|
கடும்போக்குத் தேசியவாதக் கட்சிகள் தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளன
- அமெரிக்கப் பிரதி ராஜாங்கச் செயலாளர் றொபேட் ஓ பிளேக்
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் கடும் போக்குடைய தேசியவாதக் கட்சிகள் படுதோல்வியடைந்துள்ளதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. அதிகாரப் பகிர்வினை நிராகரித்த கட்சிகள் இந்தத் தேர்தலில் புறக்கணிக்கப்பட்டுள்ளன. நீண்ட கால யுத்தத்திற்குப் பின்னர் நடை பெற்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளதாக அமெரிக்கப் பிரதி ராஜாங்கச் செயலாளர் றொபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் கிடைக்கப் பெற்ற மக்கள் ஆணையைப் பயன்படுத்தி நாட்டை ஐக்கியப் படுத்த ஜனாதிபதிக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றி மற்றும் பொருளாதாரக் கொள்கைகளுக்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கட்சியை இந்தத் தேர்தலில் மக்கள் ஆதரித்துள்ளனர். அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடுதல் சாத்தியம் காணப்படுவ தாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழர் பிரச்சினைக்கு மகிந்த ராஜபகஷ் அரசாங் கம் காத்திரமான தீர்வுத் திட்டம் ஒன்றை வழங்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்காலம் குறித்த பிரகாசமான சிந்தனைகளுடன் தமிழ் மக்கள் வாழக் கூடிய ஓர் பின்னணி உருவாக்கப்பட வேண்டியது அவசியம்.
மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் குற்றச் செயல்களுக்குத் தண்டனை வழங்குதல் போன்ற நடவடிக்கை எடுத்தல் போன்றவை குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பதின்மூன்றாவது திருத்தச் சட்ட மூலத்தை அமுல்படுத்துவதன் மூலம் அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ள முடியும். இலங் கைச் சட்டத்திற்கு அமைவான முறையில் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான விசாரணைகள் நடைபெறும் என அமெரிக்கா எதிர்பார்ப்ப தாகவும் இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த விசேட செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
|