Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி.நியூஸ்
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
காந்தீயம்
நம்நாடு
தாயகம்
தம.வி.கழகம்(புளொட்)
தமிழலை
த.வி.கூட்டணி
தமிழ்நியூஸ்வெப்
தீர்ப்பு
தூ
நெருப்பு
விழிப்பு
எங்கள் தேசம்

Asian Truth

Asian Guardian

Asientribune

Independentsl

Lines-Magazine

Lanka Muslims

lankaguardian.Blog

Srilankanmic

Membres.Lycos

Tamilaffairs

Sldf

The lka academic

Tamil Week

Uthr

a_Thenee_head02

09.05.2008                   Vol.8                       Issue: 69

அடம்பன் நகர் படையினர் வசம்: ஆலங்குடா படையினர் கட்டுப்பாட்டில்

sl army-1 அடம்பன் நகர் பகுதியை இன்று வெள்ளிக்கிழமை காலை படையினர் கைப்பற்றியுள்ளதாக தேசிய பாதுகாப்பு மையம் செய்தி வெளியிட்டுள்ளது.அடம்பன் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 15புலி உறுப்பினர்வரை கொல்லப்பட்டுள்ளதாகவும், இராணுவ தரப்பில் இரு இராணுவ வீரர்கள் பலியானதாகவும் 7பேர்வரை காயமடைந்துள்ளதாகவும் தேசிய பாதுக்காப்பிற்க்கான ஊடக மையம் மேலும் தெரிவித்துள்ளது. மன்னாரில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த ஆலங்குளம் பிரதேசத்தின் ஒரு பகுதியை படையினர் கைப்பற்நியுள்ளனர். அதேவேளை, மாதோட்டம் பகுதியிலுள்ள புலிகளின் ் மூன்று பதுங்கு குழிகள் தாக்கியழிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் ஆறு பதுங்கு குழிகள் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மன்னாரில் விசேட படைநகர்வு ஒன்றை மேற்கொண்ட பாதுகாப்பு படையினர்ஆலங்குளம் காட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பிரதேசத்தை இலக்கு வைத்து கடுமையாக தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து அங்கு மூண்ட கடும் மோதலின் பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த ஆலங்குளம் பிரதேசத்தின் 600 தொடக்கம் 400 வரையான சதுர மீற்றர் நிலப்பரப்பை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர்.நேற்று முன்தினம் அதிகாலை ஆரம்பமான விசேட படை நகர்வு காலை 10.00 மணி வரை நீடித்துள்ளது. அதன் பின்னரே ஆலங்குளம் பிரதேசத்தின் ஒரு பகுதியை படையினர் கைப்பற்றியுள்ளனர். (மேலும்) 09. 05.08

_________________________________________________________________

இலங்கையில் மேற்கொண்டுவரும் நிவாரண மற்றும் போஷணை செயற்றிட்டங்களுக்கு ஜப்பான் உதவி

உலக உணவுத் திட்டம் இலங்கையில் மேற்கொண்டுவரும் நிவாரண மற்றும் போஷணை செயற்றிட்டங்களுக்கு உதவ ஜப்பான் அரசாங்கம் முன்வந்துள்ளது. முதற்கட்டமாக 4.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 5 ஆயிரத்து 500 தொன் அரிசியையும், 110 தொன் தகரத்தில் அடைக்கப்பட்ட மீனையும் உலக உணவுத் திட்டத்துக்கு விரைவில் ஜப்பான் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உணவுப் பொருட்களின் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பினால் இலங்கையில் நிவாரண நடவடிக்கைகளுக்காக இவ்வாண்டு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் பற்றாக்குறை ஏற்படுமெனவும் எனவே நிவாரணத்தில் தங்கியுள்ள மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க கொடையாளி நாடுகள் விரைந்து உதவ வேண்டுமென உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி சில வாரங்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்தே இலங்கையில் உலக உணவுத் திட்டம் மேற்கொள்ளும் நிவாரணப் பணிகளுக்கு உதவ உலக உணவுத் திட்டம் முன்வந்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கியோஷி அராக்கி, அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பை நிவாரணப் பொருட்களில் தங்கியுள்ள மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. (மேலும்) 09. 05.08

_________________________________________________________________

THE SHARIA LAW AND THE SLMC

S.M.M.Bazeer

The SLMC claimed from their formation that the Quran and the Hadith were their party constitution but no party member had any idea whether the party had submitted any constitution when the party was registered as a political party with the Commissioner of Elections on 11th of February 1988. However the SLMC’s party Constitution was officially approved the constitution on the 5th July 1992. The SLMC constitution does not deal with the aspect of how a leader is elected or removed from leadership and the constitution has no mention about any disciplinary actions against the leader. (Read) 09.05.08

_________________________________________________________________

பயங்கரவாத நோக்கில் ரகசிய வேலையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு விடுதலைப் புலி ஆர்வலர்கள் பிரிட்டனில் கைது

 ஐக்கிய ராஜ்ஜியத்தில், தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக ரகசிய வேலையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதே விசாரணையில் ஐந்தாவது நபர் ஒருவர் முன்னரே கைதுசெய்யப்பட்டிருந்தார். லேப்டாப் கணினிகள், அண்டென்னாக்கள், ரேடியோ தொடர்புக் கருவிகள் மற்றும் சக்திவாய்ந்த காந்தங்கள் ஆகியவற்றை இவர்கள் வைத்திருந்ததாகவும் பொலிசார் கூறுகின்றனர். கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவரான ஏ.சி. ஷாந்தன் என்பவர், 2001ஆம் ஆண்டு பிரிட்டனில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வந்து புலிகள் அமைப்பு தடைசெய்யப்படுவதற்கு முன்பு, லண்டனில் புலிகளின் அலுவலகத்தை நடத்திவந்தவர். தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கத்துக்கு ஆதரவு திரட்டினார் என்று சென்ற வருடம் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.கைதாகியுள்ள மற்ற மூவரும்கூட புலிகள் அமைப்பின் ஆர்வலராக அறியப்பட்டவர்கள். - BBC

_________________________________________________________________

தமிழ் ஐனநாயக தேசியக் கூட்டணியின் 'இலங்கை இனப்பிரச்சனையில் எமது ஐக்கியம்" கருத்தரங்கு

 பிரான்ஸில் நடைபெற்ற கருத்தரங்கு தொடர்பான பத்திரிகை அறிக்கை

04-05-2008 ஞயிறு பிரான்ஸில் தமிழ் ஐனநாயக தேசியக் கூட்டணியினால் 'இலங்கை இனப்பிரச்சனையில் எமது ஐக்கியம்" என்னும் தலைப்பில் கருத்தரங்கு ஒன்று ‘சபாலிங்கம் நினைவு மண்டபத்தில்’ நடைபெற்றது. காலை 11மணியில் இருந்து மாலை வரை நடைபெற்ற இன் நிகழ்வில் புலம்பெயர் தேசங்களில் இருந்து குறிப்பாக கனடா, நோர்வே, சுவிற்ஸலாந்து, பிரித்தானியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்தும் பல அரசியல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். முதல் நிகழ்வாக தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தில் மரணித்த அனைத்துப் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து தோழர் கிருபன் வரவேற்புரை நிகழ்த்தினார்.அவர் தனது உரையில் இரு தசாப்த்தங்களிற்கு பின் அரசியல்கட்சிகள் இணைந்து பிரான்சில் இவ்வாறான கருத்தரங்கை நிகழ்த்துவது வரலாற்று நிகழ்வு என்றும், இந்த நிலமை உருவாகுவதற்கு அர்ப்பணிப்புடன் உழைத்த தோழர்கள் நண்பர்கள் குறிப்பாக சமகாலத்தில் எம்மோடு அரசியல் இலக்கிய பணியாற்றி மறைந்த தோழர்கள் சபாலிங்கம், உமாகாந்தன், கலைச்செல்வன், புஸ்பராஐ பராமாஸ்ரர் போன்றொரையும் நினைவு கூர்ந்தார். (மேலும்) 09. 05.08

_________________________________________________________________

விடுதலைப் புலிகள் இணங்கினாலே இந்தியா தலையிடும்- பகவதி 

விடுதலைப் புலிகள் இணங்கிக்கொண்டாலே இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியா தலையிடும் எனத் தெரிவித்திருக்கும் இந்தியாவின் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பகவதி, எனினும், தமிழகத்திலுள்ள பெரும்பான்மையானவர்கள் அதற்கு இணங்குவார்களா என்பது சந்தேகத்துக்குரியது எனக் கூறியுள்ளார். ஆசிய பிராந்தியத்தில் நீண்டகாலமாக இலங்கை இனப்பிரச்சினை தொடர்ந்து வருகிறது. எனினும், அப்பாவிப் பொதுமக்கள் மேலும் கொல்லப்படுவதற்கு முன்னர் விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும் பேச்சுவார்த்தை மேசைக்குச் செல்லவேண்டும் என கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.“விடுதலைப் புலிகள் இணங்காவிட்டால் இலங்கை விடயத்தில் இந்தியா தலையிடுவதில் எந்தப் பயனும் இல்லை. அதையும்மீறி இந்தியா தலையிட்டால் விடுதலைப் புலிகள் தமிழ் என்பதாலும், தமிழகத்திலுள்ளவர்கள் தமிழர்கள் என்பதாலும் அது எதிர்மறையான விளைவைத் தோற்றுவித்துவிடும்” என பகவதி கூறியுள்ளார். (மேலும்) 09. 05.08

_________________________________________________________________

ம.வி.மு. அமைக்கவிருக்கும் தேசிய முன்னணிக்கு எந்த அரசியல் கட்சிகளும் சவாலாக இருக்கப்போவதில்லை.

லக்பிம|| பத்திரிகையுடனான நேர்காணல் -மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா

இது பல அரசியல் கட்சிகளைக் கொண்டு அமைக்கப்படும் கட்சியல்லவென நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். இதற்கு முன்னர் தேர்தல் நெருங்கும்போது கட்சிகள் சேர்த்து முன்னணிகள் அமைக்கப்பட்டன. அதன் பின்னர் கொள்கை வேறுபாடுகள் காரணமாக அவைகள் பிரிந்து சென்றன.நாம் அவ்வாறான முன்னணியை அமைக்கப்போவதில்லை. இந்நாட்டு உழைக்கும் மக்கள், விவசாயிகள், நிபுணர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரைக் கொண்ட உண்மையான முன்னணியையே அமைப்போம். அரசியல் கட்சிகளில் செயல்பட்டு, அதனால் விரக்தியுற்றிருக்கும் நபர்களும் இந்த முன்னணியில் இணைந்துக் கொள்ளலாம். கட்சித்தலைவர்களைக் கொண்ட முன்னணியொன்றை நாம் அமைக்கப்போவதில்லை. (மேலும்) 09. 05.08

_________________________________________________________________

கிழக்குத் தேர்தல்கள் தொடர்பான ஆய்வு முடிவுகளினால் அரசாங்கம் குழப்பமடைந்துள்ளது.

mahinda_jajapaksha ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும்; தேர்தல் குறித்து கிழக்கு மக்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் அரசாங்கத்தை குழப்பமடையச் செய்துள்ளதாகத் தெரியவருகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் ஆய்வு பணிகளுக்காக ஆறு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.கிழக்கில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நிறைவடைந்தவுடன் 3 குழுக்கள் ஆய்வுகளை மேற்கொண்டதாகவும், மற்றைய 3 குழுக்கள் கடந்த வாரம் ஆய்வுகளை மேற்கொண்டதாகவும் தெரியவருகிறது. இந்த ஆய்வு முடிவுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் இரகசியமாக கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. கிழக்கு மக்களின் நிலைப்பாடு குறித்து அறிந்து கொண்ட ஜனாதிபதி மிகவும் குழம்பிப் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொள்ளாது ஓலுவில் துறைமுக திறப்பு விழாவில் ஜனாதிபதி கலந்து கொண்டதாகவும், 150 லட்ச ரூபா செலவில் செய்மதித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கிழக்கு மக்களுக்கு விசேட உரையாற்றியதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.மேலும், பாராளுமன்றத்தை திடீரென ஒத்தி வைப்பதற்கும் இந்த ஆய்வு முடிவுகளே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.சிங்கள, முஸ்லிம் மக்கள் மாத்திரமன்றி பெரும்பான்மை தமிழ் மக்களும் பிள்ளையான் வெற்றியடைந்தால் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும் என தெரிவித்துள்ளதாக இந்த ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்) 08. 05.08

_________________________________________________________________

விடுதலைப் புலிகளுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தினால் இனப்பிரச்சனை தீருமா?

பல் நாட்டுத் தூதுவர்களுக்கு த.வி.கூ தலைவர் வீ. ஆனந்தசங்கரி அவர்களால் அனுப்பப்பட்ட மகஜர்

கடந்த ஏப்ரல் மாதம் 24ம் திகதி தமிழ் நாடு சட்டசபை ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் இலங்கைக்கு சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இருசாராரையும் பேச வைக்க வேண்டுமென இந்திய மத்திய அரசை கோர வேண்டும் என கேட்டுக்கொண்டது. பல்வேறு நாடுகளும் உலகளாவிய பொது ஸ்தாபனங்களும் இலங்கையின் கள நிலைமையை சரியாக புரிந்து கொள்ளாது யுத்தத்தை நிறுத்த வெண்டுமெனவும் விடுதலைப் புலிகளுடன் பேச வேண்டுமெனவும் வற்புறுத்தி வருகின்றன. யுத்தம் நிறுத்தப்படத்தான் வேண்டும். ஆனால் பேச்சுவார்த்தை விடுதலைப் புலிகளுடன் மட்டுமானதாக இருக்கக்கூடாது. 2002ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ம் திகதி யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டதன் பின் நாட்டு நிலைமை முற்றாக மாறிவிட்டது. அந்தநேரம் வடகிழக்கு மாகாணத்தில் சில பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலும், அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்கள் கூட பெருமளவில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. விடுதலைப் புலிகள் மிகக் கூடுதலாகவும், அரச படைகள் சிறிதளவும் மொத்தமாக பல்லாயிரக்கணக்கான யுத்த நிறுத்த மீறல்கள் நடந்தமையினால் ஒப்பந்தம் ரத்தாக்கப்பட்டு யுத்தம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இன்று கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளிடமிருந்து முற்று முழுதாக விடுவிக்கப்பட்டு ஏனைய பகுதிகளிலும் அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. (மேலும்) 08. 05.08

_________________________________________________________________

சிரேஸ்ட உறுப்பினர் பவான் புலிகளால் படுகொலை செய்யப்பட்டமைக்கு புளொட் கண்டனம்

புளொட் அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினரும், புளொட்டின் வவுனியா மாவட்ட உதவிப் பொறுப்பாளருமான கந்தையா செல்வராசா (பவான்) வவுனியா பூந்தோட்டம் சந்தியில் வைத்து நேற்றுமாலை 5.30மணியளவில் புலிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டித்து புளொட் அமைப்பு அறிக்கையொன்றை விடுத்துள்ளது. தோழர் பவான், நேற்றுமாலை வவுனியா பூந்தோட்டம் பகுதியிலிருந்து சக தோழர் பாலதம்புவுடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தவேளை பாசிசப் புலிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். இவருடன் பயணித்த பாலதம்பு துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார். தோழர் பவான் தனது மனைவி மற்றும் ஐந்து பெண் பிள்ளைகள் ஒரு ஆண் என ஆறு பிள்ளைகளுடன் வவுனியா உமாமகேஸ்வரன்வீதி கோவில்குளத்தில் வசித்து வந்தார். புலோலி வடக்கு பருத்தித்துறையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், 1984களில் தன்னை புளொட் அமைப்பில் இணைத்துக் கொண்டு தமிழ் மக்களின் உண்மையான விடுதலையை நோக்கிய பணிகளில் பாசிசப் புலிகளால் படுகொலை செய்யப்படும்வரை அயராது உழைத்து வந்தார். அன்றிலிருந்து இற்றைவரைக்கும் போராட்டமும் எமது அமைப்பும் சந்தித்த அனைத்து நெருக்கடிகளுக்கும் அயராது முகம்கொடுத்தும் வந்தார்.  (மேலும்) 08. 05.08

_________________________________________________________________

படை வீரர்களுடன் இணைந்து மிகவிரைவில் சமாதானத்துக்கான வழியை ஏற்படுத்துவேன் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

சுமார் 20 வருடங்களுக்கு மேலாக வாக்குச் சீட்டுக்களை காணாமல் துப்பாக்கி முனைகளில் அச்சுறுத்தப்பட்டு பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த மக்கள் இன்று ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொள்வதற்காக மக்களின் பிரதிநிதிகளை தெரிவுசெய்ய இருக்கின்றனர். இத்தகைய தெரிவின் மூலமாக கிழக்கு மாகாணம் மீண்டும் பயங்கரவாதிகளிடம் சிக்கி விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மூவின மக்களும் சகோதரத்துவத்துடன் வாழுகின்ற கிழக்கு மாகாணத்தில் அந்த ஒற்றுமை தேர்தலுக்குப் பின்னரும் நீடிக்க வேண்டும் என்பதுடன் சகல இன மக்களும் அதனை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டமைப்பு பலமடைந்ததைப் போல கிழக்கு மாகாண தேர்தலுக்குப் பின்னர் அம்மாகாணத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு நல்கும் பிரதிநிதிகளை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். கட்சியின் தலைமையுடன் முரண்பட்டுக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து வருகின்ற நிலையில், அக்கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் கிழக்கில் மீண்டும் முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கான சூழல் உருவாக்கப்படும் என்பதில் எவ்விதமான ஐயப்பாடும் இல்லை. கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு கிழக்கு மாகாணம் மிளிர வேண்டுமாயின் இந்த தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.  (மேலும்) 08. 05.08

_________________________________________________________________

அரசின் காடைத்தனங்களிலிருந்து தமிழ் முஸ்லிம்களை பாதுகாக்க முதலமைச்சர் ஆசனத்தை கைப்பற்றியேயாக வேண்டும்

- ரவூப் ஹிக்கீம்

முஸ்லிம் காங்கிரஸுக்குள் இருந்து சதிகளைச் செய்த ஹிஸ்புல்லா இறுதியாக எப்படி நயவஞ்சகத்தனமாக குத்துக் கரணமடித்தார் என்பதை நாம் இன்று இறுவட்டுகளாக (சீ.டி) வெளியிட்டுள்ளோம். தேர்தல் மேடைகளில் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் முஸ்லிம்களுக்கு படுமோசமான அநியாயங்களைச் செய்து விட்டது என்றும் இந்த அரசாங்கத்தோடு கூட்டுச் சேரவே முடியாது என்றும் பேசியவர்கள்தான் இன்று மகிந்த ராஜபக்ஷ முதலமைச்சர் பதவியை தரப்போகின்றார் என்று அபத்தமாக பேசி வருகின்றார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சுப் பதவியைத் தூக்கி எறிந்தது சரியானதே என்றும் தலைவரின் பாதுகாப்புப் பறிக்கப்பட்டது என்றும் முதலைக் கண்ணீர் வடித்த ஹிஸ்புல்லா மரச்சின்னத்தைப் பறிகொடுத்து விட்டோம் என்றும் புலம்புகிறார். அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டால்த் தான் வெல்லலாம் என்றும் மரச் சின்னத்தில் போட்டியிடுவது மடத்தனமானது என்றும் கூறிய ஹிஸ்புல்லா தான் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதற்குக் காரணம் முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தை கைவிட்டமையே என்று முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார். (மேலும்) 08. 05.08

_________________________________________________________________

புலிகள் இந்தப் போரில் தோல்வியடையாது இருக்க இருந்த ஒரே மாற்றுவழி யாழ். நகரைக் கைப்பற்றுவதாகும். எனினும், அவர்கள் அந்த இலக்கை எட்டவில்லை.

- இராணுவத் தளபதி சரத் பொன்சேகா லங்காதீபாவிற்கு வழங்கிய பேட்டி

Sarath- Fonsekaபுலிகள் இந்தப் போரில் தோல்வியடையாது இருக்க இருந்த ஒரே மாற்றுவழி யாழ். நகரைக் கைப்பற்றுவதாகும். எனினும், அவர்கள் அந்த இலக்கை எட்டவில்லை. சில சந்தர்ப்பங்களில் அவர்கள் அந்த முயற்சியில் ஈடுபட்டனர். மாவீரர் நாள் போன்ற காலங்களில் அவர்கள் அங்கு தாக்குதல்கள் நடத்த முயற்சித்தனர். எனினும், முடியாது போய்விட்டது. இந்த நேரத்திலும் அந்த முயற்சி சாத்தியமாகுமா எனப் பார்ப்பதற்கு அவர்களுக்குத் தேவையாகியிருக்கலாம். முகமாலை மோதலில் முன்னால் இருந்தது விடுதலைப் புலித் தலைவர்கள், பின்னால் இளையவர்கள் இருந்தனர். அவர்கள் அவ்வாறே சம்பிரதாயமாகப் போர் செய்வார்கள். அதனால் தான் அவர்கள் திறமையாகப் போரிட்டார்கள். இறந்தவர்களில் புலிகளின் முக்கியஸ்தர்களும் இருந்தனர். இந்தத் தாக்குதலுக்கு என புலிகள் சுமார் 100 கடற்புலிகளையும் ஈடுபடுத்தியிருந்தனர். இறந்தவர்களின் உடைகளிலிருந்து நாம் அவற்றை உறுதி செய்துகொண்டோம். அவர்களுக்கு ஆட்பலம் குறைவு என்பதனையே அது காட்டுகின்றது. மணலாறு மோதல்களின் போதும் 16 வயதிற்கு குறைவான பெண் பிள்ளைகள் இருந்தனர். முகமாலையில் நாம் முதலில் அவர்களைத் தாக்கி விரட்டினோம். வடக்கில் அவர்கள் பெரும் பின்னடைவிற்கு இலக்கானார்கள். அவர்கள் வடக்கிலிருந்து கிழக்கிற்கு வந்தனர். நாம் வாகரையைப் பிடித்த பின்னர் கிழக்கு விழ ஆரம்பித்தது. போரின் அதிக வெற்றி எம்பக்கம் வந்தது. அவர்களிடம் இருந்த காவல்துறை, நீதிமன்றம், காவலரண்கள் மற்றும் மருத்துவமனைகள் என்பன இப்போது அவர்களிடம் இல்லை. புலிகளின் ஈழக்கனவு இப்போது விழ ஆரம்பித்துள்ளது. இப்போது அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து ஈழக் கனவிற்கான தூரம் நீளமானது. பிரபாகரனின் ஆயுட்காலத்திற்குள் அவர்கள் அந்த இடத்திற்கு செல்வது கனவாகி விடும். (மேலும்) 07. 05.08

_________________________________________________________________

பிள்ளையான் குழுவினரின் ஆயுதங்களை களையுமாறு கோரி தேர்தல் ஆணையகத்திற்கு முன்னால் எதிர்ப்பு போராட்டம்

slfp_mpicketallபிள்ளையான் குழுவினரின் ஆயுதங்கள் களையப்பட்டு, கிழக்கில் நியாயமான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் எனக் கோரி ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தன. தேர்தல் ஆணையகத்திற்கு முன்னால் நடைபெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் ஆணையாளருக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் இன்று பிற்பகல் 2.30 அளவில் ஆரம்பமான இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிள்ளையானுக்கு காட்டிக் கொடுத்துள்ளதாக மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்தார். ஆயுதக்குழுவொன்றுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களமிறங்கிய முதல் சந்தர்ப்பம் இதுவென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்காக அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கியதாகவும், தமது கட்சி வன்முறைக்கு எதிரான கட்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார். (மேலும்) 07. 05.08

_________________________________________________________________

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களை சரணடையுமாறு மன்னாரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன

மன்னாரில் விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்புள்ளவர்கள், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள், விடுதலைப் புலிகளிடம் ஆயுதப் பயிற்சிபெற்றவர்கள் உடனடியாக அருகிலுள்ள இராணுவ முகாம்களில் சரணடையுமாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மன்னார் நாணாட்டான் பகுதியிலேயே இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாக மன்னார் பிராந்தியச் செய்திகள் கூறுகின்றன. விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 10 நாட்களுக்குள் அருகிலுள்ள இராணுவ முகாமில் சரணடையுமாறு அந்தச் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.முள்ளிக்குளம், சிலாவத்துறை போன்ற பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது அந்தப் பகுதியிலிருந்த பொதுமக்களுக்கு ஆயுதப் பயற்சிகள் வழங்கப்பட்டிருந்ததாகவும், அங்கு இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து இடம்பெயர்ந்த மக்கள் நாணாட்டான் பகுதியில் அமைந்திருக்கும் முகாம்களில் தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவ்வாறு அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம் பகுதிகளிலேயே சரணடையுமாறு கோரி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.எனினும், எவ்வாறு சரணடைவது, சரணடைபவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்படுமா அல்லது அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கப்படுமா என்பது பற்றி எந்தவிதமான தகவல்களும் அந்தச் சுவரொட்டியில் குறிப்பிடப்படவில்லையெனவும், இதனால் குறிப்பிட்ட சுவரொட்டி தொடர்பாக மக்கள் மத்தியில் ஒரு குழப்பநிலை தோன்றியிருப்பதாகவும் மன்னார் பிராந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

_________________________________________________________________

தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றக்கூடாதென்ற உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றக்கூடாதென்ற உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின்றி, தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றக் கூடாதென்ற உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் பாராட்டு தெரிவித்துள்ளது.கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்களை பலவந்தமாக பஸ்களில் ஏற்றி அவர்களது சொந்த இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டமைக்கு எதிராக மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் தலைவர் பாக்கியசோதி சரணவமுத்து உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த மனு மீதான தீர்ப்பு பாராட்டுக்குரியதொன்றென அந்த அமைப்பு ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.இதற்கு முன்னர் 2007ம் ஆண்டு ஜூன் மாதம் 8ம் திகதி உயர் நீதிமன்ற நீதவான் நிமால் திஸாநாயக்க தலைமையிலான மூவர் அடங்கிய நீதவான் குழு கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க பிரதேசங்களிலிருந்து தமிழர்