a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.8                                                           02.03.2010

தேர்தல் பெறுபேறுகளில் எவ்விதமான முறைகேடுகளும் இடம்பெறவில்லை: ஆணையாளர் தயானந்த நேற்று அறிவிப்பு

  • அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு
  • முடிவுகளை ரத்துச் செய்ய எவ்வித காரணமும் இல்லை
  • நீதிமன்று ஆணையிட்டால் மாத்திரமே வாக்குகள் மீள எண்ணப்படும்

ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகளில் எந்தவித மான முறைகேடுகளும் இடம் பெறவில்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் தயா னந்த திசாநாயக்க தெரிவித்தார்.

வாக்கெடுப்பு மற்றும் பெறுபேறுகளை வெளியிடல் போன்ற செயற்பாடுகளில் திருப்தி கொள்வதாகக் குறிப்பிட்ட ஆணையாளர், தேர்தல் மோசடி இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படும் அனைத்துவிதமான விமர்சனங்களையும் முற்றாக நிராகரிப்பதாகக் குறிப்பிட்டார்.

தேர்தல்கள் செயலகத்தில் நேற்றுக் காலை (03) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே ஆணையாளர் இதனைத் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகளில் தமக்கு எதுவிதமான சந்தேகமும் கிடையாதெனத் தெரிவித்த ஆணையாளர் திசாநாயக்க, அவ்வாறு சந்தேகம் உள்ள எவரும் பெறுபேறு வெளியான 21 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்திற்கு முறையிட முடியும். முறைகேடுகள் இடம்பெற்றதற்கான ஆதாரங்களை நிரூபிக்க வேண்டும்.

அதன்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங் கும். அந்தத் தீர்ப்புக்கு ஏற்ப தேர்தல் செயலகம் செயற்படும். வாக்குகளை எண்ணி முடித்துப் பெறுபேறுகளை அறிவித்ததன் பின்னர், வாக்குச் சீட்டுகளை (சீல்) முத்திரையிட்டுக் கட்டி வைத்துள்ளோம்.

ஆறு மாதங்களுக்கு இதனைத் தொட முடியாது. எனினும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் பட்சத்தில் மீள எண்ணுவதற்குத் தயார். நீதிமன்றத்தை முகங்கொடுப்பதற்குத் தயாராகவே உள்ளேன் என்றார்.

வடக்கில் வாக்களிப்பு குறையவில்லை

வடக்கில் வாக்களிப்பு வீதம் மிகக் குறைவு எனப் பலர் பிரசாரம் செய்வதில் உண்மை இல்லை. உண்மையில், இங்கு வாக்காளர் களாகப் பெயரைப் பதிவு செய்து கொண்டுள்ள பெருமளவானோர் ஐரோப் பிய நாடுகளில் வாழ்கிறார்கள்.

இடம் பெயர்ந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் வைத்திருக்க வேண்டுமென 1988இல் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் பிரகாரம்தான் புலம்பெயர்ந்த மக்களின் பெயர்களும் இன்னமும் பேணப்படுகின்றன.

இதற்குத் தேர்தல்கள் செயலகமோ, மாவட்ட அதிகாரிகளோ பொறுப்பில்லை. 2005ஆம் ஆண்டு 560,000 பேர் பதிவாகியிருந்ததுடன் 2008 இல் 720,000 பேர் பதிவாகியுள்ளனர். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பிரஜாவு ரிமை பெற்றவர்கள், மரணமடைந்தவர்கள் போன்றோரின் பெயர்கள் நீக்கப்பட்டதுடன் 18 வயதைப் பூர்த்தி செய்தவர்களின் பெயர்கள் புதிதாக சேர்க்கப்பட்டன.

இதற்கேற்பவே வாக்காளர்கள் தொகை 720,000 ஆக அதிகரித்தது. வன்னியில் மக்கள் வாக்களிப்பதற்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்தோம். அதனால், பஸ் போக்குவர த்தை ஏற்பாடு செய்வதில் சற்றுத் தாமதம் ஏற்பட்டு விட்டது. வேறு எந்தப் பிரச்சி னையும் இருக்கவில்லை. எல்லா இடங்களிலும் தேர்தலை நடத்தினோம். தேர்தல் தினத் துக்கு முன்பு சட்டத்திற்குப் புறம்பாகச் சிலர் செயற்பட்டுள்ளார்கள்.

பதாகை, சுவரொட்டிகளை காட்சிப்படுத்தத் தடை விதிக்கப்பட்ட தினங்களில் அவற்றை வைத்ததுடன் கூட்டங்களையும் நடத்தினர். இது தவிர எந்தப் பிரச்சினையும் இல் லாமல் மக்கள் வாக்களித்தார்கள். அதனை நன்கு ஆய்வு செய்த பின்னரே வாக்குகளை எண்ணுவதற்கு ஆயத்தமானோம்.

எண்ணுவதில் குளறுபடி இல்லை

எண்ணும் நிலையங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை என சிலர் கூறியிருக்கிறார்கள். அது தவறு. யார் யார் வந்திருந்தார்கள், என்பதற்கான ஆவன ரீதியான சான்று உள்ளது. எண்ணும் நிலையங்களுக்கு வந்தவர்கள் கையொ ப்பமிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

தேர்தல் தொகுதி, வாக்கெடுப்பு நிலையம், வாக் குப்பெட்டி என்பவற்றைப் பரிசோதித்த பின்பே எண்ணும் நடவடிக்கைகள் ஆரம் பமாகும். முடிவு அறிக்கைகள் 6 பிரதிகளாக எடுக்கப்பட்டு அத்தாட்சிப்படுத்தப்பட்டதன் பின்னரே வெளியிடப்படும். வெளிப் படைத்தன்மையைப் பேணுவதற்கு என்னால் இயன்ற அனைத்து நடவடிக் கைகளையும் மேற்கொண்டேன்.

நான் வீட்டுக் காவலில் என வதந்தி

26ம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் இந்த நாட்டில் இதற்கு முன் கேட்டிராத வதந்தி உலவத் தொடங்கியது. ஆணையாளர் வீட்டுக் காவலில்...! துப்பாக்கி முனையில் பெறுபேறுகளுக்குக் கையொப்பமிடுகிறார். என்றவர்கள் காலையில் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் இருக்கிறார் என்றும் பின்னர் விபத்தில் சிக்கி விட்டதாகவும் வதந்தி பரப்பப்பட்டது.

யார் என்ன தேவைக்காக இவ்வாறு வதந்தியைப் பரப்பினர்களோ தெரியவில்லை. வரலாற்றில் ஒருபோதும் இவ்வாறு இடம்பெற்றதில்லை. தற்போதைய நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியே இந்தப் பிரசாரத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். கரங்களால் எண்ணி முடித்ததன் பின்னர் தான் கணனிமயப்படுத்துவோம்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணனி பிரிவினரே இதனை மேற்கொண்டனர். இதனைப் புரிந்து கொள்ளாத சில அரசியல்வாதிகள் எண்ணும் பணியைத் தனியார் நிறுவனம் மேற்கொண்டதாகக் கூறியிருக்கிறார்கள் மிகவும் நம்பிக்கையான முறையில் தான் எண்ணும் பணி நடந்திருக்கிறது.

சந்தேகமிருப்பின் கொழும்பு பல்கலைக் கழகத்தின் கணனிப் பிரிவைக் கேட்க முடியும். பேராசிரியர் ருவன் வீரசிங்கவின் பெயரையும் களங்கப்படுத்துகிறார்கள். என்னைப் பொறுத்த வரை எதுவிதமான சந்தேகமும் இன்றிப் பெறுபேறு வெளியிடப் பட்டுள்ளது.

27 ஆந் திகதி மாலை வரை 37 மணித்தியாலம் அலுவலகத்தில் பணி புந்திருக்கிறேன். இதற்கு முன்பு ஒருபோதும் தொடர்ச்சியாக இப்படிப் பணியாற்றி யதில்லை. ஆதலால் வதந்திகளைக் கேட்டு மிகவும் மனமுடைந் துள்ளேன். 27 ஆம் திகதி இரவு வீடு சென்ற போது என்னை விபத்துக்கு உள்ளாக்கி விட்டார்கள் வதந்தி மூலம். 35 வருட கால சேவையில் இப்படி ஒரு வதந்தியைக் கேள்விப்பட்டது கிடையாது என்றும் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.

 

Home /Page -1 /Page-2 / Page -3 / Page-4 / Page-5 / Page-6 /Page-7 /

wanni

ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கும், 1970 பொதுத் தேர்தல் முடிவுக்கும் உள்ள ஒத்த தன்மைகள்!

ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தெரிவித்திருக்கு ம் செய்திதான் என்ன?