a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்              பூந்தளிர்       கண்ணோட்டம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.9                                                           09.04.2010

சரத் பொன்சேகாவை விசாரிக்க இரண்டு இராணுவ நீதிமன்றங்கள்

Fonsekaஇலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகா அவர்கள் இரண்டு இராணுவ நீதிமன்றங்களை எதிர்கொள்ளவுள்ளார்.

அவற்றின் நீதிபதியாக ஒரு ரியர் அட்மிரல் இருப்பார். அவருக்கு துணையாக மூன்று மேஜர் ஜெனரல்கள் செயற்படுவார்கள்.

சீருடையில் இருந்தபோதே அவர் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டதாகக் கூறும் மூன்று குற்றச்சாட்டுக்களை ஒரு நீதிமன்றம் விசாரிக்கும்.

இராணுவ தளவாடங்கள் வாங்குவது தொடர்பில் அவர் விதிகளை மீறியதாக கூறுப்படும் 4 குற்றச்சாட்டுக்களை மற்றொரு நீதிமன்றம் விசாரிக்கும்.

சரத்பொன்சேகா அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்படைத் தலைமையகத்தில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் அவர் மீது சுமத்தப்படும்.

இந்தக் குற்றச்சாட்டுக்களின் முழுமையான விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை. அத்துடன் அவர் மீதான விசாரணைகள் மூடிய அறையில் வெளியாருக்கு அனுமதி இல்லாத நிலையில் நடத்தப்படும்.

தான் எந்தவிதமான தவறையும் செய்யவில்லை என்று சரத் பொன்சேகா கூறிவருகிறார்.

சட்டத்தரணிகளை அமர்த்திக் கொள்ள அனுமதி

இந்த வழக்குகளில் பொன்சேகா அவர்கள் தனது சொந்த சட்டத்தரணிகள் மூலம் வாதாடலாம் என்றும், விசாரணைகளின் குற்றவாளியாக அவர் காணப்படும் பட்சத்தில், அதனிலும் உயரிய சிவில் நீதிமன்றத்தில் அவர் மேன்முறையீடு செய்யவும் முடியும் என்றும் இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்லவர் பிபிசியிடம் கூறினார்.

ஆரம்பக்கட்ட விசாரணைகள் வெகுவிரைவில் முடிந்துவிடும் என்றும் அவர் கூறினார்.

இந்த விசாரணைகளின் முடிவுகள் சரத் பொன்சேகாவுக்கு எதிராக போகும் பட்சத்தில் ஏப்ரலில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அவர் போட்டியிட முடியுமா என்பது தெரியவில்லை.

ஆனால், அவர் தேர்தல் பிரச்சார காலத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது அரசியல் நோக்கம் கொண்ட ஒரு செயல் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

ஒரு இராணுவ சதிப்புரட்சிக்கு திட்டமிட்டதாகவும், ஜனாதிபதி ராஜபக்ஷவை படுகொலை செய்ய முயற்சித்ததாகவும், சரத் பொன்சேகா மீது மூத்த அதிகாரிகள் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டுகிறார்கள். அவருக்கு எதிராக சிவில் நீதிமன்ற வழக்கும் காத்திருக்கிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

அதனை நிராகரித்துள்ள அவர், இன்றுவரை இராணுவ புலன் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க கோபத்துடன் மறுத்து வருகிறார்.

அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து அவரது சட்டத்தரணிகள் உயர்நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், ஏப்ரல் கடைசியில்தான் அடுத்த விசாரணைக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

--------------------------------------------------------------------------------
இலங்கையை விட்டு வெளியேறிய ஊடகவியலாளர்கள் மீண்டும் நாடு திரும்ப அழைப்பு


ஊடகவியலாளர்களை பாதுகாக்க அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு குழுவின் பிரதிநிதிகள் இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். அங்கு அவர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் அரச தரப்பினரை சந்தித்து உரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்புகளுக்கு பிறகு அரசின் தலைமை வழக்கறிஞரான மோஹன் பீரீஸ் அரசுக்கு ஊடகவியலாளர்கள் தேவை என்றும், இலங்கையைவிட்டு வெளியேறி நாடுகடந்த நிலையில் வாழ்ந்துவரும் ஊடகவியலாளர்கள் நாட்டுக்கு மீண்டும் வந்து பரஸ்பர மரியாதையுடன் இருக்கும் ஒரு சூழலில் வேலை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளதாகவும், கொழும்பு சென்றுள்ள ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.

அப்படியாக நாடுகடந்த நிலையில் வாழும் இலங்கை ஊடகவியலாளர்கள் மீண்டும் நாடு திரும்பினால், அவர்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் இருக்கும் என்று தமது தரப்பிலிருந்து ஒரு உத்திரவாதம் இருக்க வேண்டும் எனவும் மோஹன் பீரீஸ் தெரிவித்ததாகவும் அந்தக் குழுவினர் கூறுகிறார்கள்.

தொடர்ந்தும் பயத்தில் ஊடகவியலாளர்கள்

இலங்கையில் ஊடகத்துறையினர் பழிவாங்கப்படுகிறார்கள் என்பதை முன்னர் இலங்கை அரசு மறுத்துவந்துள்ளது.

கடந்த ஆண்டு அங்கு ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டது தொடர்பில் ஆறு இராணுவத்தினரை தாங்கள் தடுத்து வைத்துள்ளதாக இலங்கை அரசு அண்மையில் தெரிவித்திருந்தது.

ஆனாலும் ஊடக்த்துறை தொடர்பான செயற்பாட்டுக் குழுக்களால் நடத்தப்படும் மதிப்பீடுகளில் மிகவும் குறைந்த மதிபெண்களே பெறுகின்றன. எதிர்கட்சிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாகக் கூறப்படும் ஒரு ஊடகவியலாளர் மாயமான முறையில் கடந்த ஜனவரி மாதம் காணாமல் போனார்.

அவரை இலங்கை அரசைத் தவர வேறு யாரும் கடத்தியிருக்க முடியும் என்று தான் கருதவில்லை என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார். ஆனால் விளம்பரம் தேடும் நோக்கில் அவர் எங்காவது மறைந்திருக்கலாம் என்று அரசு கூறுகிறது.

அப்படி காணாமல் போன அந்த ஊடகவியலாளர் பணி செயத நிறுவனத்தின் ஆசிரியர் தற்போது நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இப்படியான சூழலில் நாடுகடந்த நிலையில் வாழும் ஊடகவியலாளர்கள் மீண்டும் நாடு திரும்பி பாதுகாப்பான சூழலில் பணியாற்ற வேண்டும் என்றால், அவர்கள் இலங்கை அரசிடமிருந்து உறுதியான வார்த்தைகள் மட்டுமல்ல செயற்பாடுகளையும் எதிர்பார்பார்கள்.

Home / Page-2 / Page-3 / Page-4 / Page-5

wanni

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி் தேர்தல் விஞ்ஞாபனம்

புலிகளின் யுத்தத்தால் சீரழிந்து போன வடபகுதி நூலகங்கள் அரசால் புனரமைக்கப்படுகின்றன!

வன்முறையாளர்களுக்கும ் பிரிவினையாளர்களுக்கும ் தருகிற ஆதரவுகளை இலங்கைத் தமிழர்கள் விலக்கிக் கொண்டால், அவர்களது பிரச்சினை தீரும்!

தமிழ்த் தேசியம் என்பது வாக்குகளுக்கான கோஷமல்ல

பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை முற்றுமுழுதாகத் தோற்கடிப்பதே, தமிழ் மக்களின் விமோசனத்துக்கான ஒரேயொரு வழியாகும்!