|
செட்டியார் கட்டையடம்பனில் வன்னி இராணுவத்தளபதி வீடொன்றை கையளித்தார்.
மன்னார் படைத்தரப்பினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டினை செட்டியார் கட்டை அடம்பன் பகுதியில் மீள்குடியேறிய குடும்பம் ஒன்றிற்கு வன்னி இராணுவத்தளபதி இன்று கையளித்திருக்கின்றார். கடந்த யுத்த சூழ்நிலையின் காரணமாக இடம்பெயர்ந்து மீண்டும் தமது சொந்த பகுதியில் மீள் குடியேறிய மேற்படி குடும்பத்தினரின் பொருளாதார நிலையினை கருத்தில் கொண்டே படைத்தரப்பினர் இவ்வீட்டினை அக்குடும்பத்திற்கு வழங்கியிருக்கின்றனர்.
மன்னார் பிராந்திய கட்டளை அதிகாரி பிரிக்கேடியர் மைத்திரி டயஸின் ஆலோசணைக்கு அமைவாக 215ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் விக்கும் லியனகே, சிவில் நிர்வாக அதிகாரி கேணல் நலிந்த மஹாவித்தாரண ஆகியோரின் வழிகாட்டலில் இராணுவத்தினரால் இவ்வீடு நிர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
சகல அடிப்படை வசதிகளுடனும் நிர்மானிக்கப்பட்டிருக்கும்; இவ்வீட்டை கையளிக்கும் நிகழ்வில் வன்னிப்பிராந்தியத்தின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கமால் குணரத்தின கலந்து கொண்ட வீட்டினை சம்பிரதாய பூர்வமாக கையளித்திருக்கின்றார். பயனாளிக்கு வீட்டினை கையளிக்கும் நிகழ்வில் மன்னார் பிராந்தியத்திற்குப் பொறுப்பான தள்ளாடி படைத்தலமையகத்தின் கட்டளை அதிகாரி பிரிக்கேடியர் மைத்திரி டயஸ், 215ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் விக்கும் லியனகே, சிவல் நிர்வாக பொறுப்பதிகாரி லெப்டினன் கேணல் நலிந்த மகாவித்தாரன உள்ளிட்ட இராணுவ அதிகாரிகளிலும் பிரதேசத்தின் பொது மக்களும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இது இவ்வாரிருக்க கையளிக்கப்பட்டிருக்கும் வீட்டின் கட்டுமாணத்திற்கு சுமார் ரூபா 5 இலட்சம் செலவாகியிருப்பதாகவும், இதற்கு பயன்படுத்தப்பட்ட சீமேந்து 215வது படைப்பிரிவின் அலுவலக கட்டட நிர்மாணப்பணிகளுக்கென ஒதுக்கப்பட்ட நிலையில் அவற்றை தாம் குறித்த வீட்டின் நிர்மாணத்திற்கு வழங்கியிருப்பதாகவும் 215 வது படைப்பிரிவு தெரிவித்திருக்கின்றது.
|