a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தமிழ்நியூஸ்வெப்
தீர்ப்பு
தூ
நெருப்பு
விழிப்பு
எங்கள் தேசம்
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலக்கியா இன்பொ   இலங்கைநெற்    மீன்மகள்
கிழக்கு


Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr
 

a_Thenee_head02

19.11.2008                                                        Vol.8                                                            Issue: 247

வாய்ப்பை நழுவ விடலாகாது!

mahinda_jajapakshakarunanithiசமீபத்தில் ஓர் ஆங்கில நாளிதழுக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷ அளித்திருக்கும் பேட்டியில் தெரிவித்திருக்கும் சில கருத்துகள் சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் உரியவை. இலங்கைத் தமிழர்களின் பிரச்னைக்கு ஒரு நிரந்தரமான தீர்வைக் காண அதிபர் ராஜபக்ஷ தயாராக இருப்பது உண்மையானால், அவருடன் ஒத்துழைக்கவும், நல்லதொரு தீர்வு காணவும் நாம் தயங்கக்கூடாது என்பதுதான் நடுநிலையாளர்களின் கருத்தாக இருக்க முடியும்.
அந்த நேர்காணலில் அதிபர் ராஜபக்ஷ இந்திய - இலங்கை உறவு குறித்தும், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் தமிழக முதல்வரின் பங்கு பற்றியும் கூறியிருக்கிறார். இதற்குமுன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய - இலங்கை உறவு சுமுகமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கும் அதிபர் ராஜபக்ஷ, இந்தியாவின் ஒத்துழைப்பும் தலையீடும் இல்லாமல் இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியாது என்பதை ஏற்றுக்கொண்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அவர் தெரிவித்திருக்கும் இன்னொரு கருத்து இதனினும் முக்கியத்துவம் வாய்ந்ததும், இந்தப் பிரச்னையில் தமிழர்களுக்கு நியாயமான உரிமைகளைப் பெற்றுத்தரும் வாய்ப்பை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறது. அது, அதிபர் ராஜபக்ஷ தமிழக முதல்வர் கருணாநிதியின் மீது வைத்திருக்கும் அபரிமிதமான மதிப்பும் மரியாதையும்தான்.  இந்தியாவிலேயே முதிர்ந்த அரசியல் தலைவரான தமிழக முதல்வர் கருணாநிதியின் மீது தனக்கு மிகுந்த மரியாதை எப்போதுமே உண்டு என்றும், இலங்கையின் ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவிக்காத வகையில் இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண விரும்பும் அவருடைய கருத்துகளையும் ஆலோசனைகளையும் திறந்த மனதுடன் தான் வரவேற்கத் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார் அதிபர் ராஜபக்ஷ.   (மேலும்) 30.10.08

__________________________________________________________________________________________________________

நாச்சிக்குடா மற்றும் அக்கராயன்குளத்தைக் கைப்பற்றியதாக இராணுவம் அறிவிப்பு

slarmy-30கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் முக்கிய இடமாக விளங்கிய நாச்சிக்குடாவைக் கைப்பற்றியிருப்பதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். நாச்சிக்குடாவை நோக்கி மூன்று முனைகளில் இராணுவத்தினர் முன்னேறியதாகவும், ஒரு குழுவினர் மன்னார்-பூநகரி வீதியூடாகவும், மற்றைய குழு பல்லவராயன்கட்டு பகுதியிலிருந்து தென் பகுதியாக ஏ-32 வீதியூடாகவும், மற்றைய குழு நாச்சிக்குடாவின் தென்பகுதி ஊடாகவும் முன்னேறியதாகவும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை மாலை நாச்சிக்குடா இராணுவத்தினரினரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்ததாக பாதுகாப்புத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நாச்சிக்குடாப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்;தினருக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றிருந்ததுடன், இரு தரப்புக்கும் பாரிய சேதங்கள் ஏற்பட்டிருந்தன. இதேவேளை, கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் குளத்தை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இராணுவத்தின் 57வது படைப்பிரிவு இன்று புதன்கிழமை பிற்பகல் கிளிநொச்சி தெற்கிலுள்ள அக்கராயன் குளத்தைத்; தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததாக அந்த இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான மோதல் இடம்பெற்றுவரும் நிலையிலேயே அக்காரயன் குளத்தைக் கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர்.எனினும், நாச்சிக்குடா மற்றும் அக்கராயன் குளத்தைஇராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகக் கூறப்படுவது தொடர்பில் விடுதலைப் புலிகள் தரப்பில் எந்தவித அறிவிப்புக்களும் இதுவரை விடுக்கப்படவில்லை.   (மேலும்) 30.10.08

__________________________________________________________________________________________________________

இலங்கைப் பிரச்னைக்கு காந்திய வழியில் பேசி அமைதியை உருவாக்க வேண்டும்': முதல்வர் கருணாநிதி

சென்னை, அக். 29: இலங்கையில் ஜனநாயகம் பூத்துக்குலுங்க இரு சாராரும் சேர்ந்து காந்திய வழியில் பேசி அமைதியை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி பேசினார். சென்னை சோழிங்கநல்லூரில் ராஜீவ் காந்தி சாலை மற்றும் ஒரகடம் தொழிற்பூங்கா சாலை மேம்பாட்டுப் பணிகளை புதன்கிழமை தொடங்கிவைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது: ராஜீவ் காந்தி இந்த மண்ணில் மறைந்தது பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, உருக்கமாக சில வரிகளிலே சுட்டிக் காட்டினார். அந்த உருக்கம் என்றைக்கும் நம்முடைய உள்ளங்களிலே நிலைத்திருக்கக்கூடிய உருக்கம் என்பதிலே மாறுபட்ட கருத்துக்கு இடமே கிடையாது. 5.11.1989-ல் கோவையில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் ராஜீவ் காந்தி பேசும்போது, இலங்கைத் தமிழர் பிரச்னையில் முழு ஒத்துழைப்பு தந்து வருவதாக தி.மு.க. அரசுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.  (மேலும்) 30.10.08

__________________________________________________________________________________________________________

அமெரிக்க தூதுவரின் சென்னை உரை கிளப்பும் கேள்விகள்

- ஞானம் அருட்பிரகாசம் 

Robert blakeஇலங்கையர்கள் சிலர் புலிகளை அழித்த பின்னரே இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும் என கருதுவதாகவும், அது தவறென்றும், இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை முன்வைத்து நடைமுறைப்படுத்துவதன் மூலமே புலிகளை தனிமைப்படுத்தமுடியும் என்றும், அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க தூதுவரின் இந்தக் கருத்து, பல வருடங்களுக்கு முன்னர் 1994இல், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் தலைமையிலான சிங்கள ஜனநாயக சக்திகள் மத்தியிலும், தமிழ் ஜனநாயக சக்திகள் மத்தியிலும் இருந்தது உண்மையே. அதற்கு பல வருடங்களுக்கு முன்னர் 1987ல் இந்தியா முன்னின்று ஒரு தீர்வினை முன்வைப்பதற்காக முயற்சித்த வேளையிலும் பலர் மத்தியில் ~இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வு –புலிகளைத் தனிமைப்படுத்தல்| என்ற கருத்து இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் புலிகளின் நடைமுறைகள் தவிடுபொடியாக்கி விட்டன. புலிகளின் அந்த நிலையில் இன்றுவரை மாற்றம் ஏதும் ஏற்படவுமில்லை. 1957ல் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வாக தமிழர்களுக்கு கணிசமான அதிகாரப்பகிர்வு வழங்கிய பண்டாரநாயக்க -செல்வநாயகம் ஒப்பந்தம் உருவானபோது அதை நடைமுறைப்படுத்தவிடாமல் சிங்கள இனவாதிகள் மட்டுமே குழப்பினர். அதன்பின்னர் தமிழர் தரப்பு ஆயுதம் ஏந்திப்போராடிய சூழ்நிலையில், இந்தியாவின் முயற்சியால் 1987இல் தமிழர்களின் நீண்டகால அபிலாசையை பூர்த்திசெய்யும் வகையில், வடக்கு-கிழக்க மாகாணங்கள் இணைக்கப்பட்டு மாகாண அரசு ஒன்று உருவாக்கப்பட்டது. ஆனால் சுயநல அதிகாரவெறி காரணமாக புலிகள் அந்த முயற்சியை சிங்கள இனவாதிகளுடன் சேர்ந்து சீர்குலைத்ததுடன் தொடர்ந்தும் யுத்தத்தையே முன்னெடுத்தனர். 1994ல் சந்திரிகா அரசாங்கம் புலிகளுடன் போர்நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தை மேற்கொண்டபோதும், புலிகள் அதைக்குழப்பிவிட்டு மீண்டும் போருக்குச்சென்றனர். இருந்தபோதிலும் அவர்  தனது அரசாங்கத்தின் சார்பாக 2000ம் ஆண்டில் ஒருதீர்வுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அந்த தீர்வுத்திட்டம் முன்னைய திட்டங்களைவிட அதிகளவான அதிகாரப்பகிர்வை தமிழர் பிரதேசங்களுக்கு வழங்குவதாக இருந்தது. .   (மேலும்) 29.10.08

__________________________________________________________________________________________________________

பிரேமசிறி கேமதாச - இலங்கை இசையுலகின் சக்கரவர்த்தி மாவலி மைந்தன் இலங்கையின் உலகப்புகழ்பெற்ற இசையமைப்பாளர்

hemathasaகலாநிதி பிரேமசிறி கேமதாச (Dr.Premasiri Khemadasa) தனது 71வது வயதில் 24-10-2008 அன்று கொழும்பு அப்பலோ மருத்துவமனையில் காலமானார். அவரது இறுதிச்சடங்குகள் அரசமரியாதையுடன் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஒக்ரோபர் 28ம் திகதி நடைபெற்றன. இறுதி மரியாதை செலுத்துவதற்கு கலையுலக பிரமுகர்கள் மட்டுமின்றி, சகல தரப்பையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தனர்.நாடகம், சினிமா, பலே, ஒப்பரா, ரெலிநாடகம் என சகல துறைகளிலும் கேமதாச தனது முத்திரையை பதித்த ஒரு இசை விற்பன்னராவார். உலகின் புகழ்பெற்ற எல்லா இசைமன்னர்களையும்போலவே தனது இசை சாம்ராஐயத்தை கட்டியெழுப்புவதற்கு கேமதாச இலங்கையின் நாட்டுப்புற இசையையே அத்திவாரமாகப் பயன்படுத்தினார். அவர் இலங்கையின் நாட்டுப்புற இசையுடன் இந்துஸ்தானி இசையையும் மேற்கத்தைய மரபு இசையையும் இணைத்து, தனது அற்புதமான இசைத்திறமையை வெளிக்கொணர்ந்தார். சர்வதேச பரிசுபெற்ற ‘கம்பரெலியா’(கிராமப்பிறழ்வு) என்ற சிங்கள திரைப்படத்தின் மூலம் உலகப்புகழ்பெற்ற நெறியாளர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசின் (Lester James Piries) ‘ஹொலுகடவத்த’(ஊமைக்காதல்) என்ற படத்துக்கு இசையமைத்ததின் மூலம், சிங்களத் திரையுலகில் கேமதாச புகழ்பெற்றார். சிங்கள திரையுலகின் முடிசூடாமன்னனாக விளங்கிய காமினிபொன்சேகாவும், பிரபல நடிகை அனுலா கருணதிலகாவும் நடித்த ‘ஹொலுகடவத்த’என்ற இந்தப்படம் பெரும்வெற்றிவாகை சூடிய படமாகும். இதுதவிர லெஸ்டரின் வேறு சில படங்களுக்கும் கேமதாச இசையமைத்துள்ளார்.கேமதாசவின் முக்கிய பங்களிப்புகளில் ஒன்று, அவர் இலங்கையின் தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு தனது இசைமூலம் வழங்கிய பங்களிப்பாகும். 1965ம் ஆண்டில் இலங்கையின் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இயங்கிய இலங்கை தொழிற்சங்க சம்மேளனம் (CTUF) தனது வெள்ளி விழாவைக் கொண்டாடிய வேளையில், 25 கலைஞர்களுக்கு மேல் பங்குபற்றிய ‘கம்உதாவ’(உதிக்கும் சூரியன்), ‘றத்துமல்’(செம்மலர்கள்) என்ற இரு புரட்சிகர இசைநாடகங்களை தயாரித்து அதன் மாநாட்டில் மேடையேற்றினார்.   (மேலும்) 29.10.08

__________________________________________________________________________________________________________

வீடுகள் மீளக்கட்டித் தரப்பட்டால் யாழ் செல்வோம்: குடாநாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள்

மோதல்கள் காரணமாக அழிக்கப்பட்டிருக்கும் தமது வீடுகள் மீண்டும் அமைத்துத் தரப்படுமாயின் அங்கு சென்று வாழ்வதற்குத் தயாராக இருப்பதாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு 18 வருடங்களாக இடம்பெயர்ந்திருக்கும் முஸ்லிம் மக்கள் தெரிவித்துள்ளனர்.  யாழ் குடாநாட்டிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட 18வது வருடாந்த நிறைவு நிகழ்வு நேற்று திங்கட்கிழமை புத்தளத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் இந்தியா, மலேசியா, கனடா, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் தூதரகப் பிரதிநிதிகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி யாழ் குடாநாட்டிலிருந்த முஸ்லிம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டிருந்தனர். அங்கிருந்து வெளியேறிய முஸ்லிம்கள் புத்தளம், மன்னார் ஆகிய பகுதிகளில் தங்கியிருக்கின்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிய 100,000ற்கும் அதிகமான முஸ்லிம்கள் புத்தளம் மற்றும் மன்னார் பகுதிகளில் 161 முகாம்களில் தங்கியிருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் கூறினார். எனினும், துரதிஸ்டவசமாக வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் இன்னமும் மீள்குடியமர்த்தப்படவில்லையென ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். இதேவேளை, யாழ்ப்பாணத்திலுள்ள தமது வீடுகள் மோதல்களால் அழிக்கப்பட்டிருக்கும் எனவும், எனினும், வீடுகள் மீள அமைத்துக்கொடுக்கப்பட்டால் அங்கு சென்று குடியேறத் தயாராக இருப்பதாகவும் குடாநாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு புத்தளத்தில் தங்கியிருக்கும் வி.அகுமுதீன் பி.பி.சி. செய்திச் சேவைக்குக் கூறினார். தமது கிராமத்தின் தற்போதைய நிலமையைப் பார்ப்பதற்கு அங்கு செல்லவிரும்புவதாக மன்னாரில் இடம்பெயர்ந்திருக்கும் பாத்திமா இஸ்மாயில் தெரிவித்துள்ளார். -  ஐஎன்லங்கா இணையம்

__________________________________________________________________________________________________________

I myself will take charge of the political process and see it through politically”

N. Ram

RajpakshaA military solution is for the terrorists, a political solution is for the people living in this country, says President Mahinda Rajapaksa.

THE VISION: According to President Mahinda Rajapaksa, Sri Lanka belongs to all its citizens — Sinhalese, Tamils, Muslims, others.

In an interview given to The Hindu Monday evening at ‘Temple Trees,’ Colombo — formerly the official residence of the Prime Minister of Sri Lanka — President Mahinda Rajapaksa responds to questions on a range of key issues: the political process and the status of devolution, military operations and the humanitarian situation in the Wanni, bilateral relations with India, and his vision of an ethnically harmonious Sri Lanka.  (Read) 29.10.08

__________________________________________________________________________________________________________

சிறிலங்காவின் சுமையில் பங்குகொள்ளும் இந்தியா!

வழக்கம்போலவே கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது அரசியலை அரங்கேற்றியிருக்கிறார். ஈழத்தமிழ் மக்கள் படும் அவலங்களை அறிகின்றபோது தூங்கக்கூட முடியாமல் துடிக்கின்றேன் என்று கண்ணிர்விட்டழுத கலைஞர்,  அந்தத் தமிழமக்களின் துயர் துடைக்கமுடியாவிட்டால் ஆட்சியைக் கூட துறக்கலாமா என்று சிந்திப்பதாகத் தெரிவித்திருந்த கலைஞர், இப்போது தமது நடவடிக்கைகள் மத்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தாத வகையில் பார்த்துக்கொள்வதாக உறுதியளித்திருக்கின்றார். கலைஞரை, அவரது அரசியல் வாழக்கையை தெரிந்துகொண்டவர்களுக்கு கலைஞரின் நடவடிக்கை ஒன்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்காது. ஏன், இப்படித்தான் நடக்கும் என்று முன்கூட்டியே அவர்களால் கணித்திருக்கவும் முடியும். இதனை அறிந்துகொள்ளாமல், ஏதோ தமிழகமே புலிகள் பக்கம் திரும்பிவிட்டது போல புலிகளின் ஊதுகுழல்கள் துள்ளிக்குதித்தனர். ஆக, நடந்திருப்பது என்ன? இதுகாலவரை வன்னியிலுள்ள தமிழ்மக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம்தான் உணவுப்பொருட்களை அனுப்பிவருகின்றது. அங்குள்ள மக்களுக்கு என்று நாம் குறிப்பிடுவது, புலிகளையும் சேர்த்துத்தான்.எத்தனை அனர்த்தம் நடந்து முடிந்துவிட்டபோதிலும் இதுவரை ஒரு தமிழ்மகன் கூட பட்டினியால் இறந்துவிட்டதாக நாம் எங்கும் அறியவில்லை. அந்தளவிற்கு எப்போதும் அங்கு உணவுப்பொருட்கள் கையிருப்பில் வைக்கப்பட்டிருக்கின்றன. இதற்காக சிறிலங்கா அரசாங்கம் செலவிடுகின்ற தொகை மிகப் பெரியது. இப்போது இந்தியா அந்தச் சுமையில் ஒரு மிகச் சிறிய பகுதியைப் பொறுப்பேற்றிருக்கின்றது.ஆக, அந்தத் தொகையை இப்போது யுத்தத்திற்கு செலவிட இந்தியா உதவுகின்றது.

__________________________________________________________________________________________________________

கொழும்பிலும் மன்னாரிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் விமானத்தாக்குதல்: கொழும்பில் மக்கள் பதற்றம்

 தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானத்தாக்குதல் கொழும்பின் சப்புகஸ்கந்த எரிபொருள் தாங்கிப்பகுதியிலும் மன்னார் தள்ளாடி இராணுவ தலைமையக பகுதியிலும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானங்கள் இரவு 11.28 மணியளவில் கொழும்பின் சப்புகஸ்கந்த எரிபொருள் தாங்கிப்பகுதியில் தாக்குதல்கள் நடத்தியாதாகவும் அதனையடுத்து புலிகளின் விமானத்திற்கு படையினர் கொழும்புத்துறைமுகம் மற்றும் ஏனைய பகுதிகளில் இருந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் இரவு 11 மணியளவில் மன்னார் தள்ளாடி இராணுவ தலைமையக பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின்; விமானங்கள் இரண்டு குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தியுள்ளதாக இராணுவப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். எனினும் எந்த சேதமும் இல்லை என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துதுள்ளன. இதனையடுத்து கொழும்பில் முழுமையாக மின்சாரம் தடைசெய்யப்பட்டுள்ளது. பாரிய சத்தங்களுடன் பல நிமிடங்கள் தொடர்ச்சியான படையினரின் வான் நோக்கிய தாக்குதலில் கொழும்பு மற்றும் கொழும்பையண்டிய பகுதிகளில் மக்கள் பதற்றத்துக்கு உள்ளாகியிருப்பாதாக தெரியப்படுகிறது.

__________________________________________________________________________________________________________

வன்னியில் இடம்பெறும் யுத்தம் சிவிலியன்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஐ.நா. கவலை

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் விமானக்குண்டுத் தாக்குதல் 

வன்னியில் இடம்பெற்றுவரும் யுத்தம் சிவிலியன்களின் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து தாம் மிகவும் கவலையடைந்துள்ளதாக மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான ஐ.நா.வின் விஷேட பிரதிநிதி வோல்ட்டர் கெலின் தெரிவித்துள்ளார். இதனால் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் பல ஆண்டுகளாக இடம்பெயர்ந்துள்ள மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண்பதற்கு அரசாங்கம் மேலும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஐ.நா. பொதுச்சபையில் உணவுக்கான உரிமை தொடர்பில் நடைபெற்றுவரும் மூன்றாவது குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான ஐ.நா.வின் விஷேட பிரதிநிதி வோல்ட்டர் கெலின் மேலும் கூறியுள்ளதாவது: இலங்கையில் பல ஆண்டு காலமாக இடம்பெயர்ந்துள்ள மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு அரசாங்கம் மேலும் அர்பணிப்புடன் செயற்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றோம். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் நலன்கள் தொடர்பிலும் விஷேட கவனம் செலுத்தப்பட வேண்டும். இது தொடர்பில் அரசாங்கத்தின் உறுதியான முன்மொழிவுகளையும், காத்திரமான நடவடிக்கையையும் எதிர்பார்க்கின்றேரஓம். இந்நிலையில் வன்னியில் இடம்பெறும் யுத்தம் சிவிலியன்களின் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து நாம் மிகுந்த கவலையடைந்துள்ளோம். அங்கு இடம்பெற்றுவரும் மோதல்கள் காரணமாக 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். நிரந்தர சமாதானம் ஏற்படாது இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைக்கு உறுதியான தீர்வை காணமுடியாது. உலகில் மில்லியன் கணக்கான மக்கள் உள்நாட்டு மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர்.  (மேலும்) 29.10.08

__________________________________________________________________________________________________________

இலங்கை - இந்திய நெருக்கடி தணிவும் உணவு உதவி கிளப்பப்போகும் புதிய சிக்கலும்

- ஜெயபாலன்

 இந்தியாவின் பிரதமர்,வெளிவிவகார அமைச்சர்.பாதுகாப்பு செயலாளர்,வெளிவிவகார செயலாளர் என ஒரு பெரும்பட்டாளமே இலங்கை அரசுடன் கடந்த இருவாரங்களாக தொடர்பு கொண்டு, இலங்கைத் தமிழர் விவகாரம் சம்பந்தமாக, இந்திய - இலங்கை இருதரப்பு உரையாடல்கள் நிகழ்ந்தன. பின்னர், 26-10-2008 இல் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சிரேஸ்ட ஆலோசகரும், மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான பசில் ராஜபக்ச புதுடில்லி சென்று, இந்திய அரச உயர்மட்டத்துடன் பேசி, சில சமரச முடிவுகளுடன் கொழும்பு திரும்பியுள்ளார். தமிழ்நாடு மூட்டிவிட்ட நெருப்பால் தகித்துப்போயிருந்த புதுடில்லியை, பசிலின் வருகை நீர் ஊற்றி சற்று தணியவைத்துள்ளது. இலங்கை ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகருடனான சந்திப்பினைத் தொடர்ந்து, அன்றைய தினமே இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப்முகர்ஜி சென்னைக்கு விரைந்து,கருணாநிதியை சந்தித்துப்பேசி, தமிழ்நாட்டில் கொழுந்துவிட்டு எரிந்த நெருப்புக்கு தண்ணீர் வார்த்துள்ளார். இதன்மூலம் தி.மு.க. உதவியுடன் மத்தியில் ஆட்சிபரிபாலனம் செய்துவந்த காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசாங்கம் பாதுகாக்கப்பட்டதுடன்,  தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி நடாத்திவரும் தி.மு.க. மாநில அரசாங்கமும் பாதுகாக்கப்பட்டுள்ளது. உண்மையில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, மத்திய காங்கிரஸ் அரசாங்கமும் தமிழக தி.மு.க. அரசாங்கமும் போட்டுவரும் வேசம் போலியானது என்பதை,அரசியல் தெரிந்தவர்கள் நன்கு அறிவர். தமிழ் நாட்டில் அரசியல் ஆதாயம் தேடுபவர்களாலும், புலிகள் வீசும் பணத்துக்காக கூலிக்கு மாரடிப்பவர்களாலும் கிளப்பிவிடப்பட்ட புலி ஆதரவு கிளர்ச்சிகளால், மத்திய –மாநில அரசுகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்தை, அவ்வரசுகள் சாதுரியமாக முறியடித்ததுடன், கருணாநிதி தனது வாரிசு அரசியலுக்கு சவாலாக விளங்கிய வை.கோபாலசாமியையும் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறையில் தள்ளியுள்ளார். இந்திய அரசைப் பொறுத்தவரையில், இலங்கை பற்றியும் இலங்கை தமிழர்கள் பற்றியும் தெளிவான நிலைப்பாடும் வேலைத்திட்டமும் உண்டு.    (மேலும்) 28.10.08

__________________________________________________________________________________________________________

இலகுரக இராணுவ தளபாடங்களையே இலங்கைக்கு இந்தியா வழங்கி வருகின்றது - இராணுவ பயிற்சி எதனையும் வழங்கவில்லை என்கிறார் பிரணாப் முகர்ஜி

40 ஆண்டு போரை 4 நாட்களில் நிறுத்த முடியாது - கருணாநிதி

pranab mukherjeeாடர் கருவிகள் உள்ளிட்ட இலகுரக இராணுவ தளபாட உதவிகளே இலங்கைக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இலங்கை இராணுவத்திற்கு இந்தியாவில் எந்தப் பயிற்சியும் அளிக்கப்படவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதுவர் பசில் ராஜபக்ஷ எம்.பி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியுடன் நேற்று முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தி மத்திய அரசிற்கும் தி.மு.க.விற்கும் இடையில் நிலவிய முறுகலுக்கு சுமுக தீர்வை ஏற்படுத்திய பின்னர் இந்திய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மேலும் கூறியுள்ளதாவது: இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழக எம்.பி.க்கள் பதவி விலகும் தீர்மானத்தை கைவிடுவதாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி உறுதியளித்துள்ளார். இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதுவருடன் மத்திய அரசாங்கம் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பான முழு விபரங்களையும் நான் அவரிற்கு எடுத்துக்கூறினேன். இதன்போது தமிழ் மக்கள் குறித்த மத்திய அரசின் கரிசனை வெளியிடப்பட்டதையும் நான் அவரிற்கு சுட்டிக்காட்டினேன். இது தொடர்பில் அவர் தனது திருப்தியை வெளியிட்டார். இதையடுத்து தி.மு.க எம்.பி.க்கள் பதவி விலகும் தீர்மானத்தை கைவிடுவதற்கும் சம்மதித்தார். இலங்கை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்பதை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலம் மாகாணங்களுக்கு அதிகார பரவலாக்கம் செய்யப்படவேண்டும் என்பதையும் தெரிவித்துள்ளோம்.  (மேலும்) 28.10.08

__________________________________________________________________________________________________________

மாறும் உலகில் மாறத்தான் வேண்டும்

இரா. சோமசுந்தரம்

இப்படியாகப் பேசினால் கைது செய்வார்கள் என்பது மதிமுக தலைவர் வைகோ-வுக்கு தெரியாத விஷயம் அல்ல. ஏற்கெனவே 18 மாதங்கள் சிறையில் இருந்த அவருக்கு இதெல்லாம் தெரிந்தவைதான். ஆகவேதான் பேசினார். அதற்கான காரணங்கள் இரண்டு. முதலாவதாக, இலங்கைத் தமிழர் ஆதரவு விவகாரத்தில் இலங்கைத் தமிழருக்காக இந்திய அரசை எதிர்த்த அரசியல் தலைவர் என்ற புகழ் தனக்கே இருக்க வேண்டும். திமுக தலைவர் கருணாநிதிக்கு போய்விடக்கூடாது இரண்டாவதாக, தமிழக கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு குரல் கொடுத்தாலும், ஊடகங்கள் முக்கியத்துவம் தந்தாலும், தமிழ்நாட்டு மக்களிடையே 1980களில் நிலவிய உணர்ச்சிக் கொந்தளிப்பு காணப்படவில்லை. அந்த கொந்தளிப்பை ஏற்படுத்தத்தான் தனித்தமிழ்நாடு பேச்சு, திரைத்துறை பேரணி, ரயில்எரிப்பு, ராஜீவ் சிலை உடைப்பு எல்லாமும். ஆனால் இவை தமிழக மக்களிடம் இலங்கைத் தமிழருக்கு ஆதரவான உணர்ச்சியைத் தூண்டுவதற்கு பதிலாக, எதிர்நிலை கருத்தையே உண்டாக்குகின்றன. 1980களில் இலங்கைத் தமிழருக்காக தமிழ்நாடு முழுவதும் கொதித்தெழுந்தது. ஆதரவு திரண்டது. நிதி திரண்டது. அவர்கள் சார்பில் நடத்தப்பட்ட புத்தகக் கண்காட்சிகளில் புத்தகமும் கையேடும் வாங்காத தமிழரே இருக்க முடியாது. பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழருக்காக மருந்துகளும், துணிகளும் மூட்டைமூட்டையாக எல்லா ஊர்களிலும் கொடுத்தார்கள். அன்றைய தினம் இலங்கைத் தமிழனை தமிழகத் தமிழன் பிரித்துப் பார்க்கவில்லை. பிரச்னையை மக்களிடம் கொண்டுசெல்வதற்காக காயமடைந்த, பாதிக்கப்பட்ட போராளிகளுக்கு தமிழக கல்லூரி மாணவர்கள்தான் தோழர்களாக நின்றனர். தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் நடைபெற்ற ஊர்வலங்களில் பங்குகொண்டோர் அரசியலுக்கு அப்பாற்பட்ட தமிழர்கள். (மேலும்) 28.10.08

__________________________________________________________________________________________________________

கிளிநொச்சியில் தற்பொழுது பொதுமக்கள் எவரும் இல்லை - பசில் எம்.பி. தெரிவிப்பு

ொதுமக்களுக்கு சில கஷ்டங்கள் இருப்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அவற்றை நாம் குறைக்க வேண்டியுள்ளது. கிளிநொச்சியில் த