a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தீர்ப்பு
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்    மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்          மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்       தேனகம்             தென்றல்            அம்மான்         வாவிமகள்    தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                எரிமலை

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr            srilankan-diaspora.org/              
media.athirady.org/

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.8                                                           03.07.2009

சென்னை துறைமுகத்திற்குள் வந்தது 'வணங்கா மண்'

vanangamann1சென்னை : இலங்கையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டு, நிவாரணப் பொருட்களுடன் நடுக்கடலில் நின்று கொண்டிருந்த, "வணங்கா மண்' கப்பல், நேற்றிரவு சென்னைத் துறைமுகத்திற்குள் வந்தது. கப்பலில் இருந்து நிவாரணப் பொருட்கள் இறக்கப்பட்டு, சரக்கு கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளது. இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக, ஐரோப்பிய தமிழர்கள் திரட்டிய 884 டன் நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு "கேப்டன் அலி' என்ற "வணங்கா மண்' கப்பல், பிரான்சிலிருந்து கடந்த மே 7ம் தேதி இலங்கை புறப்பட்டது. அந்த கப்பலை இலங்கை அரசு அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்பியது. எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்த கப்பல், கடந்த ஜூன் 13ம் தேதி, சென்னை நோக்கி வந்தது.மத்திய அரசின் முறையான அனுமதியின்மையால், சென்னைத் துறைமுகத்திற்குள்ளும் நுழைய முடியவில்லை. வேறு வழியின்றி, சென்னையிலிருந்து ஐந்து கடல் மைல் தொலைவில், சர்வதேச எல்லையில் நிவாரணக் கப்பல் நின்றிருந்தது. (மேலும்) 03.07.09

____________________________________________________________________________________

அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சர்வகட்சி அணுகுமுறை: ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, ஐ.தே.க உட்பட சர்வகட்சிகள் பங்கேற்பு

allpartiesஅபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்துக்கான சர்வகட்சிக்குழு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முதல் முறையாகக் கூடியது. ஜனாதிபதி செயலகத்தில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட சகல கட்சிகளின் பிரதி நிதிகளும் இதில் கலந்து கொண்டனர். இங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றும் போது கூறியதாவது:- ஒருவருக்கொருவர் வேற்றுமை பாராட்டும் காலம் இதுவல்ல. சமத்துவத்தை நிலைநாட்டுவதற்காக சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய காலமாகும் இனங்களுக்கிடையில் நெருக்கடி மற்றும் விரோதங்களை உண்டு பண்ணும் வேற்றுமை பற்றி ஆராய்வதைவிடுத்து, சகலரும் நாட்டை நேசிக்கக் கூடிய குழுவாகச் செயற்படும் சூழலை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியமாகும்.  (மேலும்) 03.07.09

____________________________________________________________________________________

வடபகுதி மக்களுக்கு இனிப்பான செய்தி

காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை என்பன வடக்கின் பிரதான தொழில்மையங்களாக விளங்கின. இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் வடபகுதி மக்களின் அரசியல் தலைமையாக அங்கீகாரம் பெற்ற தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் உட்பட ஒரு பிரிவினர் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் சங்கமமாகியதன் விளைவாக வடபகுதி பெற்ற நன்மை என்று இம் மூன்று தொழிற்சாலைகளையும் குறிப்பிடலாம். தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் அன்றைய அரசாங்கத்தில் இணைந்ததால் முற்போக்கு சக்திகளுக்கும் உழைக்கும் வர்க்கத்துக்கும் ஏற்பட்ட பின்னடைவுக்கு மத்தியில் இம்மூன்று தொழிற்சாலைகளும் வடக்குக்குக் கிடைத்த வாய்ப்புகள் எனலாம். இம்மூன்று தொழிற்சாலைகளும் வடபகுதி மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக விளங்கின. இத் தொழிற்சாலைகளில் ஏராளமானோர் வேலைவாய்ப்புப் பெற்றனர். பல குடும்பங்களில் அடுப்பு எரிவதற்கு இத் தொழிற்சாலைகள் காரணமாக இருந்தன. வடக்கின் அரசியல் களத்தில் புலிகளின் கை மேலோங்கியதைத் தொடர்ந்து இக் குடும்பங்களில் இருள் சூழத் தொடங்கியது.  (மேலும்) 03.07.09

____________________________________________________________________________________

இலங்கை  - தமிழீழம் - போராட்டம்! ஆறறிவுடைய மனித இனத்திற்கு ஒரு மனிதாபிமான வேண்டுகோள்! – சிந்தித்துச் செயற்படுங்கள்

தங்க. முகுந்தன்

செய்திகளைப் பார்க்கும் போது சிரிப்பதா? அழுவதா? யார் மீது குற்றம் காண்பது! யாரைப் பாராட்டுவது! என்று குழம்பியிருக்கும் எனக்குப் பொதுப்படையாக ஏதாவது எழுதவேண்டுமெனத் தோன்றியதால் இதைப் பதிவிலிடுகிறேன்! குற்றம் சொல்பவர்கள் சொல்லட்டும்! வாழும் அடிப்படை மனித உரிமையின் பெயராலேயே இக்கட்டுரை முன்வைக்கப்படுகிறது. சகல வசதிகளுடனும் வாழ்ந்த வடக்குக் கிழக்குப் பகுதி மக்களில் இன்று பாதிப்பேருக்குமேல் தமது சொந்த இடங்களை விட்டு வேறு இடங்களில் வாழும் நிலை! அது புலம் பெயர்ந்திருக்கலாம் - நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருக்கலாம் - கடைசியாக எந்தவிதமான அடிப்படை வசதியற்ற நிலையில் முட்கம்பிகளுக்குள் வவுனியாப் பகுதியிலும் ஏனைய பகுதிகளிலும் வாழும் வன்னியில் இருந்து கடந்த ஓரிரு மாதங்களில் வெளியான அப்பாவி மக்களாயிருக்கலாம் (மேலும்) 03.07.09

____________________________________________________________________________________

சிட்னி இளைஞனுக்கு யார் பொறுப்பேற்கப்போகின்றார்கள்.

அவுஸ்திரேலியாவில் அசிட் தாக்குதல் தொடர்பாக கைதானவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு

விக்டர்.

sydneyசிட்னியில் கடந்தமாதம் சிங்கள இளைஞர்களின் வீட்டை உடைத்துச் சென்று அவர்களைத்தாக்கி அசிட் ஊற்றிய சம்பவம் எல்லோரும் அறிந்ததே. ஊர்வலம் போய்விட்டு புலிக்கொடியோடு காரில் வந்த தமிழ் இளைஞர்களை சிங்கள இளைஞர்கள்  தாக்கினார்கள் தமிழ் இளைஞர்களும் திருப்பித் தாக்கினார்கள். அதில் பொலிசார் தலையிட்டு இளைஞர்களை அந்த இடத்திலிருந்து அனுப்பினார்கள். அன்று இரவு இந்த அசிட் ஊற்றிய நிகழ்வு நடந்தது. அதில் சம்பந்தப்பட்டதாக இளையோர் அமைப்பைச்சேர்ந்த கந்தராஜா என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். நேற்று 01.06.2009இல் இவர் நீதிமன்றம் கொண்டுவரப்பட்டார். நீதிமன்றம் வரும் போது தலையை தான் போட்டிருந்த மேலங்கியால் மறைத்து தன்னை அடையாளம் காணமுடியாதவாறு மறைத்துக்கொண்டார். இது அவுஸ்ரேலியாவில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளிலும் காட்டப்பட்டது.  (மேலும்) 02.07.09

____________________________________________________________________________________

சமத்துவமா? அடிமைத்தனமா?

- அறிவுடன்

tamilsinhala unityசமத்துவமா? அடிமைத்தனமா? இந்த இரண்டில் ஒன்றைத் தெரிவு செய் என்று இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் நிர்பந்திக்கப்படுகிறார்களா? எனும் சந்தேகம் பெரும்பாலானோர் மனதில் ஏதாவது ஒரு மூலையில் தேங்கிக் கிடக்கிறது. இந்த சந்தேகம் வெளிநாட்டில் இருப்போரின் வெளிமனதிலும், உள் நாட்டில் இடைத்தங்கல் முகாம்களில் இன்று தவிக்கும் மக்களின் ஆழ் மனதிலும் நி்ச்சயம் இருக்கக்கூடும். ஆனாலும் இது யாருக்குப் பொருந்தும்? எனும் கேள்வியிலிருந்தே சிறிலங்கா அரசின் விளக்கங்கள் ஆரம்பிக்கப்படும். முதலில் இப்படியான பிரச்சாரத்தைக் கொண்டு பிரிவினைவாதிகள் நன்மை பெறக்கூடாது எனும் அடிப்படையை உள்வாங்கிக் கொள்ளும் அரச இயந்திரம் “இலங்கை” எனும் ஒரு தேசத்தின் மக்களே நாம் அனைவரும் எனும் கருத்தை ஆழப் பதிப்பதற்கான செயற்பாடுகளில் தம்மை இயக்கி வருகிறது.  (மேலும்) 02.07.09

____________________________________________________________________________________

இலங்கையர் ஜனநாயக முன்னணி – ஜேர்மனி (SLDF-Germany) இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களுக்கான நிவாரணப்பொருட்களை சேகரித்து அனுப்பி வைத்துள்ளது.

sldf-ger

யுத்த அனர்த்தங்கள் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள  மக்களுக்கான மருந்துப்பொருட்கள், உடைகள், அங்கவீன மானவர்களுக்கான வண்டிகள் ஆகியவை அடங்கலான கன்டெயினரை இலங்கையர் ஜனநாயக முன்னணி ஜெர்மனி (SLDF) அனுப்பி வைத்துள்ளது. ஜேர்மனி, சுவிஸ், பிரான்ஸ், கொலண்ட் ஆகிய நாடுகளிலிருந்து கடந்த ஒருமாதகாலமாக நிவாரணப்பொருட்கள் இலங்கையர் ஜனநாயக முன்னணி சேகரித்தது. குழந்தைகளுக்கான உடைகள் முதல்கொண்டு மருந்துப்பொருட்கள் அங்கவீனர்களுக்கான வண்டிகள் உட்பட சுமார் நான்கு தொன் வரையிலான நிவாரணப்பொருட்கள் சேகரிக்கப்பட்டன. ஜேர்மன் ஸ்ருட்கார்ட் நகரில் இயங்கி வருகின்ற இலங்கையர் சங்கத்தினரும் இதில் இணைந்து கொண்டு தமது பங்களிப்பையும் வழங்கியுள்ளனர்.  நிவாரணப்பொருட்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சென்றடைவதில் சுமார் மூன்று அல்லது நான்கு வாரங்கள் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  (மேலும்) 02.07.09

____________________________________________________________________________________

தனி ஈழமல்ல; சம உரிமைக்கு போராடுவோம் : முதல்வர் கருணாநிதி

Karunanidhiென்னை, ஜூலை 1: ""இலங்கையில் தனி ஈழம் என்ற கோரிக்கையை வலியுறுத்தாமல், அங்குள்ள தமிழர்களின் சம உரிமைக்காகப் போராடுவோம்'' என்று பேரவையில் முதல்வர் கருணாநிதி கூறினார்.   பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், இதுகுறித்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக), பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), டி.ராமசாமி (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் பேசினர்.  இதற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசியது:   ""அரசியல் பிரச்னைகளை அடிப்படையாக வைத்து இந்தத் தீர்மானத்தை, சிறப்பு கவன ஈர்ப்பை அணுகவில்லை. அதுவரையில் மிகுந்த மகிழ்ச்சி. இலங்கையில் இருக்கின்ற அரசுக்கும், தமிழகத்தில் இருக்கின்ற ஒரு அரசுக்கும் இடையே நடைபெறுகின்ற வாக்குவாதம் அல்ல. இரண்டு இனங்கள் - அங்கே சிங்கள இனம் - இங்கே தமிழ் இனம் என்ற இனப் போராட்டம் இது.   இலங்கையில் மொழியைச் சீர் செய்வது மாத்திரமல்ல, அங்கேயிருக்கிற மக்களும் சீராக வாழ வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்த அங்கேயுள்ளவர்கள் போராடினர். அப்போது, தமிழீழம் தனியாகப் பிரிய வேண்டும் என்ற அந்தக் குரலும் எழுந்தது.  (மேலும்) 02.07.09

____________________________________________________________________________________

உதயன் பத்திரிகைக்கு இனிமேல் தடையில்லை: ஜனாதிபதி உத்தரவாதம்

யாழ் குடாநாட்டிலிருந்து வெளியாகும் உதயன் பத்திரிகை தடையின்றி வெளிவருவதற்கு அந்தப் பத்திரிகை ஆசிரியரிடம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவாதமளித்துள்ளார். கடந்தவாரம் நாட்டைக் காக்கும் தமிழர் கூட்டமைப்பு எனும் பெயரில் உதயன் பத்திரிகைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததுடன், இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் சில பத்திரிகை முகவர்களுக்கு துண்டுப்பிரசுரமொன்றும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இந்த விடயத்தை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்றதுடன், சுடர் ஒளி, உதயன் ஆசிரியர் என்.வித்தியாதரனுக்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்றுக்கும் ஏற்பாடு செய்துகொடுத்திருந்தார். இந்த நிலையில், சுடர் ஒளி, உதயன் ஆசிரியர் என்.வித்தியாதரனுடனான சந்திப்பிலேயே மஹிந்த ராஜபக்ஷ இந்த உத்தரவாதத்தை அளித்தார். எந்தவித அச்சுறுத்தலுக்கும் உள்ளாகாமல் உதயன் நிறுவனம் சுதந்திரமாக இயங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தனது அரசாங்கம் எடுத்திருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டிருக்கும் நிலையில், கருத்து வெளியிடும் சுதந்திரத்தையும், ஊடக சுதந்திரத்தையும் நசுக்குவதற்கு இடமளிக்கமுடியாதெனக் குறிப்பிட்டிருக்கும் ஜனாதிபதி, இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடும் சக்திகளை தேடிக் கண்டுபிடித்து ஒடுக்குவதற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் உறுதியளித்தார்.

____________________________________________________________________________________

இலண்டனில் தியாகிகள் தினம்

eprlf-london2ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(பத்மநாபா)வின் வெளிநாட்டுப் பிராந்தியத்தினரால்  ஆண்டுதோறும் நடாத்தப்படும் ‘தியாகிகள் தினம’; ஜூன் மாதம் 20ந்திகதி, தெற்கு இலண்டனில் நடைபெற்றது. 1990ம் ஆண்டு ஜுன் மாதம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈபிஆர்எல்எவ்) செயலாளர் நாயகம் பத்மநாபாவும், கட்சியின் பன்னிரு முன்னணி உறுப்பினர்களும் ஈழத்தமிழ்மக்கள் சம்பந்தமான அரசியல் முன்னெடுப்புகள் பற்றி தமிழகத்தின் சென்னையில் ஒரு வீட்டில் நிராயுதபாணிகளாக கூடிக் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தபோது புலிகளின் ஏவலாளிகளால் நயவஞ்சகமாக படுகொலை செய்யப்பட்டனர். அந்த நாளையே, படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாகவும், தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற ஒரே உன்னத நோக்குடன் முன்வந்து தம் இன்னுயிரை அர்ப்பணித்த போராளிகளையும், அரசியல்வாதிகளையும், செயற்பாட்டாளர்களையும், மற்றும் பலியாகிய பொதுமக்களையும், கட்சி பேதமின்றி நினைவு கூரும் முகமாக ‘தியாகிகள் தினம்; இலங்கையில் வடக்கு - கிழக்கின் பல பகுதிகளிலும், தமிழகத்திலும், இலண்டன், பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ்,  கனடா ஆகிய வெளிநாடுகளிலும் ஈபிஆர்எல்எவ் கடந்த பத்தொன்பது ஆண்டுகளாக, வருடாவருடம் தொடர்ந்து நடாத்தி வருகின்றனர். (மேலும்) 02.07.09

____________________________________________________________________________________

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வு:  குந்தகமான கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு அரசாங்க கட்சிகளுக்கு ஜனாதிபதி வலியுறுத்தல்

rajapaksha-2அரசியல் தீர்வு யோசனை குறித்து பல்வேறுபட்ட கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்துமாறு ஜனாதிபதி அரசாங்கத்திலுள்ள கட்சித் தலைவர்களைக் கோரியுள்ளார். பயங் கரவாதத்திற்கு தீர்வு கண்டதைப் போல இந்தப் பிரச்சினைக்கும் தன்னால் தீர்வு காண முடியும் எனவும் எனவே இதற்காக தனக்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் அவர் கட்சித் தலைவர்களைக் கோரியுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். ஊடகத்துறை அமைச்சில் நேற்று (01) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:- 13ஆவது திருத்தம் குறித்தும் அரசியல் தீர்வு யோசனை தொடர்பாகவும் கடந்த சில தினங்களாகப் பல்வேறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன் தினம் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சிப் பிரதிநிதிகளை சந்தித்த ஜனாதிபதி இது குறித்து கட்சிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.  (மேலும்) 02.07.09

____________________________________________________________________________________

கிழ.மாகாணத்தில் சட்டவிரோத ஆயுதங்களை கையளிக்கும் கால அவகாசம் மேலும் இரு தினம் நீடிப்பு

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள சட்டவிரோத ஆயுதங்களை கையளிப்பதற்கு நாளை வரை வழங்கப்பட்டிருந்த இரண்டு வார கால அவகாசம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 19 ம் திகதி மட்டக்களப்பு காத்தான்குடியில் முஸ்லிம் சமூக ,சமய பிரமுகர்களுடன் இடம் பெற்ற கூட்டமொன்றில் இந்த கால அவகாசம் பற்றி கிழக்கு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் எடிசன் குணத்திலக்க அறிவித்திருந்தார்.. புதிய கால அவகாசத்தின் படி எதிர்ரும் 4 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணி வரை ஆயுதங்களை கையளிக்க முடியும் என கிழக்கு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். சிலரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்தே இந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.இந்த ஆயுதங்களை பொறுப்பேற்கவென பொலிஸ் ,இராணுவம் மற்றும் விசேட அதிரடிப் படை அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

____________________________________________________________________________________

சூரிச் மாநகரில் மாபெரும் வீரமக்கள் தின நிகழ்வும், மாணவர்களுக்கான பரிசளிப்பும்!!

புளொட் அமைப்பின் சுவிஸ் கிளையினரால் வருடந்தோறும் ஜுலை மாதத்தில் நடத்தப்பட்டு வரும் வீரமக்கள் தின நிகழ்வுகள் எதிர்வரும் 05.07.2009 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30மணியளவில் சூரிச் மாநகரிலுள்ள உன்ரர் அப்போல்ரன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆரம்ப நிகழ்வாக வீரமக்கள் தினத்திற்குரிய மலராஞ்சலி மற்றும் அக வணக்கம் என்பன இடம்பெறுவதுடன், இதனைத் தொடர்ந்து நிகழ்வில் பிரதம அதிதியாகவும், சிறப்பு விருந்தினர்களாகவும் பங்கேற்போரின் உரைகளும் முக்கியஸ்தர்களின் உரைகளும் இடம்பெறவுள்ளது. அத்துடன் விசேட நிகழ்வுகளாக பின்னணி இசைக்கு ஆடுதல், வினோதவுடைப் போட்டி, பொது அறிவுப்போட்டி, நாடகம், நாட்டியம் போன்ற பல கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளது. மற்றும் அண்மையில் சுவிஸ்வாழ் தமிழ் மாணவ மாணவியர்களுக்காக தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தினால் நடத்தப்பட்ட பொது அறிவுப் போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவியர்க்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது. வேறு மேலதிக விபரங்கள் தேவைப்படின் தயவுசெய்து பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். 076- 368 15 46.. 076-310 82 17.. 078 -312 43 39.. 077- 203 88 81 வீரமக்கள்தின நிகழ்வு நடைபெறும் மண்டபம். GemeinsSchfts Zentrum Affolten, Bodenacker.25 8049 Zurich  - நன்றி.. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் -சுவிஸ்

____________________________________________________________________________________

சிங்கக் கொடி சிங்களவர்களின் கொடி! அது தமிழரின் கொடியாகுமா?

(சாகரன்)

NationalFlagசிங்கக் கொடி, அது சிங்களக் கொடி. அது தமிழர் கொடி அல்ல.’ ‘சிங்கக் கொடி சிறிலங்காவின் கொடி. அது ஈழத்தின் கொடி அல்ல.’ சிங்கக் கொடி இலங்கையின் கொடியாக தீர்மானித்த நாளில் இருந்து தமிழ்மக்களுக்கு இப்படித்தான் சொல்லித்தரப்பட்டது. தமிழருக்கு உணர்த்தப்பட்டது. இது தமிழர் தரப்பினரால் மட்டுமல்ல இலங்கை அரசுகளின் செயற்பாடுகளினாலும் உணர்தப்பட்டது. சுதந்திரத்திற்கு பின்வந்த இலங்கை பேரினவாத அரசுகளின் செயற்பாடுகள் இவ்வாறுதான் இருந்து வந்தன. தமிழர் பாராளுமன்ற தலைமைகளும் தமது நாற்காலிக்கனவுகளை நனவாக்க பாவித்து வந்த தாரக மந்திரம் இதுதான். இலங்கை தமிழர்களின் நாடும் கூட என்ற உணர்வுகள் வரக்கூடாது என்பதில் இவர்கள் இருவரும் கணிசமான பங்களிப்பை செய்தே வந்திருக்கின்றனர். இன்று திடீரென சிங்கக் கொடி ஈழத்தின் கொடி. அது தமிழரின் கொடியும் கூட. அதுவும் தமிழ் பிரதேச பொதுக்கட்டிடங்களில், வீதிகளில், கடைகளில், வீடுகளில் சிங்கக் கொடியை கட்டி அதனை தமிழரினதும் கொடி என்று சொன்னால் சற்று வித்தியாசமாகவும், அதே வேளை ஏற்றுக் கொள்ள முடியாமலும் தவிக்கும், தவிர்க்கும் தமிழ் மக்களின் நிலையே இன்று தமிழ் பகுதியில் பார்க்க முடியும் அவல நிலையே காணப்படுகின்றது.  (மேலும்) 02.07.09

பிரபாகரன் உயிரோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் இலங்கைத் தமிழர்களுக்காக உடனடியாக செய்யப்பட வேண்டியவை!

தமிழக விமர்சகர் ஞாநி

gnani-sankaranபிரபல தமிழக அரசியல் விமர்சகர் ஞாநி, திராவிட இயக்கங்கள் பற்றி மிகக் கடுமையானதும், கூர்மையானதுமான விமர்சனங்களை முன்வைத்து வருபவர். தற்பொழுது அவர் பிரபலமான ‘குமுதம்’ வார இதழில,; வாராவாரம் ‘ஓ பக்கங்கள்’ என்ற பத்தியை எழுதி வருகின்றார். அண்மையில் அவர் அப்பத்தியில் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எழுதிய கருத்துகளை எமது வாசகர்களக்காக கீழே தருகின்றோம். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்று சர்ச்சைகள் தொடர்கின்றன. பலரும் என்னிடமும் தொலைபேசியில் கேட்கிறார்கள். எந்த உண்மையை நம்புவதென்று எனக்கும் தெரியவில்லை. பிரபாகரன் இருக்கிறார் என்றால் இனி என்ன ஆகும்? பிரபாகரன் இல்லையென்றால் இனி என்ன ஆகும்? இந்த இரு நிலைகளையும் கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். பிரபாகரன் இருக்கிறார் என்றால், அவரை எவ்வளவு சீக்கிரமாக நெடுமாறனோ வைக்கோவோ சந்தித்து பேட்டி எடுத்து வெளியிடுகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. பிரபாகரன்  தன்னைத்தானே தீவிரமாக சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டிய நேரம் இதுதான். உலகத்தின் மிகத் திறமைவாய்ந்த ராணுவத் தளபதிகள் வரிசையில் இடம் பெறக்கூடிய தனக்கு, இப்போது பின்னடைவு ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்பதை அவர் சிந்திக்க வேண்டும். ராணுவ ரீதியான தவறுகளை விட, அரசியல் தவறுகள்தான் இந்த நிலைக்குக் காரணம் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். (மேலும்) 01.07.09

____________________________________________________________________________________

இந்திய வெளியுறவு செயலாளர் மேனன் மாத இறுதியில் ஓய்வு - நிரூபமா ராவ் புதிய செயலாளராக நியமனம்

இந்திய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ். சிவ்சங்கர் மேனன் ஜூலை 31ஆம் திகதியுடன் ஓய்வு பெறவுள்ளதையடுத்து புதிய வெளியுறவுத்துறை செயலாளராக முன்னாள் இலங்கைத் தூதுவராக பணியாற்றிய நிரூபமா ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேற முக்கிய காரணமாக இருந்தவர்களில் மேனனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேனன் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து அடுத்த வெளியுறவுத்துறைச் செயலாளராக முன்னாள் இலங்கைத் தூதுவர் நிரூபமா ராவ் அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது சீனாவுக்கான இந்தியத் தூதுதராக நிரூபமா ராவ் இருக்கிறார். ஜூலை 31ஆம் திகதி முதல் நிரூபமா ராவ் புதிய பணியை ஏற்றுக் கொள்வார்

____________________________________________________________________________________

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே….

- தேசியத்தலைவர்

உங்கள் வீட்டுக்கு விருந்தினர்கள் தங்குவதற்கு வருகிறார்களாயின் முதலில் நீங்கள் செய்யும் வேலைகள் ஞாபகத்திற்கு வருகிறதா? உங்கள் வீட்டு பாத்ரூம் மலகூடம் உட்பட முழுவீட்டையும் துப்பரவுசெய்வீர்கள். பிறகு…. விருந்தினர் உறங்கவிருக்கும் படுக்கை அறையில் இருக்கும் கட்டிலின் விரிப்புகளை மாற்றுவீர்கள். மறக்காமல் தலையணை உறைகளையும் மாற்றிவிடுவீர்கள். ஆனால் தலையணைகள் மாத்திரம் மாறாது.  ஓரே தலையணை ஆனால் அதன் உறை மாத்திரம் மாறிவிடும்.  அவுஸ்திரேலியாவில் இப்படி பல பழைய தலையணைகள் இருக்கின்றன. அவற்றை பழம் பெருச்சாளிகள் பதம் பார்த்திருப்பதனால். சேதங்களை மறைப்பதற்காக புதுப்புது தலையணை உறைகளை மாற்றிவிடுவார்கள்.   கனவில் வாழ்ந்த ஈழ மண்ணில் பெருந்தலை சாய்ந்ததும் அதனை நினைத்து சிறு ஒப்பாரி கூட பாடுவதற்கு வக்கில்லாத கூட்டம் பழம் தலையணைகளுக்கு உறை மாற்றத்தொடங்கியிருக்கிறது. அப்படி சமீபத்தில் உறை மாற்றப்பட்டிருக்கும் தலையணைதான் ஆஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ். (மேலும்) 01.07.09

____________________________________________________________________________________

யாழ்.தேர்தல் பணிகளுக்கு டக்ளஸ் தலைமை: வவுனியா நகர சபைக்கு ரிஷாத் பொறுப்பு

2009 இலும் மேயர் பதவி சு.க.வுக்கே - சுசில்

யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தல் பணிகளை முன்னெடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் குழுவொன்றும் வவுனியா நகரசபைத் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த் தெரிவித்தார். 1976ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவர் யாழ். மேயராகத் தெரிவானார். 33 வருடங்களின் பின் மீண்டும் எமது கட்சியைச் சேர்ந்த ஒருவர் மேயராகத் தெரிவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, யாழ். மற்றும் வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல