத்துறையினர் கண்டுபிடித்தனர். எனவே, ஸ்காட்லாந்து போலீசாரின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்தனர். அதை தொடர்ந்து சந்தேகப்படும் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் அப்துல் ரஹ்மான் என்ற போலீஸ்காரரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வங்காளதேசத்தை சேர்ந்த இவர் லண்டனில் தங்கி பின்னர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். போலீஸ் வேலையில் சேர்ந்த இவருக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 2001-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற அவருக்கு தீவிரவாதிகள் தங்கள் முகாம்களில் பயிற்சி அளித்துள்ளனர். இதுபோன்று பல போலீசாருக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டவுடன் அவர்கள் பணியில் இருந்து டிஸ்மிஸ் (பணி நீக்கம்) செய்யப்பட்டனர். ஆனால் தனது பணி நீக்கத்தை எதிர்த்து போலீஸ்காரர் அப்துல் ரஹ்மான் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தீவிரவாதிகளுக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.
_____________________________________________________________________________________________________________________________________
வட ம.மா. சபையை கலைக்க விடுக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை இரத்து செய்யுமாறு எதிர்மனு
வட மத்திய மாகாண சபையை கலைப்பதற்கு விடுக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி வட மத்திய மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவை எதிர்மனு தாக்கல் செய்துள்ளது. வட மத்திய மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பிற்கு அமைய, இந்த வழக்கினை விசாரிப்பதற்கான அதிகாரம் வடமத்திய மாகாண மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்திற்கு இல்லை என பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகிய சட்டதரணி தெரிவித்தார். இதன்படி விசாரணையினை ரத்து செய்யுமபடியும் அவர் மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார். வடமத்திய மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் அணில் ரத்நாயக்காவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், முதலமைச்சர் பேட்டி பிரேமலால் திஸாநாயக்கவினால் ஆளுனர் கருணாரட்ன திவுல்கணே உள்ளிட்ட 7 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள அனைவரையும் எதிர்வரும் 16ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு வட மத்திய மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
_____________________________________________________________________________________________________________________________________
மட்டக்களப்பு சிறுவன் கடத்தலின் சூத்திரதாரிகள் குறித்த தகவல் அம்பலத்தில்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சச்சியார் வீதியில் 14 வயது சிறுவன் ஒருவரை கடத்திய நால்வர், வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சிலாபத்தைச் சேர்ந்த இரண்டு சிங்களவர்களும் வழைச்சேனை கல்குடா பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு தமிழர்களுமே இக்கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சிறுவனை வானுக்குள் ஏற்றி கடத்திச் செல்லப்பட்டுள்ளார். ,ந்த நிலையில், அவரது சத்தத்தை அவதானித்த உறவினர்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து துரிதமாகச் செயற்பட்ட பொலிஸார் ,வர்களைக் கைது செய்துள்ளனர். இது தொடர்பில் தற்போது பல்வேறு விடயங்கள் வெளியாகியுள்ளன. குறித்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைதான நபர்களின் விபரங்கள் 1.சாரதி ஹேரத் முதியன்சலாகே குமார ஹேரத் வஙது- 32 காக்கை பள்ளி சிலாபம். 2.ஜுவாயப்பு கருணாலாகே சமில் மதுசங்க 32 சமஹி உயன பின்னகாடல்லவத்தை உடுவத்தாவ 3.ராஜதுரை பத்மநாதன் 36 கல்மடு கல்குடா 4.வள்ளியம்மா ஜெமினி கணேசன் 31 கல்குடா இது தொடர்பான முறைப்பாடு 13 ஆம் திகதி பிற்பகல் 2.45 மணியளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டு இலக்கம் 118-115 மறைப்பாட செய்யப்பட்ட பொலிஸ் நிலையம் வாழைச்சேனை.கல்குடாவில் சிறுமி ஒருவரைக் கடத்த முயன்று முடியாது போன நிலையில், பின்னர் இச்சிறுவன் கடத்தப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச்சிறுவர்கள் புதையல் எடுப்பதற்காக பயன்படுத்துவதற்கே கடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
_____________________________________________________________________________________________________________________________________
விடுதலைப் புலிகள் பகுதியில் அதிகளவு வெடிப்பொருள் கண்டுபிடிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான போர் முற்றிலுமாக முடிந்து விட்ட நிலையில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியில் மிக அதிக அளவிலான ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை ராணுவம் கண்டுபிடித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டம் முல்லைத் தீவு பகுதியில் 6,250 கிலோ எடையுள்ள வெடிப்பொருள் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் ராணுவமும், இலங்கை போலீஸப்ரும் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின்போது வெடிப்பொருள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிப்பொருள் அனைத்தும் சி-4 ரகத்தைச் சேர்ந்தவையாகும். இறுதிக்கட்ட போர் நிகழ்ந்த நந்திகடல் பகுதியில்தான் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இருந்தார். இப்பகுதியிலிருந்துதான் வெடிப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை ஆணையர் அஜித் ரோஹணா தெரிவித்தார். இதற்கு முன் இந்த அளவுக்கு வெடிப்பொருள்கள் கைப்பற்றப்பட்டதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். வெடிப்பொருள்கள் அனைத்தும் 200 பைகளில் அடைக்கப்ப்டு அவை பதுங்கு குழிகளில் வைக்கப்பட்டிருந்தன. முல்லைத் தீவு மா வட்டத்தில் 300 கிலோ சி-4 ரக வெடிப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார். புலிகள் அமைப்பின் நிர்வாக அலுவலகம் மற்றும் ராணுவ தலைமையகமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவு பகுதிகள் விளங்கின.
_____________________________________________________________________________________________________________________________________
மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் பெண் விடுதலை: யாரும் பொறுப்பேற்காததால் அங்கொடைக்கு அனுப்பி வைப்பு
சந்தேகத்தில் கைதாகி நான்கு வருடங்களின் பின்னர் மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட இளம் பெண்ணைப் பொறுப்பெடுப்பதற்கு எவரும் இல்லாததால் அவர் அங்கொடைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவந்துள்ளதாவது, மட்டக்களப்பு செங்கலடி உமா மில் வீதியைச் சேர்ந்த இப்போது 30 வயது மதிக்கத்தக்க சந்திரகுமார் சிவராணி என்ற இளம்பெண் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி கொழும்புக்குச் சென்றிருந்த வேளை அங்கு வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டபோது நல்ல உள உடல் ஆரோக்கியத்துடன் இருந்த இவர் தடுப்புக்காவலில் இடம்பெற்ற விசாரணைகளையடுத்து மன நலம் பாதிக்கப்பட்டார். இவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி கொழும்பு புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தினால் இவர் விடுதலை செய்யப்பட்டார். எனினும் இவரைப் பொறுப்பேற்பதற்கு உறவினர்கள் எவரும் நீதிமன்றத்தில் சமூகமளித்திருக்கவில்லை. எனினும் தன்னைப் பற்றியோ தனது குடும்பத்தினர் சொந்த இடம் உள்ளிட்ட விபரங்களை சுயமாகத் தெரிவிக்க முடியாத அளவிற்கு இவர் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்ததனால் இவர் மீண்டும் இவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவிற்கே அனுப்பி வைக்கப்பட்டார். பொலிஸார் இவரை மீண்டும் கடந்த 8 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போதிலும் அன்றும் அவரைப் பொறுப்பேற்று அழைத்துச் செல்வதற்கு எவரும் சமூகமளித்திருக்கவில்லை. இதனையடுத்து சந்திரகுமார் சிவராணி என்ற இந்தப் பெண் அங்கொடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
_____________________________________________________________________________________________________________________________________
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வெளிநாட்டு தூதுவர்கள் முன்னிலையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சொல்லப்பட்டவர்கள் இன்று எங்கே ?
- மனோ கணேசன் புனர்வாழ்வு சிறைச்சாலைகள் அமைச்சரிடம் கேள்வி
புனர்வாழ்வு பயிற்சி அளிக்கப்பட்டு வெளிநாட்டு தூதுவர்கள் முன்னிலையில் பெற்றோர்களுடன் சேர்க்கப்பட உள்ளதாககூறி, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 30 ம் திகதி அலரி மாளிகையில் நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்ட மூன்று இளைஞர்கள் இதுவரையில் தமது பெற்றோர்களுடன் சேர்க்கப்படவும், வீடு வந்து சேரவும் இல்லை. அவர்களை தேடி தரும்படி அவர்களது குடும்பத்தவர்கள் எனது உதவியை நாடியுள்ளார்கள். அவர்கள் எங்கே? வெளிநாட்டு பிரதிநிதிகளின் முன்னிலையில் உறுதி அளிக்கப்பட்டதை போல் அவர்கள் ஏன் பெற்றோர்களுடன் சேர்க்கப்படவில்லை? அவர்கள் இன்னமும் எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்? ஆகிய விபரங்களை எனக்கு உடனடியாக அறிவியுங்கள் என மக்கள் கண்காணிப்பு குழு ஏற்பாட்டாளரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை துறை அமைச்சர் சந்திரசிறி கஜதீரவுக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில் கோரியுள்ளார். கட்சித்தலைவர் மனோ கணேசனின் கடிதம் தொடர்பில், ஜனநாயக மக்கள் முன்னணி ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘ஒன்றுசேர்ந்து நாட்டை கட்டி எழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 30 ம் திகதி, கொழும்பு அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் புனர்வாழ்வு பயிற்சி அளிக்கப்பட்ட 1,800 முன்னாள் போராளிகள் தங்களது பெற்றோர்களுடன் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டது. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கையிலுள்ள அமெரிக்க, இந்திய, ஆஸ்திரேலிய, பிரித்தானிய, ஜெர்மானிய, பிரான்சிய, சீன, ஜப்பானிய தூதர்கள் உட்பட பெருந்தொகையான வெளிநாட்டு பிரதிநிதிகளும், உள்நாட்டு-வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டதாக நான் அறிகிறேன். (மேலும்) 15.05.12
_____________________________________________________________________________________________________________________________________
ஜெர்மனி இடைத்தேர்தல்: பிரதமர் கட்சி தோல்வி
பெர்லின், மே 14: ஜெர்மனியின் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மாகாணத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பிரதமர் எஞ்ஜெலா மெர்கல் தலைமை வகிக்கும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (சிடியு) கட்சி தோல்வியைச் சந்தித்தது. ஆளும் கட்சிக்கு இது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஏற்கெனவே கடந்த வாரம் ஷெலிஸ்விக்-ஹோல்ஸ்டீன் பகுதியில் நடைபெற்ற தேர்தலிலும் இக்கட்சி தோல்வியைச் சந்தித்து. வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மாகாணத்தில் பிரதான எதிர்க்கட்சியாக பிரதமரின் சிடியு கட்சி விளங்கி வருகிறது. இப்போது நடந்த தேர்தலில் இக்கட்சிக்கு ஆதரவாக 26.3 சதவீத வாக்குகளே கிடைத்தன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேர்தலில் இக்கட்சிக்குக் கிடைத்த வாக்குகளை விட 8.3 சதவீதம் குறைவாகும். இந்த மாகாணத்தில் சோஷியல் ஜனநாயகக் கட்சி (எஸ்டிபி) கூட்டணி அரசு அமைத்துள்ளது. இக்கட்சியின் கூட்டணிக் கட்சியாக கிரீன் பார்ட்டி உள்ளது. இவ்விரு கட்சிகளும் இடைத்தேர்தலில் பெரும்பான்மை பெற்றுள்ளன. தேர்தலில் கட்சி தோல்வியைச் சந்தித்ததற்குப் பொருப்பேற்று கட்சியின் மாகாண தலைவரும் பிரதமரின் நெருங்கிய நண்பருமான நார்பெர்ட் ரோட்டெஜென் தலைவர் பொறுப்பை ராஜிநாமா செய்துள்ளார். இந்த மாகாணம் தேர்தலைப் பொறுத்தமட்டில் சோதனைக் களமாகக் கருதப்படுகிறது. இதில் பெரும் வெற்றி, தோல்வி அடுத்து வரும் அதிபர் தேர்தலைத் தீர்மானிக்கக் கூடியதாக அமையும் என்று கருதப்படுகிறது. 2009-ம் ஆண்டு சிடியு ஆட்சிக்கு வந்த பிறகு அக்கட்சி சந்திக்கும் 11-வது மாகாண தேர்தல் தோல்வியாகும்.
_____________________________________________________________________________________________________________________________________
அமெரிக்காவுடன் உறவுகளை புதுப்பிக்க தரகு நிறுவனத்தின் உதவியை நாடியது இலங்கை
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் வொஷிங்டனைத் தளமாகக் கொண்ட "பற்றன் பொக்ஸ்' என்ற ஆதரவு தேடும் அமைப்பு ஒன்றை நியமித்துள்ளது. ஈழப் போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை அரசுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரி செய்யும் நோக்கிலேயே "பற்றன் பொக்ஸ்' என்ற ஆலோசனை நிறுவனத்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது. இந்த நிறுவனம் அமெரிக்க காங்கிரஸுடனும், ஏனைய ஒழுங்கமைக்கப்பட்ட முகவரமைப்புகளுடனும் நெருக்கமான தொடர்பை வைத்துள்ளது. இந்த நிறுவனம் இலங்கை விவகாரங்களைக் கையாளும் பொறுப்பை, விநோதா பஸ்நாயக்க என்ற இலங்கையின் இளம் நிபுணத்துவ ஆலோசகரிடம் வழங்கியுள்ளது. இவர் இலங்கையின் முன்னாள் தலைமை நீதியரசர் பஸ்நாயக்கவின் பேரனாவார். அனைத்துலக கொள்கை மற்றும் வர்த்தக விவகாரங்களில் ஆலோசனைகளை வழங்கி வரும் இவர், வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு அமெரிக்காவின் கொள்கை மற்றும் அமெரிக்காவுடன் எவ்வாறு சிறந்த உறவுகளை பேணலாம் என்பது பற்றிய ஆலோசனைகளையும் வழங்கி வருபவராவார். வொஷிங்டனில் மிகவும் செல்வாக்குள்ள 40 வயதுக்குட்பட்டவர்களின் பட்டியலில் இவரும் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டவர். இவரை ஆரம்பத்தில் வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் இரண்டாவது நிலை அதிகாரியாக நியமிக்க இலங்கை அரசாங்கம் முற்பட்டது. ஆனால் அவருக்கு பெருந்தொகை ஊதியம் வழங்க வேண்டியிருந்ததால் அந்த முயற்சி தடைப்பட்டிருந்தது. இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக நியுயோர்க் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நட்டஈட்டு வழக்கை "பற்றன் பொக்ஸ்' நிறுவனமே கையாண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
_____________________________________________________________________________________________________________________________________
கண்ணிவெடிக் கதைகளெல்லாம் மக்களை ஏமாற்றும் வித்தை: விக்கிரமபாகு
வடக்கில் பிரதேச சபைத் தேர்தல்களை நடத்த முடியுமானால் ஏன் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாதென கேள்வியெழுப்பும் நவசமசமாஜக் கட்சி கண்ணிவெடிக் கதைகள் எல்லாம் மக்களை ஏமாற்றுவதற்காக சோடிக்கப்பட்ட கற்பனைக் கதைகளாகுமென்றும் தெரிவித்தது. இது தொடர்பாக நவசமசமாஜக் கட்சியின் தலைவரும் தெஹிவளை கல்கிஸை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,உள்நாட்டில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளதோடு, நாளுக்கு நாள் மக்கள் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் மக்கள் பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ளனர். அதேபோன்று சர்வதேச ரீதியிலும் அரசாங்கத்தின் மீதான நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. எனவே உள்நாட்டு மக்களின் அரச எதிர்ப்பலைகளை திசை திருப்பவும், அரசியல் பலத்துடன் மக்கள் ஆதரவுடன் அரசாங்கம் இருப்பதாக சர்வதேசத்திற்கு காட்டிக் கொள்வதற்காகவே கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளைக் கலைத்து அரசாங்கம் அவசர அவசரமாக தேர்தல்களை நடத்தவுள்ளது. வடபகுதி மக்களுக்கு இன்று ஜனநாயகம் சிவில் நிர்வாகம் தேவைப்படுகிறது. எனவே அங்கு தான் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டுமென சோடிக்கப்பட்ட கதையைச் சொல்லி தேர்தல் நடத்தப்படாமைக்கு கதை சொல்கிறது. அப்படியானால் எப்படி அங்கு பிரதேச சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டது என்பதை சிந்திக்க வேண்டும். எனவே மக்கள் சிந்திக்க வேண்டும். அரசாங்கத்தின் உண்மையான 'முகத்தை' புரிந்து கொண்டு தேர்தல்களில் எதிர்த்து வாக்களித்தால் தகுந்ததொரு அரசியல் பாடத்தை புகட்ட முடியும் என்றார்.
_____________________________________________________________________________________________________________________________________
கிளிநொச்சியில் விவசாய பீடம்: நடைமுறைப்பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும்.
- கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்
வன்னிப் பிராந்தியத்தின் பாடசாலைக் கல்விப் பிரச்சினைகள் ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கத்தில் அங்கே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியற் பீடம், விவசாய பீடம் ஆகியவற்றை ஆரம்பிப்பதற்கான ஆயத்தங்கள் நடைபெறுகின்றன. இதற்காக கடந்த வாரம் கிளிநொச்சிக்கு உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்கா தலைமையிலான அணியினர் கிளிநொச்சியில் குறிப்பிட்ட பீடங்கள் அமையவுள்ள பகுதிகளைப் பார்வையிட்டபின்னர், சம்மந்தப்பட்ட தரப்பினர்களுடன் ஒரு உயர்மட்டக் கலந்துரையாடலையும் மேற்கொண்டுள்ளார். இதில் ஏற்கனவே கிளிநொச்சியில் இயங்கிய விவசாய பீடத்தை மீண்டும் கிளிநொச்சியில் இயங்க வைப்பதற்கான முயற்சிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால், இநதத் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் நடைமுறையில் உள்ள பிரச்சினைகளைக் குறித்தே இந்தப் பத்தி சிந்திக்கிறது. ஏற்கனவே கிளிநொச்சியில் இயங்கிய விவசாய பீடம் யுத்தத்தின் காரணமாகவே யாழ்ப்பாணத்துக்குச் சென்றது. யுத்தம் முடிந்து, மீள் குடியேற்றம் நடைபெற்று, மக்கள் தங்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்பி வருகின்றபோதும் யாழ்ப்பாணத்தில் இயங்கும் விவசாய பீடத்தை கிளிநொச்சிக்குக் கொண்டு வருவதற்கு இன்னும் பல்கலைக்கழக நிர்வாகம் முழுஅளவில் முயற்சிக்கவில்லை. இணைப்பு நிலையில் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் வைக்கப்பட்டிருக்கும் பல்கலைக்கழகத்தை கிளிநொச்சிக்குக் கொண்டு வருவதற்குப் பல பிரச்சினைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதில் ஒன்று பௌதீக வளப்பற்றாக்குறை. இதுவே முக்கியமானதாகவும் முதன்மையானதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்தப் பௌதீக வளப் பற்றாக்குறை என்பது தனியே பல்கலைக்கழத்திற்கு மட்டுமே உரிததான ஒன்றல்ல. வன்னியில் யுத்தத்திற்குப் பின்னர் இயங்கி வரும் அத்தனை அரச நிறுவனங்களும் மக்களும் மக்கள் அமைப்புகளும் பெரும் பற்றாக்குறைகளின் மத்தியிலேயே இயங்கி இன்று நிமிர்ந்திருக்கின்றன. அல்லது வளர்ந்து வருகின்றன. . (மேலும்) 14.05.12
_____________________________________________________________________________________________________________________________________
13 வது திருத்தத்தை ரத்துச் செய்யக் கோரும் தொழில்சார் நிபுணர்கள் அமைப்பு
பி.பி.சி
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக அதிகாரப் பகிர்வை வலியுறுத்தும் வகையில் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தினை அடுத்து கொண்டுவரப்பட்ட 13 வது திருத்தச் சட்டத்தினை இலங்கை அரசாங்கம் ரத்துச் செய்ய வேண்டும் என்று இலங்கையின் தொழில்சார் நிபுணர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு இலங்கை ஜனாதிபதியைக் கேட்டிருக்கிறது. 13 வது திருத்தச் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்திற்கோ அல்லது இலங்கை மக்களுக்கோ தெரியாமல் இந்தியாவினால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறி அதனை நீக்க வேண்டும் என்று இலங்கையின் தொழில்சார் நிபுணர்களின் அமைப்புக்களின் கூட்டமைப்பின் தலைவர் திலின கிரிங்கொட கூறியுள்ளார். 13 வது திருத்தச் சட்டம் இலங்கை மீது திணிக்கப்பட்ட ஒன்று என்றும் அது இலங்கையில் பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது என்றும் பெருமளவு பண விரையத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், நாட்டில் ஒரு அரசியல் ஸ்திரமின்மையை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். அதேவேளை இலங்கையில் 13 வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரப்பகிர்வானது இன ரீதியிலான அதிகாரப் பகிர்வு என்றும், ஒன்றுபட்ட இலங்கைக்கு அது பாதகமானது எனவும் அவர் கூறினார். 13 வது திருத்தச் சட்டத்தை விடுதலைப்புலிகள் ஆதரித்தார்கள் என்றும் அதனால் அதனை ஜனாதிபதி ரத்துச் செய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது. ஆனால், உண்மையில் விடுதலைப்புலிகள் 13 வது திருத்தச் சட்டத்தினை எதிர்த்திருந்தார்களே, அப்படியிருக்க இப்படியான ஒரு பொய்யைச் சொல்லி சிங்கள மக்களுக்கு தவறான தகவலை கொடுக்க தொழில்சார் நிபுணர்களின் அமைப்பு முயற்சிக்கிறதா என்று பிபிசி சார்பில் கேட்டதற்குப் பதிலளித்த திலின கிரிங்கொட அவர்கள், விடுதலைப்புலிகள் 13 வது திருத்தச் சட்டத்தையோ அல்லது மாகாண சபைகளையோ எதிர்த்தார்கள் என்ற கருத்துடன் தான் முரண்படுவதாகவும், அப்போது அவர்களது யுக்தி வேறாக இருந்தது என்றும் புலிகள் இலங்கை அரசாங்கத்துடன் போர் புரிவதற்காக இந்திய இராணுவத்தை முடிந்தவரை விரைவாக இலங்கையில் இருந்து அப்போது அகற்ற விரும்பினார்கள் என்றும் அதனால் அனைத்தையும் எதிர்க்கும் ஒருவகை யுக்தியை அவர்கள் கடைப்பிடித்தார்கள் என்றும் கூறினார்.
_____________________________________________________________________________________________________________________________________
தமிழ் மக்கள் தமிழீழம் கேட்கவில்லை; த.தே.கூ.வும் தமிழீழம் கேட்காது: சுமந்திரன்
' தமிழ் மக்கள் தமிழீழம் கேட்கவில்லை. ஆதலால் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழீழம் கேட்காது' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். ஜனநாயக அடிப்படையில் அரசியல் சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். இளம் கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 'அதிகாரப்பரவலாக்கல் மூலம் தேசியப் பிரச்சனைக்கு தீர்வு' என்ற கருப்பொருளில் சுமந்திரன் எம்.பி. உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடந்த நாடாளுமன்ற விஞ்ஞாபனத்தில் தமிழீழக் கோரிக்கை முன்வைக்கப்படவில்லை. இருந்தும் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து ஆணை வழங்கியுள்ளனர். நான் யதார்த்தமாக பேச விரும்புகின்றேன். உங்களின் கைதட்டல்களுக்காக பேசுகின்றவன் நான் அல்ல. தமிழ் மக்களின் நியாயமான அரசியல் தீர்வுக் கோரிக்கையை இலங்கை அரசு மறுதலிக்குமானால் நாளை நிலைமை மாறும். சர்வதேசம் எமக்கான தீர்வை பெற்றுத்தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எமக்கு சர்வதேச பலம் கிடைத்திருக்கின்றது என்பதை ஜெனீவா தீர்மானம் உறுதிப்படுத்தியிருக்கிறது. நாங்கள் சுயநிர்ணய உரித்துடைய மக்கள் என்பதையும் தேசிய இனம் என்பதையும் இன்று உலகம் உணர்ந்துள்ளது. (மேலும்) 14.05.12
_____________________________________________________________________________________________________________________________________
தமிழீழ விடுதலைப் புலிகள் உதயமாகிய முப்பத்தாறாவது வருட நிறைவு (2)
டி.பி.எஸ். ஜெயராஜ
இந்த வெற்றிகரமான வளர்ச்சி ஸ்ரீலங்கா தமிழ் மக்களின் மாபெரும் பொருட் செலவிலேயே கிட்டியது. எல்.ரீ.ரீ.ஈ செங்குத்தாக மேலே சென்றது,ஆனால் ஸ்ரீலங்கா தமிழ் மக்கள்,கிடைமட்டத்தில் கீழே செல்லவேண்டியதாகிவிட்டது. இந்த மகிழ்ச்சியற்ற உண்மையை எல்.ரீ.ரீ.ஈ யும் அதன் ஏவலாளர்களும் அடிக்கடி நிராகரித ்தும் கேட்பதற்கு விருப்பம் இல்லாமலும் இருந்தார்கள். முதலாம் உலக யுத்தம் 1914 முதல் 1918 வரை வெறும் நான்கு வருடங்கள் மட்டும் நீடித்தது. இரண்டாம் உலகயுத்தம் 1939 முதல் 1945 வரை ஆறு வருடங்கள் நடைபெற்றது. இந்த தமிழீழத்துக்கான யுத்தம் தசாப்தங்கள் தசாப்தங்களாக தீவிரமாகவும் மற்றும் மிகக் கொடுமையாகவும் நீண்டு தமிழ் மக்களை மிகவும் தளர்வடையச் செய்துவிட்டது.தமிழ் பகுதிகள் மிகத் தந்திரமாக வௌ;வேறு ஆட்சியாளர்களால் கட்டம்கட்டமாக படைகள் :முன்னேறும்போது அல்லது பின்வாங்கும்போது அந்தப் பகுதியிலுள்ள கட்டிடங்கள் நிலங்கள் என்பனவற்றை சீர்குலைக்கும் நடவடிக்கையான சீரான வரண்ட நிலக் கொள்கையினால்; மிகவும் பாதிப்புக்கு உள்ளாயின. மரணம், காயம், அழிவு, இடப்பெயர்ச்சி போன்றவை அம்மக்களின் தினசரி வாழ்க்கையின் நிரந்தர செயலாக இடம் பிடித்துக் கொண்டது. மீன்பிடித்தொழில் படிப்படியாக தேய்வடைந்து போனது,விவசாயம் முற்றாக சுருங்கிப்போனது, கைத்தொழில்கள்; கிட்டத்தட்ட எதுவுமில்லை என்கிற நிலைக்கு போய்விட்டன. பொருளாதாரம் நலிவடைந்து, வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடியது. ஒற்றைப் பெற்றோர் உள்ள குடும்பங்கள், விதவைகள், அனாதைகள் போன்றவர்கள் உள்ள நிலைதான் பரந்தளவில் அங்கு காணப்பட்டது. தமிழர்களின் பிரதான இருப்பாகிய கல்வி கணிசமானளவு பாதிப்புக்கு உள்ளாகியது. அநேக பாடசாலைகள் இயங்காத நிலையிலேயே இருந்தன.மருத்துவமனைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. பாதுகாப்பு வலயங்களை அமைக்கும் சாக்கில் மக்கள் அவர்களது வீடுகளைவிட்டு இடம்பெயரும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.வாழ்க்கையின் தரம் மிகவும் தாழ்ந்து போனது.குழந்தைகளின் இறப்பு விகிதம்,போஷாக்கின்மை,போதிய வளர்ச்சியின்மை, போன்ற குறைபாடுகள்தான் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழர்களை அதிகம் பாதிக்க வைத்தவை. தமிழர் சமூகத்தின் சமூகவாழ்க்கை மோசமாக பாதிக்கப்பட்டது, கலாச்சார வாழ்க்கை முறை மோசமாக சுருங்கியதுடன், கலாச்சார மதிப்புகள் மிருகத்தனமாக மாறிப்போனது மற்றும் அதன் நெறிமுறைக் குறியீடுகள் தகர்ந்துபோயின.ஒரு சிறிய அதிகாரமற்ற மக்களுக்கு நீண்டகாலப் பேரினால் ஏற்படும் விளைவுகள் இவைகள்தான். (மேலும்) 14.05.12
_____________________________________________________________________________________________________________________________________
அரசியல் தீர்வு இதுவரை முன்வைக்கப்படாமை கவலையளிக்கிறது: அமெரிக்க தூதரக அதிகாரி
வடக்கில் போர் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்த பிரச்சினைக்கு இதுவரை அரசியல் தீர்வு முன்வைக்கப்படாமல் இருப்பது கவலையளிக்கிறது என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் கலாநிதி போல் காட்டர் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை "ஜனநாயக அடிப்படையில் அரசியல் சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கான" விழிப்புணர்வுக் கருத்தரங்கில் முதன்மை விருந்திரக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலுக்காக அமெரிக்க அரசு 200 கோடி டொலர்களை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது. இந்த நிதியுதவியானது வடக்கு மற்றும் கிழக்கு மக்களை சென்றடைந்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய உடனடி தேவைகளுக்காகவும் அவர்களின் உணவு, உறைவிடம் மற்றும் மருத்துவ தேவைக்களுக்காகவும் இந்நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது எமது உதவிகளினால் இந்த நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்பட்டது. கண்ணிவெடி அகற்றுவதற்காகவும் இலங்கைக்கு உதவி வருகின்றோம். இந்த நாட்டில் தீர்கப்படாத பல பிரச்சனைகள் இன்னமும் இருந்து கொண்டு தான் இருக்கிறது தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு தொடர்பில் எந்தவிதமான முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை. பல அரசியல் நிபுணர்களின் கருத்து படி இந்த நாட்டில் அரசியல் தீர்வு எட்டப்படாது விட்டால் சர்வதேசம் தடையிடுவதற்கு வழியேற்றடும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். (மேலும்) 14.05.12
_____________________________________________________________________________________________________________________________________
சாவகச்சேரி நுணாவிலில் சகோதரர்கள் மீது ராணுவத்தினர் தாக்குதல்
சாவகச்சேரி நுணாவில் பகுதியில் கடந்த இரவு (12.05.2012) 11.30 மணியளவில் தமது வீட்டினுள் புகுந்த ஒருவரை துரத்திச் சென்று பிடித்த சகோதரர்கள் இருவர் இராணுவத்தினரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். வீட்டினுள் ஆள் நடமாட்டத்தை அவதானித்த தாயார் நாகேஸ்வரி சத்தமிட்டதை தொடர்ந்து, வீட்டினுள் புகுந்த நபரை துரத்திச் சென்று பிடித்த அண்ணனும், தம்பியுமே சம்பவ இடத்திற்கு அருகில், ஏ 9 வீதியில் காவலரணிலிருந்து அழைத்து வரப்பட்ட இராணுவத்தினரின் கடும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். தாக்குதலில் தலையில் காயமடைந்த இளைய சகோதரன் ஐங்கரன், வயது 21 சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுணாவில் பகுதியில் ஏ 9 வீதி அமைக்கும் பணியை மேற்கொள்ளும் அணியை சேர்ந்த ஒருவரே, மேற்படி பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்கியுள்ள வீட்டிலிருந்து 300 மீட்டர் தூரத்தில் உள்ள தமது, வீட்டினுள் நுழைந்தவர் என்பதை குறித்த நபரை துரத்திச் சென்று அவர் தங்கியிருந்த இடத்திற்கருகில் வைத்து பிடித்த சகோதரர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர். இதர பணியாளர்கள் மூலம் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இராணுவத்தினர், பக்கச் சார்பாக வீட்டினுள்; அத்துமீறி புகுந்தவரை துரத்திச் சென்று பிடித்த சகோதரர்களை தாக்கியுள்ளனர். இன உணர்வுகளை கடந்த சேவை, நீதி இலங்கை இராணுவத்திடமிருந்தும், பொலிஸாரிடமிருந்தும் தமிழ் மக்களுக்கு கிடைக்குமா? என்ற கேள்விக்கு கிடைக்காது என்ற பதிலையே மேற்படி சம்பவமும் உணர்த்தி நிற்கின்றது. இத்தகைய செயல்கள் நல்லிணக்கம் குறித்து பேசுபவர்களை சங்கடத்திற்குள்ளாக்குவதோடு இந்த நாட்டில் பெரும்பான்மை சிறுபான்மை என்று எதுவுமில்லை என்ற வாதத்தை காறி உமிழ்ந்திருக்கின்றது.
_____________________________________________________________________________________________________________________________________
யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான விபரங்களை வெளியிட அரசு தீர்மானம்
யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பான தகவல்களை வெளியிட இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு அமைச்சு இதற்கான தீர்மானத்தை இன்று வெளியிட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பான தகவலை அவர்களது உறவினர்கள் அறிந்து கொள்ளும் வகையில் விபரங்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய விபரங்களை அறியத்தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகளும் கோரிக்கை விடுத்திருந்தனர். யுத்தத்திற்கு பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்த போராளிகள் பற்றிய விபரங்களும் வெளியிடப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்திருந்தனர். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் ஒரு முக்கிய பரிந்துரையாகவும் தடுத்து வைக்கப்பட்டவர்களின் விபரங்களை அரசு வெளியிட வேண்டும் என இருந்தது. இம்மாதம் 18ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டனை சந்திப்பதற்கு முன்னதாக இவ் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
_____________________________________________________________________________________________________________________________________
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல் படுத்தக் கோரும் அனைத்துதரப்பினரின் கோரிக்கைகளும் வரவேற்புக்குரியதே.
ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்
கௌரவ ஜ.தே.க. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல அவர்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கொண்டுவந்திருக்கும் ஒத்தி வைப்பு பிரேரணையில் எனது கருத்துக்களை இங்கு தெரிவிக்க விரும்புகின்றேன்;.இங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துக்களில்; நாட்டிலே உள்ள எல்லா அரசியல் தரப்புக்களும் இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு ஒன்று கொண்டுவரப்படவேண்டும் என்ற கருத்தையே வலியுருத்திக்கொண்டிருக்கின்றார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் புறம்பாக பொறுப்புக் கூறல் என்ற விடயத்தை எல்லோரும் கருத்தில் எடுக்கவேண்டும் என்பதையே எனது கருத்தாக வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். இந்த நாட்டிலே நீண்ட காலமாக புரையோடிக்கொண்டிருக்கின்ற இனப்பிரச்சினைக்கு காரணமானவர்கள் யார்?; எல்லா அரசியலாளர்களும் ஆட்சியிலிருந்த அரசுகளும் ஆட்சிக்கு அரசுக்கு அப்பாலிருந்த எதிர்கட்சிகளும் பொறுப்புக் கூற வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கின்றது என நான் கருதுகிறேன். இது இந்த நாட்டிலுள்ள அனைத்து தரப்பினருக்கும் உரியது. இதிலே அரசாங்கம் இந்த நாட்டிலுள்ள அரசியலாளர்கள் அரசியல் கட்சிகள் அரசியல்வாதிகள் சிவில் அமைப்புக்கள் ஊடகங்கள் என பல தரப்பினர்களுக்கும் இந்த பொறுப்பு உண்டு. ஆகவே இந்த பொறுப்புக் கூறல் என்பது தனியே ஒரு குறிப்பிட்ட தரப்பினரையோ அல்லது அரசாங்கத்தை மட்டும் சார்ந்ததாகவோ கருதி விட முடியாது. இங்கே குறிப்பிடப்டும் “நிலைமைகளைச் சீராக்கும் நடவடிக்கை” என்பது இந்தப்பொறுப்பு கூறலின் அடிப்படையிலிருந்தே உருவாக முடியும் என்று நான் நம்புகின்றேன். ஆகவே முதலில் நாம் எல்லோரும் நமது கடந்த காலத்துக்கான பொறுப்புக் கூறலை முதலில் செய்ய வேண்டும், . (மேலும்) 14.05.12
_____________________________________________________________________________________________________________________________________
யாழில் பாடசாலை மாணவியைக் கடத்த எடுத்த முயற்சி முறியடிப்பு
யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் 11 வயது மாணவி ஒருவரை மோட்டார் சைக்கிலில் சென்ற இளைஞன் ஒருவன் கடத்துவதற்கு முயற்சித்த சம்பவம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. பிரத்தியேக வகுப்பு முடிவடைந்த பின்னர் கல்லூரியின் வாசலில் வீட்டிற்கு செல்வதற்கு தந்தைக்காக காத்து நின்றபோது குறித்த இளைஞன் மாணவியை கடத்த முயன்றுள்ளார். அதிஸ்ட்ட வசமாக அவ் வேளை மாணவியின் தந்தையார் அவ்விடத்திற்கு வந்த போது குறித்த இளைஞன் பாடசாலை வளாகத்துக்குள் தப்பியோடியுள்ளார். இவரைத் துரத்திச் சென்ற தந்தையார் இளைஞனைத் பிடித்து கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றதாகவும் பின்னர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
_____________________________________________________________________________________________________________________________________
புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (48)
48.1960களின் பிற்கூறில் வடக்கில் இருந்த நிலைமை!
புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் என்னிடம் விசாரித்த, இராணுவத்துக்கும் பொதுமக்களுக்குமிடையிலான மோதல் சம்பவம், 1970 பொதுத்தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பாக நடந்தது. அதுபற்றி கிளிநொச்சிப் பகுதியில் முன்பு எமது கட்சியுடனோ அல்லது விவசாயிகள் சங்கத்துடனோ இணைந்து வேலை செய்த, தமிழ் தேசியப் போராட்டம் ஆரம்பமான பின்னர் புலிகளுடன் இணைந்துகொண்ட யாரோ, அவர்களுக்கு அந்தச் சம்பவம் பற்றிச் சொல்லியிருக்க வேண்டும். சொன்னவர்கள் ஓரளவு அந்தச் சம்பவம் பற்றி விபரமாகக் கூறியிருக்கக்கூடினும், அந்த நேரத்தில் அந்தப் பிரதேசத்தில் கட்சி வேலைகளுக்கு இணைப் பொறுப்பாளராக இருந்த என்னிடமும் அது பற்றி அறிந்துகொள்ள விரும்பியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். அந்தச் சம்பவம் இடம்பெற்ற போது, அந்தப் பகுதியில் நான் இருக்காத போதும், அதுபற்றி நான் அறிந்த தகவல்களை புலிகளுக்கு விளக்கிக் கூறவேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். புலிகளைப் பொறுத்தவரையில், நடைபெறும் சம்பவங்களின் அரசியல் பின்னணி. சூழ்நிலை என்பனவற்றைவிட, ஜேம்ஸ்பொன்ட் அல்லது ‘சீரியல்’ படங்கள் பாணியிலேயே எந்தவொரு சம்பவத்தையும் பார்க்கும், விளங்கிக் கொள்ளும் ஒரு போக்கு இருந்தது. நான் அந்தச் சம்பவம் நடைபெற்ற காலத்தில் நாட்டிலும், குறிப்பாக வட பகுதியிலும் நிலவிய அரசியல் சூழல் பற்றியும் விளக்கிவிட்டே, அந்த நிகழ்வைப் பற்றிச் சொன்னேன். நான் சம்பவத்தை விளக்கிய பாணி புலிகளுக்கு சலிப்பூட்டுவதாக இருந்தபோதிலும், இடையிடையே ‘கட்டிங்’ செய்து நேரடியாகச் சம்பவத்தின் ‘திரில்லிங்’ காட்சிக்கு அவர்கள் போக முயற்சித்த போதிலும், நான் தொடர் அறுந்துவிடாமல் ‘கதை’யைச் சொல்வதில் அக்கறையாக இருந்தேன். எனவே புலிகளும் விரும்பியோ விரும்பாமலோ, தவிர்க்க முடியாமல் முழுக்கதையையும் கேட்க வேண்டியதாயிற்று. அவர்களுக்கு விளக்கிய பின்னணி விபரமும், சம்பவமும் இதுதான். (மேலும்) 13.05.12
_____________________________________________________________________________________________________________________________________
சிறுவன் மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து விசாரிக்க இரு குழுக்கள் _
வெசாக் பந்தலை சேதப்படுத்தியதற்காக முல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் சிறுவனைப் படையினர் சுடவில்லை. எவ்வாறாயினும் சம்பவம் குறித்து ஆராய விசேட இராணுவ குழுவும் பொலிஸ் குழுவும் விசுவமடுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். அரசியல் மற்றும் வேறு தேவைகளுக்காக போலியான பிரசாரங்களைச் செய்யக் கூடாது. விசாரணைகள் ஊடாக படையினர் குற்றவாளிகளாகக் காணப்பட்டால் இராணுவச் சட்டத்தின் பிரகாரம் கடுமையான தண்டனையை வழங்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து இராணுவப் பேச்சாளர் தொடர்ந்தும் கூறுகையில், முல்லைத்தீவு, விசுவமடுப் பகுதியில் மாடு மேய்த்த சிறுவன் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வெசாக் பந்தலை மாடு முட்டி சேதப்படுத்தியதையடுத்துத் தான் சிறுவனை படையினர் சுட்டார்கள் என்பது உண்மைக்கு புறம்பான விடயமாகும். ஏனெனில் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் வெசாக் பந்தல் ஒன்று இருக்கவில்லை என்றே தெரியவந்துள்ளது. கடமை நிமித்தம் ஒரு காவலரணிலிருந்து மற்றுமொரு காவலரணுக்கு செல்லும் நேரத்திலேயே மேற்படி சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும் விசாரணைகள் முடியும்வரை மேலதிகமாக எதையும் கூற இயலாது என்றார்.
_____________________________________________________________________________________________________________________________________
தம்பி நீர் என்ன கதைக்கிaர்? உமக்கு அரசியல் தெரியாது, பேசாம இரும்!
தேசியக் கொடி விவகாரத்தை கிளப்பிய அரியம் மீது எகிறிப் பாய்ந்த சம்பந்தன்
எமது நாட்டின் தேசியக் கொடியை நான் முன்னரும் பல தடவை ஏற்றியிருக்கிறேன். அது எனது விருப்பத்திற்குரிய கொடி, அதனை இனியும் ஏற்றுவேன். அதனை யாரும் தடுக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கொழும்பில் நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழுக் கூட்டம் ஆரம்பமான போது பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு செல்வது தொடர்பாக முதலில் ஆராயப்பட்டது. அந்த விடயம் முடிந்ததும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கிய செல்வம் அரியநேத்திரன் சிங்க கொடி பிரச்சினையை எழுப்பினார். ஐயா நீங்கள் யாழ்ப்பாணத்தில் தேசியக் கொடியை பிடித்தது தமிழினத்திற்கு செய்யும் துரோகம், தமிழின தேசவிரோதம் என காரசாரமாக விடயத்தை தொடங்கினார். தம்பி அரியம் நீர் என்ன கதைக்கிaர் உமக்கு வரலாறு தெரியாது. என்னை சிங்க கொடியை தூக்க கூடாது என்று ஒருவராலும் தடுக்கேலாது. தேசிய கொடியை நான் தெரியாமல் தூக்கவில்லை. நன்றாக தெரிந்து விருப்பத்தோடுதான் தூக்கினேன். என்னிடம் யாரும் அக்கொடியை திணிக்கவில்லை. சிங்க கொடியை நான் தூக்கினது இதுதான் முதல் தடவையல்ல. நான் தேசியக் கொடிக்கு எதிரானவன் அல்ல. நான் பல தடவை தேசியக் கொடியான சிங்கக் கொடியை திருகோணமலையில் ஏற்றியிருக்கிறேன். நான் நேசிக்கும் கொடி சிங்கக் கொடி. இந்த கொடியை வடிவமைத்த குழுவில் தமிழர்களும் இருந்திருக்கிறார்கள். அந்த குழுவில் ஜி.ஜி. பொன்னம்பலம், நடேசன் போன்றவர்கள் இருந்தார்கள். அதில் நடேசன் மட்டுமே இந்த கொடியை எதிர்த்தார். ஆனால் ஜி.ஜி. பொன்னம்பலம் இந்த கொடியை ஏற்றுக் கொண்டிருந்தார். தமிழரசுக் கட்சி இந்த கொடியை எதிர்க்கவில்லை என சம்பந்தன் தெரிவித்தார். அது தவிர இன்னொரு விடயத்தையும் சம்பந்தன் சொன்னார். இந்த கொடி என்னுடைய மிக விருப்பத்திற்குரிய கொடி, சிங்கம்தான் பத்திரகாளி அம்மனின் வாகனம், எனவே சிங்க கொடிக்கு நான் எதிரானவன் அல்ல என சம்பந்தன் தெரிவித்தார். இதற்கு மாவை சேனாதிராசா, அரியநேத்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
_____________________________________________________________________________________________________________________________________
நல்லிணக்க ஆணைக்குழு முன் அளித்த சாட்சியம் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் நான் சாட்சியமளித்த விடயம் தொடர்பாகவே குற்றப் புலனாய்வுப் பொலிஸார் என்னிடம் விசாரணை நடத்தினர் என மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஒரு லட்சத்து 46 ஆயிரம் 679 பேர் காணாமற் போயுள்ளது தொடர்பாக நான் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தது தொடர்பாகவே குற்றப் புலனாய்வு பிரிவினர் என்னிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்தப் புள்ளி விவரங்கள் எவ்வாறு எனக்கு கிடைத்ததென்பதை நான் விளக்கினேன். முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் நிரந்தரமாகக் குடியிருந்தோர் மற்றும் வன்முறைகள் யுத்தம் காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து வந்து குடியிருந்தோர் எண்ணிக்கையை 2008 ஒக்டோபர் நிலைவரத்தின்படி அரசாங்க அதிபர்களிடமிருந்து பெற்றிருந்தேன். இறுதிக் கட்ட யுத்தத்தின் பின்னர் ஐக்கிய நாடுகள் அமைப்பின் "ஒச்சா' OCHA என்ற அமைப்பு இந்த மாவட்டத்திலிருந்து அகதிகளாக வந்தோர் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டோர் தொடர்பான புள்ளி விவரங்களை அந்த அமைப்பிடமிருந்து பெற்றேன். நான் இரு தரப்பினரிடமுமிருந்து பெற்றுக் கொண்ட புள்ளி விவரங்களை வைத்தே இத்தனை பேர் காணாமற் போயுள்ளதாகத் தெரிவித்தேன். இதே விடயத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடமும் தெரிவித்தேன்.
_____________________________________________________________________________________________________________________________________
தமிழீழ விடுதலைப் புலிகள் உதயமாகிய முப்பத்தாறாவது வருட நிறைவு
- டி.பி.எஸ். ஜெயராஜ்
இரண்டு தசாப்த காலத்துக்கு மேலாக ஸ்ரீலங்காவின் அரசியல் போக்கை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள்(எல்.ரீ.ரீ.ஈ), செயற்பாட்டுக்குரிய ஒரு உட்பொருளாக இன்று இல்லை. எல்.ரீ.ரீ.ஈ ஒரு செயல் அமைப்பாக இன்று இருந்திருந்தால் அது தனது 36வது பிறந்தநாளை கடந்த மே 5ந்திகதி கொண்டாடியிருந்திருக்கும். மே 2009ல்,யுத்தத்தில் ஏற்பட்ட எதிர்மாறான விளைவுகள் காரணமாக, ஸ்ரீலங்காவின் வடபகுதியிலுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்காலில் புலிகளுக்கு ஏற்பட்ட இராணுவ தோல்வி,ஸ்ரீலங்காவில் புலிகளின் இருப்புக்கு ஒரு முடிவினைக் கொண்டுவந்தது. இது அநேகமான எல்.ரீ.ரீ.ஈ ஆதரவாளர்களுக்கும், அனுதாபிகளுக்கும் பெரிய அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. எல்.ரீ.ரீ.ஈ, ஸ்ரீலங்காவின் ஆயுதப்படைகளை முற்றாகத் தோற்கடித்து, ஒரு சுதந்திரத் நாடான தமிழீழத்தை ஒரு தட்டில் வைத்து நீட்டப்போகிறது என்று எண்ணியவர்கள் பலர் இருந்தனர். எல்.ரீ.ரீ.ஈ.யினால் மேற்கொள்ளப்பட்ட பல்வகையான மனித உரிமை மீறல்களையும், கண்டு கொள்ளாமல் இருந்ததுடன் அவைகளைப் பற்றிய விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காக அவைகயை அப்பட்டமாக மறுப்பதற்கும் தயாராக இருந்தனர், ஏனெனில் விடுதலைப் பாதையில் இவைகள் தவிர்க்கமுடியாத தீயசக்திகள் என அவர்கள் நினைத்ததுதான் இதற்கான காரணம். எனினும் யாராவது ஆக்கபூர்வமான விமர்சனத்தை வெளியிட்டால்கூட அவர்களை அவதூறாக பேசி,துரோகி என்று கண்டனம் செய்தனர். மேலும் எல்.ரீ.ரீ.ஈ பின்பற்றிவரும் நடவடிக்கைகள் வெற்றியை பெற்றுத் தராது, மற்றும் தீhக்கமான தோல்வியே அதன் தலையில் எழுதப்பட்டு வருகிறது என்று சுட்டிக் காட்டினால் கூட அத்தகைய அறிவுரைகள் புலிகளாலும் அவர்களது சகபயணிகளாலும் நிராகரிக்கப்பட்டு வெறுத்து ஒதுக்கப்பட்டன. இராணுவ ஆதிக்க சிந்தனையே புலிகள் வட்டாரத்தில் பரவியிருந்ததுடன், இராணுவ வெற்றியே ஒரே தீர்வு என்கிற நம்பிக்கையே அவர்களை நல்லெண்ணத்துடன் கூறப்பட்ட அறிவுரைகளை அவமதிப்பு செய்ய வைத்தது. (மேலும்) 12.05.12
_____________________________________________________________________________________________________________________________________
ஸ்ரீலங்காவில் இராணுவ படைக்குறைப்பும் பிரிவினைவாதமும்
- கீர்த்தி இலங்கரத்ன
சமீபத்தில் இந்திய பாராளுமன்ற எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர், சுஷ்மா சுவராஜ் தலைமையில் ஸ்ரீலங்கா வந்த இந்திய தூதுக்குழுவினர், வடக்கில் இராணுவம் நிலைகொண்டிருப்பதை ஓரளவுக்கு குறைக்குமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். எனினும் அரசியல் அழுத்தங்களினூடாக இராணுவ படைக்குறைப்பை மேற்கொள்வது, கடும் பிரயத்தனங்களினால் வென்றெடுத்த சமாதானத்தை சீர்குலைக்க முயற்சித்துவரும் பிரிவினைவாத இயக்கங்களை பலப்படுத்துவதாகவே முடியும். எனவே நாட்டின் பாதுகாப்பு தேவைகளை கவனமாக ஆராய்ந்த பின்னரே அரசாங்கம் வடக்கில் ஆயுதப்படைகளை குறைக்கவேண்டும். இருந்தபோதிலும் அரசாங்கம் வடக்கில் பாதுகாப்புப்படைகளை குறைப்பது சம்பந்தமான வேண்டுகோளை, அத்தகைய வேண்டுகோள் நியாயமற்றது எனக்கூறி நிராகரித்துள்ளது. அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருப்பது எதையென்றால், ஆயுதப்படைகளை குறைத்து இராணுவம் ஆக்கிரமித்துள்ள இடங்களை பொதுமக்களிடம் கையளிப்பதை படிப்படியாகவே செய்யலாம் என்பதையே. இந்திய தூதுக்குழுவினர், வடக்கில் இராணுவம் நிலைகொண்டிருப்பது, நல்லிணக்கத்துக்குத் தடையாக இருக்கிறது எனக் கருதியுள்ளார்கள் போலத் தோன்றுகிறது. பலரும் வெல்ல முடியாதது என நினைத்த பயங்கரவாதத்தை பாதுகாப்பு படையினர்தான், மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற மோதல்களின் பின்னர் தோற்கடித்து சமாதானத்தை நிலை நாட்டினார்கள் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள், அல்லது மறந்துவிட்டதுபோல நடிக்கிறார்கள். எனவே வடக்கில் ஆயுதப்படைகள் நிலை கொண்டிருப்பது சமாதானத்துக்கு தடையாக இருக்கிறது எனக்கருதுவது அபத்தம். (மேலும்) 12.05.12
_____________________________________________________________________________________________________________________________________
கிளிநொச்சி கொலை குறித்து கனடா முழுமையான விசாரணை கோருகிறது
- பி.பி.சி
இலங்கையின் வடக்கில்கிளிநொச்சி பகுதியில் கடந்த வாரம் ஒரு கனடிய பிரஜை கொலை செய்யப்பட்டமை குறித்து இலங்கை முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாக கனடா கூறியுள்ளது. போர் காலத்தில் தாம் இழந்துபோன தமது குடும்ப சொத்துக்களை மீளப் பெறும் நோக்கத்துடன் கனடாவின் பிரஜையான அந்த இலங்கை தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் அங்கு வந்திருந்தபோது கொல்லப்பட்டதாகச் செய்திகள் கூறுகின்றன. கிளிநொச்சி நகருக்கு சற்று வெளியே அந்தோனிப்பிள்ளை மகேந்திரராஜா என்னும் அந்த நபர் ஒரு குழுவினால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று இலங்கைக்கான கனடாவின் தூதுவர் புரூஸ் லெவி பிபிசியிடம் கூறியுள்ளார். பல வருடங்களாக விடுதலைப்புலிகளின் தலைமையகமாக திகழ்ந்த இந்தப் பகுதி தற்போது இலங்கை இராணுவத்தின் கடுமையான பாதுகாப்பின் கீழ் உள்ளது. கடந்த வாரம் நடந்த இந்தக் கொலை குறித்து ஒரு முழுமையான புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என்றும், அதனை கனடா தொடர்ச்சியாக அவதானித்துவரும் என்றும் தான் முறைப்படியான ஒரு குறிப்பை அரசாங்கத்துக்கு அனுப்பியுள்ளதாக லெவி அவர்கள் கூறியுள்ளார். முகமூடி அணிந்த நபர்கள் மகேந்திரராஜாவை தாக்கியதை கிராமத்தவர்கள் பார்த்ததாகக் கூறப்படுவதாக ஊடகச் செய்திகளும், வடக்கில் உள்ள செய்தி ஆதாரங்களும் கூறுகின்றன. (மேலும்) 12.05.12
_____________________________________________________________________________________________________________________________________
ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்ட நிகழ்வு இடம்பெற்ற ஹோட்டலில் கைக்குண்டு
ட்டக்களப்புக்கு வெள்ளிக்கிழமை ஒருநாள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடைசியாக கலந்துகொண்ட நிகழ்வு இடம்பெற்ற ஹோட்டலில் கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மட்டக்களப்புக்கு காலை வருகை தந்த ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை 5 மணியளவில் , நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் லயன்ஸ் கழக முக்கியஸ்தர்களை சந்திக்கவிருந்தார். நகரில் மட்டக்களப்புதிருகோணமலை பிரதான வீதியிலுள்ள இந்த ஹோட்டலில் சந்திப்புக்காக எதிர்க்கட்சித் தலைவர் புறப்பட்ட வேளை அந்த ஹோட்டலில் சந்திப்பு நடைபெறும் மண்டபத்தின் படிக்கட்டுக்கு கீழே கைக்குண்டொன்றை பொலிஸாரும் எதிர்க்கட்சித் தலைவரது பாதுகாப்புப் பிரிவினரும் கண்டுபிடித்து கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து அங்கு நடைபெற இருந்த சந்திப்பு இரத்துச் செய்யப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்ட போதும் பலத்த சோதனைகள் மற்றும் பலத்த பாதுகாப்பின் மத்தியில் அந்த ஹோட்டலில் வேறொரு மண்டபத்தில் பின்னர் சந்திப்பு நடைபெற்றது. இந்த ஹோட்டலில் எதிர்க்கட்சித் தலைவரின் சந்திப்புக்கு முன் தேடுதல் மற்றும் சோதனை நடைபெற்ற போது கைக்குண்டு இருக்கவில்லையெனவும் பின்னரே அந்தக் கைக்குண்டு வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
_____________________________________________________________________________________________________________________________________
இலங்கைத் தமிழர்கள் தமிழீழம் கோரவில்லை; ஐக்கியமாக வாழவே விரும்புகின்றனர்: சுஷ்மா
'இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் மற்றும் தமிழ்க் கட்சியினர் அனைவரும் உரிமைகளுடன் கூடிய ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கையே தமக்கு தேவை என்கின்றனர். அவ்வாறான இலங்கைக்குள்ளேயே அவர்கள் வாழ விரும்புகின்றனர். அப்படி இருக்கும் போது, தமிழக அரசியல் கட்சியினர் மாத்திரம் ஏன் தனி ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர் என்று புரியவில்லை' என இந்திய லோக்சபாவின் எதிர்க்கட்சித் தலைவரும் பாரதீய ஜனதாக் கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். 'தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனை நான் சந்தித்தபோது, ஐக்கிய இலங்கையில் இருக்கத்தான் தமிழர்கள் விரும்புகிறார்கள் என்பதையும் நேர்மையான அரசியல் தீர்வுதான் எங்களுக்குத் தேவை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்' என்றும் சுஷ்மா ஸ்வராஜ் சுட்டிக்காட்டியுள்ளார். பாரதீய ஜனதாக் கட்சியின் மாநில மாநாடு, நேற்று வியாழக்கிழமை மதுரையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றியுள்ள சுஷ்மா கூறியுள்ளதாவது, 'இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய எனது தலைமையில் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை இலங்கைக்கு அனுப்புவதற்கு இந்திய மத்திய அரசாங்கத்தினால் முடிவு செய்யப்பட்டது. இலங்கை சென்ற எங்கள் பயணம் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்ப்பதற்காக அல்ல. அது தமிழர்களின் நிலை குறித்து முழுமையாக அறிந்து கொள்வதற்காகவே மேற்கொள்ளப்பட்டது. (மேலும்) 12.05.12
_____________________________________________________________________________________________________________________________________
காத்தான்குடியில் திருடர்கள் தொல்லை அதிகரிப்பு
காத்தான்குடியில் அண்மையில் சில நாட்களாக திருடர்கள் தொல்லை அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். இது தொடர்பில் பள்ளிவாயில்களினூடாக காத்தான்குடிப் பொலிசார் பொதுமக்களை இரவு நேரங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இதுவரையில் இத்திருட்டு சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் பல முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலும் ஆண்கள் வெளியூரில், வெளிநாடுகளில் தொழில் நிமித்தம் சென்றிருக்கும் வீடுகளிலேயே இவ்வாறான திருட்டுக்கள் இடம்பெறுவதாகவும் தெரியவருகிறது. எனவே, இரவு வேளைகளில் வீட்டின் அயல்புறங்களில் சந்தேகத்துக்குரியவர்களின் நடமாட்டங்களை அவதானித்தால் தாமதியாது காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் அவசர சேவை இலக்கமான 065 2246595 என்ற இலக்கத்திற்கு தகவல் தருமாறு பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி அறிவித்தல் விடுத்துள்ளார். இதேவேளை நேற்றிரவு காத்தான்குடி கடற்கரை வீதில் உள்ள வீடொன்றில் இவ்வாறானதொரு திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
_____________________________________________________________________________________________________________________________________
புலிகளின் புலனாய்வுப் பிரிவு மேஜர் வவுனியாவில் கைது
யுத்த காலத்தின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவு மற்றும் துப்பாக்கிப் பிரிவு ஆகியவற்றில் மேஜர் பதவிநிலை வகித்த ஒருவர், வவுனியா பொலிஸ் நிலையத்துக்கு அருகில் வைத்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த சில தினங்களாகவே வவுனியா பொலிஸ் நிலையம் அமைந்துள்ள பிரதேசத்தில் அடிக்கடி நடமாடியுள்ளார் என்றும் அவர் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து கைது செய்யப்பட்டார் என்றும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். 28 வயதான சுப்பையா கிருஷ்ணகுமார் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே, அவர் புலிகள் இயக்கத்தைச் செர்ந்தவர் என்ற தகவல் வெளியாகியதாக பொலிஸார் குறிப்பிட்டனர். யுத்தத்தின் போது ஒரு காலை இழந்துள்ள இவர், தற்போது மன்னார், அடம்பன் பிரதேசத்திலேயே வசித்து வருகின்றார். இவர் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறினர்.
_____________________________________________________________________________________________________________________________________
2000ஆம் ஆண்டின் பின்னர் 14,257 சிறுமியர் பெண்கள் மீதும் 27,003 சிறுவர்கள் மீதும் பாலியல் துஷ்பிரயோகம்
2000ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 14,257 பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருப்பதாகவும் 2000 முதல் 2010ஆம் ஆண்டு வரையில் 27,003 சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்திருப்பதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சு நேற்று சபையில் தகவல் வெளியிட்டது. இதேவேளை மேற்படி துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கான வேலைத் திட்டங்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுக்கொடுத்தல் ஆகியன அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சபையில் தெரிவிக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அமர்வின் போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. தயாசிறி ஜயசேகரவினால் எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மேற்கண்டவாறு தகவல் வெளியிட்டார். அவர் மேலும் தகவல் தருகையில் 2000ஆம் ஆண்டில் 600 சிறுமிகளும் 320 பெண்களுமாக 928 பேரும், 2001இல் 685 சிறுமிகளும் 395 பெண்களுமாக 1080 பேரும், 2003இல் 714 சிறுமிகளும் 333 பெண்களுமாக 1047 பேரும் 2003இல் 753 சிறுமிகளும் 409 பெண்களுமாக 1162 பேரும் 2004இல் 930 சிறுமிகளும் 362 பெண்களுமாக 1292 பேரும் 2005இல் 793 சிறுமிகளும் 460 பெண்களுமாக 1253 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் 2006இல் 799 சிறுமிகளும் 353 பெண்களுமாக 1152 பேரும் 2007இல் 805 சிறுமிகளும் 346 பெண்களுமாக 1151 பேரும் 2008இல் 914 சிறுமிகளும் 303 பெண்களுமாக 1217 பேரும் 2009இல் 922 சிறுமிகளும் 279 பெண்களுமாக 1201 பேரும் 2010இல் 1089 சிறுமிகளும் 235 பெண்களுமாக 1324 பேரும் 2011ஆம் ஆண்டில் 1160 சிறுமிகளும் 281 பெண்களுமாக 1450 பேரும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்காகியுள்ளனர். (மேலும்) 11.05.12
_____________________________________________________________________________________________________________________________________
மாகாணசபையை கலைக்க மாண்பு மிகு ஜனாதிபதி எடுக்கும் முடிவு தமிழ் மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை உருவாக்கியுள்ளன.
- இரா.துரைரெத்தினம்
கிழக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலம் முடியும் முன்பே மாகாணசபையை கலைக்க மாண்பு மிகு ஜனாதிபதி எடுக்கும் முடிவு தமிழ் மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை உருவாக்கியுள்ளன என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஈ.ஆர்.எல்.எப். முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கிழக்குமாகாணசபையைக் கலைக்க எடுக்கும் முடிவு பாசிச ஜனநாயக கொடுங்கோல் ஆட்சியின் உச்சக்கட்டமே எனத் தலைப்பிட்டு, கிழக்கு மாகாண சபை விரைவில் கலைக்கப்படுவது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிழக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலம் முடியும் முன்பே மாகாணசபையை கலைக்க மாண்பு மிகு ஜனாதிபதி எடுக்கும் முடிவு தமிழ் மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை உருவாக்கியுள்ளன. உண்மையில் ஒரு மாகாணசபை கலைப்பு என்பது பின்வரும் காரணங்களில் ஏதாவது ஒன்றை அடிப்படையாகக்கொண்டு அமைதல் வேண்டும். ஒரு மாகாணசபையில் ஆயுட்காலம் ஜந்து ஆண்டுகள் ஆகும். ஆனால் 4 ஆண்டுகள் நிறைவுற்றபின் அம்மாகாணசபையின் முதலமைச்சரின் ஒப்புதலுடன் தகுந்த காரணங்களை காட்டி மாகாணசபையை ஜனாதிபதி கலைக்க முடியும். 2-தேசத்துரோகம் அல்லது ஊழல் மோசடியில் மாகாணசபை ஈடுபட்டால் கலைக்க முடியும். இந்தவகையில் 8-5-2012 அன்றுடன் கிழக்கு மாகாணசபைக்கு நான்கு வருடங்கள் முடிவுறுகின்றது. இந்நிலையில் கிழக்கு மாகாணசபை கலைப்பு தொடர்பாக எழுந்துள்ள வதந்திகள் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை உருவாக்கி உள்ளதோடு தமிழ் மக்களின் உணர்வுகளையும் மனங்களையும் உதாசீனப்படுத்துவதாகவும் காயப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. (மேலும்) 11.05.12
|