|
தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடுமையான அரசியல் நெருக்கடிக்கு முகம் கொடுக்கிறது.
பகுதி - 2
-டி.பி.எஸ்.ஜெயராஜ்
சுரேஸ் பிரேமச்சந்திரன் ரி.என்.ஏக்குள் இருந்துகொண்டே இலங்கை தமிழரசுக் கட்சி மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை முன்னின்று நடத்குவது தனது சொந்த நோக்கங்களுக்காகவே, தமிழ் சிவில் அமைப்பு என அழைக்கப்படும் இயக்கம் மதிநுட்பத்துடன் வெளியில் இருந்து ஒரு பிரச்சாரத்தை முடுக்கிவிடுவதும் தங்கள் சொந்த நோக்கங்களுக்காகவே. இந்த சிவில் சமூக இயக்கத்துக்கும் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி - தமிழ் காங்கிரஸ் அமைப்புகளுக்கும் இடையே இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கியத்துவத்தை இல்லாதொழித்து அதன் அரசியல் செல்வாக்கை ஆண்மையில்லாத தன்மைக்கு குறைத்துவிடுவதற்கான ஒரு நுட்பமான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) தலைவர் டக்ளஸ் தேவானந்தா 2004ல் ரி.என்.ஏ யிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 22அங்கத்தவர்களையும் புலிகளால் தெரிவு செய்யப்பட்ட முகவர்கள் என விளக்குவதில் ஆவலாக இருந்தாலும் அது முற்றாக உண்மையில்லை. 22 பேரில் பதினொரு கட்சி சாராத அங்கத்தவர்கள் எல்.ரீ.ரீ.ஈயினால் பிரேரிக்கப்பட்டவர்கள், ஆனால் ஏனையவர்கள் நான்கு கட்சிகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டவர்கள். தன்னுடைய தெரிவாளர்களுக்கும் கட்சியின் தெரிவாளர்களுக்கும் இடையில் சமநிலை ஏற்படுத்துவதற்காக எல்.ரீ.ரீ.ஈ ஒரு ஐம்பதுக்கு ஐம்பது கொள்கையை பின்பற்றியிருந்தது. எல்.ரீ.ரீ.ஈ ஒரு மேலாதிக்க சக்தியாக இருந்தாலும் அது தெரிவு செய்த சிலர் எல்லை தாண்டினார்கள். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோர், மற்றும் சதாசிவம் கனகரட்னம் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரான செல்வி. தங்கேஸ்வரி கதிர்காமர் ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி வேட்பாளர்களாக போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்கள். (மேலும்) 22.05.13
___________________________________________________________________________________________________________
கனடாவில் ‘வாழும் மனிதம் - 4’
வருடா வருடம் கனடாவில் சிறப்பாக நடாத்தப்பட்டு வரும் வாழும் மனிதம் - 4 இன் நிகழ்வு இவ்வருடமும் சிறப்பாக நடாத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் “2009 இற்குப் பின்பு இலங்கையில் அடிப்படைவாதமும் எழுச்சியும்” என்னும் தலைப்பில் பின்வருவோர் உரையாற்றுவர். பேராசிரியர் கனிஸ்க குணவர்த்தன (ரொறன்ரோ பல்கலைக்கழகம்) எஸ்.ராஜேந்திரன் (சமூக ஆர்வலர்)
இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர் (Scarborough Civic Centre) காலம்: 2013 மே 26 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்: தேவன் தொடர்புகளுக்கு: தேவன் - தொலைபேசி: 416 – 284 - 4166
___________________________________________________________________________________________________________
இந்த அமைதி நமக்கு வேண்டப்படாததா?
- மட்டுநகரிலிருந்து எழுகதிரோன்
யுத்தம் முடிவடைந்து நான்காண்டுகள் கடந்து வந்திருக்கின்றோம். வெறுமனே முள்ளிவாய்க்கால் அழிவு. நினைவு தினங்கள். என்றவாறாக ஒவ்வொரு மே மாதத்தையும் சோக உணர்வுகளை தூண்டிவிடும் நாளாக மட்டும் நாம் கடந்து வந்து கொண்டிருக்கிறோம்.இவையனைத்தையும் விடுத்து யுத்தம் அற்ற பூமியாக நமது மண் ஆக்கப்பட்டிருக்கிறது.கடந்த முப்பது வருடகாலம் நமது சமுகம் இழந்து வந்த இழப்புகளுக்கெல்லாம் ஒரு முடிவு வந்திருக்கிறது .இந்த சந்தர்ப்பத்தை நமது சமுகத்தின் எதிர்கால வாழ்வு நோக்கி நாம் எப்படி பயன்படுத்த போகிறோம்? யுத்தம் அற்ற கடந்த மூன்று வருடங்களையும் நாம் எவ்வாறு பயன்படுத்த முனைந்தோம்? என்று கேள்வி எழுப்பினால் விடை உவப்பானதாக இருக்கபோவதில்லை. இப்போது இலங்கையில் எங்கும் குண்டு வெடிப்பதில்லை. நாள்தோறும் ஐம்பது நூறு என்று யாரும் கொல்லப்படுவதில்லை. மதகுருமாரினதும் பாடசாலை மாணவர்களதும் பஸ் வண்டிகள் வெடிவைத்து தகர்க்கப்படும் என்ற அச்சம் யாரிடமும் இல்லை. 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதிக்கு பின்னர் ஒரு அரசியல் தலைவர்களும் தற்கொலை குண்டுதாரியால் கொல்லப்படவில்லை. படுவான்கரை பாலகர்கள் யாரையும் பிடித்து சென்று அவர்களின் கழுத்துகளில் நஞ்சு குப்பிகளை கட்டிவிட இப்போது யாரும் இல்லை .டக்லஸ் தேவனந்தாவையோ ஏன் சம்பந்தரையோ கூட துரோகியென்று பட்டம்கொடுத்து சினைப்பரால் கொலை செய்துவிட இப்போ யாரும் இல்லை. (மேலும்) 22.05.13
___________________________________________________________________________________________________________
புலிகளின் செயற்பாட்டாளர் இந்தியாவில் கைது
தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளராக இருந்ததாகக் கூறப்படும் 35 வயதுடைய இலங்கையர் ஒருவரை இந்திய குற்றப்பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவர் நைரோபிக்கு பயணமாகவிருந்த வேளையிலேயே மும்பாய் சர்வதேச விமான நிலையத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த மின் பொறியியலாளரான இவர், இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழ்நாட்டின் வேதாரணியம் கரையை மே மாதம் 9ஆம் திகதி அடைந்தார். இலங்கை அரசாங்கம் இவருக்கு எதிராக இன்ரபோல் அறிவித்தல் விடுவித்திருந்தமையால் இவர் மும்பாய் விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார். இவர் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்ட பின் மறைந்து வாழ்ந்துவந்தார். இவரை இலங்கை அதிகாரிகள் 2009ஆம் ஆண்டு கைதுசெய்து சித்திரைவதை செய்துவந்தனர். இலங்கை பொலிஸார் இவரை தேடி வந்தனர். இதனால் இவர் படகு மூலம் தமிழ்நாட்டுக்கு வந்தார் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவர் 2001 – 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய கல்லூரி ஒன்றில் படித்து மின் பொறியியலில் பட்டம் பெற்றவர். இவரை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஆணையாளர் ஹிமன்ஷு றோய் கூறியுள்ளார்.
___________________________________________________________________________________________________________
டான் தொலைக்காட்சியின் சேவை மட்டு ஒளியாக கிழக்கிலும் உதயம்
 உலகளாவிய ரீதியிலும் இலங்கையின் வடக்கின் அனைத்துப்பகுதியிலும் தமது சேவையை மேற்கொண்டுவரும் டான் தொலைக்காட்சி சேவை இலங்கையின் கிழக்குப் பகுதிக்கான மட்டுஒளி தொலைக்காட்சி சேவையை கடந்த 18.09.2013 அன்று ஆரம்பித்துள்ளது மட்டுஒளி என்ற நாமத்துடன் இந்த சேவை மட்டக்களப்பு பூம்புகாரில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் கலை,கலாசார நிகழ்வுகள்,நடைபெறும் சம்பவங்கள் ஆகியவற்றை உடனுக்குடன் மக்கள் கண்டுகளிக்கும் வகையில் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆஸ்க் கேபிள் விசனின் ஒரு அங்கமாகவுள்ள மட்டுஒளியின் ஆரம்ப நிகழ்வு ஆஸ்க் கேபிள் விசனின் தலைவர் திரு.எஸ்.எஸ்.குகநாதன் தலைமையில் நடைபெற்றது இந்த ஆரம்பவிழாவில் மீள்குடியேற்ற பிரதிமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் மூத்த பத்திரிகையாளர் கோபாலரத்தினம் மற்றும் படை அதிகாரிகள், வர்த்தக சங்க பிரமுகர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். (மேலும்) 22.05.13
___________________________________________________________________________________________________________
புலிகளுக்கு பிரேமதாஸா ஆயுதங்களை கொடுத்தது ஏன்?'
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸா ஆயுதங்களை கொடுத்தது ஏன்?என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் மகனுமான சஜித்பிரேமதாஸா தெளிவுப்படுத்தியுள்ளார். யுத்தம் நிறைவடைந்து 4 ஆண்டுகள் பூர்த்தியடைந்ததை கொண்டாடும் வகையில் காலி முகத்திடலில் சனிக்கிழமை நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதி புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தார். அத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக நாட்டைபிரிப்பதற்கு முயன்றனர் என்று குற்றஞ்சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்த சஜித்பிரேமதாஸா எம்.பி இது தொடர்பில் பிபிசி சிங்கள செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலே ஜனாதிபதி பிரேமதாஸா புலிகளுக்கு ஆயுதங்களை கொடுத்தது ஏன்? புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பயன் என்ன? என்பது தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ளார். இவை தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதி பிரேமதாஸா புலிகள் மீது கொண்டிருந்த தப்பான அபிபிரயாத்தின் பெறுபேறாகவே கிழக்கில் பொலிஸ் அதிகாரிகள் கொன்றொழித்தமையை பார்க்கவேண்டும். அரசாங்கம் புலி பயங்கரவாதிகள் மீது அதீத நம்பிகைகொண்டிருந்த காலத்திலேயே கிழக்கில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது என்றும் அவர் கூறியுள்ளார். இந்திய இராணுவத்தினர் வடகில் நிலைக்கொண்டிருப்பதனை ஜனாதிபதி பிரேமதாஸா எதிர்த்தார். அதனால் தான் இராணுவத்துடன் சண்டையிட்ட தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கு இரகசியமாக ஜனாதிபதி பிரேமதாஸா ஆயுதங்களை வழங்கினார் என்று மேஜர் ஜெனரல் டென்சில் கொம்பேகடுவ கொலையை விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலிருந்து தெளிவாகின்றது. இந்நிலையில், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் 2002 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளுடன் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தில் எவ்வளவு குறைப்பாடுகள் இருந்தாலும் இந்த ஒப்பந்தத்தின் ஊடாகவே புலிகளின் கிழக்கு மாகாண தளபதியை பிரிக்கமுடிந்தது. அது மிகமிக முக்கியமான விடயமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 'புலிகள் அமைப்பின் தலைவருக்கு எதிராக செயற்படவும் மாத்தையை குழுவை பலப்படுத்துவதற்குமே' ஜனாதிபதி பிரேமதாஸா புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
___________________________________________________________________________________________________________
இமயமலையைக் கடந்து ஒரு கைகுலுக்கல்
--லே கெச்சியாங்
(மக்கள் சீனாவும் இந்தியாவும் கூடி வாழ முடிவெடுத்திருக்கின்றன. ஆசியா உலக அமைதியின் நங்கூரமாக ம ாறவேண்டுமானால் இவ்விரு நாடுகளும் கைகோர்த்துக்கொண்டு செயல்பட வேண்டும்.)
நாம் மாறிக்கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆயினும், சில விஷயங்கள் மட்டும் எப்போதுமே நிலைத்து நிற்கக்கூடியதாகவும், புத்துயிர் அளிக்கக்கூடியதாகவும், அனைவரையும் ஈர்க்கக்கூடியதாகவும் இருந்திடும். இந்தியாவும் அதேபோன்று ஒரேசமயத்தில் பழமையும், இளமையும் கலந்ததொரு நாடாகும். நான் சீனப் பிரதமரானபிறகு, சீன அரசாங்கத்தின் தூதுக்குழு ஒன்றிற்குத் தலைமையேற்றுப் பயணம் செய்திடும் முதல் நாடு இந்தியாதான். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஆழமான முறையில் நட்புறவையும், கூட்டுறவையும் மேம்படுத்திட சில துல்லியமான பங்களிப்புகளைச் செய்திட முடியும் என்ற நம்பிக்கையுடனும் மிகுந்த ஆவலுடனும் வந்திருக்கிறேன். சீனாவும் இந்தியாவும் பல்லாயிரம் காலத்திற்கும் மேலான நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பர்யத்தைப் பெற்றுள்ள நாடுகளாகும். மிகவும் பழமையான மனிதகுல நாகரிகங்களில் சீன நாகரிகமும், இந்திய நாகரிகமும் அடங்கும். அவை இரண்டும் கிழக்கத்திய நாடுகளின் நாகரிகத்தின் இரு தூண்களைப் பிரதிநிதித் துவப்படுத்துகின்றன. விண்ணைத்தொடும் இமயமலை யினால்கூட இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஈர்ப்பையும், அறிவொளி பரிமாற்றத்தையும் தடுத்திட முடியவில்லை. (மேலும்) 22.05.13
___________________________________________________________________________________________________________
கச்சத் தீவை மீட்க உடனடி நடவடிக்கை: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தல்
கச்சத் தீவை திரும்பப் பெற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். மேலும், சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சுட்டிக்காட்டி அவர் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: இலங்கையிடம் இருந்து கச்சத் தீவை திரும்பப் பெறுவது தொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் கடந்த 3-ஆம் தேதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில், தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினரின் கொடூரத் தாக்குதல்களும், துன்புறுத்தல்களும், சிறை பிடிக்கும் நிகழ்வுகளும் தொடர்வதைக் கருத்தில் கொண்டும், பெருபாரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது சட்டப்படி செல்லத்தக்கது அல்ல என்பதாலும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் வாழ்வாதார பாதிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை நாட்டுக்கு ஒப்படைக்கப்பட்ட கச்சத்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை தனது ஆளுகையின்கீழ் கொண்டுவர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியப் பேரரசை தமிழக சட்டப் பேரவை வலியுறுத்துகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. (மேலும்) 22.05.13
___________________________________________________________________________________________________________
நாம் தோற்றுவிட்டோமா?
-வன்னி வீதியான்
14/05/2013 அன்று வவுனியா நெடுங்கேணி சேனைப்புலவு என்ற கிராமத்தில் ஏழே வயதான பள்ளிச் சிறுமி காமுகனின் கொடூர இச்சைக்கு இரையாக்கப்பட்டாள்.
17/05/2013 அன்று வவுனியா தாண்டிக்குளத்தில் ஒரு தாய் தன் மூன்று பெண் குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்ய முயன்றுள்ளாள்.
இவை மிகச் சமீப நாட்களில் வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்ற கோர சம்பவங்களில் சில. வடக்கு கிழக்கின் இன்ன பிறவிடங்களிலும், நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் இப்படியான ஏராளமான சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளன; தொடர்ந்து இடம்பெற்றும் வருகின்றன. இத்தகைய விடயங்கள் போருக்குப் பின்னான காலங்களில் செய்தியூடகங்களில் அதிகமான இடத்தையும் பிடித்துள்ளன. எம்மில் பலருக்கு இவை சினிமா செய்திகளின் நடுவே படித்துவிட்டு எறிந்துவிடும் வெறும் பத்திரிகைச் செய்திகள். வேறு சிலருக்கு அன்று கவலையுடன் கலந்துரையாடி அடுத்த நாள் மறந்துவிடும் சம்பவங்கள். பாதிக்கப்படுபவர்களின் வாழ்க்கை மீள முடியாதபடி திசைமாறும் இத்தகைய சம்பவங்கள் எம்வீட்டு வாசலில் நிகழும்வரை நாம் விழித்தெழுவதில்லையென்பது என்ன விதியா? அன்றி நியதியா? அநாதரவாக்கப்பட்டதாய் உணர்ந்த ஒரு தாய், தன் பிள்ளைகளைப் பாதுகாக்க யாருமில்லையா என்று அங்கலாய்த்து, அரசு மற்றும் அரசுசாரா அலுவலகங்கள், பொலிஸ் நிலையம், சிறுவர் பராமரிப்பு நிலையம் என வவுனியா நகரெங்கும் தேடியலைந்தபோது நம்பிக்கையூட்டக்கூடிய, சரியான பொறிமுறையொன்றைக் காட்டி அந்தத் தாயையும் பிள்ளைகளையும் இவ்வனர்த்தத்திலிருந்து காப்பாற்ற முடியாத கையறுநிலை எமக்கு ஏன் வந்தது? (மேலும்) 21.05.13
___________________________________________________________________________________________________________
“இரக்கமற்ற படுபாவிகள் அவர்கள்“
இலங்கையில் ‘துக்ளக் - 6
கட்டம் இடப்பட்ட செய்தி 1
.ஊர்களின் தமிழ்ப் பெயர்கள் மாற்றப்பட்டனவா?
ஊ ர்களின் தமிழ்ப் பெயர்கள் எல்லாம் சிங்களப் பெயர்களாக மாற்றப்படுகின்றன என்பது புலி ஆதரவாளர்கள் வைக்கும் பிரதான குற்றச்சாட்டுகளில் ஒன்று. இது குறித்து ஒரு பட்டியலையும் சிலர் வெளியிட்டுள்ளனர். இது பற்றி நாங்கள் அங்குள்ள சிலரிடம் விசாரித்தோம். “இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பல ஊர்களுக்கு சிங்களத்திலும் பெயர்கள் உண்டு. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, அந்த ஊர்ப் பலகைகள் எல்லாம் தமிழில் மட்டுமே இருந்தன. தற்போது அரசாங்கம் எல்லா ஊர்களின் பெயரையும் ஆங்கிலம், தமிழ், சிங்கள மொழிகளில் எழுதியுள்ளது. “உதாரணமாக தமிழில் ‘ஆனையிரவு’ என்று சொல்லப்படும் ஊருக்கு ஆங்கிலத்தில் 'Elephant Pass' என்றும், சிங்களத்தில் ‘அலிமாண்டுகடுவா’ என்றும் பெயர் உண்டு. எல்லாவற்றிற்குமே ‘யானைகள் கடக்கும் இடம்’ என்றுதான் அர்த்தம். எனவே, மும்மொழிப் பெயர்களையும் பயன்படுத்தத் துவங்கியுள்ளார்களே தவிர, தமிழ்ப் பெயர்களை எல்லாம் அழித்து விட்டார்கள் என்பது கொஞ்சம் கூட உண்மையல்ல. ஒரு சில இடங்களில் மட்டும் புலிகள், தங்களது மாவீரர்கள் பெயரைச் சில நகர்களுக்கும், தெருக்களுக்கும் சூட்டியிருந்தனர். அந்தப் பெயர்கள் மட்டுமே முழுமையாக நீக்கப்பட்டுள்ளன” என்றார்கள் சிலர். நாங்கள் பார்த்த ஊர்களின் பெயர்ப் பலகைகள் எல்லாம் மூன்று மொழிகளிலும் காணப்பட்டன. (மேலும்) 21.05.13
___________________________________________________________________________________________________________
பல்கலைக்கழக கல்வியை பெற முடியாதது கவலை
தொழிற்சங்கவாதியாக பரிணமித்த ஒ.ஏ.இராமையா மனம் (30.12.2012 ) திறந்து வாரமஞ்சரிக்கு வழங்கிய பேட்டி
கடந்த நூற்றாண்டின் ஆரம்ப கால் இறுதிப்பகுதியில் பகுத்தறிவுக் கொள்கையால் ஏற்பட்ட சமூக விழிப்புணர்வுகளினால் ஈர்க்கப்பட்டவர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரே இன்று நம் மத்தியில் வாழ்கின்றனர். அந்த ஒரு சிலரில் பகுத்தறிவாளனாக, முற்போக்குவாதியாக, தொழிற்சங்கவாதியாக பரிணமித்தவர்தான் இன்று நாம் சந்திக்கும் ஓ. ஏ. இராமையா. ஆங்கிலேயரின் காலனித்துவக் காலத்தில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காக தமிழகத்திலிருந்து அழைத்துவரப்பட்ட தம் மூதாதையர்களின் வாரிசுகள் இன்றும் முடக்கப்பட்ட பிரஜைகளாக வாழும் மலையக மக்களின் விடிவுக்கு குரல் கொடுத்துவரும் அவர் கடந்து வந்த பாதையை இங்கே திரும்பிப்பார்க்கின்றார். பூண்டுலோய டன்சின் தோட்டத்தில் பிறந்தேன். எனது பெற்றோர் தோட்டத் தொழிலாளியாவார்கள். ஐந்து சகோதர, சகோதரிகளுடன் பிறந்தேன். என்னுடைய தாத்தா காங்கிரஸ் கட்சியின் அபிமானி. காங்கிரஸின் கூட்டங்கள் எங்கு நடந் தாலும் அங்கெல்லாம் பிரசன்னாமாகியிருப்பார். சிறுவனாக இருந்த என்னையும் அழைத்துக் கொண்டு 1947ஆம் ஆண்டு நுவரெலியாவில் நடைபெற்ற இலங்கை, இந்திய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டமை இன்னும் என் நினைவில் பசுமரத்தாணியாக இருக்கின்றது. தாத்தா, பாட்டியுடன் நானும் கலந்து கொண்ட அந்த மாநாட்டு நிகழ்ச்சி எனக்கொரு திருப்புமுனையாக அமைந்தது எனலாம். அத்தோடு என்னை கல்வியாளனாகப் பார்க்க என் பெற்றோரும் விரும்பினர். கஷ்டத்திலும் என்னைப் படிப்பித்தார்கள். (மேலும்) 2105.13
___________________________________________________________________________________________________________
தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடுமையான அரசியல் நெருக்கடிக்கு முகம் கொடுக்கிறது.
பகுதி - 1
-டி.பி.எஸ்.ஜெயராஜ்
ஸ்ரீலங்கா தமிழர்களின் பிரதான அரசியல் அமைப்பாக கருதப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரி.என்.ஏ), அதனுள் ஏற்பட்டிருக்கும் உள்ளக நெருக்கடிகள் காரணமாக சமீப காலமாக செய்திகளில் அடிக்கடி இடம்பெற்று வருகிறது. ரி.என்.ஏ சமீப காலங்களில் தேர்தல்களில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் சின்னமான வீட்டுச் சின்னத்தின் கீழேயே போட்டியிட்டு வந்துள்ளமையானது, அதில் கூட்டு சேர்ந்துள்ள அங்கத்தவர்களிடையே உள்ளக வேற்றுமைகளை தோற்றுவித்துள்ளது. ஐந்து அமைப்புகளின் அரசியல் கட்டமைப்பு ரி.என்.ஏ என அழைக்கப்படுகிறது, ஒரு கட்சிக்கு எதிராக மற்றைய நான்கும் ஒரு சர்ச்சையில்; ஈடுபட்டிருப்பது ஒரு முக்கிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. தமிழ் ஈழ விடுதலை அமைப்பு (ரெலோ), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப்), தமிழர் விடுதலைக் கூட்டணி (ரியுஎல்எப்) மற்றும் தமிழ் ஈழ மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஆகிய நான்கு கட்சிகளும் ரி.என்.ஏ என்கிற தளர்வான அமைப்பு, ஒரு ஒன்றுபட்ட நிருவாக கட்டமைப்பை கொண்ட ஒற்றை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையாளர் அலுவலகத்;தில் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று விரும்புகின்றன. ரி.என்.ஏ யின் பிரதான அமைப்பான இலங்கை தமிழரசுக் கட்சி (ஐரிஏகே) இந்த யோசனைக்கு பெரிதும் ஆர்வம் காட்டவில்லை, அதை முற்றாக தள்ளுபடி செய்யாமல், அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த உதவுவதற்கு குறிப்பிடத்தக்க அளவில் தயக்கம் காட்டுகிறது. (மேலும்) 21.05.13
___________________________________________________________________________________________________________
செங்கொடி சங்கத் தலைவர் தோழர் ஓ.ஏ.இராமையா காலமானார்!
மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியும், இலங்கை இடதுசாரி இயக்கத்தின் தலைவர்களில் ஒருவருமான, ‘செங்கொடிச் சங்க’ தோழர் ஓ.ஏ.இராமையா அவர்கள் 2013 மே 18ஆம் திகதி தமது 76ஆவது வயதில் அட்டனில் உள்ள தமது வீட்டில் காலமானார். இருதய சத்திர சிகிச்சை செய்துகொண்ட பின்னர் சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனளிக்காததால் மரணமெய்தினார். சாதாரண ஒரு தோட்டத் தொழிலாளக் குடும்பத்தில் பிறந்த தோழர் இராமையா, சோசலிசக் கருத்துக்களில் இருந்த ஆர்வம் காரணமாக மிக இளமைக் காலத்திலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் இணைந்து கொண்டார். அதன் காரணமாக அவர் படிப்படியாக உயர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு, அரசியல் தலைமைக் குழு என்பனவற்றின் அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்டு மிகவும் சிறப்பாகச் செயலாற்றினார். கம்யூனிஸ்ட் கட்சி மலையகத்தில் உருவாக்கிய இலங்கைத் தோட்டத் தொழிலாளர் (செங்கொடி) சங்கத்தை ஒரு சக்திமிக்க தொழிற்சங்கமாக உருவாக்குவதில் தோழர் இராமையா, காலஞ்சென்ற தோழர் சுந்தரம் மற்றும் தோழர் ரொசாரியோ பெர்னாண்டோ ஆகியோருடன் இணைந்து முக்கிய பங்காற்றினார். நீண்ட காலம் செங்கொடிச் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், பின்னர் தலைவராகவும் செயற்பட்டார். (மேலும்) 21.05.13
___________________________________________________________________________________________________________
'வட-மாகாண தேர்தலை நடத்த அச்சப்பட வேண்டாம்'
ஜனாதிபதியிடம் சர்வ அதிகாரங்களும் இருக்கும்போது வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அஞ்சத் தேவையில்லை என்கிறார் மல்வத்து மகாநாயக்க தேரர்
- பி.பி.சி
இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் நடத்தப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் வடக்கு-மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக மாகாணசபைகளுக்கு உள்ள காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை ஒழித்துவிடுவதற்கான முஸ்தீபுகள் நடப்பதாக ஆளுந்தரப்பு தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலைமையில், தேர்தலுக்கு முன்னதாக அந்த அதிகாரங்களை ஒழிப்பதில் அரசாங்கம் அக்கறை செலுத்தத் தேவையில்லை என்று நாட்டில் செல்வாக்கு மிக்க மல்வத்து பௌத்த பீடம் அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறியுள்ளது. நாடாளுமன்றத்தில் ஆளுந்தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஸ் குணவர்தன நேற்று ஞாயிற்றுக் கிழமை மல்வத்து பீட மகாநாயக்க தேரர் திப்பொட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்துப் பேசியிருக்கிறார். ஏற்கனவே சர்வ நிறைவேற்று அதிகாரங்களும் ஜனாதிபதியின் கையில் இருக்கின்றபோது, மாகாணசபைகளின் அதிகாரங்கள் பற்றி பயப்படத் தேவையில்லை என்றும் வடக்குத் தேர்தலுக்குப் பின்னர் அதுபற்றி பார்த்துக்கொள்ளலாம் என்றும் மல்வத்து பீட மகாநயாக்கர் கூறியதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன -மல்வத்து மகாநாயக்கர் இடையிலான சந்திப்பின்போது, அங்கிருந்த உள்ளூர் செய்தியாளர் ஜே.ஏ.எல். ஜயசிங்க பிபிசியிடம் தெரிவித்தார். (மேலும்) 21.05.13
___________________________________________________________________________________________________________
கஜேந்திரகுமாரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசாரணை
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவர் சிவபாதம் கஜேந்திரகுமார் மற்றும் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கிருஸ்ணகோபால் வசந்தரூபன் ஆகியோர் வவுனியா பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் இன்று (20) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 18ஆம் திகதி வவுனியாவில் முள்ளிவாய்கால் நினைவு தினம் அனுஸ்டித்தமை தொடர்பாகவே இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாம் இன்று (20) காலை 8.50 மணி முதல் மாலை 3 மணிவரை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்தனர். இதன்போது, வவனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் தமது கட்சியால் நினைவு கூறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் சமனங்குளத்தில் அமைந்துள்ள தூபியில் நினைவு தினத்தை அனுஸ்டிப்பதற்கான காரணம் பற்றியும் கேட்டறியப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதேவேளை கடந்த 18ஆம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் சி.கஜேந்திரன் தேசிய அமைப்பாளர் ஆகியோர் உட்டப 15 பேர் மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
___________________________________________________________________________________________________________
மனித உரிமைக்கான மரியாதை இலங்கையில் குறைந்து வருகிறது'
- தி ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை
இலங்கையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அந்நாட்டில் அடிப்படை மனித உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் மரியாதை மென்மேலும் குறைந்துகொண்டு போவதாக தி ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை ஆர்வலர் குழு தெரிவித்துள்ளது. அரச படைகளும் விடுதலைப் புலிகளும் செய்ததாகக் குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்களை விசாரிக்கவோ சட்ட நவடிக்கை எடுக்கவோ அர்த்தமுள்ள நடவடிக்கை ஒன்றையும் மஹிந்த ராஜபக்ஷவின் இலங்கை அரசாங்கம் எடுக்கவில்லை என ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம்சாட்டியுள்ளது. தவிர மனித உரிமை ஆர்வலர்கள், சுயாதீன ஊடகவியலாளர்கள் போன்றவர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்றும், தமிழ் மக்களின் கஷ்டங்களை நிவர்த்தி செய்வது குறித்து அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அது சாடியுள்ளது. (மேலும்) 21.05.13
___________________________________________________________________________________________________________
வாய் பேச முடியாத சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குடும்பஸ்தர்
திருகோணமலை லிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 12 வயதான விசேட தேவையுடைய சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 33 வயதான நபர் ஒருவர் எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி கடந்த சனிக்கிழமை பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கைது செய்யப்பட்டவர் லிங்கநகரைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி என தெரியவந்துள்ளது. அவரது மனைவி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகநபர் சிறுமியை பலாத்காரதிற்கு உட்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை யாழ்ப்பாணத்தில் தங்கி வேலை செய்வதாகவும் தாய் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது நான்காம் தரத்தில் கல்வி பயிலும் வாய் பேசமுடியாத சிறுமி தனது ஆசிரியரிடம் இப்பிரச்சினையை தெரிவித்தன் பின்னர் சம்மந்தப்பட்ட நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
___________________________________________________________________________________________________________
புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (98)
98. சிறுத்தைகளுக்குப் பயந்து கொடும் வேங்கைகளின் குகைக்குள் சரண் புகுந்த புளொட் உறுப்பினர்கள்!
எ னது விசாரணை முடிவடையும் நிலையை அடைந்துவிட்டதற்கு சில அறிகுறிகள் தென்பட்டன. என்னை விசாரித்த தயாபரன் என்பவன் என்னிடம் விசாரணையின்போது பெற்ற சில விபரங்களை – குடும்ப விபரங்கள், எனது கல்வி, அரசியல் வேலைகள் போன்றவற்றைச் சரி பார்ப்பதில் சில நாட்களாக ஈடுபட்டிருந்தான். அது விசாரணை முடிவுக்கு வந்ததின் அறிகுறி என நான் ஊகித்தேன். இந்த நேரத்தில்தான் நான் சிறீதரனை கடைசியாகச் சந்தித்தது எப்போது என்ற கேள்வியை அவன் எழுப்பியிருந்தான். இதேவேளையில் எமது ஏனைய தோழர்களான இராசரத்தினம், கதிர்காமநாதன், சந்திரன், வேல்முருகு, இராசமூர்த்தி போன்றவர்களினதும், நண்பர் சேந்தனினதும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருந்தன. அதேபோல ஏனைய வதை முகாம் கைதிகளினதும் விசாரணைகளும் புலிகளின் பாணியில் (சித்திரவதைகளுடன்) நடந்த வண்ணமே இருந்தன. இதற்கிடையில் ஒரு பரபரப்பான சம்பவம் நிகழ்ந்தது. ஒர் இரவு இரண்டு இளைஞர்களை புலிகள் எமது வதை முகாமுக்குள் கொண்டு வந்து விட்டனர். வழமைபோல உடனடியாக அந்த இளைஞர்களுடன் உள்ளே இருந்த யாரும் பேச்சுக் கொடுக்கவில்லை. பின்னர் படிப்படியாக எமது ‘புலனாய்வுப் பிரிவு’ அந்த இளைஞர்களிடம் தொடர்பை ஏற்படுத்தி, என்ன காரணத்துக்காக அவர்கள் இங்கே கொண்டு வரப்பட்டுள்ளார்கள் என்பதை அறிய முயற்சித்தது. (மேலும்) 20.05.13
___________________________________________________________________________________________________________
முடிவுக்கு வந்தது இலங்கை பயணிகளின் தமிழக சுற்றுலா
"அச்சுறுத்தும்' அரசியல் பிரச்னைகளால், தமிழகத்துக்கு அன்னிய செலாவணியை ஈட்டி தரும், இலங்கை சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, வெகுவாக குறைந்து விட்டது. இதை ஈடு செய்ய வேண்டிய, "பொறுப்பு'உடைய மத்திய, மாநில அரசுகள் வெறுமனே கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலை நீடிக்கிறது.
இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து, திருச்சி விமான நிலையம் வந்து, திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், சமயபுரம், தஞ்சை பெரிய கோவில், யூனியன் பிரதேசமான காரைக்காலில் உள்ள திருநள்ளாறு உள்ளிட்ட நவக்கிரக் கோவில்கள், ராமேஸ்வரம், மதுரை கோவில்களில் தரிசனம் செய்வது இலங்கை தமிழர்களின் வழக்கம். இலங்கையை சேர்ந்த சிங்களர்கள், தஞ்சை பூண்டி மாதா கோவில், நாகை வேளாங்கண்ணி தேவாலயங்களுக்கு செல்வதுடன், தஞ்சை பெரிய கோவில் மற்றும் ஒன்பது நவக்கிரக் கோவில்கள், ராமேஸ்வரம் கோவிலுக்கு ஆண்டுதோறும் சுற்றுலாவாக வருகின்றனர்.இலங்கையில் உள்ள முஸ்லிம்களும் தமிழக சுற்றுலா பயணம் மேற்கொள்வது வழக்கம். கடந்தாண்டு வரை, ஒரு நாளைக்கு, 50 பேர் என்ற எண்ணிக்கையில் திருச்சி விமான நிலையத்துக்கு சிங்களர் வருவது உண்டு. இன்று, ஒருவர் கூட வருவதில்லை. "தமிழகத்தில் தாங்கள் தாக்கப்படலாம்' என்ற அச்சத்தில், இலங்கை தமிழர்களை தவிர, மற்றவர்கள் அச்சப்படுவதே, எண்ணிக்கை அறவே குறைவதற்கு காரணம். இலங்கை தமிழர்கள் கூட, தங்களது அடையாளங்களை மறைத்துக் கொண்டே, தமிழகத்துக்கு வரவேண்டிய அவல நிலை நீடிக்கிறது. . (மேலும்) 20.05.13
___________________________________________________________________________________________________________
தீவிரவாதத்தை தூண்டும் சீமானை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்: நாராயணசாமி
புதுவையில் ராஜிவ் நினைவு ஜோதி யாத்திரை வழியணுப்பு விழாவில் மத்திய மந்திரி நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- புதுவை மக்கள் காங்கிரஸ் கட்சி மீதும், ராஜீவ்காந்தி மீது மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள். ராஜிவ் காந்தி 5 ஆண்டுகள் பிரதமராக பதவியில் இருந்த போது இந்தியாவை வல்லசராக்க அரும்பாடுபட்டார். அவருடைய காலத்தில் புதிய கல்வி கொள்கை, தொழில் கொள்கை, அறிவியல் கொள்கை ஆகியவை கொண்டு வரப்பட்டது. ராஜிவ்காந்தி தீவிரவாதத்தை ஒடுக்குவதில் தீர்மானமாக இருந்தார். அவருடைய காலத்தில் மிசோரம், அசாம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தீவிரவாதம் ஒடுக்கப்பட்டது. இலங்கையில் தீவிரவாதத்தை ஒடுக்க அமைதிப்படையை அனுப்பி வைத்தார். போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கப்பலில் உணவு பொருட்களை அனுப்பி வைத்தார். அதனை பெற இலங்கை ராணுவம் முன்வராதபோது விமானம் மூலம் உணவு பொருட்களை தமிழர் பகுதியில் போடச் செய்தார். அவரை விடுதலை புலிகள் இயக்கத்தால் இழந்தோம். தீவிரவாதத்தை மறைமுகமாக ஆதரிக்கக் கூடிய ஒரு கூட்டம் தமிழகத்திலும், புதுவையிலும் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட திரைப்பட இயக்குனர் சீமான் கடலூரில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டார். விடுதலை புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கம். அதன் தலைவரின் புகைப் படத்தை பிரசுரித்து கூட்டம் நடத்த அவர் அனுமதி கேட்டார். ஆனால் அந்த கூட்டத்துக்கு தமிழக அரசு தடைவிதித்தது. (மேலும்) 20.05.13
___________________________________________________________________________________________________________
தமிழ் அமைச்சரை ஜனாதிபதி இழக்க விரும்பவில்லை: டக்ளஸ்
' ஜனாதிபதி என்னை மாகாணசபை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என கூறினார். அவர், அமைச்சரவையிலுள்ள ஒரு தமிழ் அமைச்சரை இழக்க விரும்பவில்லை. ஆனாலும், நான் போட்டியிட வேண்டும் என நினைக்கிறேன்' என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 'ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடாமல் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வீணை சின்னத்தில் போட்டியிட்டால் கூடுதல் வாக்குகளை பெற முடியும் என்ற கருத்து பரவலாக உள்ளது' என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் டெய்லிமிரருக்கு அளித்த செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'வடமாகாண சபையை அமைக்கும்போது மாகாணசபைக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை சிறிது காலம் நிறுத்தி வைக்க வேண்டும். இந்த அதிகாரங்களை கையளிப்பது தொடர்பாக தெற்கில் கடுமையான கருத்துக்கள் வெயிடப்பட்டு வருவதால் தமிழ், சிங்கள மக்களிடையே புரிந்துணர்வு ஏற்படும்வரையில் இதனை நிறுத்தி வைக்கவேண்டும். வன்முறை, அபிவிருத்தியின்மை, அரசியல் உரிமை மறுப்பு என்பன தமிழ் சமுகத்தை நீண்டகாலமாக வாட்டியெடுத்த பிரச்சினைகளாகும். இப்போது, பயங்கரவாதம் பூரணமாக ஒழிக்கப்பட்டுள்ளது. வடக்கில் துரித வேகத்தில் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தற்போது அரசியல் பிரச்சினை மட்டுமே உள்ளது. நான் சூரியனையோ, சந்திரனையோ கேட்வில்லை. ஒரு தொடக்கமாக, தறபோதைய அரசியலமைப்பை செயற்படுத்துமாறுதான் கேட்கிறேன்' என்றார்.
___________________________________________________________________________________________________________
தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு எந்தவொரு அரசியல் கட்சியிடமும் கோரவில்லை: தயா மாஸ்டர்
தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எந்தவொரு கட்சியையும் அணுகவில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு எந்தவொரு அரசியல் கட்சியிடமும் கோரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிட தயா மாஸ்டர் சந்தர்ப்பம் கோரியதாகவும் அதனை நிராகரித்ததாகவும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார். எனினும், இவ்வாறான எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியினர் வடக்கிற்கு விஜயம் செய்திருந்த போது பேச்சுவார்த்தை நடாத்த தம்மை அழைத்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரையோ அல்லது வேறும் உறுப்பினர்களையோ தாம் சந்திக்கவில்லை என அவா சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, தயா மாஸ்டர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
___________________________________________________________________________________________________________
கோக கோலா ரகசியம் ஏலம்
வாஷிங்டன்;உலக பிரசித்திபெற்ற, "கோககோலா'வின் தயாரிப்பு ரகசியம் ஏலம் விடப்பட உள்ளது. பெரும்பாலானவர்களால், விரும்பி அருந்தும் குளிர்பானமான, கோககோலா, 19ம் நூற்றாண்டில், மருந்தாக பதிவு செய்யப்பட்டு, தயாரிக்கப்பட்டது. இதில் பயன்படுத்தப்பட்ட, "பார்முலா' மிகவும் ரகசியமானது. ஜார்ஜியா நாட்டை சேர்ந்த கிளிப் க்லூஜ் என்பவர், 15 ஆண்டுகளுக்கு முன், பழைய பொருட்கள் கடையில், ஒரு பெட்டி வாங்கிய போது, அதில் சில ஆவணங்கள் இருந்ததாகவும், அதில், கோககோலாவின் தயாரிப்பு ரகசியம் இருந்ததாகவும், அதை தற்போது, 80 கோடி ரூபாய்க்கு ஏலம் விட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கோககோலாவின், இந்த ரகசிய பார்முலா, அட்லாண்டாவில் உள்ள, கோககோலா மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டது, என, ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
___________________________________________________________________________________________________________
இலங்கை சிறையிலிருந்து காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இன்று விடுதலை
நாம் தமிழர் கட்சியினர் கடலூரில் பொதுக்கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி மறுத்தது நியாயமானது, பாராட்டுக்குரியது.
இலங்கை சிறையிலிருக்கும் காரைக்கால் மீனவர்கள் 26 பேர் திங்கள்கிழமை விடுதலை செய்யப்படுவதாக மத்திய இணையமைச்சர் வே.நாராயணசாமி தெரிவித்தார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் இருக்கும் காரைக்கால் மீனவர்கள் 26 பேரையும் மீட்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்தது. அவர்களை மீட்குமாறு பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை தமிழ் அமைச்சர்கள், தூதரக அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். இந்நிலையில், இலங்கை கடற்படை கைது செய்த காரைக்கால் மீனவர்கள் 26 பேரும், திங்கள்கிழமை இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விடுவிக்கப்பட இருக்கின்றனர். திங்கள்கிழமை மாலையே காரைக்கால் திரும்புவார்கள். நாம் தமிழர் கட்சியினர் கடலூரில் பொதுக்கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி மறுத்தது நியாயமானது, பாராட்டுக்குரியது. காரணம், விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கம். அதன் தலைவரின் உருவப்படத்தை பேனர்களில் வெளியிட்டு, கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். இதற்கே சீமானைக் கைது செய்திருக்க வேண்டும். இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பிரிவினையைத் தூண்டும் வகையிலும் அவர் புதுச்சேரியில் ஏற்கெனவே பல முறை பேசியிருக்கிறார். சீமானைப் பொறுத்தவரை அவர் சிறை செல்வது சர்வ சாதாரணம். எனவே, தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை சரியானது.
___________________________________________________________________________________________________________
காணிஉரிமங்கள் இல்லாததால் மக்கள் நிரந்நதர வீடுகளை பெறமுடியாதுள்ளனர்-ஈபிடிபி பாராளுமன்றஉறுப்பினர் மு.சந்திரகுமார்;
கண்டாவளைப்பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் வாழகின்ற மக்களில் பெருமளவான வர்கள் நிரந்தரவீட்டுத்திட்டத்திற்குள் உள்வாங்கப்படாத நிலைகாணப்படுகின்றது இதற்கு முக்கியகாரணமாக அமைவது அவர்கள் எதிர்கொண்டுவரும் காணி உரிமம் தொடர்பான பிரச்சினையே என பராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றபக்குழுக்களின் பிரதித்தலைவருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார் கடந்த 16.ஆம் திகதி புன்னைநீராவி நாதன் குடியிருப்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது மக்களுடன் கலந்தரையாடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் அங்குஅவர் மேலும் குறிப்பிடுகயில்.யுத்த பாதிப்பை எதிர்கொண்ட அனைத்து மக்களின் வாழிவியலும் மேம்படுத்தப்படவேண்டும் என்பதே எமது இலக்கு அதற்கமைவாகவே நடைபெற்றுவரும் அபிவிருத்திட்டங்களின் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் மக்களின் அடிப்படைத்தேவைகளில் ஒன்றாக அமைந்திருக்கும் வீட்டுத்தேவையை பூர்த்திசெய்வதும் முக்கிய செயற்பாடாகும் ஆனால் கண்டாவளைப்பிரதேசத்தில் உள்ள பல கிராமங்களைச்சேர்ந்த மக்கள் நிரந்தரவீட்டுத்திட்டத்தைபெறமுடியாதுள்ளனர் இதற்கு அவர்கள் எதிர்கொண்டுவரும் காணிஉரிமம் தொடர்பான பிரச்சினைகளே காரணமாக அமைந்துள்ளன. (மேலும்) 20.05.13
___________________________________________________________________________________________________________
தாண்டிக்குளத்தில் இறந்த மூன்று பிள்ளைகளின் தந்தை மீது தாக்குதல்
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் கடந்த 17 ஆம் திகதி மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணொருவரால் கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை மீது இளைஞர் குழுவொன்று நேற்று (18.5) தாக்குதலை நடத்தியுள்ளது. மேற்படி பிள்ளைகளின்; தாயார் வவுனியா பொது வைத்தியசாலையின் மனநல பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் மூன்று பிள்ளைகளின் இறுத்திச்சடங்கு தாண்டிக்குளத்தில் உள்ள அவர்களது வீட்டில் இடம்பெற்றது. இந் நிலையில் இப் பிள்ளைகள் இறப்பதற்கு வறுமையும் தந்தை வேறு ஓர் பெண்ணை திருமணம் செய்து சென்றமையினால் இக் குடும்பத்தினரை ஆதரிக்காமையுமே காரணமெனவும் இக் கிராம மக்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் நேற்றைய தினம் இந்த மூன்று பிள்ளைகளின் இறுதிச்சடங்குகள் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயாத்தில் இடம்பெற்றதன் பின்னர் இளைஞர் குழுவொன்று பிள்ளைகளின் தந்தை மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன்போது அவர்கள் ஆக்ரோசமாக காணப்பட்டதுடன் பிள்ளைகளின் இறப்புக்கு தந்தையான விஜயகுமாரவே காரணமெனவும் தெரிவித்திருந்தனர்.
___________________________________________________________________________________________________________
கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை
கலக்கமான இலங்கைத் தமிழரின் அரசியல் எதிர்காலம்
- வரதர் பெருமாள்
பகுதி – 11
த.தே.கூ எந்த நேரத்திலும் சிதறிப் போகலாம் அல்லது சிதறடிக்கப்படலாம் என்ற வகையிலேயே அதனுள்ளே நெருக்கடிகள் வேகமாகப் புகைந்து கொண்டிருப்பது வெளிப்படை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என திரு சம்பந்தர் அவர்கள் கூறுவது “ எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்பது போல் உள்ளது. இப்போது எப்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெறுமனே ஒரு பெயரளவு அமைப்பாக தமிழரசுக் கட்சியின் சட்ட அங்கீகாரத்தில் தொங்கியதாகவும் வீட்டுச் சின்னத்தைத் தவிர வேறொன்றுமில்லை எனவும் உள்ளதோ அவ்வாறே இருக்க வேண்டுமென தமிழரசுக்கட்சிக்காரர்கள் பிடிவாதமாகவே உள்ளனர். தமிழரசுக் கட்சிக்காரர்கள் தமது கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளை தமக்கு சமத்துவமான பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இல்லை. அதே வேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தேர்தற் சட்டரீதியாகப் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்று நிற்பவர்கள்; தமிழரசுக் கட்சிக்காரர்களும் ஏற்றுக் கொள்ளும் விதமாக ஒரு ஸ்தாபன அமைப்புத் திட்டத்தைக் கொண்டவர்களாக இல்லை. ஓ கடவுளாரே! உம்மை நாம் பயத்தாலேயே வணங்குகிறோம் - அவ்வாறே இங்கும் த.தே.கூவின் ஒற்றுமையை கொள்கைகளலல, பயமே காப்பாற்றுகிறது த.தே.கூத் தலைவர்கள் தமது கூட்டை இன்னமும் கலைந்து போய்விடாமல் வைத்திருப்பதற்கு இருப்பதற்கு சில வலுவான காரணிகள் உள்ளன: (மேலும்) 19.05.13
___________________________________________________________________________________________________________
வடக்கு கிழக்கு மக்களின் இதயங்களை நான் நன்கறிவேன். ஒருத்தேர்தலில் பொன்னம்பலத்தை தோல்வியடையச்செய்து கொப்பேகடுவையை வெற்றிப்பெறச்செய்தனர். ஜனாதிபதி
புலம்பெயர் சமூகம் வன்னி மக்களுக்கு உதவவில்லை':
ஒரு காலத்தில் காலி முகத்திடல் மூடப்பட்டிருந்தது. மத்தியவங்கி கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்டது. அதற்கு அருகிலிருக்கின்ற ஜனாதிபதி மாளிகைக்கும் குண்டு லொறி அனுப்பப்பட்டது. அவற்று அருகிலிருக்கின்ற ஹோட்டல்களின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அனுராதபுரம் மகாபோதி விஹாரையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 1990 களில் காத்தான்குடியில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மாத்தறையில் நடத்தப்பட்ட முஸ்லிம் பேரணியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த அமைச்சர் இன்னும் சுகமடையாத நிலையில் இருகின்றார். நாட்டில் பல இடங்கள் மற்றும் சந்திகள் புலிகளினால் தாக்குல்கள் நடத்தப்பட்ட சந்திகளாவும் இடங்களாகவுமே அடையாளம் காணப்பட்டன. அவ்வீதியாக இன்றேல் அந்த இடங்களை கடந்து செல்கையில் இந்த இடத்தில் தான் ஜனாதிபதி பிரேமதஸா கொல்லப்பட்டார். இந்த சந்தியில் தான் பாரமி குலத்துங்க கொல்லப்பட்டார் என்று அடையாளப்படுத்துகின்றனர். என்னிடம் சில இடங்களை அடையாளப்படுத்தினர். நாட்டில் எங்கும் எவ்விடத்திற்கும் சென்று எதனையும் செய்யும் வகையில் புலிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட காலமொன்றும் இதயத்தில் மரணபயமிருந்த நாடாகவும் இந்நாடு இருந்தது. மக்களை மீட்டெடுப்பதற்கு யாருமே முன்வரவில்லை. மக்கள் தாக்கப்பட்டபோது 5ஃ6 அதிகாரத்துடன் இருந்த ஜனாதிபதி மக்களே தங்களை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்று கூறிவிட்டார். புலிகளுக்கு ஆயுதங்களை கொடுத்துதவிய ஜனாதிபதி புலிகளினாலேயே கொல்லப்பட்டார். புலிகளின் குண்டுத்துளைக்காத ஆடையை வழங்கி சமாதானத்திற்கு அழைத்துவந்த இந்திய பிரதமரையும் புலிகள் இந்தியாவில்வைத்தே கொலைச்செய்தனர். (மேலும்) 19.05.13
___________________________________________________________________________________________________________
செல்வராசா கஜேந்திரன் உட்பட 10 பேர் கைது
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அந்த கட்சியை சேர்ந்த 10 உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் பொலிஸாரினாலேயே இவர்கள் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவுதின நிகழ்வு ஒன்றை நடத்தியபோதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. கஜேந்திரனுடன் அவர்களது கட்சியின் தேசிய அமைப்பாளரான மணிவண்ணன் என்னும் சட்டத்தரணியும் வேறு சுமார் 10 பேரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
___________________________________________________________________________________________________________
இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறந்தவர்களின் நினைவாக லண்டனில் நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.
பி.பி.சி
பிரிட்டிஷ் தமிழர் பேரவையினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லண்டனின் மையப்பகுதியில் ''மார்பிள் ஆர்ச்'' பகுதியில் ஆரம்பித்த இந்த ஊர்வலம் ''பிக்காடிலி சர்க்கஸ்'' வரை தொடர்ந்தது. முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்ற தொனிப்பொருளை மையமாகக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டாலும், இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை, அந்த நாட்டை பிரிட்டன் பகிஸ்கரிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினார்கள். இலங்கையில் கொல்லப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்காத நிலையில், அங்கு நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை பிரிட்டிஷ் பிரதமரும், பக்கிங்ஹாம் அரண்மனையும் புறக்கணிக்க வேண்டும் என்று பிரித்தானிய தமிழர் பேரவையின் ஊடகத் தொடர்பாளரான சாம் கிருஷ்ணா தமிழோசைக்கு தெரிவித்தார்.அந்த மாநாட்டில் கலந்துகொள்வது என்று பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகம் ஏற்கனவே அறிவித்திருந்தாலும், அவருக்கு பிரித்தானிய பிரஜைகள் என்ற வகையில் தாம் தொடர்ந்தும் அழுத்தத்தை கொடுப்போம் என்று கூறிய சாம் கிருஷ்ணா, பிரதமரின் அந்த முடிவு சர்ச்சைக்குரிய முடிவு என்று துணைப்பிரதமர் கூறியிருப்பதை வரவேற்றுள்ளார். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மனித உரிமைகளை மீறிய இலங்கை அரசாங்க ஆதரவுடனான பேரினவாதச் சக்திகள், தற்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்படத் தொடங்கியிருப்பதாகவும் கூறிய சாம் கிருஷ்ணா, தாம் அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறினார்.
___________________________________________________________________________________________________________
நீதிமன்ற தீர்ப்பு கிடைத்ததும் முல்லைத்தீவில் எஞ்சிய பகுதிகளுக்கு தேர்தல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றளவும் நடத்தப்படாதிருக்கும் இரண்டு உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தலை அனுமதி கிடைத்ததும் உடனடியாக நடாத்த முடியும் என பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அவற்றுக்கான தேர்தல்கள் நடத்தப்படவில்லை. நீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பெற்றவுடன் உடனடியாக அங்கு தேர்தல்களை நடத்த முடியும். தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம்- வடமாகாணசபைத் தேர்தலை நடத்துவது பற்றி ஜனாதிபதியே தீர்மானிப்பார் என்றும் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.
___________________________________________________________________________________________________________
யாழ். பல்கலையில் பலத்த பாதுகாப்பு
யாழ். பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸாரே இவ்வாறு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி நிகழ்வுகள் நடத்தக்கூடும் என்ற சந்தேகத்திலேயே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதேவேளை யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றுக் காலை 10.30 மணிமுதல் 11.30 மணிவரையில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இவ்வஞ்சலி நிகழ்வில், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தீபமேற்றி உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். எனினும், இவ்வஞ்சலி நிகழ்வில், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் போராசிரியர்கள் பலர் சமூகமளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
___________________________________________________________________________________________________________
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி விசமிகளால் இடித்தழிப்பு
வவுனியா தமனக்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இனந்தெரியாதவர்களால் இடித்தழிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்தோரின் நினைவாக ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு கடந்த 2010 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வவுனியாவில் அமைக்கப்பட்டது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் பேரழிவின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று நினைவேந்தல் நிகழ்வுகள் காலை 10 மணியளவில் நடைபெற ஏற்பாடாகியிருந்த நிலையிலேயே நேற்று இரவு விசமிகளால் தூபி இடித்தழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
___________________________________________________________________________________________________________
சுதந்திரமானதும் நீதியானதுமாக நடத்தப்படும் வடமாகாணசபை தேர்தல்கள் காரணமாக, ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் ஸ்ரீலங்கா பற்றிய நிலைப்பாட்டை இந்தியா மற்றும் ஏனைய நாடுகள் மீளாய்வு செய்யக்கூடும்
- என்.சத்தியமூர்த்தி
அரசாங்கத்துடன் ரி.என்.ஏ தேடும் பேச்சு வார்த்தைகள் கூட கொடுத்து - வாங்கும் கொள்கைப்படி, அதாவது விட்டுக் கொடுப்பு மூலம் அடையவேண்டிய ஒன்று - எல்லாவற்றுக்கும் மேலாக அந்த விடயத்தில் இப்போது இரு சாராருமே தங்கள் கடந்தகால நிலைப்பாட்டிலிருந்து சிறிதும் பின்வாங்க மறுத்து வருகிறார்கள்.
ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் ஸ்ரீலங்காவுக்கு வாக்களிக்கும் பிரச்சினை தொடர்பாக மன்மோகன் சிங் அரசாங்கத்துக்கு வழங்கிவந்த ஆதரவை திமுக விலக்கி ஒரு மாதத்துக்கு மேலான பின்பும், ஸ்ரீலங்கா பற்றிய இந்தியாவின் கொள்கைகளில் தமிழ்நாட்டு காரணி செல்வாக்கு செலுத்துவது பற்றி யாரும் பேசுவதில்லை. அப்படியிருந்தாலும் கூட, ஒரு தசாப்தத்துக்கும் மேலான காலத்துக்குப் பிறகு மத்தியில் உள்ள ஒரு அரசாங்கம் தமிழ் நாட்டிலுள்ள எந்த ஒரு திராவிடக் கட்சிகளிதும் பாராளுமன்ற ஆதரவின்றி இப்போது உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது.ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட ஆரம்ப வரைவுத் தீhமானத்துக்கும் மற்றும் இறுதித் தீர்மானத்துக்கும் வேறுபாடுகள் இருந்ததுக்கு புது தில்லியின் செல்வாக்குத்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. மற்றும் தந்திரமான முறையில் அமெரிக்காவுக்கு ஆதரவு வழங்காமல் இந்தியாவினால் அந்த வரைவு தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தியிருக்க முடியாது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நடுநிலை வகிப்பதுகூட அதற்கு உதவியிருக்காது. கணிசமான விடயங்களில் இந்தியாவின் வாக்கானது, மனித உரிமைகள் பிரச்சினைகளில் ஸ்ரீலங்காவினை பொறுப்புக்கூறலை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்காக அல்ல ஆனால் ஒரு அரசியல் தீhவினை ஏற்படுத்துவதற்காகவே வழங்கப்பட்டது என்று கருதப்படுகிறது. (மேலும்) 18.05.13
___________________________________________________________________________________________________________
தமிழர் பகுதி மாகாண கவுன்சில் அதிகாரங்களை பறிக்கக் கூடாது இந்திய வெளியுறவு துறை மந்திரி சல்மான் குர்ஷித்,
இலங்கையில் தமிழர் பகுதி மாகாண கவுன்சிங் அதிகாரங்களை பறிக்கக்கூடாது என்று, இந்திய வெளியுறவு துறை மந்திரி சல்மான் குர்ஷித், இலங்கை மந்திரியிடம் வலியுறுத்தினார். இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் வடக்கு மாகாண கவுன்சிலுக்கு வருகிற செப்டம்பர் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. போருக்குப்பின்னர் தமிழர்களுடன் சமரச நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், தமிழர் பகுதியில் நடைபெற இருக்கும் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு ராஜபக்சே தலைமையிலான ஆளுங்கட்சிக்கு வேட்பாளர்கள் கிடைக்கவில்லை. இதனால் இலங்கையில் உள்ள தமிழ்ப் பத்திரிகைகளில் வேட்பாளர்கள் தேவை என்று விளம்பரம் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இலங்கையில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சிகளில் ஒன்றான ஜே.எச்.யு. என்று அழைக்கப்படும் ஹெரிடேஜ் கட்சி, இந்த தேர்தலை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன் மாகாண கவுன்சில்களை கலைப்பதற்கு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளது. (மேலும்) 18.05.13
___________________________________________________________________________________________________________
யுத்த வெற்றி விழா : ஜனாதிபதி தலைமையில் காலிமுகத்திடலில் இன்று பிரமாண்டமான வைபவம்
யுத்த வெற்றியின் நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெற்றி விழா அணிவகுப்பு மற்றும் தேசிய படை வீரர்கள் நினைவு தின நிகழ்வு வைபவங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று கொழும்பில் கோலாகலமாக நடைபெறுகின்றன. யுத்த வெற்றி அணிவகுப்பின் பிரதான வைபவம் இன்று காலை 8.00 மணிக்கு கொழும்பு காலி முகத்திடலிலும், தேசிய படை வீரர்கள் நினைவு தின பிரதான வைபவம் இன்று மாலை 4.00 மணிக்கு பாராளுமன்ற முன்றலில் அமைக்கப்பட்டுள்ள படை வீரர் நினைவு தூபிக்கு அருகிலும் இடம்பெறவுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதமர் டி.எம். ஜயரட்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம, பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன், சிவில் பாதுகாப்புப் படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இதுதவிர அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், தூதரக பாதுகாப்பு அதிகாரிகள், மதத்தலைவர்கள், அரச மற்றும் பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். காலி முகத்திடலில் நடைபெறவுள்ள வெற்றி அணிவகுப்பு வைபவத்தில் இம்முறையும் இராணுவம், கடற்படை, விமானப் படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள் என்ற அடிப்படையில் 13645 வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இவற்றில் 945 அதிகாரிகளும் 12700 வீரர்களும் அடங்குவர்.
___________________________________________________________________________________________________________
3 பிள்ளைகளை கிணற்றில் வீசி கொலை செய்த தாய் தற்கொலைக்கு முயற்சி
மனநலம் பாதிப்படைந்ததாகக் கூறப்படும் தாயொருவரால் அவரது மூன்று பெண் பிள்ளைகளும் கிணற்றில் வீசப்பட்டு கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவமொன்று வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது குழந்தைகளை கிணற்றில் வீசிய மேற்படி தாய், பின்னர் தானும் கிணற்றில் குதித்துள்ள போதும் அவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாண்டிக்குளம் பாடசாலை வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து அழுகுரல் கேட்பதை அடுத்து அயலவர்கள் இன்று காலை ஓடிச்சென்று அவ்வீட்டின் கிணற்றை பார்த்தபோது தாயொருவர் மூன்று பிள்ளைகளை கிணற்றில் போட்டுவிட்டு தானும் கிணற்றில் வீழ்ந்து கிடந்ததை அவதானித்துள்ளனர். இதனையடுத்து அயலவர்கள் உடனடியாக தாயாரை மீட்டெடுத்துள்ளனர். எனினும் வி. லதுர்சிகா (வயது 6) சன்சிகா (2 வயது) மற்றும் நிதர்சிகா 1 வயது) ஆகிய மூன்று பிள்ளைகளும் உயிரிழந்துள்ளதை அவதானித்ததை அடுத்து வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (மேலும்) 18.05.13
___________________________________________________________________________________________________________
விமான விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட பெண் ; இலங்கையில் உயிரோடு இருப்பது கண்டு பிடிப்பு
கொழும்பு: இலங்கை விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டவர், உயிரோடு இருப்பது தெரியவந்துள்ளது. இலங்கையில், 98ம் ஆண்டு, செப்டம்பர், 29ல், காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு புறப்பட்ட பயணிகள் விமானம், விடுதலை புலிகளின் ஏவுகணை தாக்குதலில் வீழ்த்தப்பட்டது. இந்த விபத்தில், ரஷ்யர்கள் நான்கு பேர், விமான ஊழியர்கள் ஏழு பேர், மற்றும் 48 பயணிகள் பலியாயினர். இந்த விபத்தில், குணமணி பாலசுப்பிரமணியம் என்ற பெண்ணும் இறந்ததாக கருதப்பட்டது. ஆனால், இந்த பெண் இறக்கவில்லை என்பது, தற்போது தெரிய வந்துள்ளது. ஏனெனில், அந்த பெண், அந்த விமானத்தில் பயணிக்கவே இல்லை. இது குறித்து குணமணி கூறியதாவது: யாழ்ப்பாணம், விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது, 95ம் ஆண்டு, அடையாள அட்டைக்காக விண்ணப்பித்திருந்தேன். பிறகு, வவுனியாவுக்கு வந்து விட்டேன். அந்த காலகட்டத்தில், யாழ்ப்பாணத்துக்கும், வவுனியாவுக்கும் இடையே நேரடி சாலை போக்குவரத்து வசதி இல்லை. எனவே, யாழ்ப்பாணத்தில் இருந்த என் சகோதரி, என்னுடைய அடையாள அட்டையை, நண்பர் மூலம் கொடுத்தனுப்பினார். அந்த நண்பர் பயணம் செய்த விமானம் தான், தாக்குதலுக்குள்ளாகி, ரணதீவில் உள்ள கடலில் மூழ்கியது. சமீபத்தில், கடல் அடியில் இருந்த விபத்துக்குள்ளான விமானத்தை, ராணுவத்தினர் மீட்டு ஆராய்ந்த போது, என் அடையாள அட்டை கிடைத்துள்ளது. இவ்வாறு குணமணி கூறினார்.
___________________________________________________________________________________________________________
புலிகள் இயக்க உறுப்பினர்களை நினைவுக் கூர்ந்து பொது நிகழ்வுகளை நடத்துவதோ அனுஷ்டிப்பதோ தண்டனைக்குறிய குற்றமாகும்: இராணுவப் பேச்சாளர்
இறுதி யுத்தத்தில் இறந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை நினைவுக் கூர்ந்து பொது நிகழ்வுகளை நடத்துவதோ அனுஷ்டிப்பதோ தண்டனைக்குறிய குற்றமாகும். ஏனெனில் புலிகள் இயக்கம் இலங்கையில் தடைச் செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் ஆகும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். இது தொடர்பில் இராணுவப் பேச்சாளர் தொடர்ந்தும் கூறுகையில், இலங்கையில் மூன்று தசாப்தகால பயங்கரவாத யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்து நான்காண்டுகள் பூர்த்தியாகியுள்ளது. இந் நிலையில் பயங்கரவாதத்திற்கு எதிராக இராணுவம் பெற்றுக் கொண்ட வெற்றியை கொண்டாடும் முகமாக தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் விசேட இராணுவ வெற்றி விழாக்கள் நடைபெற உள்ளது. இதற்கு ஈடு செய்யும் வகையில் வடக்கில் சில பகுதிகளில் இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட புலி உறுப்பினர்களை அனுஷ்டிக்கும் நிழ்வுகள் நடத்தப்பட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குற்றச் செயலாகும். இலங்கை உட்பட அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளினால் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைச் செய்துள்ளனர். ஏனெனில், இவ் இயக்க பயங்கரவாத அமைப்பு என்றப்படியால். ஆகவே இவ்வாறானதொரு தடைச் செய்யப்பட்ட இயக்க உறுப்பினர்களை நினைவுக்கூர்ந்து நிகழ்வுகளை நடத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். அரசியல் நோக்கங்களுக்காகவே இவ்வாறான விஷம முயற்சிகளுக்கு பொது மக்களை குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகள் ஊக்குவித்து வருகின்றது எனக் கூறினார்.
___________________________________________________________________________________________________________
இந்திய மாணவி கற்பழித்து கொலை ஆஸ்திரேலிய வாலிபருக்கு 45 ஆண்டு ஜெயில் தண்டனை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரின் மேற்குப்பகுதியிலுள்ள கரோய்டான் என்ற இடத்தில் இந்திய வம்சாவளி குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மகளான கல்லூரி மாணவி தோஷா தாக்கர்(19) கடந்த 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் பக்கத்து வீட்டில் வசித்த வாலிபரால் கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பின்னர் கொலைகாரன் அவளுடைய பிணத்தை மூட்டையில் அடைத்து காரில் எடுத்துச் சென்று கால்வாயில் வீசி விட்டான். இந்த கொலை தொடர்பாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேனியல் ஸ்டானி(24) என்ற வாலிபரை கைது செய்தனர். இவன் மாணவி தோஷாவுடன் படித்தவன். இந்த கொலை வழக்கை நியூ சவுத் வேல்ஸ் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி டெரீக் பிரின்ஸ் விசாரித்து குற்றம்சாட்டப்பட்ட டேனியல் ஸ்டானிக்கு 45 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அது மட்டுமின்றி அவனை குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு பரோலில் வெளியே செல்ல அனுமதிக்கூடாது என்றும் உத்தாவிட்டார். எனவே அவன் 2041–ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் வெளியே வர முடியாது. சிறையிலேயே அவன் இருக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
___________________________________________________________________________________________________________
புலிகளின் மாவட்ட தலைவர் எனக்கூறி கப்பம் பெற்றவர் கைது
விடுதலைப்புலிகளின் யாழ். மாவட்ட தலைவர் எனக்கூறி சுமார் 12 இலட்சம் ரூபாவை கப்பமாக பெற்ற பிரதான நபரை கைதுசெய்துள்ளதாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ. டபிள்யு. எல். விக்கிரமராச்சி இன்று தெரிவித்தார். கிளிநொச்சி பரந்தன் சந்தி பகுதியில் கடந்த 3 ஆம் திகதி யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இருவர் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட இருவரும் திருநகர் மேற்கு கிளிநொச்சி மற்றும் குருக்கள் வீதி கோப்பாய் பகுதியைச் சேர்ந்தவர்களாவர். இருவரும் யாழ். பொலிஸ் நிலையத்தில் 3 மாத கால தடுத்து காவலில் வைக்கப்பட்டு, பொலிஸ் விசாரணை இடம்பெற்றுவருகின்றது. இந்த விசாரணையின் பின்னரே முகமாலைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை இன்று கைதுசெய்துளளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெயய்ப்பட்ட இவர் யாழ். மாவட்ட சுகாதார திணைக்களத்தில் சாரதியாக கடமையாற்றி வருகின்றார். முன்னர் கைதுசெய்யப்பட்ட இருவருடன் இணைந்து, வியாபார நிலையங்களில் கப்பம் பெறுவதற்கு முழு உதவிகளையும் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்தேகநபர் யாழ். சுகாதார திணைக்களத்தில் கடமையை முடித்துக்கொண்டு வெளியே வந்த வேளை, யாழ். போதனா வைத்தியசாலையின் முன்பாக வைத்து இன்று கைதுசெய்ததாகவும்;, கைதுசெய்யப்பட்டுள்ள இவரை யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.
___________________________________________________________________________________________________________
செட்டிக்குளத்தில் லொறி கவிழ்ந்து இராணுவ கொப்ரால் பலி 18 சிப்பாய்கள் படுகாயம்
மன்னார் - செட்டிக்குளம் வீதியில் செட்டிக்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் 30 மீற்றர் தொலைவில் இடம்பெற்ற லொறி விபத்தில் ஒரு இராணுவ கொப்ரால் உயிரிழந்ததோடு 18 இராணுவ சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (17ம் திகதி) காலை 7.30 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மருதமடு முகாமில் இருந்து புதுக்குளம் முகாமிற்கு இராணுவ சிப்பாய்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியில் கவிழ்ந்து இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த 19 பேரில் இராணுவ கொப்ரால் பலியானதோடு 16 சிப்பாய்கள் செட்டிக்குளம் வைத்தியசாலையிலும் 2 சிப்பாய்கள் வவுனியா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லொறியின் சாரதி ஹிக்கடுவை பகுதியைச் சேர்ந்த சிவிலியன் எனவும் இராணுவத்தினரால் வாடகைக்கு குறித்த லொறி பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
___________________________________________________________________________________________________________
விடுதிகளில் குற்றங்கள் நடைபெற்றால் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றே நபர்களை கைது செய்யமுடியும்: யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
எந்தவொரு 18 வயதுக்கும் மேற்பட்ட ஆணும் பெண்ணும் தாமாக விரும்பி விடுதிகளில் தங்கியிருந்தால் அவர்களைக் கைது செய்யமுடியாது. 18 வயதுக்கு உட்பட்டவர்களை மாத்திரமே எம்மால் கைது செய்யமுடியும் என யாழ். பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவிதார். யாழ்.பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதியொன்றினுள் ஒரு குற்றம் நடைபெறுகின்றது என்றால் அக்குற்றம் தொடர்பாகப் புலனாய்வுகள் மேற்கொண்டு அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்து கட்டளையைப் பெற்ற பின்பே நாம் விடுதியினுள் சென்று விசாரணைகளை மேற்கொள்ள முடியும். இது சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. நாம் சட்டத்திற்குப் புறம்பாக எதையும் செய்யமுடியாது. அப்படி சமூக நலன் கருதி நீதிமன்றத்தின் அனுமதியின்றி செயற்பட்டால் எமக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும். கடந்த திங்கட்கிழமை யாழ். நகரிலுள்ள விடுதியை யாழ்ப்பாண பிரதேச செயலர் சோதித்து அங்கு தங்கியிருந்த இளைஞனையும் யுவதியையும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளார். நாங்கள் செய்யவேண்டிய பணியை பிரதேச செயலர் செய்துள்ளமை சட்டத்திற்கு முரண்பாடான செயற்பாடாகும். எனவே அவர்கள் மீது இவ்விடயம் தொடர்பாக வழக்குத் தொடர உள்ளோம் என்றார்.
___________________________________________________________________________________________________________
ஈராக்கில் சன்னி முஸ்லிம்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்: 49 பேர் பலி
ஈராக்கில் சிறுபான்மை சன்னி முஸ்லிம்களுக்கும், பெரும்பான்மையாக உள்ள ஷியா முஸ்லிம்களுக்குமிடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. இரு தரப்பினரும் மத வழிபாட்டு தலங்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தி பொதுமக்களை பலிவாங்கி வருகின்றனர். இந்நிலையில் இதலைநகர் பாக்தாத் அருகே உள்ள பகுபா நகரில் சன்னி முஸ்லிம்களின் மசூதி அருகில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. மசூதியில் தொழுகை முடிந்து வெளியே வரும்போது ஒரு குண்டு வெடித்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஒரு இடத்தில் கூடி நின்றபோது, அங்கு இரண்டாவது குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் 41 பேர் கொல்லப்பட்டனர். 57 பேர் படுகாயம் அடைந்தனர். இதேபோல், தெற்கு பாக்தாத்தில் சன்னி முஸ்லிம் ஒருவரின் இறுதிச்சடங்கு நடந்த இடத்தின் அருகே குண்டுவெடித்தது. இதில் 8 பேர் இறந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நேற்று கிர்குக், பாக்தாத் ஆகிய இடங்களில் உள்ள ஷியா மசூதிகள் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் 22 பேர் கொல்லப்பட்டனர். சன்னி பிரிவு எம்.பி.யின் சகோதரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த தொடர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று பகுபா நகரில் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலையடுத்து இரு பிரிவினரிடையே உள்ள மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
___________________________________________________________________________________________________________
அமெரிக்க ராணுவத்தில் ராணுவத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு
அமெரிக்க ராணுவத்தில் பாலியல் தாக்குதல்கள் நடப்பது வெட்கக்கேடாகவும், அவமானமாகவும் இருப்பதாக அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க ராணுவத்தில் பாலியல் தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தன. இதையடுத்து, அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் சக் ஹேகல், முப்படைகளின் தளபதி மார்ட்டின் டெம்ப்சே ஆகியோருடன் அதிபர் ஒபாமா வியாழக்கிழமை முக்கிய விவாதம் நடத்தினார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ராணுவத்தில் பாலியல் தாக்குதல்கள் நடப்பது குற்றம் மட்டுமின்றி வெட்ககரமானதும், அவமானகரமானதும் ஆகும். இது ராணுவத்தின் திறனைக் குறைத்துள்ளது. எனவே, நாட்டின் பாதுகாப்புக்கும் இது ஆபத்தானதாகும். சமீப காலமாக ராணுவத்தைப் பாதித்து வரும் இந்தப் பிரச்னையைச் சமாளிக்க ராணுவத் தலைமை உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று நம்புகிறேன். இப்பிரச்னையைத் தீர்ப்பதற்கான முன்முயற்சிகளை எடுக்குமாறு பாதுகாப்புத் துறை அமைச்சரையும் முப்படைத் தளபதியையும் நான் கேட்டுக் கொண்டுள்ளேன். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டியுள்ளது. குற்றம் இழைத்தவர்கள் அதற்கான விளைவுகளைச் சந்தித்தே ஆக வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து புகார் அளிக்கும் சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும் என்றார் ஒபாமா. இதனிடையே, அமெரிக்க மேலவை எம்.பி.க்கள் சிலர், ராணுவத்தில் பாலியல் குற்றத்தில் ஈடுபடும் வீரர்களை விசாரிப்பதற்கு வகைசெய்யும் சட்ட மசோதாவை வியாழக்கிழமை கொண்டு வந்தனர்.
___________________________________________________________________________________________________________
ஸ்ரீலங்கா தமிழர்கள் தங்கள் தோல்வியை பற்றிய உணர்வு ஒரு தார்மீக மற்றும் உளவியல் ரீதியான தோல்வியாகவே உள்ளது
- ஆதிஷ் தாசீர
இது தமிழரின் தோல்வியில் சேர்க்கப்பட்ட ஒரு அவமானகரமான பகுதி. அவர்கள் வெறுமே போரில் மட்டும் தோற்கவில்லை. அவர்கள் பிறப்பித்த முக்கியமான இயக்கம், அதற்காக அவர்கள் வரி செலுத்தி, உடல் வலிமையுடைய ஆண்களையும் மற்றும் பெண்களையும் தியாகம் செய்து வளர்த்துவிட்ட இயக்கம் இறுதியில் மற்ற எல்லாவற்றையும் விட அவர்களுக்கு அதிக கெடுதலை செய்துவிட்டது.
த மிழ் மக்களின் சுய உணர்வு நம்பிக்கையின் பாதுகாவலர்களா புலிகள் நீண்ட காலமாக இருந்துள்ளார்கள். ஆனால் அந்த இயக்கம் ஆழமான குறைபாடுகள் உள்ள ஒரு இயக்கமாக இருந்தது. வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையின் கீழ் புலிகள் தற்கொலை படைகளை திறமையாக பயன்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்ந்தார்கள். இது வெறுமே ஒரு யுத்த முறையாக மட்டும் இருக்கவில்லை, ஆனால் அநேகமாக ஒரு அடையாளமாக, ஒரு சுய தண்டிப்பு உணர்வை விளக்குவதாகவும் இருந்தது. மற்றும் அதுதான் திரு. பிரபாகரன் தமிழ் மக்களுக்கு நடத்திய சுய தண்டிப்பும் கூட. அவர் சமாதானத்தை பற்றிய எண்ணங்கள் குறைவாக உள்ளதாக தோன்றும் நவீன கால கோரியோலானஸை போன்ற ஒரு மனிதர். அவர் தமிழர்களை முடிவில்லாத ஒரு போர்ப் பயணத்துக்கு அழைத்துச் சென்றவர், அதில் சமரசம் மற்றும் சலுகைகள் எப்போதுமே போதுமானதாக இருந்ததில்லை மற்றும் அதில் மிதவாத தன்மைகள் அனைத்தும் காட்டிக்கொடுப்பாகவே பார்க்கப்பட்டன.நான் வடமாகாணத்தின் தலைநகரமான யாழ்ப்பாணத்தை அடைந்த உடன், ஒரு மாலைவேளையில் 1990களில் உடைந்த பனைமரம் என்கிற புத்தகத்தை எழுதிய கல்வி உலகத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் சகோதரி வீட்டில் இரவு உணவு அருந்தினேன். (மேலும்) 17.05.13
___________________________________________________________________________________________________________
பயணியின் பார்வையில் 16
எழுவைதீவு படகுத்துறையும் உருத்திரபுரம் மாமரமும்
- முருகபூபதி
கிளிநொச்சி மகா வித்தியாலயத்திலும் உருத்திரபுரம் மகா வித்தியாலயத்திலும் எமது கல்வி நிதியத்தின் உதவிபெறும் மாணவர்கள் இருந்தார்கள். யாழ்ப்பாணம் செல்லும் வழியில் முல்லைத்தீவு, கிளிநொச்சி நிகழ்ச்சிகளை முடித்துக்கொள்வது என்பது எனது பயணஒழுங்கு. 1960 களில் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியில் (தற்போது கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்) புலமைப்பரிசில் பெற்று படிக்கச்சென்ற காலத்தில் அப்பா ஒரு கம்பனியில் விநியோக பிரதிநிதியாக பணியாற்றினார். அந்தக்கம்பனிக்குச்சொந்தமான வேனில் என்னையும் எனது உறவினர்களின் மகன்மாரையும் குடும்ப நண்பர் ஒருவரின் மகனையும் அழைத்துச்செல்லுவார். ஒருவர் என்னுடன் ஸ்ரான்லி கல்லூரிக்குத்தெரிவானவர். அவரது அண்ணன் யாழ்.இந்துக்கல்லூரியில் பயின்றார். மற்றவர் பரமேஸ்வராவில் கற்றுக்கொண்டிருந்தவர். எனது வாழ்நாளில் நான் முதல் முதலில் பனைமரத்தைப்பார்த்தது அப்பொழுதுதான்.கிளிநொச்சியை கடந்து சென்றாலும் அங்கே இறங்கி ஊரைப் பார்த்ததில்லை. ஆனால் பின்னாட்களில் கிளிநொச்சி பல செய்திகளை எனக்கு சொல்லியிருக்கிறது. முக்கியமாக கிளிநொச்சி உருத்திரபுரம் கோகிலாம்பாள் சம்பந்தப்பட்ட அந்த பிரிசித்திபெற்ற கொலைவழக்கு, பொலிகண்டி செல்வி கமலம் இராமச்சந்திரன் கொலைவழக்கின் சந்தேக நபர் மறைந்திருந்த கிளிநொச்சி கரடிப்போக்கு, செல்லையா குமாரசூரியர் தேர்தலில் நின்று தோற்ற இடம். அதுபற்றி எனது இலக்கிய நண்பர் ஒருவர் கிளியனூர் வாக்கு என்ற சிறுகதை எழுதினார். ஆனால் அதனை எந்தவொரு இதழும் வெளியிடவில்லை. (மேலும்) 17.05.13
|