a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.8                                                           02.10.2009

முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் ஜனவரிக்குள் மீள்குடியேற்றம் செய்யப்படுவர்: இலங்கை ஜனாதிபதி

- பி.பி.சி.

இலங்கையில் அண்மையில் முடிந்த போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் திடமான காலஅட்டவணை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் என்பது ஜனவரி மாதத்தின் இறுதிக் குள் நிறைவடையும் என்று தாம் நம்புவதாக ஜனாதிபதி ராஜபக்ஷ இலங்கை வந்திருக்கும் ஐ.நா. மன்றத்தின் உயர்ஸ்தானிகரிடம் பேசியபோது தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, அரசாங்கத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள், அதாவது குறைந்தது 70 சதவீதம் பேர் நவம்பர் மாதத்தின் இறுதிக்குள் முகாம்களை விட்டு வெளியேறி இருப்பார்கள் என்கிற தமது முந்தைய நிலைப்பாட்டில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அப்படி நடக்கவேண்டுமானால் ஏராளமான வேலைகள் செய்யப்படவேண்டியிருக்கிறது.

சுமார் இரண்டுலட்சத்து அறுபத்தைந்தாயிரம் பேர் இன்னமும் முகாம்களில் இருப்பதாக ஐ.நா.மன்றத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

முதல்முறையாக, இந்த முகாமில் இருப்பவர்கள் முகாம்களுக்கு வெளியில் சென்று வேலை செய்வதற்கு அனுமதிக்கும் வகையில் பகல்நேர அனுமதிச்சீட்டு வழங்கும் புதிய நடைமுறைகள் வகுக்கப்பட்டுவருவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையே, வவுனியாவில் இருக்கும் மிகப்பெரும் முகாமில் இருந்து கடந்த வாரம் வெளியேற அனுமதிக்கப்பட்ட அகதிகளில் சிலர், இலங்கையின் கிழக்குப் பகுதியில் அவர்களின் சொந்த இருப்பிடங்களுக்கு அருகில் தற்காலிக முகாம்களில் இன்னமும் தங்கவைக்கப்பட்டிருப்பதாக ஐ.நா. மன்றத்தை சேர்ந்தவர்கள் பிபிசியிடம் உறுதி செய்துள்ளனர்.

அவர்கள் இன்னமும் எத்தனை நாட்கள் அங்கே தங்கியிருக்க வேண்டிவரும் என்பது தொடர்பில் தெளிவற்ற நிலையே நீடிக்கிறது. அவர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், அவர்களின் விடுவிப்பு எப்போது என்பது குறித்த இறுதி உத்தரவு கொழும்பிலிருந்து வரவேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

Frontpage / Page-2 / Page-3 / Page-4 / Page-5 / Page-6

wanni

முகாம்களால் உருவாகும் மூன்று பிரச்சினைகள்

தோற்றதுதான் சரித்திரம் வெற்றிகளெல்லாம் வெறும் சம்பவங்களே

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தப்பிப் பிழைப்பதற்கு செய்ய வேண்டிய மாற்றங்கள்!

வன்னியில் தமிழ் மக்களுக்கு புலிகள் என்ன செய்தார்கள்?: அகதியாகியுள்ளவர்களின் அவலக்கதை

வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு

உங்கள் கேள்விகளுக்கு வரதரின் விடைகள் (பகுதி 2)

யாழ்ப்பாணம் – வவுனியா நகர மக்கள், தமிழர் வாழ்வில் ஆரோக்கியமான திருப்புமுனைக்கு கால்கோள் இடவேண்டும்!

தமிழர் போராட்டம்:  தவறுகள் தந்திரோபாயத்தால் மட்டும்தானா?

மக்களின் பிழையான முடிவுகளும் ஆதரவுகளும் பிழையான தலைவர்களையே அவர்களுக்கு வழங்கும்.