a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்              பூந்தளிர்       கண்ணோட்டம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.9                                                           09.04.2010

எழுவைதீவுக்கு மருத்துவமனை

 ezhuvaitheevuஇலங்கையில் சப்ததீவுகள் என வர்ணிக்கப்படும் சில தீவுகளில் ஒன்றுதான் எழுவைதீவு. கடலையும் மண்ணையும் கடவுளையும் மாத்திரம் நம்பி வாழ்ந்த மக்கள் அச்சிறுதீவிலே பல்லாண்டுகள் வாழ்ந்துவந்தபோதிலும் அவர்களின் அடிப்படைத்தேவைகளில் ஒன்றான மருத்துவமனை என்பது இற்றைவரையில் இல்லை.

 சுமார் 250 தமிழ்க்குடும்பங்கள் வாழும் இத்தீவில் சைவாலயங்கள், ஆரம்பப்பாடசாலைகள், தேவாலயங்கள் ஒரேஒரு உபதபாற்கந்தோர் ஆகியன இருக்கின்றன. ஆனால் மருத்துவமனைதான் இல்லை. எத்தனையோ அரசுகள் பதவிக்கு வந்தன. அந்தத்தீவுப்பகுதியை உள்ளடக்கிய ஊர்காவற்துறையிலிருந்து பல பாராளுமன்ற அங்கத்தவர்கள் கடந்த காலங்களில் தெரிவாகியிருக்கின்றனர்.

 மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கப்படவில்;லை. எழுவைதீவு மக்கள் தமது மருத்துவதேவைகளுக்காக ஊர்காவற்றுறைக்கோ அல்லது யாழ்ப்பாணத்துக்கோதான் செல்லவேண்டியிருக்கிறது.  இந்த சிறுதீவில் கடலையும் மண்ணையும் நம்பி வாழும் மக்களுக்கு காய்ச்சல், தடிமன், இருமல், வயிற்றுவலி, நெஞ்சுவலி வந்தாலும் படகில் ஏறி அக்கரை சென்றுதான் சிகிச்சை பெறவேண்டியிருக்கிறது.

அப்படியாயின் கர்ப்பிணித்தாய்மாரின் நிலைமை என்ன?

இன்று நாம் இன்ரநெட் யுகத்துக்கு வந்துவிட்டோம்., ஆனால் எங்கள் தாயகத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வாழும் ஒரு அழகிய சின்னஞ்சீறு தீவில் ஒரு சிறு டிஸ்பென்ஸரி கூட இல்லை.  இந்தத்தீவைச்சேர்ந்த பலர் இன்று வெளிநாடுகளில் புகலிடம் தேடியிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் தாம் பிறந்து வளர்ந்த எழுவைதீவைப்பற்றி சற்று சிந்திப்பார்களேயானால் விரைவில் அங்கு வாழும் மக்களின் மருத்துவமனைத்தேவையை பூர்த்தி செய்யமுடியும்.

அதற்கான ஆரம்ப வேலைகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. டிஸ்பென்சரி அமைப்பதற்கான காணி ஒன்றும் தெரிவாகியிருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அந்தத் தீவு மக்களின் நீண்டகாலக்கனவு நனவாகவேண்டும்.

 எனவே வெளிநாடுகளில் வசிக்கும் எழுவைதீவு வாசிகள் இதுகுறித்து அக்கறை காண்பித்து உதவினால் அவ்வூர் மக்களின் நீண்டகாலத்தேவையை பூர்த்தி செய்ய முடியும்.  இது தொடர்பான மேலதிக விபரங்களை அறியவிரும்பும் அவ்வூர்மக்களும் நலன் விரும்பிகளும் தொடர்புகொள்ளவும்.

டொக்டர் நொயல்.நடேசன்: 61 3 9561 0541

 

Home / Page-2 / Page-3 / Page-4 / Page-5

wanni

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி் தேர்தல் விஞ்ஞாபனம்

புலிகளின் யுத்தத்தால் சீரழிந்து போன வடபகுதி நூலகங்கள் அரசால் புனரமைக்கப்படுகின்றன!

வன்முறையாளர்களுக்கும ் பிரிவினையாளர்களுக்கும ் தருகிற ஆதரவுகளை இலங்கைத் தமிழர்கள் விலக்கிக் கொண்டால், அவர்களது பிரச்சினை தீரும்!

தமிழ்த் தேசியம் என்பது வாக்குகளுக்கான கோஷமல்ல

பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை முற்றுமுழுதாகத் தோற்கடிப்பதே, தமிழ் மக்களின் விமோசனத்துக்கான ஒரேயொரு வழியாகும்!