a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்              பூந்தளிர்       கண்ணோட்டம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.9                                                           09.04.2010

போலீஸ் நிலையமாக மாறியது விடுதலைப் புலிகளின் தளம்

கொழும்பு, மார்ச் 2:  இலங்கையில் வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தளங்களில் ஒன்றான பூனார்யன் தளம் தற்போது போலீஸ் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த போலீஸ் நிலையத்தை இலங்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மகிந்த பாலசூர்யா திங்கள்கிழமை திறந்து  வைத்தார்.

யாழ்ப்பாண உப்பு நீர் ஏரியின் தெற்கு கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க விடுதலைப் புலிகளுக்கு பூனார்யன் தளம் மிகவும் உதவியாக இருந்தது.

பூனார்யன் தளம் ஏ 32 நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலை 98 கி.மீ. நீளம் கொண்டது. இது 1988-ம் ஆண்டு மூடப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த சண்டையால் இந்த நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதி இந்த சாலை மூடப்பட்டது.

இந்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி தான் மீண்டும் பயணிகள் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது.

ஏ 32 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 5-வது காவல் நிலையம் பூனார்யன். இது நாட்டின் 423-வது காவல் நிலையம் ஆகும் என்று ஐ.ஜி. மகிந்த பாலசூர்யா தெரிவித்தார்.

இந்த பகுதியில் குடியேறி உள்ள 10 ஆயிரம் தமிழ் அகதிகளுக்கு உதவியாக இந்த காவல் நிலையம் செயல்படும் என்று அவர் கூறினார்.

அடுத்த 6 மாத காலத்தில் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட பகுதியில் 8 காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று அவர் கூறினார்.

இலங்கையின் வட பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இங்கு காவல், வரி வசூல், ஆட்சி நிர்வாகம் என எல்லாவற்றையும் விடுதலைப் புலிகளே செய்து, போட்டி அரசாங்கம் நடத்தி வந்தனர்.

ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற போரில் இலங்கை வடபகுதியில் உள்ள விடுதலைப் புலிகள் கூண்டோடு ஒழிக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு மீண்டும் ஆட்சி நிர்வாகத்தை ஏற்படுத்த இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

Home / Page-2 / Page-3 / Page-4 / Page-5

wanni

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி் தேர்தல் விஞ்ஞாபனம்

புலிகளின் யுத்தத்தால் சீரழிந்து போன வடபகுதி நூலகங்கள் அரசால் புனரமைக்கப்படுகின்றன!

வன்முறையாளர்களுக்கும ் பிரிவினையாளர்களுக்கும ் தருகிற ஆதரவுகளை இலங்கைத் தமிழர்கள் விலக்கிக் கொண்டால், அவர்களது பிரச்சினை தீரும்!

தமிழ்த் தேசியம் என்பது வாக்குகளுக்கான கோஷமல்ல

பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை முற்றுமுழுதாகத் தோற்கடிப்பதே, தமிழ் மக்களின் விமோசனத்துக்கான ஒரேயொரு வழியாகும்!