|
2011 ம் ஆண்டின் க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் பற்றிய புகைச்சல்களை அடக்க அரசு உடனடியாக விரிவானதும் மற்றும் முழுமையானதுமான மீளாய்வினை மேற்கொள்ள வேண்டும்.
- பேராசிரியர்.ஆர்.பி.குணவர்தன
2011ம் ஆண்டின் க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியானதின் பின் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் விளைவுகளையும் மனதை நெருடும் வலியுடன் நான் அவதானித்துக் கொண்டிருந்தேன்.பரீட்சை முடிவுகளில் பல தவறுகள் மற்றும் விடுபடல்கள் இருப்பதாக ஏராளமான முறைப்பாடுகள் வெளியானதுடன், அதைப்பற்றி ஆராய ஜனாதிபதியினால் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை தற்போது ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டும் உள்ளது. ஸ்ரீலங்காவில் நடத்தப்படும் தேசிய பரீட்சைகளில் இந்த க.பொ.த உயர்தர பரீட்சை மிகவும் முக்கியமானதாகவும் மிக உயர்ந்த போட்டித் தன்மையும் உள்ள பரீட்சையுமாகும், அது எங்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் பரீட்சையாகவும் உள்ளது. அநேகமான நாடுகளில் நடப்பதைப் போலில்லாமல் இந்தப் பரீட்சையில் காண்பிக்கும் செயல் திறன் மட்டும்தான் ஸ்ரீலங்காவில் பல்கலைக் கழகங்களுக்கான அனுமதியின் ஒரேயொரு அளவுகோலாகப் பயன்படுகிறது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற தொழில் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களில் அனுமதி பெறவும் தகுதிவாய்ந்த ஒரு அளவுகோலாக இது பயன் படுகிறது.பல ஆண்டுகளாக இந்தப் பரீட்சை மிக உயர்ந்த சர்வதேச தரங்களைப் பேணி வருவதுடன் உலகெங்குமுள்ள மதிப்புமிகு சர்வகலாசாலைகளில் நமது மாணவர்கள் அனுமதி பெறவும் வழி செய்கிறது. க.பொ.த உயர்தர பரீட்சையில் தங்கள் திறமையை நன்கு வெளிக்காட்டிய எங்கள் மாணவர்கள்,அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் மிகத் திறமையாகச் செயற்பட்டு வருவதை தனிப்பட்ட ரீதியில் நான் நன்கு அறிவேன்.இந்தமுறை வெளியான க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளிப்படையாகவே சவால்களை எதிர்கொள்ள நேரிட்டன. இந்தப் பரீட்சை சம்பந்தமான பொதுமக்களின் நம்பிக்கையை எவ்வளவு விரைவில் மீட்க முடியுமோ அவ்வளவு விரைவாக மீட்டெடுப்பது நிச்சயமாக அவசியம். பிரச்சினையின் மூலகாரணம் என்ன என்பதை புரிந்து கொள்வதற்காக பரீட்சைத் திணைக்களத்தில் மதிப்பெண்கள் செயற்படுத்தப்பட்ட விதம் குறித்து முழுமையாக ஆராயப்பட வேண்டும். (மேலும்) 29.01.12
_______________________________________________________________________________________________________
பிரபாகரனின் வம்சாவழி கேரளா என்கிறார் ஜானகி அம்மா- என்டீ ரீவி
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு மலையாளி ஆவார் என கேரளாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் அதற்கான ஆதாரங்களோடு கூறியுள்ளார்.
இவரின் பெயர் ஜானகி அம்மா. கொல்லத்தில் இருந்து 20 கிலோ மீற்றர் தொலைவில் இவரது இல்லம் உள்ளது. ஜானகி அம்மாவின் தாயுடன் கூடப் பிறந்த ஆறு சகோதரர்களில் ஒருவர்தான் வேலுப்பிள்ளை. ஜானகி அம்மாவின் தாயின் பெயர் நானி அம்மா. எனவே தான் பிரபாகரனுக்கு மைத்துனி உறவுமுறை என உரிமை கொண்டாடுகின்றார் ஜானகி அம்மா. இவ்வாறு உறவுமுறை கொண்டாடும் ஜானகி அம்மாவை என் டீ ரீவி பேட்டி எடுத்துள்ளது. ஜானகி அம்மாவின் அம்மப்பா அதாவது வேலுப்பிள்ளையின் தகப்பன் இறந்தபோது வேலுப்பிள்ளை செத்த வீட்டுக்கு சென்று இருக்கின்றார். பிறந்த மண்ணுக்கு வேலுப்பிள்ளை சென்றிருந்த கடைசி தருணம் அதுதான். அப்போது ஜானகி அம்மாவுக்கு வயது 11. அதற்கு பின் வேலுப்பிள்ளையை ஜானகி அம்மா காணவே இல்லையாம். ஜானகி அம்மாவின் தாய் நானா அம்மாவுக்கு வேலுப்பிள்ளை மாதாந்தம் ரூபாய் 50 அனுப்பி வந்திருக்கின்றார். காசு அனுப்புகின்றமையை நானா அம்மாவின் மரணத்துக்கு பின்னர் வேலுப்பிள்ளை நிறுத்திக் கொண்டார். அந்நாட்களில் ரூபாய் 50 என்பது மிகவும் கணிசமான தொகைதான் என்கின்றார் ஜானகி அம்மா. (மேலும்) 29.01.12
_______________________________________________________________________________________________________
'த. தே. கூட்டமைப்பு - கிழக்கு முதலமைச்சர் சந்திப்பு அரசியல் உள்நோக்கங்களுக்கு அப்பால் பார்க்கப்பட வேண்டும் '
"கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தமிழ்தேசியக் கூட்டமைப்பினை பேச்சுக்கு அழைத்தமையானது அரசியல் ரீதியாக, அனைத்து தமிழ் மக்களாலும் பொதுவாக எதிர்பார்க்கப்பட்ட விடயமாகும். எல்லாக் கட்சிகளையும் ஒன்றிணைத்து அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வது என்பது தேவைப்பாடானதொன்றாகும். ஆனால் அதில் குறுகிய அரசியல் நோக்கங்களை வைத்துக்கொண்டு செயற்பாட்டில் இல்லாத அமைப்புகள் அறிக்கைகளை விடுவதானது சாணக்கியமாகதாது என்பதுடன் துரதிஷ்டவசமானதும் கூட. கிழக்கு மாகாண சபையும், கிழக்கு மாகாண முதலமைச்சரும் சிலரால் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டாலும், கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டதன் பின்னரே கிழக்கின் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளும் முன்னேற்றங்களும் பாரிய மாற்றங்களைக் கண்டுகொண்டிருக்கிறது. இதனை யாராலும் மறுக்க முடியாது. அரசியல் உரிமைகளைப் பெற்றாக வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் பாரிய மாற்றங்கள் இல்லை. அதாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை கோருவதற்கு முன்னரே கிழக்கு மாகாண சபை கோரி வருகின்றது. இருந்தும் கிழக்கு மாகாண சபையில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அரசாங்கத்துடன் பங்காளிகளாகச் சேர்ந்து கொண்டதன் காரணத்தினால் இதுவரை காலங்களில் எட்டாக்கனிகளாக இரந்த தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தியானது நடைபெற்று வருகிறது. இதுவரை காலமும் சகோதர இன மக்களின் பிரதேசங்களில் நடைபெறும் அபிவிருத்திகளை கண்டு ஏக்கத்துடன் இருந்த தமிழ் மக்கள் தங்களுடைய பிரதேசங்களும், கிராமங்களும் அபிவிருத்திகளைக் கண்டு வருவதனைக் கண்ணுற்று சிறிது நிம்மதிப் பெருமூச்சு விட்டு வருகின்றனர். (மேலும்) 29.01.12
_______________________________________________________________________________________________________
குற்றங்களின் களமாகும் யாழ்ப்பாணம்- பொறுப்புக்கூறவேண்டியவர்கள் நாங்களே!
யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் சமூக விரோதச் செயல்கள், படுகொலைகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்துபவையாகவே உள்ளன. கடந்த ஒரு வாரகாலத்திற்குள் மட்டும் மூன்றுக்கு மேற்பட்ட கொலைச் சம்பவங்கள் நடந்து விட்ட நிலையில் கிணறுகள், பற்றைகளுக்குள்ளிருந்து உடல்கள் மீட்கப்படுவதும் எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்படுவதும் தொடர் கதையாகவே உள்ளன. கடந்த புதன்கிழமை வடமராட்சி சக்கோட்டைப் பகுதியில் 17 வயது மாணவி ஒருவர் கடத்தப்பட்டு வாயில் பிளாஸ்டர் ஒட்டி கத்திரிக்கோலால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போன யுவதி ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் தனங்கிளப்பு பகுதியில் மண்ணரன் ஒன்றுக்கு அருகிலிருந்து எலும்புக் கூடாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவமும் குடாநாட்டு மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளதுடன் இச்சம்பவங்கள் தொடர்பிலான பின்னணிகள் குறித்த சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இராணுவத்தின் ஆளணியினரில் அரைவாசிக்கு மேற்பட்டோர் யாழ். குடாநாட்டிலேயே குவிக்கப்பட்டுள்ளனர். சகல இடங்களிலும் பொலிஸ் நிலையங்கள், சந்திக்கு சந்தி சோதனைச் சாவடிகள், காவலரண்கள், படையினர், பொலிஸாரின் இரவு நேர ரோந்து என குடாநாடு முற்று முழுதாக இராணுவ மயமாக்கப்பட்டு கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சமூக விரோத செயல்களும், படுகொலைகள், ஆட்கடத்தல்கள், பாலியல் வல்லுறவுகள் எந்தவித தங்குதடையுமின்றி நடைபெறுவதும் இவ்வாறான குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் சுதந்திர மனிதர்களாகச் சுற்றித் திரிவதும், தப்பிச் செல்வதும்தான் குடாநாட்டின் இன்றைய கால நிலவரமாகவுள்ளது. குற்றச் செயல்கள் முன்னரெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துச் செல்கின்ற நிலையில் அவற்றுடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்படுவது என்பது பூஜ்ஜிய நிலையில் உள்ளதையே காணக்கூடியதாகவுள்ளது. இவ்வாறான நிலைக்கு காரணம் தான் என்ன? குற்றச் செயல்களுடன் படையினருக்கும் தொடர்புள்ளதா அல்லது அவர்களிடம் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் திறமை இல்லையா அல்லது குற்றவாளிகளை கண்டுபிடிக்க மக்களின் ஆதரவு கிடைப்பதில்லையா? (மேலும்) 29.01.12
_______________________________________________________________________________________________________
ஈரானைத் தாக்க அதிக சக்தி வாய்ந்த குண்டை தயாரிக்கிறது அமெரிக்கா
தரைக்கடியில் அரண்போன்ற மிக பாதுகாப்பான இடத்தில், ஈரான் அணு சக்தி உற்பத்தி நிலையங்களை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவற்றை அழிக்க தரை, மலை, பாறை, கான்கிரீட் போன்ற பரப்பை குடைந்து சென்று தாக்கவல்ல அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை தயாரிக்கத் தொடங்கியுள்ளது அமெரிக்கா. இவை வெகு விரைவில் தயாராகிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான், வட கொரியா உள்ளிட்ட நாடுகள் தரைக்கடியில் ரகசியமாக யாருக்கும் தெரியாத இடங்களில் அமைத்துள்ள அணுசக்தி உற்பத்தி நிலையங்களை தகர்க்க 5300 பவுண்டு (2404 கிலோ) வெடிமருந்து நிரப்பிய 20 அடி உயர குண்டுகளை அமெரிக்கா ஏற்கெனவே தயாரித்துள்ளது. இந்த குண்டுகள் 200 அடி தொலைவுக்கு தரை, பாறை, அல்லது கான்கிரீட் பரப்பை துளையிட்டு சென்று இலக்குகளை தகர்க்க வல்லவை. இவற்றை சோதித்துப் பார்த்தபோது தரைக்கடியில் மிகவும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள அணு சக்தி நிலையங்களை தகர்க்க உதவாது என்கிற முடிவுக்கு வந்துள்ளது அமெரிக்கா. எனவே, பங்கர் பஸ்டர் என்கிற இந்த ரக குண்டுகளை மேம்படுத்துவது என முடிவு செய்துள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பேட்டி கண்டபோது தெரியவந்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இப்போது மேம்படுத்தப்பட்டுவரும் குண்டுகள் 13,600 கிலோ எடையுடையதாக இருக்கும். இது ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுள்ள குண்டுகளைவிட அதிக சக்திவாய்ந்ததாக இருக்கும். தரையை துளையிட்டு தாக்கவல்ல 20 குண்டுகளை சுமார் ரூ. 1630 கோடி (33 கோடி டாலர்) செலவில் ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ளது அமெரிக்கா. (மேலும்) 29.01.12
_______________________________________________________________________________________________________
திருநள்ளாறில் இலங்கை அமைச்சருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கறுப்புக் கொடி: திடீர் பரபரப்பு
காரைக்கால், ஜன, 28 : திருநள்ளாறு கோயிலுக்கு வந்த இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமானுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டியதால், கோயில் பகுதியில் சனிக்கிழமை இரவு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் சனிக்கிழமை பல லட்சம் பக்தர்கள் வந்து ஸ்ரீ சனீஸ்வரபகவானை தரிசனம் செய்தனர். இரவு சுமார் 9 மணியளவில் இலங்கை அமைச்சர் தொண்டமான் தரிசனம் செய்யவந்தார். கோயிலுக்குள் சென்று தரிசனம் முடித்துவிட்டு திரும்பும்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுமார் 20 பேர் அமைச்சர் வருகையை கண்டித்து, இலங்கை அதிபர் ராஜபக்ஷ்வுக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு கறுப்புக் கொடி காட்டினர். போலீசார் அவர்களை தடுக்க முயற்சி மேற்கொண்டும் பயனில்லை. இலங்கை அதிபருக்கு எதிராக ஆவேசமாக அவர்கள் கோஷம் எழுப்பினர். தமிழர்களுக்கு எதிராக நடந்துகொள்ளும் போக்கை கைவிடும்படி ஆவேசமாக பேசினர். அதே வேளையில் அமைச்சரை பாதுகாப்புடன் காரில் ஏற்றி அனுப்பிவைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அமைச்சர் வருகை குறித்து கோயில் நிர்வாகத்துக்கு முறைப்படி தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அமைச்சருக்கு கறுப்புக் கொடி காட்டிய பிரச்னையால் திருநள்ளாறு கோயில் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
_______________________________________________________________________________________________________
மட்டு. தமிழர் பிரதேசத்தில் விகாரை அமைப்பதற்கு முயற்சி
- கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம்
வடகிழக்கு இனப்பிரச்சினை தீர்வுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவரும் வேளையில் தமிழ் மக்களின் பூர்வீக பகுதியில் விகாரை அமைக்கும் பணிகள் மேற்கொள்வதனாது தமிழ் மக்கள் மத்தியில் சந்தேக நிலையை தோற்றுவித்துள்ளது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கச்சக்கொடி சுவாமிமலை (135ஊ) கிராமசேவையாளர் பிரிவில் உள்ள புராதன காலத்து அடையாளங்கள் உள்ள பகுதியிலும் மக்கள் யாரும் அற்ற பகுதியிலும் இராணுவம் பொலிசார் உதவியுடன் சிங்கள பொதுமக்கள், ஒரு சில பௌத்த துறவியின் உதவியுடன் இக்காணியில் சிரமதான வேலைகள் நடப்பதோடு பௌத்த விகாரை அமைக்கும் பணிகளும் நடைபெற முயற்சிகள் நடைபெறுகின்றனவா என்னும் சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர். தமிழ் மக்களின் பூர்வீக பகுதியில் சுமார் 25 ஏக்கர் விஸ்தீரணமுள்ள மலை மலைசார்ந்த காணியில் இந்த அத்துமீறிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்புராதன காணி ஊடாகவே கெவிழியாமடுக் கிராமத்திற்கு மக்கள் சென்று வருவது வழமையாகும். இப்பகுதியில் தமிழ் மக்கள் இருக்கும் போது வெளி இடங்களில் இருந்து சிங்கள மக்களை கொண்டுவந்து இப்பணியை செய்வதில் உள்நோக்கம் உள்ளதாக மக்கள் சந்தேகிக்கின்றனர். (மேலும்) 29.01.12
_______________________________________________________________________________________________________
அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தன்னிச்சையாக செயற்பட முடியாது
- சம்பிக்க ரணவக்க
இந்தியாவும் அமெரிக்காவும் கூறுகின்றது என்பதற்காக 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கும் அப்பால் சென்று அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க இயலாது. குறிப்பாக மாகாண சபைகளுக்கு எல்லை மீறிய அதிகாரங்கள் வழங்குவதை அனுமதிக்க முடியாது என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.தேசிய பிரச்சினைக்கான தீர்வில் ஏனைய கட்சிகளினதும் அமைப்புக்களினதும் ஆதரவு பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தன்னிச்சையாக செயற்பட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அமைச்சர் சம்பிக்க ரணவக தொடர்ந்தும் கூறுகையில், மாகாண சபைகளுக்கு மேலதிகமான அதிகாரங்களை வழங்குவது என்பது மிகவும் ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகும். பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை அரசியல் தீர்வாக வழங்குவதற்கு ஜாதிக ஹெல உறுமய கொள்கை ரீதியாகவே எதிர்ப்புத் தெரிவிக்கின்றது. 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்தும்போது அது நாட்டிற்கு ஆபத்தானதாகவே அமையும். எனவே புதிய திருத்தங்களுக்கு அது உட்படுத்தப்பட வேண்டும். உதாரணமாக சூழலுக்கான விசேட சட்ட மூலம் 1988 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டாலும் அதனை 1991 ஆம் ஆண்டே நடைமுறைப்படுத்த முடிந்தது. சூழலுக்கு எல்லை நிர்ணயம் செய்ய இயலாது. இந்தியாவில் சூழல் பாதிக்கப்பட்டால் அது இலங்கையையும் தாக்கும் என்பதே உண்மை. அரசியல் தீர்வு விடயத்தில் ஏனைய நாடுகளின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட முடியாது. ஜே.ஆர். ராஜீவ் ஒப்பந்தம், சந்திரிகா பிரபாகரன் ஒப்பந்தம், ஜீ.எல். பாலசிங்கம் ஒப்பந்தம் போன்றவைகளால் நாட்டுக்குத் தேவையற்ற பிரச்சினைகளே வந்தது. இந்நிலையை மீண்டும் ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது என்றார்.
_______________________________________________________________________________________________________
மட்டக்களப்பில் ஜே.வி.பி. பிரசாரம்
'சகோதரத்துவத்தின் மக்கள் அரண்' அமைப்பினால் இன்று காலை மட்டக்களப்பில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெட்டி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் உட்பட சகோதரத்துவ மக்கள் அரண் அங்கத்தவர்கள் மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்த்தர்கள் பலர் துண்டு பிரசுர விநியோக நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். மட்டக்களப்பு நகரிலுள்ள பஸ் தரிப்பிட நிலையம், மட்டக்களப்பு நகரிலுள்ள வர்த்தக ஸ்த்தாபனங்கள் என்பவற்றில் இந்த துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். சிவில் நிர்வாகத்தை ஸ்தாபிப்பதற்கும், தனி நபர் சுதந்திரத்தை நிலை நாட்டுவதற்கும், இடம் பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதற்கும், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தற்குமாக வேண்டி இந்த மக்கள் அரணினால் வடக்கு கிழக்கு உட்பட நாடு பூராவும் துண்டு பிரசுரங்களை விநியோகிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
_______________________________________________________________________________________________________
புலிகளின் முன்னாள் போராளிகள் பொலிஸ் சேவையில் இணையும் வாய்ப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தேவையான கல்வி மற்றும் ஏனைய தகைமைகளைக் கொண்டிருந்தால் அவர்கள் இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் புலிகளின் சுமார் 11,000 போராளிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். இவர்களில் சுமார் 10,000 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர். இப்போராளிகள் விரும்பினால் அவர்கள் பொலிஸஸில் இணைந்துகொள்ளலாம் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு, தமிழ் மிரரின் சகோதர ஆங்கில இதழான டெய்லி மிரருக்குத் தெரிவித்தார். "பொலிஸ் திணைக்களம், அவர்களுக்கான வாய்ப்பை திறந்துள்ளது. இது சமூகத்தில் இணைந்த மேற்படி அங்கத்தவர்களுக்கும் பொலிஸ் திணைக்களத்துக்கும் இடையிலான விடயம். நாம் புனர்வாழ்வளிக்கும் துறையினர் என்ற வகையில் நாம் இதில் சம்பந்தப்படவில்லை" என அவர்கூறினார். சுமார் 1000 முன்னாள் போராளிகளுக்கு தற்போது பல்வேறு நிலையங்களில் புனர்வாழ்வளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இதேவேளை பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹனவிடம் கருத்து கேட்டபோது, புனர்வாழ்வளிக்கப்பட் போராளிகள் பொலிஸ் சேவையில் இணைந்துகொள்வதற்கான வாய்ப்பு உள்ளதை உறுதிப்படுத்தினார். "அவர்கள் இப்போது சமூகத்தில் ஒன்றிணைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு நாம் பாரபட்சம் காட்டமுடியாது. அவர்களுக்கு போதிய கல்வித் தகுதியிருந்தால் அவர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் இல்லாதிருந்தால் பொலிஸ் சேவையில் இணைவதற்கு விண்ணப்பிக்கலாம்"எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். எனினும், இதுவரை புலிகளின் முன்னாள் போராளிகள் எவரும் பொலிஸ் சேவையில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
_______________________________________________________________________________________________________
கனடா செல்லும் பயணத்தில் டோகோவில் பிடிபட்டவர்கள்
மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் சட்ட விரோதமான முறையில் தங்கியிருந்தார்கள் என்ற குற்றத்தின் பேரில் பெண்கள், குழந்தைகள் உட்பட 200 ற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமொன்றில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சட்ட விரோத ஆட்கடத்தல் முகவர்களினால் கனடாவிற்கான பயணத்தின் நிமித்தம் அழைத்துச் செல்லப்பட்டு டோகோவிலுள்ள வீடுகளில் தங்க வைக்கப்பட்டிருந்தபோது இவர்கள் அந்நாட்டு பொலிசாரின் சுற்றிவளைப்பில் சிக்கியுள்ளனர். தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்தவர்கள் புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பின் உதவியுடன் நாடு திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களில் 9 பேர் இதுவரை நாடு திரும்பியுள்ளனர். கொழும்பிலிருந்து சட்டபூர்வமாகவே 4 மாதங்களுக்கு முன்னர் டோகோ நாட்டை சென்றடைந்ததாக மட்டக்களப்பு செங்கலடிப் பிரதேசத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் தெரிவித்தார். தொழில் வாய்ப்பின் நிமித்தம் சட்ட ரீதியாக நேரடியாக கனடாவிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறியே குறித்த முகவர் தன்னுடன் மேலும் 4 பேரை அனுப்பி வைத்ததாக கூறிய அவர், கானா நாடு வழியாக கப்பலில் சட்ட விரோதமாக அனுப்பி வைப்பதே முகவரின் நோக்கம் என்பது அங்கு சென்ற பின்னரே தனக்குத் தெரியவந்தததாக கூறினார். டோகோவில் 5 வீடுகளில் தங்க வைக்கப்பட்டிருந்த 209 பேரில் 4 முஸ்லிம்களைத் தவிர ஏனையோர் தமிழர்கள் என்றும் அவர்களில் ஓராண்டுக்கு முன்னரே அங்கு சென்றவர்களும் இருந்ததாக அவர் தெரிவித்தார். - B.B.C News
_______________________________________________________________________________________________________
கொலைச் சந்தேக நபர்கள் கைது!
பருத்தித்துறை சக்கோட்டையில் மாணவி டிலக்ஷனா கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஒரு தகவல் கசிந்துள்ளது. அதாவது குறித்த மாணவியின் அக்காவின் முன்னாள் காதலனே இவரைக் கடத்திச் சென்று பாலியல் ரீதியில் துன்புறுத்தி இறுதியில் கொலை செய்து விட்டு தப்பியுள்ளார் எனத் தகவல் கசிந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது:படுகொலை செய்யப்பட்ட மேரி டிலக்சனாவுக்கு நான்கு சகோதரிகள் உள்ளனர். இவரின் சகோதரி (அக்கா) ஒருவர் அந்த இடத்தைச் சேர்ந்த ஒருவருடன் காதல் கொண்டு சில வருடங்களாக கதைத்துள்ளார். அதன்பின்னர் அண்மையில் குறித்த சகோதரி வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவரை திருமணம் செய்துவிட்டு அங்கு சென்றுவிட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கடும் கோபமுற்ற காதலன் (சகோதரியை காதலித்தவர்) பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். சில நாட்களாக தனது காதலியின் தங்கையாருக்குப் பின்னால் அவர் சுற்றித் திரிந்துள்ளார். இறுதியில் அக்கா தனக்குச் செய்த துரோகச் செயலுக்காக தங்கையைப் பலியெடுத்துள்ளார். அதாவது குறித்த காதலன் தனது காதலியின் தங்கையாரைக் கடத்திச் சென்று பாலியல் ரீதியில் துன்புறுத்தி இறுதியில் அந்தப் பெண்ணைக் கொடூரமான முறையில் கொலை செய்திருக்கிறார் என ஊர் மக்கள் சந்தேகிக்கின்றனர். இந்தக் கொலையுடன் சந்தேகிக்கப்படும் நபரை இந்தச் சம்பவம் நடைபெற்ற தினத்திலிருந்து ஊரில் காணவில்லை எனவும் மக்கள் கூறுகின்றனர். குறித்த நபரைத் தேடும் பணியில் பருத்தித்துறைப் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
_______________________________________________________________________________________________________
புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (33)
33. UTHR பற்றி துருவித் துருவிக் கேட்டனர்!
அரசியலைப் பொறுத்தவரை எனது கடந்தகால நடவடிக்கைகள் பற்றி துருவித் துருவிக் கேட்டான். குறிப்பாக புலிகள் இயக்கம் உட்பட பல்வேறு இயக்கங்களுடனும் எனக்கு இருந்த தொடர்புகள் குறித்து விபரமாகக் கேட்டான். புலிகள் இயக்கத்திலும் யார் யாருடன் கூடுதலான தொடர்புகள் உண்டு என்பதை நுணுக்கமாக அறிய விரும்பினான். புலிகள் தங்கள் ஆட்களைப் பற்றியே ஒருவரை ஒருவர் உளவு பார்ப்பவர்கள் என்பதால், நான் அதில் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டேன். அவர்கள் அறிய முற்பட்ட இன்னொரு முக்கியமான விடயம், மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (UTHR) என்ற அமைப்புடன் எனக்கு இருந்த தொடர்புகள் பற்றியதாகும். அதற்கொரு காரணம், அந்த அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரான கலாநிதி கே.சிறீதரன் எனது நீண்ட நாள் நண்பராக இருந்தமையும், மற்றைய முக்கியஸ்தர்களான கலாநிதி ராஜன் ஹ_ல், டாகடர் ராஜினி திராணகம ஆகியோர் எனக்கு நன்கு அறிமுகமானவர்களாக இருந்தமையும் ஆகும்.   UTHR அமைப்பால் வெளியிடப்பட்ட ‘முறிந்த பனை’ என்ற பிரசித்தி பெற்ற நூலை நான் அதுவரை கண்ணால் ஒரு தடவை தன்னும் பார்த்திருக்காத போதும் (அந்த நூல் 1995ல் யாழ்ப்பாணம் புலிகளிடமிருந்து இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட பின்னரே நண்பர் மனோரஞ்சன் மூலம் எனக்குக் கிடைத்தது!), அதில் வெளியிடப்பட்டிருந்த விபரங்களில் சிலவற்றை நானே திரட்டிக் கொடுத்ததாக புலிகள் சந்தேகப்பட்டிருந்ததை பின்னர் அவர்களது விசாரணைகளின் போது அறியக்கூடியதாக இருந்தது.நான் ‘முறிந்த பனை’ நூலை அதுவரை பார்க்கவில்லை என எனது விசாரணையின் ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட போது, அங்கிருந்த புலிகள் ஒருவரை ஒருவர் பார்த்து உரக்கச் சிரித்ததின் மூலம், என்னை ஒரு பொய்யனாக எண்ணுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. இன்னொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறு அவர்கள் உரத்துச் சிரித்த சம்பவம் நிகழ்ந்தது.அந்தக் காலகட்டத்தில் இராணுவத்தின் பலாலி படைத்தளத்திலிருந்து ‘மக்கள் குரல்’ என்றொரு வானொலி ஒலிபரப்பாகி வந்தது. அந்த ஒலிபரப்பை ஈ.பி.டி.பி. கட்சியின் பராளுமன்ற உறுப்பினராகவும், ‘தினமுரசு’ பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்து பின்னர் சுட்டுக் கொல்லப்பட்ட அற்புதன் என்பவரே நடாத்தி வந்ததாகப் பரவலாக ஒரு கதை இருந்தது. அந்த வானொலியில் புலிகளை மிகவும் மோசமாகவும் நையாண்டித்தனமாகவும் விமர்சித்து செய்திகளும் கட்டுரைகளும் ஒலிபரப்பப்பட்டு வந்ததாகக் கேள்விப்பட்டிருந்தேன். (மேலும்) 28.01.12
_______________________________________________________________________________________________________
அரசியலிலிருந்து ஓய்வு பெற ஹிலாரி கிளிண்டன் முடிவு
வாஷிங்டன், ஜன.27: தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா வெற்றி பெற்றாலும், தான் அரசியலில் நீடிக்க விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார். வெளியுறவு அமைச்சகத்தில் உள்ள நெருங்கிய நண்பர்களிடம் அவர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இரண்டாவது முறையாக வெளியுறவு அமைச்சர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்றும், தனக்குப் பதிலாக வெளியுறவு அமைச்சராக மற்றொருவரை ஒபாமா நியமிக்கும் வரை இப்பதவியில் இருக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர அரசியலில் இருந்துவிட்டதால், போதும் என்ற மன நிலைக்கு வந்துவிட்டதாகவும், தனக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து இதேபோன்று அதி முக்கியத்துவம் வாய்ந்த பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 1993-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை பில் கிளிண்டன் அதிபராக இருந்தபோது, அமெரிக்காவின் முதல் பெண்மணியாக ஹிலாரி வலம் வந்தார். 2001-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை நியூயார்க்கின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அதிபர் தேர்தலில் கட்சி சார்பில் ஹிலாரி, ஒபாமா போட்டியிட்டனர். கடைசி நேரத்தில் ஒபாமாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து ஒபாமா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. வெளியுறவுத்துறை அமைச்சராக இருப்பவர் தேர்தலில் பங்கேற்கக் கூடாது. அத்துடன் சமீப காலமாக தேர்தல் சார்ந்த விவாதக் கூட்டங்களிலும் ஹிலாரி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
_______________________________________________________________________________________________________
திருமண அழைப்பிதல் கொடுத்துவிட்டு திரும்பும் வழியில் மணமகனும் நண்பரும் விபத்தில் பலி
மன்னார் மாந்தை விடத்தல் தீவு பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்ற விபத்தில் மன்னார் பனங்கட்டிக்கோட்டு கிராமத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். வீடத்தல் தீவு பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களும் மன்னாரில் இருந்து விடத்தல் தீவு பிரதான வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த அரச பேருந்துமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இவர்களின் சடலங்ள் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டது. உயிரிழந்தவர்கள் மன்னார் பனங்கட்டிக்கோட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜேசப் அகஸ்ரின் றீகன் (வயது-30)இஅந்தோனிப்பிள்ளை றொமைஸ் றொமி(வயது-30)என தெரியவந்துள்ளது. அந்தோனிப்பிள்ளை றொமைஸ் றொமி என்பவருக்கு எதிர்வரும் வாரம் திருமணம் நடைபெறவிருப்பதனால் குறித்த இரண்டு போரும் யாழ்ப்பாணத்திற்கு சென்று உறவினர்களுக்கு அழைப்பிதல்களை கொடுத்து விட்டு மீண்டும் மன்னார் திரும்பும் போதே இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சடலங்கள் மன்னார் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
_______________________________________________________________________________________________________
யாழ் நெடுங்குளம் மக்கள் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைப்பு!
யாழ்.நெடுங்குளம் மக்களது பிரச்சினைகளுக்கு அப்பகுதிக்கு நேரில் சென்று துறைசார்ந்த அதிகாரிகளுடன் ஆராய்ந்து முடிவெடுக்கப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். அமைச்சரின் யாழ். அலுவலகத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டு கொழும்புத்துறை கிழக்கு நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் தமது பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் அவர்களி;டம் எடுத்து விளக்கினார். மக்களது கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்ட அமைச்சர் அவர்கள் இவ்விடயம் தொடர்பாக அடுத்த மாதம் முதல்வாரத்தில் அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு காணி வி;டயம், மற்றும் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய தீர்வை பெற்றுத் தருவதாகவும் அதுவரையில் பொறுமைகாக்கும் அதேவேளை, இவ்விடயத்தில் தமக்கு முழுமையான ஒத்துழைப்பும், ஒத்தாசையும் வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். இதன் போது யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, யாழ்.மாநகர சபை உறுப்;பினர் றீகன் ஆகியோர் உடனிருந்தனர்.
_______________________________________________________________________________________________________
காணவில்லை
கடந்த 2011ஆண்டு ஜூன் 15 முதல் மாதத்திலிருந்து கனடா - டொரோண்டோவில் காணாமல் போன சிவலதா செல்லத்தம்பி வயது 31 என்ற பெண்ணை டொரோண்டோ போலீஸ்சார் தேடிவருகின்றனர் இவரின் சொந்தவூர் தமிழ் நாடு என்றும் இவரின் கணவர் டொரோண்டோ மேற்பகத்தில் விமிக்கா உணவகத்தை நடத்துபவர் என்றும் சிவலதா செல்லத்தம்பி அங்கு வேலை செய்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டது இவரின் கணவரிடம் விசாரணையை மேற்கொண்ட பொலிசார் தனது மனைவிக்கு என்ன நடந்தது என்று தெரியாது என்றும் போலீஸ் மேலதிக விசாரணைக்கு மறுத்ததாக கனேடிய தொலைக்காட்சி CBC செய்தினை நேற்று வெளியிட்டுள்ளது
கனடா - டொரோண்டோ போலீஸ் தகவல்: http://www.torontopolice.on.ca/newsreleases/pdfs/22657.pdf
http://www.vimikabanquet.com/
_______________________________________________________________________________________________________
பிரித்தானிய விஸாவுக்கு போலி ஆவணங்கள் சமர்ப்பித்தவர் கைது
ஐக்கிய இராச்சிய விஸா பெறுவதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்த இலங்கையர் ஒருவர் ஜனவரி மாதம் 9ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளார். தான் பிரித்தானியாவில் தங்கியிருந்த காலத்தை மறைக்கும் வகையில் போலியான இலங்கை குடிவரவு முத்திரையைக் கொண்ட கடவுச்சீட்டை இவர் சமர்ப்பித்திருந்தார். இவரது விஸா விண்ணப்பம் மறுக்கப்பட்டதுடன், 10 வருடங்களுக்கு ஐக்கிய இராச்சியத்தினுள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திலுள்ள ஐக்கிய இராச்சிய எல்லை முகவரக உத்தியோகத்தர்கள், போலியான குடிவரவு முத்திரைகளையும் விஸாக்களையும் கண்டுபிடிப்பதற்கு விசேட பயிற்சி வழங்கப்பட்டுள்ளனர் என ஐக்கிய இராச்சிய எல்லை முகவரக அதிகாரியான கிளேயர் மறே கூறினார்.
_______________________________________________________________________________________________________
யாழ். மாநகர சபை உறுப்பினர் பதவியை மீண்டும் வழங்குமாறு நிஷாந்தன் கோரிக்கை
யாழ். மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சுவீகரன் நிஷாந்தன், அப்பதவியை மீண்டும் தனக்கு வழங்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறினேவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். ரில்கோ விருந்தினர் விடுதியில் இன்று வெள்ளிக்கிழமை அமைச்சரைச் சந்தித்த சுவீகரன் நிஷாந்தன், இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். அத்துடன், தனது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் அமைச்சர் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் கையளித்துள்ளார். தனக்கு யாழ். மாநகர சபையின் உறுப்பினர் பதவியை மீண்டும் வழங்க வேண்டும் எனவும் அப்பதவியை தான் தக்கவைத்துக்கொள்வதற்காக எதிர்வரும் காலங்களில் சில நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.
_______________________________________________________________________________________________________
‘ஆவண வைப்பகத்தை எரித்து விட்டு கைதிகள் தப்பிச் செல்ல முயன்றனர்’
சிறைச்சாலை உள்ள ஆவண வைப்பகத்தை எரித்து விட்டு சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்வதற்குக் கைதிகள் திட்டமிட்டிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி;கஜதீர தெரிவித்தார். இன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சிறைச்சாலை அதிகாரிகளின் உதவியின்றி கைதிகளால் தனித்து இவ்வாறானதொரு பாரிய குற்றச்செயலில் ஈடுபட முடியாது. எனவே, இவ்வாறான குழப்பங்களுக்கு பின்னணியிலிருந்து செயற்பட்டவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கெதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். கைதிகளின் நலனோம்புகை தொடர்பில் பிரச்சினைகள் இருக்குமாயின் அதனைத் தெரிவிப்பதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் அதற்கு இவ்வாறான களேபரங்கள் உகந்ததல்ல. சிறைச்சாலை நிர்வாகக் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துமாறு கோரும் அதிகாரம் கைதிகளுக்குக் கிடையாது. அவர்களின் குழப்பங்களால் அதிகாரத்தை அவர்களிடம் வழங்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
_______________________________________________________________________________________________________
டான் யாழ். ஒளியில் பார்வைகள்
டான் யாழ்.ஒளியில் வெள்ளிக்கிழமை (27-01-2012) இடம்பெறும் பார்வைகள் நிகழ்ச்சியில் இலங்கையில் சீன ஆதிக்கம் அதிகரித்தது வருவதாக பரவலாகப் பேசப்படும் நிலையில் கடந்த இரு வாரங்களுக்குள் இந்தியாவின் இரு முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இதில் குறிப்பாக இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் அணுவிஞ்ஞானியுமான அப்துல் கலாமின் விஜயம் குறித்தும் இலங்கையின் இனப்பிரச்னை தீர்வு தொடர்பில் அவர் அங்குரார்ப்பணம் செய்து வைத்த மும்மொழித் திட்டம் தொடர்பாகவும் தமிழ் மக்களின் கருத்துக்கள் கேட்கப்படவுள்ளது. parvaigal எனும் skype முகவரிக்கு நேரடியாக அழைப்பதன் மூலமாகவோ அல்லது http://www.facebook.com/groups/parvaigal/ எனும் குழுமத்தில் இணைந்து உங்கள் கருத்துக்களை எழுத்துமூலம் பதிவதன் மூலமாகவோ நீங்களும் நிகழ்ச்சியில் இணைந்து கொள்ளலாம். நீங்கள் பதியும் கருத்துக்கள் நிகழ்ச்சியில் சேர்த்துக்கொள்ளப்படும். தொலைபேசியூடாக உங்கள் கருத்துக்களை பதிவுசெய்ய இலங்கை நேரம் இரவு 10.00 மணிமுதல் நீங்கள் அழைக்கலாம். (ஐரோப்பிய நேரம் 5.30 முதல் 7.30 வரை )இலங்கையில் நேரடி ஒளிபரப்பாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி மீண்டும் ஐரோப்பிய நேரம் இரவு 10.00 மணிக்கு ஐரோப்பாவில் ஒளிபரப்பாகும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நீங்கள் அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0094112667977
_______________________________________________________________________________________________________
இராமேஸ்வரத்தில் தமிழ்நாட்டிலுள்ள சில செயற்பாட்டுக் கும்பல்களின் காடைத்தனமான நடவடிக்கைகள் - (பகுதி – 2 )
- டி.பி.எஸ் ஜெயராஜ்
தமிழ் நாட்டிலுள்ள பழமையான இந்த இனவெறி சக்திகள் ஸ்ரீலங்காவை நோக்கிய இந்தியாவின் வெளிப்படையான கொள்கை நடவடிக்கைகளுக்கு முற்றிலும் முரண்பாடாக அமைந்திருப்பது உண்மையில் ஒரு பாசாங்குத்தனம். இந்தியா, இருநாட்டு மக்களுக்கு இடையேயான உறவுகளை வளாப்பதிலும் மற்றும் இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா இடையேயான சுற்றுலா பயணத்தை ஊக்குவிப்பது போன்றவற்றில் அதிக ஆர்வமாக உள்ளது. வியாபாரம் மற்றும் வர்த்தகம் என்பனவும் அபிவிருத்தியடைந்து வருகிறது. ஸ்ரீலங்கா தொழில்துறை நிபுணர்களை சி.ஈ.பி.ஏ போன்ற உடன்படிக்கைகள் மூலம் முக்கிய துறைகளில் இணைத்தக் கொள்வதில் இந்தியா ஆர்வமாக உள்ளது. இது ஒருமட்டத்தில் முன்னேறிவருகின்ற அதேவேளை ஸ்ரீலங்காவுக்கு பல வழிகளிலும் நெருக்கமாக உள்ள ஒரு மாநிலம் இணக்கம் மற்றும் நட்பு என்பனவற்றுக்கு உகந்த ஒரு சூழலை உருவாக்க முடியாத நிலையிலுள்ளது. இங்குள்ள அரசியல் சக்திகளினால் வெளிப்படுத்தப்படும் இனவெறி மனப்பாங்கு ஒட்டுமொத்த இந்தியாவின் கொள்கை நோக்கங்களைப் பலவீனப்படுத்துவதாக உள்ளது. தற்சமயம் இந்தச் சம்பவங்கள் வெறும் உறுத்தல்கள் என்கிற மட்டிலேயே உள்ளன, ஆனால் படிப்படியாக இந்த உராய்வு பெரும் விகிதாசாரத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளும். இந்தியாவின் மத்தி மற்றும் மாநிலத்தில் உள்ள அரசாங்க மட்டத்திலான அதிகார சக்திகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இப்படியான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுப்பதற்கு உகந்த நேரம் இதுதான். தகுதியான ஒரு விசாவுடன் பொதுவாக இந்தியாவுக்கும் மற்றும் குறிப்பாகத் தமிழ் நாட்டுக்கும் பாதுகாப்பாகப் போய்வர ஒவ்வொரு ஸ்ரீலங்கனுக்கும் உரிமை உள்ளது. அதில் குறிப்பாக ஸ்ரீலங்காவாசிகள் இந்தியாவுக்கு விஜயம் செய்வதற்கான அதி முக்கியத்துவம் வாய்ந்த மத மற்றும் கலாச்சார நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு ஏற்ற பாதுகாப்பான வழிகளையும் மற்றும் பாதுகாப்பான தங்கலுக்கான ஏற்பாடுகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும். இராமேஸ்வரத்தில் நடைபெற்ற காடைத்தனமான நடவடிக்கை போன்ற கேவலமான வடிவங்களில் தன்னை வெளிப்படுத்தும் தமிழ் நாட்டு இனவெறியின் எச்சரிக்கையான நடவடிக்கைகளின் எழுச்சி கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. (மேலும்) 27.01.12
_______________________________________________________________________________________________________
வானில் ஒளி வெள்ளத்துடன் இங்கிலாந்து-அயர்லாந்தை சூரிய புயல் தாக்கியது: விமானங்களின் பாதை மாற்றம்
உலகம் அழியுமா? என்று பலவித தகவல்கள் மக்களை பயமுறுத்திக் கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் சூரியனில் இருந்து வெடித்து சிதறிய காந்த புயல் பூமியை தாக்க வருகிறது என்று அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தனர். உலகம் முழுவதும் உள்ள விண்வெளி விஞ்ஞானிகள் பயம் கலந்த ஆர்வத்துடன் இந்த நிகழ்வுகளை உற்று கவனித்து வந்தனர். சூரிய புயல் பூமியை நோக்கி பல கோடி மைல் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாகவும், இது செயற்கைகோள்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதன் மூலம் கம்ப்யூட்டர், செல்போன் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் பாதிக்கப்படும் என்று எச்சரித்து இருந்தனர். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இந்த தாக்குதல் அச்சம் அதிகம் இருந்தது. இதனால் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு விமானங்கள் செல்லும் பாதைகளை தற்காலிகமாக மாற்றி அமைத்து இருந்தனர். இந்த காந்த புயல் பூமியை தாக்க தொடங்கி விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனில் நேற்று முன் தினம் கரோனா பிளாஸ்மா கதிர்வீச்சு உருவாகி அன்றைய தினமே பூமியின் காந்த மண்டலத்திற்குள் வந்து விட்டதாக நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர். பூமியின் வடமுனையில் உள்ள அயர்லாந்து, இங்கிலாந்தின் வட பகுதியான ஸ்காட்லாந்து, நார்வே ஆகிய நாடுகளை காந்த புயல் தாக்கியது. அப்போது வானில் நீலம்-பச்சை நிறம் கலந்த ஒளி வெள்ளம் காணப்பட்டது. மின்னல் போல் வானில் ஒளி பாய்ச்சுவது போல் காந்தப்புயல் தாக்கியது. இதை விஞ்ஞானிகள் அதிநவீன டெலஸ்கோப் மூலம் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர். (மேலும்) 27.01.12
_______________________________________________________________________________________________________
யாழ். மாநகர சபை ஆளும், எதிர் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு
யாழ். மாநகர சபையின் எதிர் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் 11 பேர் மாநகர சபை அமர்வை பகிஷ்கரித்துவிட்டு சற்று முன்னர் வெளிநடப்புச் செய்துள்ளனர். யாழ். மாநகர சபை மேயரின் சர்வாதிகார, ஜனநாயக விரோத நிர்வாகப் போக்கை கண்டித்து யாழ். மாநகர சபையின் எதிர், ஆளும் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்துள்ளனர். யாழ். மாநகர சபையின் பிரதான எதிர்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 உறுப்பினர்கள் ரெமிடியஸ் தலைமையில் வெளிநடப்புச் செய்ய, ஆளும் கட்சி உறுப்பினரான மங்களநேசனும் வெளிநடப்புச் செய்துள்ளார். இவர்கள் வெளிநடப்புச் செய்த போதிலும் யாழ். மாநகர சபையின் நடவடிக்கைகள் சீராக இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இந்த நிலையில் சபையை விட்டு வெளிநடப்புச் செய்தவர்கள் யாழ். மாநகர சபை மேயரின் ஜனநாயக விரோத நிர்வாக நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
_______________________________________________________________________________________________________
நிதிச் சுமையால் இராக்கிலிருந்து அமெரிக்க படைகள் வாபஸ்'
பாக்தாத், ஜன.26: இராக்கிலிருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறுவதற்கு முக்கியக் காரணமே, அந்நாட்டின் பொருளாதார நிலைதான் என்று அல்-காய்தா தெரிவித்துள்ளது. இராக்கில் படைகள் இருப்பதால் அமெரிக்காவுக்கு அதிகம் செலவாகிறது. செலவைக் கட்டுப்படுத்துவதற்காக படைகளைத் திரும்பப் பெறும் முடிவை அமெரிக்கா எடுத்துள்ளதாக அல்-காய்தா தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் இணையதளத்தில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. 9 ஆண்டுகளாக இராக்கில் நிலை கொண்டிருந்த அமெரிக்க படைகளின் கடைசி பிரிவு கடந்த மாதம் முற்றிலுமாக திரும்பப் பெறப்பட்டது. இதற்குப் பிறகு முதல் முறையாக இணையதளத்தில் இக்கருத்தை பயங்கரவாத அமைப்பான அல்-காய்தா தெரிவித்துள்ளது. இராக்கில் அமெரிக்கப் படைகளின் பிரதான எதிரி அல்-காய்தா அமைப்புதான். அமெரிக்க படை வீரர்கள் மீது பயங்கரமான தாக்குதலை இந்த அமைப்பினர் நடத்தியதோடு, அமெரிக்க ஆதரவில் நடைபெறும் அரசு அலுவலகங்களையும் தாக்கினர். அமெரிக்க படைகள் முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் அல்-காய்தா அமைப்பினர் இப்போது சன்னி முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டு ஷியா முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுத்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக 170 ஷியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் அங்கு வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. இதைப் பார்க்கும்போது அங்கு உள்நாட்டுப் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புதன்கிழமையன்று அல்-காய்தா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட ஒலி நாடா செய்தியில், தன்னை அபு முகமது அல்-அதானி என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். இராக் மண்ணில் அமெரிக்க படைகள் தோற்றுப் போய்விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். (மேலும்) 27.01.12
_______________________________________________________________________________________________________
த.ம.வி.பு கட்சியுடன் பேச்சு நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்
அதிகார பகிர்வு தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவில் பேச்சு நடத்தவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுடன் அதிகார பகிர்வு தொடர்பில் பேச்சு நடத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 'முதலமைச்சர் சந்திரகாந்தனால் பேச்சு நடத்துவது தொடர்பில் விடுக்கப்ட்ட வேண்டுகோளையடுத்து, தேசிய பிரச்சினை தொடர்பில் பேச்சு நடத்தி அரசியல் தீர்வு தொடர்பில் ஒர் இணக்கப்பாட்டுக்கு வர தீர்மானித்துள்ளோம்' என சம்பந்தன் தெரிவித்தார். இப்பேச்சு தொடர்பிலான திகதி இதுவரை தீர்மானிக்கப்படவி;ல்லை. பேச்சுக்கான திகதியை தீர்மானிப்பது தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினருடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார். அதிகார பகிர்வு தொடர்பில் இணக்கப்பட்டுக்கு வருவதற்கும் பேச்சு நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் அண்மையில் அழைப்பு விடுத்திருந்தார். வடக்கு கிழக்கு இணைப்பு தவிர்ந்த காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் தங்களுடன் ஒருமித்த கருத்துடனேயே உள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தன் அண்மையில் கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
_______________________________________________________________________________________________________
சீனாவின் வளர்ச்சி – ஒரு பார்வை (5)
20 ஆயிரம் புதிய நகரங்கள்
- ஜி.விஸ்வநாதன்
சீனாவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள் தயாராகின்றன என்றாலும், இரண்டு, மூன்று மாநிலங்கள் மட்டும் பல பொருட்களின் உற்பத்தித் தலங்களாகத் திகழ்கின்றன. அவற்றுள் ஒன்று க்வாண்டாங். சீனாவின் மொத்த உற்பத்தியில் 30 சதவிகிதப் பொருட்கள் இந்த மாநிலத்தில்தான் தயாராகின்றன. தமிழ்நாட்டில் சிவகாசியில் தயாராகும் பட்டாசு வகைகள், வாணவேடிக்கை வகைகள், இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் கூட அனுப்பப்படுவது போல, சீனாவில் தயாராகும் வாணவேடிக்கை வகைகள் வெவ்வேறு நாடுகளுக்கு விற்கப்படுகின்றன. குறிப்பாக, சில நாடுகள், தங்கள் நாடுகளில் நடக்கும் முக்கிய விழாக்களுக்கு, சீனாவில் இருந்துதான் வாண வேடிக்கையை இறக்குமதி செய்கிறார்கள். சீனாவில் எவ்வளவு குறைவான விலைக்குப் பொருட்கள் கிடைக்கின்றன என்பதற்கு, அந்நாட்டில் தயாராகும் வாணவேடிக்கை வகைகள் ஒரு உதாரணம். சீனாவில் இருந்து வாணவேடிக்கை வகைகளை இறக்குமதி செய்யும் வியாபாரிகள், தங்கள் நாட்டில் அதை விற்பனை செய்யும்போது 200 முதல் 600 சதவிகிதம் வரை லாபம் ஈட்டுகிறார்கள். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், வியாபாரிகள் இவ்வளவு லாபம் வைத்து விற்பனை செய்தாலும், ‘ஏற்கக் கூடிய விலை’ என்றே அதை வாங்கி பயன்படுத்தும் மக்கள் நினைக்கிறார்கள் என்று செய்திகள் கூறுகின்றன. இதேபோல மற்றொரு பொருளை உதாரணமாகச் சொல்வதானால், சீனாவில் தயாராகும் கூலிங்க்ளாஸ்கள் பிரசித்தி பெற்றவை. அங்கு அதன் விலை ஒரு டாலர். சீனாவில் தயாரான இந்த கூலிங்க்ளாஸ் அமெரிக்காவில் 35 டாலருக்கு விற்கப்படுகிறது. ஆனால், அமெரிக்கர்கள் இதை குறைந்த விலை என்றே கருதுகிறார்கள். சீனாவில் இருந்து ஏற்றுமதி அதிகமாக இருப்பதற்கு, அவர்கள் அதிக லாபத்தை எதிர்பார்ப்பதில்லை என்பதும் முக்கிய காரணமாகும். பெரும்பாலான பொருட்களை 2 முதல் 3 சதவிகித லாபத்துக்குத்தான் சீனா விற்கிறது. அமெரிக்காவில் உள்ள வால்மார்ட்டில் சீனாவில் தயாரான பல பொருட்கள் விற்கப்படுகின்றன என்பது மாத்திரம் அல்ல; சீனாவிலேயே வால்மார்ட் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. (மேலும்) 27.01.12
_______________________________________________________________________________________________________
இலங்கையில் அதிகரிக்கும் வர்த்தகப் பற்றாக்குறை
- பி.பி.சி
இலங்கையில் இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் உள்ள இடைவெளியான வர்த்தகப் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமாகவுள்ளது என்று அந்நாட்டின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது 2011 ஆம் ஆண்டு இலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறை 238 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய வங்கியின் அறிக்கை கூறுகிறது. இலங்கையின் பொருளாதாரத்தை பொறுத்தவரையில் இது ஒரு அபாயகரமான நிலையையே காட்டுகிறது என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்தப் பற்றாக்குறை குறுகிய காலத்தில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிப்பது ஆரோக்கியமான பொருளாதார நிலையாக கருத முடியாது எனவும் அவர்கள் கூறுகிறார்கள். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததுள்ளதும், நாட்டில் நடைபெற்று வரும் பொருளாதார அபிவிருத்திக்கு கூடுதலாக இறக்குமதிகளை செய்ய வேண்டியுள்ளதும் இந்த வர்த்தகப் பற்றக்குறைக்கு ஒரு முக்கிய காரணம் என இலங்கை அரசு கூறுகிறது. சர்வதேச அளவில் 2010 நவம்பர் மற்றும் 2011 நவம்பர் இடையேயான காலப்பகுதியில் கச்சா எண்ணெயின் விலை பாரல் ஒன்றுக்கு சுமார் 85 டாலர்களிலிருந்து 113 டாலர்களாக அதிகரித்தது என்பது இலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறை இருமடங்குக்கும் மேலாக உயர்வதற்கான ஒரே காரணமாக இருக்க முடியாது என்று கூறுகிறார், கொழும்பு பல்கலைகழக பொருளாதாரத்துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் கணேசமூர்த்தி. (மேலும்) 27.01.12
_______________________________________________________________________________________________________
அச்சத்தில் வாழும் தமிழ் கைதிகளை புனர்வாழ்வு நிலையங்களுக்கு மாற்றுங்கள்: ஜனதிபதியிடம் மனோ கோரிக்கை
தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலை திணைக்களத்திலிருந்து அகற்றப்பட்டு புனர்வாழ்வு திணைக்களத்தின் கீழ் புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட வேண்டும். இதை செய்வதன் மூலம் தமிழ் கைதிகளின் குடும்பத்தவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் உங்கள் நல்லெண்ண சமிக்ஞையை காட்டுங்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கோரியுள்ளார். மனோ கணேசனின் கடித பிரதிகள் கொழும்பிலுள்ள முன்னணி தூதரகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...மகசின் சிறைக்கலவரம் நாடு முழுக்க வாழ்கின்ற தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக சிறைக் கைதிகளின் குடும்ப உறவுகள் மிகவும் பீதியடைந்த நிலையில் இருந்தார்கள். உண்மையில் தமிழ் கைதிகள் தாக்கப்படுகிறார்கள் என்றே ஆரம்பத்தில் தமிழ் மக்கள் மத்தியில் வதந்தி பரவியது. கடந்த காலங்களில் சிறைகளுக்குள் இனரீதியாக நடைபெற்ற சம்பவங்களை எண்ணி இந்த பதற்றமும் பீதியும் ஏற்பட்டது என்பது புரிந்துகொள்ள கூடியது. ஆனால் நடந்த கலவரம் இன ரீதியானதாக இருக்கவில்லை. என்றாலும் இந்த சம்பவம் தமிழ் கைதிகளின் பரிதாப நிலைமையை படம் பிடித்து காட்டுகின்றது. அரசாங்கத்தின் உடன் நடவடிக்கை காரணமாக தமிழ் கைதிகள் வேறு சிறை கூடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். இது தமிழ் கைதிகளின் விசேட பிரச்சினையை அரசாங்கம் அறிந்து சிந்தித்துள்ளது என்பதை காட்டுகின்றது. (மேலும்) 27.01.12
_______________________________________________________________________________________________________
எஸ்.எம்.கிருஸ்ணா மீது தமிழ் கூட்டமைப்பினருக்கு நம்பிக்கையில்லை!
- வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம
 தமிழ் கூட்டமைப்பினரின் இந்த டில்லிக்குக் காவடி எடுக்கும் படலம் ஒன்றும் புதுமையான ஒன்றல்ல. ஏற்கெனவே காலாதிகாலமாக தமிழ் தலைமைகள் எல்லாமே ‘இந்தியா மூலம் இந்தா பிடுங்கிக் காட்டுகிறோம்’ எனச் சவால் விடுவதும், பின்னர் நினைத்ததைச் சாதிக்க முடியாமல் போனதும், ‘வயிற்றுக் குத்தை நம்பினாலும் வடக்கத்தையானை நம்பேலாது’ என மறைவாகப் ‘புறணி’ சொல்வதும் நடந்து வருபவைதான். சரி, தமிழ் கூட்டமைப்பினர் டில்லி சென்று புதிதாக என்னதான் செய்யப் போகிறார்கள்? அங்கு இந்திய அரசின் கொள்கை முடிவுகளை எடுக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவி திருமதி சோனியா காந்தியையோ பிரதமர் மன்மோகன் சிங்கையோ அல்லது வேறு முக்கியமான தலைவர்களையோ சந்திக்கப் போவதில்லை. அங்கும் இதே வெளிநாட்டமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவையோ அல்லது அவருக்குக் கீழுள்ள அவரது செயலாளரையோ தான் சந்தித்துவிட்டுத் திரும்புவர். ஆனால் ஊடகங்களுக்கு, ‘பேச்சுவார்த்தைகள் குறித்து இப்பொழுது எதையும் வெளியிட முடியாது’ என, பெரும் இராணுவ இரகசியத்தைக் காப்பாற்றுவது போல இரா.சம்பந்தன் அறிக்கை விடுவார். இப்படி இப்படியாக நாடகத்தின் ஒவ்வொரு காட்சி போல, தமிழ் கூட்டமைப்பினர் தமிழ் மக்கள் முன்னால் சீன் மாற்றி சீனாக காட்சிகளை மாற்றி மாற்றிக் காட்டிக்கொண்டே இருப்பார்கள். அதன் மூலம் புள்ளிகள் கூடி தேர்தல்களில் வெல்லலாம் என்பதில் இந்த ‘சோணகிரி’ தமிழன் இருக்கும்வரை அவர்களுக்கு அசையாத நம்பிக்கை உண்டு. அதுவும் இப்பொழுது எல்லோரும் வட மாகாணசபைத் தேர்தலை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதால், தமிழ் கூட்டமைப்பினரிடம் இருந்து இப்படியான மேலும் பல நாடக அரங்கேற்றங்களை எதிர்பார்க்கலாம். இந்திய வெளிநாட்டமைச்சர் வந்த கையோடு தமிழ் கூட்டமைப்பினர் டில்லிக்கு காவடி எடுப்பது, அவர்கள் எதிர்பார்க்கும் நன்மைகளைவிட தீமைகளையே வழங்கப்போவது நிச்சயம். ஒன்று, கிருஸ்ணா மீது நம்பிக்கை இல்லாததால்தான் டில்லிக்கு நேரடியாகச் செல்கிறார்கள் என்ற கருத்து தனிப்பட்ட முறையில் கிருஸ்ணாவின் வெறுப்பைச் சம்பாதிப்பதுடன், அவரது அரசாங்கத்தின் அதிருப்தியையும் சம்பாதிக்கும். இரண்டாவது, இலங்கையில் இந்திய வெளிநாட்டமைச்சருடன் பேச முடியாத ஏதோவொரு விடயத்தை இந்தியா சென்று கூட்டமைப்பினர் பேச முனைவது, அவர்கள் இலங்கைக்கு எதிராகச் சதி சூழ்ச்சிகளில் ஈடுபட முயல்கிறார்கள் என்ற கருத்தை இலங்கை மக்கள் மத்தியில் உருவாக்கும். (மேலும்) 26.01.12
_______________________________________________________________________________________________________
யுத்தத்தில் காணாமற் போன ஒன்று
- கருணாகரன்
நேற்று எங்களின் வீட்டுக்கு நண்பரொருவர் வந்திருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரைச் சந்தித்தேன். நீண்ட நாட்கள் என்றால், வன்னியின் யுத்த காலத்திற் சந்தித்ததற்குப் பிறகு இப்போதே அவரைச் சந்திக்கிறேன். ஏறக்குறைய மூன்று ஆண்டுகள். யுத்தத்தின் இடைக்காலப்பகுதியில் - உடையார்கட்டுப் பகுதிக்கு இராணுவம் வந்த பிறகு - அவருடைய தொடர்புகளில்லாமல் போய் விட்டது. ஆனாலும் வலைஞர்மடத்திலிருந்து நாங்கள் வெளியேறும் வரையில் அவரைப் பற்றி அறிந்து கொண்டிருந்தோம். பின்னர், அதுவும் இல்லாமற் போய்விட்டது. நேரடியாகப் பேசுவதற்கும் தகவல்களைச் சரியாக உரியவரிடமிருந்து அறிந்து கொள்வதற்கும் அங்கே தொலைபேசி போன்ற தொடர்பு வசதிகள் இல்லை. எல்லாமே வாய்வழித் தகவற் பரிமாற்றந்தான். வாய்வழித் தகவல்களில் கூடக்குறைய எல்லாம் வரும். விண்ணாணம், பூராயம், விடுப்பு என்றெல்லாம் ஊர்க்கதைகளைக் கதைத்துப் பழகிய ஆட்களல்லவா! ஆகவே, அவரவருடைய கற்பனைகள், விருப்பங்களின் அளவுக்குச் செய்திகளில் ஏற்ற இறக்கம் இருக்கும். அதிலும் யுத்தகாலத்தில், யுத்த களத்தில் இந்தக் கூடக்குறைய என்பதற்கெல்லாம் குறைவே இல்லை. யுத்தத்தில் முதலில் கொல்லப்படுவது உண்மை என்று சொல்வார்கள். அது முற்றிலும் சரியே. அந்த உண்மையை ஆளாளுக்குக் கொன்று கொண்டிருந்தனர். ‘முன்னேறி வரும் இராணுவத்தின் மீது தாக்குதல்களை நடத்துவதற்காக இயக்கத்துக்குப் புதிசாக ஆயுதங்கள் வந்திருக்கு. முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இரவோடிரவாக இந்த ஆயுதங்கள் இறக்கப்பட்டுள்ளன. ஒரு தொகுதி ஆயுதங்களை இறக்கிய கப்பல் மீதி ஆயுதங்களோடு நடுக்கடலுக்கு – சர்வதேசக் கடற்பரப்புக்குப் போயிட்டுது. எல்லா ஆயுதங்களையும் ஒரே இரவில் இறக்க முடியாதல்லவா! என்றபடியால், அது தூரப் போயிட்டுது. பகலில் கரைக்குக் கிட்ட நின்றால் சிறிலங்காப் படைகளுக்குச் சந்தேகம் வந்து விடும். அதுதான் அது ஆழத்துக்குப் போனது’ என்று சொல்வார்கள். ‘இதையெல்லாம் யார் கண்டது? இந்த ஆயுதங்களை யார் இறக்கியது?’ என்று கேட்டால், ஆயுதங்களை இறக்கியவரே தமக்குச் சொன்னார் என்பார்கள். (மேலும்) 26.01.12
|