|
விழிப்புணர்வுகருத்தரங்கு
கந்தளாய் நிருபர் எம்.ஜே.அன்வர் அலி.
2010.02.15
காத்தான்குடி நகர சபை எல்லைக்குள் UNDP நிறுவனத்தினால் அமைக்கப்பட்டு வருகின்ற மலசலகூட அசுத்த நீர் சுத்திகரிப்பு சம்பந்தமான திட்டம் தொடர்பில் மக்கள் மத்தியில்; விழிப்புணர்வை ஏற்படு;த்தும் கருத்தரங்கும் கலந்துரையாடலும் 2010.02.13ம் திகதி சனிக்கிழமை காத்தான்குடி வாசிகசாலை கேட்போர் கூடத்தில் காத்தான்குடி பிரதி நகரமுதல்வர் அல்ஹாஜ்.S.H.M அஸ்பர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
UNDP நிறுவனத்தின் சிரேஷ்ட ஆலோசகர் திரு.விக்ரமஆராச்சி பொறியியலாளர் K.L.M.றசீன் ஆகியோரால் விளக்கவுரை வழங்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் காத்தான்குடி நகரசபை UNDP இணைப்பாளர் M.T.A.றகுமான் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் புஹாரி மற்றும் அரச உத்தியோகத்தர்கள் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர். வெளிநாடுகளில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மலசலகூட அசுத்தநீர் சுத்திகரிப்புத் திட்டத்தினை பேராதனை மற்றும் மொறட்டுவ பல்கலைக்கழகங்களால் பரீட்சிக்கப்பட்டு வெற்றியடைந்த பின்னர் இலங்கையில் முதன் முறையாக பரீட்சார்தமான முறையில்; காத்தான்குடியில் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மட்டக்களப்பு வாவியை அன்மித்த 8 ஒழுங்கைகளில் வாழ்கின்;ற சுமார் 350 குடும்பங்கள் இத்திட்டத்தினால் பயனடையவுள்ளனர்.
நிலத்திற்குக் கீழ் உள்ள நீர் மாசடைவதையும் சூழல் மாசடைவதையும் தவிர்த்துக்கொள்ள இத்திட்டம் எவ்வாறு அமையும் என்பதையும் பயனாளிகள் இத்திட்டத்தினை பயன் படுத்தும் முறைகள் பற்றியும் இங்கு முழுமையாக விளக்கமளிக்கப்பிடடது.
நிகழ்வின் இறுதியாக பொதுமக்களினது சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்பட்டதுடன் ஆலோசனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. க
|