|
தேசிய முக்கியத்துவ விடயங்களில் கட்சி அரசியல் வேண்டாம்
பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கிடைக்கவில்லை. மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு நான்கு அல்லது ஐந்து ஆசனங்கள் குறைவாகக் கிடைக்கக்கூடிய நிலையே தென்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மூன்றிலிரண்டு பெரும்பான்மையை வீம்புக்காகக் கேட்கவில்லை. அத்தியாவசியமான அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்வதற்காகவே மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை அளிக்கும்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கோரியது. கடந்த பாராளுமன்ற காலத்தில் இத் திருத்தங்களைச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள் ளப்பட்ட போதிலும் எதிரணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாததால் அவற்றைச் செய்ய முடியவில்லை.
இரண்டு விடயங்களில் உடனடியாக அரசியலமைப்புத் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. ஒன்று விகிதாசா ரத் தேர்தல் முறை. இன்னொன்று இனப் பிரச்சினை க்கான தீர்வு.
விகிதாசாரத் தேர்தல் முறை ஜனநாயகத்தைக் கேலிக் கூத்து ஆக்குகின்றது. விருப்பு வாக்குகள் தொடர்பாக வெளிவரும் சில தகவல்களைப் பார்க்கும்போது இக் கருத்து உறுதிப்படுகின்றது. விருப்பு வாக்குகளுக்காக ஒரே கட்சிக்குள்ளேயே மோதல்கள் இடம் பெற்றிருக் கின்றன. மேலும், வேட்பாளர்கள் பெருமளவு பணம் செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் ஏற்படுகின்றது.
நடந்து முடிந்த தேர்தலுடன் விருப்பு வாக்கு முறை இல்லாமற் போய் விடும் என்று அரசாங்க தரப்பினர் தேர்தல் பிரசார த்தின்போது கூறினார்கள். நாட்டில் ஜனநாயகம் நிலை பெற வேண்டுமானால் தற்போதைய தேர்தல் முறை மாற்றப்பட வேண்டியது அவசியம்.
பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கிடைக்கவில்லை. மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு நான்கு அல்லது ஐந்து ஆசனங்கள் குறைவாகக் கிடைக்கக்கூடிய நிலையே தென்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மூன்றிலிரண்டு பெரும்பான்மையை வீம்புக்காகக் கேட்கவில்லை. அத்தியாவசியமான அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்வதற்காகவே மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை அளிக்கும்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கோரியது. கடந்த பாராளுமன்ற காலத்தில் இத் திருத்தங்களைச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள் ளப்பட்ட போதிலும் எதிரணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாததால் அவற்றைச் செய்ய முடியவில்லை.
இரண்டு விடயங்களில் உடனடியாக அரசியலமைப்புத் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. ஒன்று விகிதாசா ரத் தேர்தல் முறை. இன்னொன்று இனப் பிரச்சினை க்கான தீர்வு.
விகிதாசாரத் தேர்தல் முறை ஜனநாயகத்தைக் கேலிக் கூத்து ஆக்குகின்றது. விருப்பு வாக்குகள் தொடர்பாக வெளிவரும் சில தகவல்களைப் பார்க்கும்போது இக் கருத்து உறுதிப்படுகின்றது. விருப்பு வாக்குகளுக்காக ஒரே கட்சிக்குள்ளேயே மோதல்கள் இடம் பெற்றிருக் கின்றன. மேலும், வேட்பாளர்கள் பெருமளவு பணம் செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் ஏற்படுகின்றது.
நடந்து முடிந்த தேர்தலுடன் விருப்பு வாக்கு முறை இல்லாமற் போய் விடும் என்று அரசாங்க தரப்பினர் தேர்தல் பிரசார த்தின்போது கூறினார்கள். நாட்டில் ஜனநாயகம் நிலை பெற வேண்டுமானால் தற்போதைய தேர்தல் முறை மாற்றப்பட வேண்டியது அவசியம்.
மிக நீண்ட காலமாகத் தீர்வின்றி இழுபடும் பிரச்சினையாக இனப் பிரச்சினை உள்ளது. இப் பிரச்சினை தீர்க்கப்படாதிருப்பதற்குத் தமிழ்த் தலைவர்களும் சிங்களத் தலைவர்களும் ஒருவரையொருவர் குற்றஞ் சாட்டுகின்ற போதிலும், இரு தரப்பினரும் பொறுப் பாளிகள் என்பதுதான் உண்மை.
இப் பிரச்சினைக்கு முழுமையான அரசியல் தீர்வை ஒரே நேரத்தில் அடைவதற்குச் சாதகமான சூழ்நிலை இப்போது இல்லை யென்பதால், பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்டதும் சமகால யதார்த்தத்துக்கு அமைவானதுமான ஒரு தீர்வை இப்போதைக்கு நடைமுறைப்படுத்தலாம். இனங்களுக்கிடையே ஐக்கியத்தை வளர்ப்பதற்கும் அபிவிருத்திச் செயற்பாடுகளைத் துரிதமாக முன்னெடுப்பதற்கும் இது அத்தியாவசியமானது.
இவ்விரு விடயங்களும் நாட்டினதும் மக்களினதும் நல னுக்கு அவசியமானவை என்பதில் கருத்து வேறு பாடு இருக்க முடியாது. பிரதான அரசியல் கட்சிகள் கொள்கையளவில் இவற்றை ஏற்றுக்கொண்டுள்ள போதி லும், கடந்த காலங்களில் கட்சி நலனை முன்னிறுத்திச் சிந்தித்ததால் எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க வில்லை. கட்சி நலனைப் பேணுவதற்கு எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் கட்சி நலனுக்கு அப்பால் தேசிய நலனுக்கு முன்னுரிமை அளிப்பதுதான் சிறந்த அரசியல் பண்பு.
புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட எதிரணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இவ்விரு விடயங்களின் தேசிய முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றை நடை முறைப் படுத்துவதற்கு முழுமையான ஆதரவு அளிப்பார்களென நம்புகின்றோம்.
- தினகரன் தலையங்கம் -
|