a_Pen

முதற்பக்கம்

கட்டுரைகள்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம்             பெண்ணியம்        புதியபாதை                      அலை                       பூர்வீகம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/  srilankans.org.au              www.lankamuslim.org   Communist party srilanka

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.8                                                           29.01.2010

 தமிழர் தேய்ந்த கூட்டமைப்பு

   விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழர் தேசிய கூட்டமைப்பு பிரபாகரனின் மரணத்தை அடுத்து பல பிரிவுகளாக உடைந்து கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல தமிழர் தேய்ந்த கூட்டமைப்பாக மாறியுள்ளது. பிரபாகரன் இன்று உயிருடன் எந்த மூலையில் ஒழித்திருக்கிறார் என்று தெரிந்திருந்தால் கூட இந்த தமிழர் தேய்ந்த கூட்டமைப்பினர் உயிருக்குப் பயத்தினால்; இப்படியாகப் பிரிந்து தன்னிச்சையாக இயங்கமாட்டார்கள். பிரபாகரனும் விடுதலைப்புலிகளின் தலைமையும் அழிக்கப்பட்டுவிட்டார்கள் என்று நன்றாகத்தெரிந்து கொண்ட பின்னர் தமிழர் வரலாற்றில் எந்தத்தமிழ்த்தலைமைகளும் செய்யாத வரலாற்றுத்துரோகத்தை  இந்த தமிழர் தேய்ந்த கூட்டமைப்பினர் இப்போது புரிந்திருக்கின்றனர்.   

ஐனாதிபதி மகிந்தா மட்டக்களப்பு விஐயம் செய்தபோது கோயிலுக்கு சென்று வழிபட்டபோது மகிந்தாவுக்கு சந்தனப்பொட்டு வைத்த காரணத்தினால்  புலிகளிகளினால்  இந்துக்குருக்கள் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆனால் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டபின்னர்  மகிந்தவின் பிறந்தநாளுக்கு சென்று வாழ்த்தி கட்டிப்பிடித்து படமும் எடுத்துக்கொண்டார் வன்னி மாவட்ட தமிழ் கூட்டமைப்பு எம்.பி கிசோர் அவர்கள்.                                                    

குதிரைக்கNஐந்திரன் பொங்குதமிழ் நாட்டிய பேரொளி பத்மினி போன்ற எம்.பிக்கள் தமிழ்மக்கள் கஸ்டப்பட்டபோது  வெளிநாடுகளில் தங்கியிருந்துவிட்டு  இப்போது தமது நலனுக்காக பாராளுமன்றப்பதவி  பறிபோகப்போகிறது என்ற பயத்தினால் பதவி ஆசைக்காக  சிறிலங்கா அரசின் காலில் விழுந்து  இலங்கைக்கு திரும்பியிருக்கிறார்கள். வாய்ச்சொல்வீரர்களான இவர்கள் இப்போது பல்லுப்பிடுங்கிய பாம்புபோல தமது பதவிகளை காப்பாற்றிக்கொண்டு வாயைமூடிக்கொண்டு வாழ்கிறார்கள்.  புலிகளின் புண்ணியத்தால் கடந்த பொதுத்தேர்தலில் அதிக விருப்பு வாக்குகள் போடப்பட்டு எம்.பி ஆக்கப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மற்றைய  தமிழ் கூட்டமைப்பு எம்.பியான சுரேஸ்பிரேமச்சந்திரன் அவர்களிடம் வெளிநாடுகளில் உள்ள நண்பர்கள் முன்னால் உறுப்பினர்கள் எமது தலைவரான தோழர் பத்மநாபாவையும் ஏனைய உறுப்பினர்களையும் படுகொலைசெய்த  புலிகளின் கூட்டமைப்பில் ஏன் இணைந்தீர்கள் என கண்டனம் தெரிவிக்க உடனடியாக அவர் சொன்ன பதில் ஆச்சரியப்படவைத்தது பொறுங்கள் இதுக்குள்ள புகுந்துதான் புலிகளுக்கு அலுவல்காட்டவேணும் என்று உடனடியாக பச்சோந்தித்தனமாக பதில் சொன்னார் ஆனால் அதுவல்ல உண்மை புலிகளை ஆதரித்தால்தான் எம்.பி பதவியும் புலிகளிடமிருந்து உயிருக்கு உத்தரவாதமும் கிடைக்கும் என்பதே இவர்போன்ற கூட்டமைப்பினரின் குறிக்கோளாகும்.                                 

ரணிலின் கூட்டில் உள்ள இனவாத JVP கட்சிதான்  இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின்மூலம் இணைத்த தமிழர் தாயகமான வடக்குகிழக்கை நீதிமன்றம் சென்று பிரித்தவர்கள். அந்த ஒப்பந்த காலத்தில் மாகாண ஆட்சியில் இருந்து முக்கிய பங்காற்றிய சுரேஸ் பிறேமச்சந்திரன்  இப்போது தமிழர் தாயகத்தைப்பிரித்த  இனவாத JVP கட்சியுடன் கைகுலுக்குகிறார். இலங்கை சிங்கள மக்களுக்கு மட்டுமே சொந்தம் என்று கனடாவில் வெளிவரும் நஸனல் போஸ்ட் பத்திரிகைக்கு பேட்டியளித்து   இனவாதத்தை கக்கிய  இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவை ஐனாதிபதியாக்க படாதபாடுபடுகிறார்.  

இந்த சம்பந்தன் மாவை சுரேஸ் (எஸ்எம்.எஸ்) என்று இப்போது அழைக்கப்படும் இந்த மூவரும் புலிகள் இயக்கம் அழிந்துவிட்டதனால்  தமது நலனுக்காகவும்  பதவி ஆசைக்காகவும் ரணிலின் கூட்டில் இயங்குகிறார்கள்.  ரணிலின் விருப்பத்திற்கு ஏற்ப சரத்பொன்சேகாவை ஆதரிக்கிறார்கள்.  ஆனால் பிரபாகரன் உயிருடன் இருக்கும்வரை ரணில் ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லை காரணம் தளபதி கருணாவின் பிரிவுக்கு ரணிலே காரணம் என்பதேயாகும்.                                                  

அடுத்ததாக தலைவர் சம்பந்தன் அவர்கள் அண்மையில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தபோது  சென்ற ஐனாதிபதித்தேர்தலில்  புலிகள் தமிழ்மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததினால்தான்  தமிழர்களுக்கும்  புலிகளுக்கும்  இவ்வளவு அழிவு ஏற்பட்டதாகவும் தான் இதுபற்றி புலிகளின் தலைமையுடன் வாக்குவாதப்பட்டதாகவும்  கூறியிருந்தது அனைவரும் அறிந்ததே. உண்மையான கருத்துத்தான்  ஆனால் இவர் இதற்காக புலிகளுடன் வாக்குவாதப்பட்டதுக்கு காரணம் யு.என்.பி வேட்பாளர் ரணிலை பிரபாகரன் ஆதரிக்கவேண்டும் என்பதற்காகத்தான் ஒழிய தமிழ் மக்களையோ புலிகளையோ காப்பாற்றவோ இல்லை என்பது இப்போது ரணிலின் ரிமோட்கொண்ரோலில் இயங்கும் பொன்சேகாவை ஆதரிப்பதன் மூலம் ஆதாரமாகவும் தெட்டத்தெளிவாகவும் தெரியவந்துள்ளது.                                

இப்போது பிரபாகரன்; அழிக்கப்பட்ட பின்னர் வரலாற்றுத்தவறு என சம்பந்தன் ஐயா கூறியிருப்பது இவரின் இயலாமையையும் பச்சோந்தித்தனத்தையும்  பதவி ஆசையையும் தனது உயிர்மேல் உள்ள ஆசையும் தமிழனத்திற்கு செய்த மாபெரும் துரோகத்தனமுமாகும் என்றே கருத இடமுண்டு. பிரபாகரன் உயிருடன் இருந்திருந்திருந்தால் இப்போது கூட இந்த உண்மையை கூறியிருப்பாரா? உண்மையாக இவர் தன்னைப்பற்றி சிந்திக்காமல் தமிழர்களைப்பற்றி சிந்தித்திருந்தால் இப்போது புலிகளைபு;பற்றி விமர்சிப்பவர் அந்த நேரத்தில் முன்கூட்டியே பகிரங்கமாக விமர்சித்திருக்கவேண்டும்.  புலிகளின் நடவடிக்கையில் அதிருப்தி கண்ட ஆனந்தசங்கரி அவர்கள் கூட்டமைப்பில் இருந்து விலகியதுபோல சம்பந்தன் அவர்களும் விலகாமல் கண்ணையையும் வாயையும் மூடிக்கொண்டிருந்து விட்டு எல்லாமே முடிந்த பிறகு உண்மையைக் கூறி என்ன பயன்?       

ஐனாதிபதி சந்திரிக்கா காலத்தில் சம்பந்தன் எம்.பி புலிகளால் தனக்கு உயிர்; ஆபத்து இருப்பதாக கூறி பல இலட்சம் பெறுமதியான குண்டுதுழைக்காத வாகனத்தை பெற்றுக்கொண்டு அவர்களின் வழமையான் பின்கதவுக்கலாச்சாரத்தினால் சகலவற்றையும் அனுபவித்துவந்தார்.. தமிழர்களுக்கான  நல்லதொரு தீர்வை சந்திரிக்கா பாராளுமன்றத்தில் கொண்டுவருவதற்கு சம்பந்தனின் ஆதரவையையும் கணக்கில் எடுத்து பாராளுமன்றத்திற்கு  கொண்டுவருவதற்கு தயார்நிலையில் இருக்க முதல்நாள் இரவு இந்த சம்பந்தன்  தமது கட்சி தீர்வுப்பொதிக்கு ஆதரவுதரமாட்டோம் என்று நம்பியிருந்த சந்திரிகாவிற்கு   நம்பிக்கைத்துரோகம்  செய்தார். அடுத்தநாள் சந்திரிகா தமிழர்களுக்கான தீர்வை கொண்;டுவர இன்று தமிழர்களுக்காக  போலிக்கண்ணீர் வடிக்கும் எதிர்க்கட்சித்தலைவரான ரணில் விக்கிரமசிங்கா தமிழர்களுக்கு  இது அதிகமான தீர்வு என தீhவுப்பொதியை பாராளுமன்றத்திலேயே வைத்து தீவைத்துக்கொழுத்தினார்.  அப்போது எதிர்கட்சிகளுடன் சேர்;ந்து சம்பந்தன் கையைக்கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். சம்பந்தன் சந்திரிக்காவுக்கு மட்டுமல்ல முழுத்தமிழினத்திற்கும் துரோகம் இழைத்திருக்கின்றார். பின்னர் புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் கூட சந்திரிக்கா கொண்டுவந்த தீர்வுப்பொதி ஏற்றுக்கொள்ளக்கூடியது என யாழ் உதயன் பத்திரிகைக்கு கொடுத்தபேட்டியில் கூறியுள்ளார்.         

இந்த சம்பந்தன் தலைமையிலான தேய்ந்த கூட்டமைப்பினர்  40வருடதாக தமிழ்மக்களை ஏமாற்றியதுபோல இப்போது வடக்கு கிழக்கு மக்களை ஏமாற்றமுடியாது.  இப்போது நிலைமை வேறு அங்கு பலதமிழ்முஸ்லீம் கட்சிகள் உள்ளன. அவர்களுக்கும்  மக்கள் ஆதரவு உண்டு.       கூட்டமைப்பு அடிக்கடி கூடுகிறது. முடிவு விரைவில் அறிவிப்போம் என சம்பந்தன் கூறியது தமிழ் மக்களைபேய்க்காட்டுகிறார்  என்பது எல்லோருக்கும்  அப்பட்டமாகத்தெரியும்.  ரிமோட்கொன்ரோல்  ரணில் பக்கம்தான் கடைசியாக சம்பந்தன் சப்போட் கொடுப்பார் என்புது முன்னரே தெரியும்         தமிழ்பேசும் மக்கள் பலத்தை காட்டுவதற்காக தமிழ்வேட்பாளர் ஒருவரை சம்பந்தன் நிறுத்த்p       ;தமிழர் நலனில் அக்கறை கொள்ளாமல் தன்நலத்தில் அக்கறை கொண்டுள்ளார். அதுமட்டுமல்ல விடுதலைப்புலிகளின் வீழ்ச்சி இவர்களிற்குத்தான் மகிழ்ச்சி என்பது இவர்களின் செயல்களில் இருந்து காணக்கூடியதாக இருக்கின்றது               ;     

அருணாசலம் கனடா
 

Home / Page-1 / Page-2 / Page-3 / Page-4

wanni

இன்னொரு தடவை ஆயுதம் போராட்டம்னு எவனாச்சும் சொன்னா தும்புக்கட்டையால  (துடைப்பம்) அடிச்சு சாத்திப்புடுவேன். போரை எதிர்கொண்ட எளிய மக்களின் மனநிலை இதுதான்.

‘புதிய பாதை’ ஆசிரியர் சுந்தரம் நினைவாக..

யாழ்ப்பாணத்து மக்களின் காதில் பூச்சுற்றிய முன்னாள் பிரதம நீதியரசர்!

புலிப் பாசிசம் தோற்கடிக்கப் பட்டமையே, 2009ம் ஆண்டின் மாபெரும் வரலாற்று நிகழ்வாகும்!

சரத் பொன்சேகாவை ஆதரிப்பதன் மூலம், சம்பந்தன்  கோஷ்டி அடையப்போகும் கேவலமான முடிவு!

ஐதேகவுக்கு சேவகம்செய்ய துடிக்கும் கூட்டமைப்ப