|
எதிர்வரும் பாராளுமண்றத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் இணைந்து போட்டியிடும் கிழக்கு மக்கள் ஐக்கிய முன்னணி ( ஈ பீ யு எவ் )
ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ் ) ஆகிய இரு அமைப்புக்களின் கூட்டறிக்கை
கிழக்கு மாகாணத்தில் வாழும் புத்திஜீவிகள் கல்விமான்கள் பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் மற்றும் புலம்பெயர் வாழ் கிழக்கு மாகாண நலன்விரும்பிகள் ஆகியோருடன் நீண்ட நாட்களாக மேற்கொண்ட கருத்துப்பரிமாற்றங்களில் இருந்து பெறப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் பின்வரும் முக்கிய கொள்கைகளின் கீழ் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களில் கிழக்கு மக்கள் ஐக்கிய முன்னணியும் ( ஈ பீ யு எவ் ) ஈழவர் ஜனநாயக முன்னணியும் (ஈரோஸ் )இணைந்து எதிர்வரும் பாராளுமணறத் தேர்தலில் போட்டியிடுவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை கிழக்கு மாகாண மக்களுக்கு அறியத்தருகிண்றோம்.
கிழக்கின் அரசியல் தனித்துவம்
கிழக்கில் வாழும் மூவின மக்களின் ஐக்கியம்
கிராம மட்டத்தில் இருந்து மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி
புனர்வாழ்வு
புனரமைப்பு
தொழில்
கல்வி கலை கலாச்சார விலையாட்டு ஊக்குவிப்பு
;பொருளாதார வளர்ச்சி
விவசாய ஊக்குவிப்பு
கடல் தொழில் ஊக்குவிப்பு
சுய தொழில் ஊக்குவிப்பு
தனி மனித பொருளாதார வளர்ச்சிக்கான ஊக்குவிப்பு
ஆகிய முக்கிய கொள்கைகள் அடங்கிய எமது மக்களுக்கான பொதுவான வேலைத்திட்டத்தில் கிழக்கு மக்கள் ஐக்கிய முன்னணி ( ஈ பீ யு எவ் )
ஈழவர் ஜனநாயக முன்னணி ( ஈரோஸ் ) ஆகிய இரு அமைப்புக்களும் ஒருமித்த கருத்தினை எட்டியதன் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களில் கிழக்கு மக்கள் ஐக்கிய முன்னணியும்( ஈ பீ யு எவ் )
ஈழவர் ஜனநாயக முன்னணி ( ஈரோஸ் )ம் இணைந்து ஈழவர் ஜனநாயக முன்னணியின் ஏர் சின்னத்தில் போட்டியிடுவதெண்றும் வடக்கு மற்றும் மலையகத்தில் கிழக்கு மக்கள் ஐக்கிய முன்னணி( ஈ பீ யு எவ் )
போட்டியிடாத பட்சத்திலும் அம் மாவட்டங்களில் ஈழவர் ஜனநாயக முன்னணியின் வெற்றிக்காக கிழக்கு மக்கள் ஐக்கிய முன்னணி( ஈ பீ யு எவ் )
பிரச்சாரங்களை மேற்கொள்ளும் எண்றும் இண்று 15 02 2010 இல் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எமது இந்த ஆக்கபூர்வமான முயற்சிக்கு கிழக்கு மாகாண மக்களின் பூரண ஒத்துழைப்பை நாடுவதுடன் தேர்தலில் போட்;டியிட விருப்பம் கொண்டவர்கள் எதிர்வரும் 18 02 2010 வியழக்கிழமைக்கு முன்னர் எம்மை தொடர்புகொள்ளுமாறும் மக்களின் சேவையில் நாங்கள் எண்ற உரிமையுடன் கிழக்குமாகாண மக்களை மிகவும் தாழ்வாகக்கேட்டுக்கொள்கிண்றோம்.
தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி 0774652610
ஈழவர் ஜனநாயக முன்னணி ( ஈரோஸ் )
தலைமைக் காரியாலயம்
திருகோணமலை வீதி
மட்டககளப்பு
மக்களின் சேவையில் மகிழ்ச்சி காண்போம் எண்ற உறுதியுடன்
ஆர். பிரபாகரகன் எஸ்.எஸ்.கணேந்திரன்
செயலாளர் நாயகம் பொதுச்செயலாளர்
ஈழவர் ஜனநாயக முன்னணி ( ஈரோஸ் ) கிழக்கு மக்கள் ஐக்கிய முன்னணி ( ஈ பீ யு எவ் )
|