a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்              பூந்தளிர்       கண்ணோட்டம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.9                                                           13.04.2010

'அம்பாறையில் தொடரும் அச்ச நிலைமை'

- பி.பி. சி. செய்திகள்

Piyasenaஇலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்து விட்டாலும் அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பகுதிகளில் இன்னமும் அச்ச சூழல் நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில் உட்பட தமிழர்கள் வாழும் சில பகுதிகளில் அச்ச சூழல் நிலவுவதாக அம்மாவட்டத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் புதிதாக நாடாளுஅமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொடியப்பு பியசேன தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியின் ஆதரவாளர்களால் தான் உட்பட பலர் அங்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் கூறுகிறார். நள்ளிரவு நேரங்களில் வீடுகள் தாக்கப்படுகின்றன எனவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

இதன் காரணமாக மக்கள் அச்சத்துடன் வாழ்வாதகவும் அவர் தெரிவிக்கிறார்.

தனக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில் உதவி தேடி வரும் மக்களுக்கு தன்னால் உதவ முடியாத நிலையில் இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டுள்ள பியசேன கூறுகிறார்.

மக்களால் தேர்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் தங்களது பாதுகாப்பு குறித்து அங்குள்ள மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

காவல்துறையின் பாதுகாப்பில்லாமல் தன்னால் வீட்டில் கூட இருக்க முடியாத ஒரு இறுக்கமான சூழல் உள்ளது என்றும் த.தே.கூ வின் உறுப்பினர் பொடியப்பு பியசேன தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

தமது பகுதியிலுள்ள மக்கள் இது தொடர்பில் காவல்துறையிடம் முறைப்பாடு செய்வதில் துளியளவும் விருப்பமில்லாமல் இருக்கிறார்கள் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

காவல்துறையிடம் முறைப்பாடு செய்யும் போது, யார் மீது புகார் செய்யப்படுகிறதோ அவரிடம் புகார் குறித்த தகவல் சென்றுவிடும் என்கிற அச்சம் காரணமாகவே மக்கள் புகார் செய்ய முன்வருவதில்லை என்றும் பியசேன கூறுகிறார்.

தனக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகள், தான் வீட்டை விட்டு வெளியே செல்வது உசிதமில்லை என்றும் அவ்வாறு சென்றால் தங்களால் பாதுகாப்பு வழங்க இயலாது என்றும் தெரிவித்துள்ளதாக புதிய நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகிறார்.

ஆனால் இந்தப் புகார்களில் உண்மை ஏதும் இல்லை என்று அம்பாறை பகுதி முழுவதிலும் அமைதி நிலவி வருகிறது என்றும் இலங்கையின் காவல்துறை பேச்சாளர் பிரஷாந்த ஜெயக்கொடி கூறுகிறார்.

அம்பாறையில் அச்ச சூழல் நிலவுகிறது என்று கூறப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்றும் தேர்தலுக்கு பிறகு அப்பகுதியிலிருந்து தமக்கு ஒரு முறைப்பாடு கூட வரவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

புதிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஏதாவது சிக்கல் இருக்குமாயின் அவர் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளை அணுகி புகார் செய்யலாம் என்று கூறும் காவல்துறை பேச்சாளர், அம்பாறையில் எந்தவிதமான சட்டவிதி மீறல்களும் இல்லை என்பதை தன்னால் உறுதியாகக் கூறமுடியும் எனவும் தமிழோசையிடம் தெரிவித்தார்.

Home / Page-1 / Page-2 / Page-3 / Page-4 / Page-5 /Page-6

wanni

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி் தேர்தல் விஞ்ஞாபனம்

புலிகளின் யுத்தத்தால் சீரழிந்து போன வடபகுதி நூலகங்கள் அரசால் புனரமைக்கப்படுகின்றன!

வன்முறையாளர்களுக்கும ் பிரிவினையாளர்களுக்கும ் தருகிற ஆதரவுகளை இலங்கைத் தமிழர்கள் விலக்கிக் கொண்டால், அவர்களது பிரச்சினை தீரும்!

தமிழ்த் தேசியம் என்பது வாக்குகளுக்கான கோஷமல்ல

பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை முற்றுமுழுதாகத் தோற்கடிப்பதே, தமிழ் மக்களின் விமோசனத்துக்கான ஒரேயொரு வழியாகும்!