|
_
புலிகளும் அழிந்து போனால்…” இலங்கை தமிழ் சமூகத்தின் எதிர்காலம் ??
- மனோரஞ்சன்
கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் அநுராதபுரத்தில் அமைந்திருந்த விமானப்படைத் தளத்திற்கு 21 கரும்புலிகளை அனுப்பி பலிகொடுத்த வீர சாகசத்தோடு தமிழீழம் வந்து விட்டது போன்ற பெரும் ஆர்பரிப்பு புலிகளின் தமிழீழக் கனவில் மூழ்கியிருந்த தமிழ் சமூகத்திடமிருந்து எழுந்தது. ஆனால் அந்த தாக்குதலில் இருந்து இன்றுவரை தமது கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசத்தின் கணிசமான பகுதியையும் இழந்து மன்னாரை ஏன் விட்டோம் மல்லாவியை ஏன் விட்டோம், முறிகண்டியிலிருந்து ஏன் பின்வாங்கினோம் என்று கதை சொல்ல வேண்டிய நிலைக்கு புலிகளும் அவர்களது ஆதரவு பிரிவினரும் தள்ளப்பட்டுள்ளனர். தமிழரின் விடுதலைக்காக புலிகளின் வழிகாட்டலில் நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டத்தின் தோல்வி நிலையையே இவை காட்டி நிற்கின்றன. அரசாங்கம் வன்னியில் இருந்து சகல அரச சார்பற்ற அமைப்புக்களையும் வெளியேறும்படி உத்தரவிட்டு தமது இராணுவ நடவடிக்கையை முடுக்கி விட்டிருப்பதானது இவ்வளவு காலமும் இலங்கையில் வடக்கு கிழக்கில் நடந்து வந்த யுத்த நடவடிக்கையை ஒரு புதிய பரிமாணத்திற்கு கொண்டு போயிருக்கிறது. புலிகளின் தலைமையைக் குறிவைத்து அரசாங்கத்தின் முழு மூச்சான இராணுவ நடவடிக்கைக்கு எதிராக இந்தியாவில் தமிழ் நாட்டைத் தவிர எந்த ஒரு நாடுமே எதிர்க் கருத்து தெரிவிப்பதை தவிர்த்து வருகிறது. எவராக இருந்தாலும் மோதலுக்குள் அகப்பட்டுள்ள மக்களின் மனிதாபிமானப் பிரைச்சினை பற்றிய அக்கறை என்பதோடு தமது கருத்தையோ கண்டனங்களையோ நிறுத்திக் கொள்ளுகின்றனர். அதாவது இலங்கை இராணுவம் புலிகளை இராணுவ ரீதியாக ஒடுக்குவது பற்றி எவரும் தமது எதிர்க் கருத்தை தெரிவிப்பதாயில்லை. இந்தக் கட்டத்தில்தான் பெரும்பாலான தமிழர்களிடம் இருந்து ஒரு கேள்வி பலமாக எழுப்பப்படுகின்றது. (மேலும்) 04.11.08
__________________________________________________________________________________________________________
கனடாவில் மோசடி அமைப்பு C.A.R.E - கண்காணிக்கிறது காவல்துறை.
- ஸ்காபரோ கானமயில்
கனடாவில் புலிகளின் காசுகறப்பு பணி மீண்டும் மிகவேகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அல்லலுறும் தாயக உறவுகளுக்கு உதவுங்கள் என்ற கோசத்துடன் இந்த காசு கறப்பை புலிகள் ஆரம்பித்துள்ளனர். அரவணைப்போம், கவளம், உறவுகளின் துயர் துடைப்போம், காக்கும் கரங்கள் என பல்வேறு மாய்மால சொற்பதங்களை இந்த காசுக்கறப்புக்காக புலிகள் பாவிக்கின்றனர். புலிகளின் பினாமி அமைப்பான உலகத் தமிழர் இயக்கத்திற்கு தடை விழுந்த பின்னர், பெருந்தொகை பணம் சேர்ப்பதற்காக புலிகளால் இப்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பெயர்தான் கெயார் ((C.A.R.E). கெயார் என்றால் பலருக்கு சர்வதேச தொண்டு நிறுவனமான கெயார் இன்ரநாசனல் (Care International) என்னும் அமைப்புத்தான் ஞாபகம் வரும். இந்த சர்வதேச அமைப்பானது உலகம் பரந்த சட்டபூர்வமான தொண்டு நிறுவனமாகும். இலங்கையிலும் பாடசாலைப் பிள்ளைகளுக்கு பிஸ்கட் மற்றும் பால் போன்ற சத்துணவுகளை இந்த அமைப்ப வழங்கியது எமக்கு நினைவிருக்கும். ஆனால் கனடாவில் புலிகளால் உருவாக்கப்பட்டிருக்கும் C.A.R.E என்றும் அமைப்பானது ஒரு சுத்துமாத்து C.A.R.E ஆகும். கனடாவில் தற்போது பல்வேறு நிகழ்சிகளை நடாத்தி சேர்க்கப்படும் பெரும்தொகைப் பணம் எங்கே கொடுக்கப்படுகிறது என்று கேட்டால், அது C.A.R.E ஊடாக வன்னி மக்களுக்கு அனுப்பப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் புலிகளின் இந்தபுதிய அமைப்பான C.A.R.Eஊடாக அனுப்பப்படும் பணம் பிரபாகரன் குடும்பத்தை பராமரிப்பதற்காக அனுப்பப்படுகிறதேயன்றி, அல்லலுறும் வன்னி மக்களுக்காக அல்ல. ரொரன்ரோவைச் சேர்ந்த தமிழர்கள் அங்கம் வகிக்கும் பல சமூக அமைப்புக்கள், ஊர் சங்கங்கள், நடனப்பள்ளிகள், வைத்தியர்கள் உட்பட பலருமே இந்த புலிகளின் சுத்துமாத்து C.A.R.E ன் வலைக்குள் விழுத்தப்பட்டுள்ளனர். இந்த C.A.R.E அமைப்பு எங்கே இருக்கிறது என்று கேட்டால் ஒரு தொலைபேசி இலக்கம் மட்டுமே உண்டு. பதிவிலக்கமோ காரியாலயமோ எதுமே இல்லை. இந்த சுத்துமாத்து C.A.R.E தொடர்பான சகல தகவல்களும் கனேடிய பாதுகாப்பு துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த திருட்டு C.A.R.E உடன் தொடர்பானவர்கள் மட்டுமின்றி, இதற்கு பணம் வழங்குபவர்களும் கனேடிய பாதுகாப்பு துறையின் கண்காணிப்புக்கும் விசாரணைக்கும் உட்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே துஷ்டரைக்கண்டால் தூரவிலகுவதுபோல், இந்த கள்ளக் C.A.R.E க் கண்டால், பல காத தூரம் விலகி நிற்பது கனேடிய தமிழருக்கு நல்லது.
__________________________________________________________________________________________________________
ஈழம்: தமிழ் சினிமாவின் 6 மணிநேரத் தியாகம் !
இலங்கையில் நடக்கும் பிரச்சினைக்கெல்லாம் நாம் ஏன் உண்ணாவிரதம் இருக்கவேண்டும் என்று தானும், அஜித்தும் பேசியதாக சில பத்திரிகைகளில் வந்த வதந்தி தன்னைச் சங்கடப்படுத்தியதாக பேசிய அர்ஜூன் 23 ஆண்டுகளாக தமிழ் உப்பைச் சாப்பிட்டுக் கொண்டிப்பவன் எப்படி அப்படி பேசுவேன் என்று புலம்பினார். அஜித் பேசும் போது இவையெதுவும் வதந்தி இல்லை என்பதுபோல சினிமா இன்டஸ்ட்ரியை, சினிமா இன்டஸ்ட்ரியாக இருக்க விடுங்கள் என்று ஒரு வாக்கியத்தில் முடித்துக் கொண்டார். இதன் பொருள் சினிமா உலகிற்கு எதற்கு அரசியல் எல்லாம் என்பதுதான். இந்த அளவுக்கு வெளிப்படையாக இருப்பதால் அஜித்தைப் பற்றி நாம் விமரிசிக்க ஏதுமில்லை. ஜெயம் ரவி பேசும்போது ஏதோ சினிமா உலகால்தான் ஈழத்து தமிழர்கள் தங்கள் பிரச்சினைகளை மறந்து சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள் என்றார். இதை புலம்பெயர்ந்த ஈழத்து தமிழர்கள்கூட ஒத்துக்கொள்வார்கள் என்றுதான் நினைக்கிறோம். அதே சமயம் அமெரிக்க இராணுவத்துக்கு எதிராக போராடும் ஈராக்கின் மக்கள் பொழுது போக்கிற்காக ஹாலிவுட் படங்களைப் பார்த்து மகிழ்வதில்லை என்ற உண்மையையும், வன்னிக் காடுகளில் அகதிகளாக ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கும் இது பொருந்தும் என்பதையும் புலம் பெயர்ந்தவர்கள் பரிசீலிக்கவேண்டும்.ராமேஸ்வரத்தில் உணர்ச்சிவசப்பட்டு உரையாற்றியதற்காக அமீரும், சீமானும் கைது செய்யப்பட்டதை சிலர் குறிப்பிட்டாலும் பலர் குறிப்பிடவில்லை என்பதோடு என்ன பேசவேண்டும் என்பதில் உஷாராக இருந்தனர். மேலும் இந்திய- இலங்கை நாடுகளின் இறையாண்மைக்கெதிராகவோ, மத்திய மாநில அரசுகளுக்கெதிராகவோ எதுவும் பேசக்கூடாது, ஏன் அதிபர் ராஜபக்க்ஷேவைப் பற்றிக் கூட பேசக்கூடாது என்று நடிகர் சங்கம் தடையுத்தரவு போட்டிருந்ததை மன்சூர் அலிகான் போட்டுடைத்தார். இவற்றைப் பற்றியெல்லாம் பேசக்கூடாது என்றால் ஈழத்தின் போராட்டத்தில் என்ன எஞ்சியிருக்கும்? பல நடிகைகள் சன்னின் செய்தியாளர்களிடம் தனியாக பேசும் போது ஏதோ இலங்கையில் உள்ள மக்கள் உணவு, உடை இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்பதற்காகவும் அதற்காக உதவி செய்யும் பொருட்டே இந்தப் போராட்டம் நடக்கிறது என்றார்கள். அதாவது ஈழத்தின் தமிழ்மக்கள் பூகம்பம், சுனாமியால் பாதிக்கப்பட்டு தங்கள் வயிற்றுப்பாட்டுக்காக ஏதோ பிச்சை போல யாசகம் கேட்கிறார்கள் என்ற புரிதலில்தான் பல நடிகர்கள் பேசினார்கள். இதை விட ஈழப் போராட்டத்தை கொச்சைப் படுத்த முடியுமா என்ன?. (மேலும்) 04.11.08
__________________________________________________________________________________________________________
WHAT “MUSLIMS” ARE WE? THE MOMENT OF TRUTH!
S.M.M. BAZEER
The writer was appalled by the appeal made by Prof. Jawahirullah to the Chief Minister of Tamilnadu, M. Karunanithi stating that “he should remember the Muslims in his effort to bring peace to the Tamil regions of Sri Lanka.” He also suggested that “it is the need of hour that both Tamils and Tamil Muslims should join together to fight the Sinhala racism”.Prof. Jawahirullah, the president of the TMMK ( Tamilnadu Muslim Munnetra Kazhagam ) , has come out openly, for the first time with regards to salvaging the “ Tamil Muslims “ of Sri Lanka. (Sri Lanka Guardian -October 24th). The concern of the TMMK is genuine unlike other Tamilnadu Muslim political parties but it is a misguided appeal at the wrong time to the wrong person. It would have been more appropriate for the TMMK to have voiced their concern about the civilian causalities of the war zone rather than seeking help from M. Karunamithi to protect the “Tamil Muslims” or “Tamil speaking Muslims”. (Read) 04.11.08
__________________________________________________________________________________________________________
ஈழத்தைப் பொறுத்தவரை ஒரே தலைவர் பிரபாகரன்தான், தமிழ் தேசிய இனத்தின் ஒரே தலைவர் அவர்தான். புலிகள் வேறு, தமிழர்கள் வேறு இல்லை. இரண்டையும் பிரித்துப் பார்க்கக் கூடாது.
. சிவாஜிலிங்கம்
நெல்லையில் இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் இருவர் எழுப்பிய புலிகள் ஆதரவு முழக்கத்தைக் கேட்டு அதிர்ந்து போயிருக்கிறது மத்திய, மாநில உளவுத்துறைகள்.
இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் பேச்சிலும் அனல் பறந்தது. ``ஈழத்தைப் பொறுத்தவரை ஒரே தலைவர் பிரபாகரன்தான், தமிழ் தேசிய இனத்தின் ஒரே தலைவர் அவர்தான். புலிகள் வேறு, தமிழர்கள் வேறு இல்லை. இரண்டையும் பிரித்துப் பார்க்கக் கூடாது. புலிகளுக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் சிங்கள அரசு தமிழர்களைக் கொன்று குவித்து வருகிறது. தமிழ் மக்களின் பாதுகாப்புக் கேடயம் புலிகள்தான். புலிகளைப் பலவீனப்படுத்துவது தமிழர்களுக்கு மட்டுமல்ல... இந்தியாவின் பாதுகாப்புக்கும் ஆபத்தான விஷயம். யுத்தத்தைச் சாக்காய் வைத்து சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றன. கதிர்காமம் பகுதியில் எரிபொருள் இறக்குமதி செய்ய துறைமுகம் அமைக்க ஐந்தாயிரம் கோடி ரூபாயை சீனா வழங்கியிருக்கிறது. மன்னார் குடாவிலுள்ள 9 எண்ணெய் வயல்களில் மூன்று சீனாவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்குக் கேடு விளைவிக்கும் செயல். இனி அமையப்போகும் தமிழ் ஈழம்தான் இந்தியாவின் பாதுகாப்புக்கு உறுதுணையாய் நிற்கும். எனவே இந்திய அரசு இலங்கையில் போர் நிறுத்தம் செய்யச் சொல்லிவிட்டு உணவு, மருந்துப் பொருட்களை அனுப்பினால்தான் சரியாக இருக்கும். புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். விரைவில் ஈழத்தில் மட்டுமல்ல, ஐ.நா.விலும் புலிக்கொடி பறக்கும் காலம் வரும்'' என்று அவர் பேசியபோது பயங்கர கரகோஷம். அடுத்ததாய் பேசிய ஸ்ரீகாந்தா எம்.பி.யின் பேச்சிலும் காரம் குறையவில்லை. ``இலங்கையில் மலையகத் தமிழர்கள் பத்து லட்சம் பேரின் குடியுரிமையை இலங்கை அரசு ஒரே உத்தரவில் ரத்து செய்த போது, இந்திய அரசு அது ஏன் என்று தட்டிக்கேட்டது. நமக்கென்ன என்று சும்மா இருக்க வில்லை. இலங்கைப் பிரச்னையில் இந்தியா உடனே தலையிட வேண்டும் என்று கோர எங்களுக்கு உரிமை இருக்கிறது. (மேலும்) 04.11.08
__________________________________________________________________________________________________________
தீர்வு திட்டத்தை விரைவில் முன்வைக்க சர்வ கட்சிக்குழு துரிதமான ஏற்பாடு
இவ்வாரம் இரு நாட்கள் கூட்டம்; இந்தியா செல்லும் ஜனாதிபதி தலைவர்களுடன் முக்கிய சந்திப்பு
இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வுத் திட்டமொன்றைத் தயாரிப்பதற்காக, அரசியல் கட்சிகளுக்கிடையே பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் பணியை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு துரிதப்படுத்தியுள்ளது.இதற்கென சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கூட்டத்தை இவ்வாரமும் இரண்டு நாட்கள் கூடி ஆராய முடிவு செய்துள்ளதாக குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரன தினகரனு’க்கு நேற்றுத் தெரிவித்தார். இவ் வாரம் நடைபெறும் இந்த இரண்டு நாள் சந்திப்பில், நிகழ்ச்சி நிரலின்படி விடயங்களை ஆராய்ந்து பொது இணக்கப்பாடொன்றை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 12ஆம் திகதி ‘பிம்ஸ்ரெக்’ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா செல்கின்றார். அவ்வேளையில் இந்தியத் தலைவர்களைச் சந்திக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகள் குறித்தும், எவ்வாறான தீர்வுத்திட்டமொன்று முன்வைக்கப்படுகிறது என்பது பற்றியும் தெளிவுபடுத்துவாரெனத் தகவல்கள் தெரிவித்தன.இந்நிலையில், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு முன்பதாக, அரசியல் கட்சிகளுக்கிடையே ஒரு பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிய வருகிறது. அதேநேரம், அரசியல் தீர்வுத்திட்டமொன்றை விரைவில் முன்வைக்குமாறு இந்திய அரசாங்கம் வலி யுறுத்தியுள்ளதாக அமைச்சர் திஸ்ஸவிதாரண தெரிவித்தார். (மேலும்) 04.11.08
__________________________________________________________________________________________________________
பேராசிரியப் பெருந்தகையை சரியான இடத்தில் வையுங்கள்!
- அம்பலத்தான்
‘தினக்குரல்’ஞாயிறு வெளியீட்டில் பீஸ்மர் என்ற பெயரில் வாராவாரம் புலிகளுக்கு ஆதரவாக கட்டுரை எழுதிவருபவரைப்பற்றி, சென்னை சித்தர் என்பவர் 02-11-2008 திகதி ‘தேனீ’இணையத்தள வெளியீட்டில் ஒரு குறிப்பு எழுதியிருந்தார் பீஸ்மர் பற்றி எழுதப் புகுந்த சித்தர், இந்த பீஸ்மர் என்பவர் பேராசிரியர் கா.சிவத்தம்பி தான் என்பதை ஏன் பகிரங்கப்படுத்தாமல் விட்டாரோ தெரியவில்லை. கரவெட்டியில் பிறந்த சிவத்தம்பி, வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் உறவினரான பிரபல கள்ளக்கடத்தல்காரர் ‘செம்மூக்கன்’நடராசாவின் மகளை திருமணம் முடித்ததால் மட்டும் புலிகளுக்கு ஆதரவானவராக மாறிவிடவில்லை. சிவத்தம்பியின் பிறவிக்குணமே சந்தர்ப்பவாதம்தான் என்பதை சிவத்தம்பியை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும். புலிகள் தோற்றமாகியதன் பின்னர், சிவத்தம்பியின் அங்கிடுதத்தி அரசியலுக்கு புலி இயக்கம் பெரும் வசதியான ஒன்றாகப்போய்விட்டதேயொழிய, பூர்வதோசத்தில் மாற்றமில்லை. இந்த ‘மகா’பீஸ்மரை பற்றி எழுதப்புகுந்த சென்னை சித்தர், மாபெரும் தவறொன்றை இழைத்துள்ளார். சிவத்தம்பியை சீனசார்பு கம்யூனிஸ்ட் என குறிப்பிட்டுள்ளார். இது அபத்தத்திலும் பெரும் அபத்தம். சிவத்தம்பி பற்றிய இந்த தவறான கூற்றினை இலங்கை சீனசார்பு கம்யூனிஸ்ட்டுகள் அறிய நேரிட்டால், சிலிர்த்து எழுந்து விடுவார்கள். சிவத்தம்பி மறந்தும் நல்லவர்களின், நேர்மையானவர்களின் அணியில் ஒருபோதும் நின்றது கிடையாது. 1963ல் நடைபெற்ற சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தினுள் ஏற்பட்ட பிளவினால், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக பிரிந்தது. அப்போது சிவத்தம்பி எந்தப்பக்கம் நிலை எடுப்பது என தெரியாது ஊசலாடினார். இறுதியில் ‘திரிபுவாதிகள்’என அழைக்கப்பட்ட இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் சோவியத்சார்பு பக்கம் போய்ச்சேர்ந்தார். அவரது எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. (மேலும்) 03.11.08
__________________________________________________________________________________________________________
இலங்கைப் பிரச்னை ஓரளவுக்குத்தான் தலையிட முடியும்: கருணாநிதி பதில்
இலங்கைத் தமிழர்களுக்கு திரட்டப்படும் நிதி உரியவர்களிடம் போய் சேராது: ஜெயலலிதா
சென்னை, நவ.2: முதல்வர் கருணாநிதியால் இலங்கைத் தமிழர்களுக்காகத் திரட்டப்படும் நிதி, உரியவர்களுக்கு நிச்சயமாகப் போய் சேராது என்று அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: முதல்வர் கருணாநிதி ஒரு திட்டத்தை அறிவிக்கிறார் என்றாலோ அல்லது ஒரு போராட்டத்தை நடத்துகிறார் என்றாலோ அல்லது நிதி திரட்டுகிறார் என்றாலோ அதில் நிச்சயம் சுயநலம் இருக்கும் என்பதை மக்கள் அறிவார்கள். அந்த வகையில், இலங்கைத் தமிழர்களின் நிவாரண நிதி என்ற போர்வையில், முதலில் கனிமொழியை முன்னிலைப்படுத்தினார். தன் சுயநலத்துக்காக தமிழ் மொழி, பண்பாடு குறித்து கருணாநிதி பேசுகிறார். ஆனால், இலங்கைத் தமிழர்களுக்காக வேட்டி, சேலை ஆகியவற்றைக் கொடுப்பதற்கு பதிலாக தமிழ்ப் பண்பாட்டை சீர்குலைக்கும் நைட்டி போன்ற ஆடைகளை கனிமொழி வழங்கியதாக செய்திகள் வந்துள்ளன. நிவாரண நிதிக்கு முதல்வரின் மனைவி தயாளு அம்மாள் ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கி உள்ளார். இவருக்கு இந்தப் பணம் எங்கிருந்து வந்தது? எந்த வழியில் வருமானம் வருகிறது? அவர் வருமான வரி செலுத்துகிறாரா என்பதையெல்லாம் கருணாநிதி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். மேலும், இலங்கைத் தமிழர்களுக்கு நன்கொடை வழங்குவதில் அனைத்துத் தரப்பினரும் கட்டாயப்படுத்தப்படுவதாகவும், ஊழியர்களின் அனுமதியின்றி அவர்களுடைய சம்பளத்தில் இருந்து ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன. (மேலும்) 03.11.08
__________________________________________________________________________________________________________
உலக சரித்திரத்தை மாற்றி அமைக்கப் போகும் அமெரிக்கத் தேர்தல்
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
இன்னும் சில நாட்களில் உலகத்தில் ஒரு நாளும் நடக்க முடியாததாகக் கருதப்பட்ட புதுமை நடக்கப் போவதை உலகம் வெகு ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. 23.08.65ல் அமெரிக்கக் கறுப்பு மக்களின் தலைவர்களில் ஒருத்தரான மார்ட்டின் லூதர் கிங் கண்ட கனவு நனவாக வேண்டும் என்ற பிரார்த்தனை நல்ல மனிதர்களின் இதயத்திலிருந்து பிறந்திருக்கிறது. கறப்பு இனக் குழந்தையும் வெள்ளளையினக் குழந்தையும் கைகேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கனவு கணடார். அமெரிக்காவின் அத்தனை மக்களும் சமத்துவமாக வாழவேண்டுமென்று கனவு கண்டார். மக்களின் சுதந்திரத்திற்குத் தடையாயிருக்கும் பல மலைகள் தளர்க்கப்படவேண்டும் என்று கனவு கண்டார். உழைப்பும் ஊதியமும் அமெரிக்க மக்கள் அத்தனைபேருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்று கனவு கண்டார். அவரின் கனவுகளிற் சில நிறைவாகியிருந்தாலும் ஒட்டுமொத்த சமத்துவம் கிடைக்க அரசியல் பலம் இருக்க வேண்டும். அவரின் கனவு நாற்பத்து ஐந்து வருடங்களுக்குப் பின்; நனவாகியிருக்கிறது. கறுப்பு வெள்ளை, யூத, ஆசிய, இந்திய, ஸ்பானிக் என்ற பேதமின்றி அமெரிக்க மக்கள் ஒன்று சேர்ந்து இன்று ஒரு கறுப்பு அரசியல்வாதியைத தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்க முடிவெடுத்திருக்கிறார்கள். 1955ம் ஆண்டு அமெரிக்காவில் மொங்கோமரி என்ற இடத்தில் வெள்ளையன் ஒருத்தன் பஸ்ஸில் அமர்ந்திருந்த பாhர்க்ஸ் றோசா லுயிஸ் மக்கேலி உன்ற கறுப்புப் பெண்ணை பஸ்ஸிலிருந்து எழும்பச் சொன்னான் அந்தப் பெண்மணி வெள்ளையனின் அதிகாரததை எற்கவில்லை;.அந்தப் பெண் பஸ்ஸிலிருந்து தூக்கியெறியப்பட்டாள். (மேலும்) 03.11.08
__________________________________________________________________________________________________________
இலங்கையோ இலங்கை
டிவில இலங்கை, பேப்பர்ல இலங்கை, பதிவுகளில் இலங்கை, அரசியலில் இலங்கை... இப்படி எங்க பார்த்தாலும் இலங்கையோ இலங்கையா இருக்கு. சரி ஏன் இதுக்கு இவ்வளவு முக்கியத்துவம்? பொதுப்படையா பலரை பொருத்தவரை இலங்கை பிரச்சினைங்கிறது, தமிழனுக்கும் சிங்களனுக்கும் ஆகலை. தமிழர்களை வாழ விடாம சிங்களர்கள் பண்றாங்க. அதனால போராட்டம் இத்யாதி இத்யாதி...சரி நிஜத்துல அங்க என்ன பிரச்சினை? ஏன் இவ்வளவு மரணங்கள்? இதுக்கெல்லாம் என்னதான் தீர்வு? இந்த ஒரு கேள்விக்கு மட்டும் யார்கிட்டையும் பதில் இல்லை. பல காலம் முன்ன உலக நிகழ்வுகள் குறித்த ஊடகங்களின் பார்வை ஒரு நடுநிலையோட இருந்தது. ஆனா இப்ப சாதிக்கொரு பத்திரிக்கை, கட்சிக்கு ஒரு தொலைக்காட்சினு வந்ததிலிருந்து எதுவுமே நம்பக் கூடியாதா இல்லைங்கிறது தான் நிஜம். ஒரு பக்கம் ஒரு இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் அரசியல்வாதி, புலிகளால் தான் இலங்கையில் தமிழர்களுக்கு பிரச்சினை என்கிறார், இன்னொரு புறம் நம்ம ஊர் மக்கள் சிலர் புலிகள் தான் இலங்கைத் தமிழர்கள், அவர்களை ஆதரிப்பது நம் கடமை என்கின்றனர்.இப்ப எல்லாவிதமான வெகு ஜன ஊடகத்திலையும் ரொம்ப சூடா இருக்கும் ஒரு விஷயம் புலி ஆதரவு. சரி, யாரிந்த புலிகள், எதற்காக அவங்களுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் சண்டை? இந்தக் கேள்விக்கு பலருக்கும் விடை தெரியாதுங்கிறது தான் நிஜம். உண்மையை சொல்லணும்னா இன்னைக்கு இந்த பிரச்சினையில் புலிகளோட நிலை நம்ம சந்தன வீரப்பன் கதை மாதிரிதான். முதல்ல தன்னை நிலைநாட்ட சில வெறிச்செயல்கள், பின்னர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இன்னும் கொஞ்சம், இப்படியே போய் வீரப்பன் கதை என்னாசின்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். பிரபாகரனுக்கும் இப்படி ஒரு நிலை வந்தா இதில ஆச்சரியப்பட எதுவும் இருக்கும்னு எனக்குத் தோனலை. ஒரு நாட்டிற்கே அதிபராக இருந்த சதாம் உசேன் கதி என்னாச்சு? இந்த விஷயத்துலையும் பார்த்தீங்கன்னா, அமெரிக்கா தன்னுடைய நலனுக்காக மட்டுமே இப்படி செய்தது என்பது தான் உண்மை. ஏன் இப்போ இலங்கை பிரச்சினையில் தலையிட்டு, இனிமே புலிகளும் இலங்கை ராணுவமும் சண்டைபோடக் கூடாத்துன்னு மத்தியஸ்தம் பண்ணவேண்டியது தானே. ஆனால் பண்ண மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு இப்போது அதில் லாபமில்லை. (மேலும்) 03.11.08
__________________________________________________________________________________________________________
கட்சி உள்முரண்பாடு தீர்க்கப்பட்டது: கருணா
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் தீர்க்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்துக்கு பொலிஸ் அதிகாரம் தேவையில்லையெனத் தான் கூறிய கருத்துத் தொடர்பாகவே கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றியதாக கொழும்பு ஊடகமொன்றிடம் கருணா கூறினார்.“கட்சிக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை. அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிட்டன. கட்சிக்குள் பிரச்சினையைத் தோற்றுவிக்கச் சிலர் முயற்சிக்கின்றனர்;” என கருணா தெரிவித்தார்.தனக்கு எதிராகப் பிழையான கருத்தைத் தெரிவித்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஆசாத் மௌலானாவுக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறியுள்ளார்.“இராணுவப் பிரிவின் தலைவராகவே நான் நியமிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியிருந்தார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இராணுவப் பிரிவு இல்லை. அவ்வாறான கருத்தை வெளியிட்டமை தொடர்பாக மௌலானா மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தவுள்ளோம்” என கருணா அந்த ஊடகத்திடம் தெரிவித்திருந்தார்.இதேவேளை கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினை கட்சியையும் தமிழ் மக்களையும் பாதிக்கும் என்பதால் சுமுகமாகத் தீர்க்கப்பட்டிருப்பதாக ஆசாத் மௌலான அந்த ஊடகத்திடம் தெரிவித்தார்.கிழக்கு மாகாணத்துக்கு பொலிஸ் அதிகாரம் தேவையில்லையென்ற கருத்துத் தொடர்பாக கருணா அம்மானிடம் விளக்கம் கோரப்பட்டிருந்தபோதும் அவரிடமிருந்து எந்தவிதமான விளக்கமும் இதுவரை வழங்கப்படவில்லையென மௌலானா கூறினார்.
__________________________________________________________________________________________________________
தமிழீழ விடுதலைப் போராட்டமும் இந்தியாவும் தமிழ் நாடும்
தேவன். (கனடா)
ஒரு பழமொழி கூறுகின்றது ‘பணம் அண்ட, பாதாளம் வரையும் பாயும்’என்று. பணம், குற்றவியல், அதிகாரம், துதிபாடுதல், வழிபடுதல், இவை அனைத்துக்கும் நிறைய தொடர்புகள் இருக்கின்றன. உறுதியற்ற பலவீனமானவர்களையே புலிகள் தங்கள் தேவைகளிற்காக பணத்தால் விலைக்கு வாங்குகிறார்கள். தற்போது தமிழ் நாட்டு அரசியலிலும் பலர் புலிக்கு விலை போகின்றனர். ஆனால் இவையெல்லாம் ஒரு தற்காலிகமான சினிமாக் காட்சிதான். ஏனெனில் இறுதியில் மனிதத்துடன் கூடிய ‘மானுடம் வெல்லும்’என்று வரலாறு கூறுகிறது. இன்று தமிழ் நாட்டில் புலிகளுக்கு ஆதரவாக சலசலப்பொன்று உருவாகியிருக்கின்றது. சாதி அடிப்படையிலான கட்சிகளாலும், இன்றைய திராவிட பிற்போக்குத்தனமான கட்சிகளாலும் மற்றும் சிறுபான்மையினக் கட்சிகளாலும், இந்திய தேசத்தின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மைக்கும், இறையான்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதை அவதானிக்க முடிகிறது. இது போன்ற புலிகளுக்கு ஆதரவான அழுத்தங்களையும் அச்சுறுத்தல்களையும் நடுவன் அரசு மிகச் சிறப்பாகவே எதிர்கொள்ளும் என்ற நம்பிக்கையில், இலங்கைத் தமிழ் இனமும் பிற பல்லின மக்களும் எதிர்பார்புடன் இந்திய தேசத்தை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘சோழியன் குடும்பி சும்மா ஆடாது’என்ற இந்த பழமொழிக்கும் தமிழ் நாட்டு சினிமாக் காரர்களும் நிறையவே தொடர்பு உண்டு என்பார்கள் ஏனெனில் கோடம்பாக்கத்தின் சினிமாத் தொழிற்சாலை வருடத்துக்கு 200 படங்களுக்கு மேல் எடுக்கிறார்கள். இவற்றுள் 95 வீதமான படங்கள் மசாலத்தனமானவை. உலகின் செவ்விய இனமான மூத்த குடி தமிழரின் ஒரு பிரிவினர், அதாவது புலம்பெயர் தமிழர்கள் தமிழ் நாட்டில் ஓடாத பல தரமற்ற படங்களையும் ஓட வைத்து, இசைத் தட்டுக்களையும் விற்பனை செய்து சினிமாக்காரர்களை செழிப்புடன் வாழவைக்கிறார்கள். அத்துடன் நின்றுவிடாது, சினிமா நடிகைகளையும் நடிகர்களையும் வசந்த –கோடை காலங்களில் புலம் பெயர் தேசங்களுக்கு வரவழைத்து, அ
|