a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்              பூந்தளிர்       கண்ணோட்டம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.9                                                           09.04.2010

இலங்கையில் வறுமையால் மகன்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்த பெண்!

கொழும்பு,​​ மார்ச் 26:​ இலங்கையில் தனது குழந்தைகளுக்கு உணவுகூட அளிக்க முடியாத அளவுக்கு வறுமை வாட்டியதால் 4 குழந்தைகளையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தார் ஒரு பெண்.

​ பெண்ணின் துயரமான வாழ்க்கை நிலைமையையும்,​​ அவரது கோரிக்கையையும் பரிசீலித்த நீதிபதி,​​ 4 குழந்தைகளையும் ஏற்று அரசு குழந்தை காப்பக மையத்திடம் ஒப்படைத்தார்.

​ அந்த பெண்ணின் மற்றொரு மகன் சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இறந்தான்.

​ வறுமையால் 3-வயதுடைய அந்த சிறுவனை அவரது தாய் தான் ஆற்றில் தூக்கி வீசினார் என்றும்,​​ இதனால் கோமா நிலையை அடைந்து உயிருக்குப் போராடிய சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்தான் என்றும் புகார் கூறப்பட்டது.

​ இந்தச் சம்பவம் நடந்த சில தினங்களிலேயே வழக்கறிஞர் ஒருவரின் உதவியுடன் நீதிமன்றத்தை அணுகிய அந்த பெண்,​​ தனது நிலைமையை எடுத்துக்கூறி தனது 4 குழந்தைகளையும் அரசு ஏற்றுக்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.​ இதை பரிசீலித்த நீதிமன்றமும் 4 குழந்தைகளையும் ஏற்றுக்கொள்ளுமாறு அரசு குழந்தை காப்பக மைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.​ இதையடுத்து அந்த 4 குழந்தைகளையும் அரசே ஏற்றுக்கொண்டது.

​ இலங்கையின் மேற்கு பகுதியான ஹோமகாமாவில் அந்த பெண் தனது கணவர்,​​ 5 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.​ இந்நிலையில் அந்த பெண்ணின் கணவர் அவரை குழந்தைகளுடன் கைவிட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார்.​

இதனால் வாழ்க்கை நடத்த வருமானம் ஏதும் இன்றி அந்த பெண் தனது குழந்தைகளுடன் திண்டாடியுள்ளார்.​ வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியவில்லை.​ இதனால் வீட்டை காலி செய்யுமாறு வீட்டு உரிமையாளர் நெருக்குதல் அளித்துள்ளார்.

​ அந்த பெண்ணின் தாய்,​​ தந்தை ஏற்கெனவே இறந்துவிட்டனர்.​ அவருக்கு இருந்த ஒரே ஆதரவு அவரது சகோதரிதான்.​ ஒரு சில மாதங்கள் உதவி வந்த அவரது சகோதரியும் மேலும் உதவ முடியாத நிலைக்கு ஆளானார்.​

இதனால் அந்த பெண் தனது குழந்தைகளுக்கு உணவுகூட அளிக்க முடியாத அளவுக்கு வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டார்.

​ இதனால் விரக்தி அடைந்துதான் ஒரு மகனை ஆற்றில் வீசியதாகவும்,​​ பிற குழந்தைகளையும் கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொள்வது குறித்து யோசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.​

இந்நிலையில் அவரது நிலைமையை அறிந்த சிலர் நீதிமன்றத்தை அணுக யோசனை தெரிவித்ததாகவும்,​​ இதையடுத்து அவர் நீதிமன்றத்தை அணுகியதாகவும் தெரியவந்துள்ளது.

Home / Page-2 / Page-3 / Page-4 / Page-5

wanni

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி் தேர்தல் விஞ்ஞாபனம்

புலிகளின் யுத்தத்தால் சீரழிந்து போன வடபகுதி நூலகங்கள் அரசால் புனரமைக்கப்படுகின்றன!

வன்முறையாளர்களுக்கும ் பிரிவினையாளர்களுக்கும ் தருகிற ஆதரவுகளை இலங்கைத் தமிழர்கள் விலக்கிக் கொண்டால், அவர்களது பிரச்சினை தீரும்!

தமிழ்த் தேசியம் என்பது வாக்குகளுக்கான கோஷமல்ல

பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை முற்றுமுழுதாகத் தோற்கடிப்பதே, தமிழ் மக்களின் விமோசனத்துக்கான ஒரேயொரு வழியாகும்!