a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்              பூந்தளிர்       கண்ணோட்டம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.9                                                           09.04.2010

லங்கை மீதான கடுமையான நடைமுறை தவிர்க்கப்படல் வேண்டும்- பாலித கொஹன 

இலங்கை தனது உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பான நிர்வாகத்தில் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனவே இலங்கை மீதான கடுமையான நடைமுறை தவிர்க்கப்படல் வேண்டும் என்பதே இலங்கையின் புலப்பாடாகும் என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி டாக்டர் பாலித கொஹன தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புள்ள விவகாரம் என்ற அடிப்படையில் தனக்கு ஆலோசனை வழங்க நிபுணர்கள் குழு ஒன்றை அமைக்க ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் உத்தேசம் கொண்டிருப்பதற்கு இலங்கை அரசாங்கம் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றது. பயங்கரவாத அமைப்பு எனப் பரவலாக கருதப்பட்ட பிரிவினை வாதக் குழுவொன்றுக்கு எதிராக நடைபெற்ற யுத்தம் ஒன்றின் முடிவின் பின்னரே இந்த விவகாரம் தலை தூக்கியுள்ளது. ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் என்ற வகையில் இத்தகைய தன்மை தொடர்பாக எனக்கு ஆலோசனை வழங்க நிபுணர்கள் குழுவொன்றை அமைக்க அதிகாரம் உள்ளது என நான் கருதுகிறேன் என்று பான் கீ மூன் இந்த வார முற்பகுதியில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். (மேலும்)  21.03.10

_____________________________________________________________________________________________

தமிழ் பிரதிநிதித்துவம் பறிபோகப்போகிறதாம்

- விஜயன்

தமிழ் பிரதிநிதித்துவம் பறிபோகப்போகிறது,பறிபோகப்போகிறது தமிழ் வாக்காளர்களே விழிப்பாக இருங்குள் என்று கூப்பாடு போட்டு தமிழ் மக்களின் பரந்த சிந்தனையை கட்டிப்போடும் வேலையை சில ஊடகவியலாளர்கள் செயு;து வருவதுதான் கவலையான விடயமாகும். ஒரு ஊடகவியலாளன் என்பவன் அரசிலுக்கு அப்பாற் பட்டவன் அப்படி அவன் அரசியல் சாயத்துடன் எழுத முற்பட்டானானால் ஒரு ஊடகவியளாளனாக இருக்க முடியாது.அவனிடம் மனிதநேயம் இருக்க வேண்டும், அநியாயம் எவன் செய்தாலும் தங்களது பேனாவை செய்பவனுக்கு எதிரான  ஆயுதமாக  அதனை பாவிக்கவேண்டும் ஒரு அரசியல் கட்சியில் உள்ளவர் போல் அவர்கள் தொடர்ந்தும் எழுதுவதன் மூலம் அவர் இன்ன கட்சியின் ஊடகவியலாளர், அவர் எழுதினால் அப்படித்தான் எழுதுவார், பேசினால் அப்படித்தான் பேசுவார்.அவரை ஒரு நியாயமான, நடுநிலையான ஊடகவியலளர் என எடுத்துக் கொள்ள மனம் இடம் கொடுக்கப் போவதில்லை. இலங்கையில் இனவாதம் உள்ளது, தமிழர்கள் காலம் காலமாக இரண்டாம் தர பிரiஐகளாக நடத்தப்படுகிறார்கள், அதனால் அகிம்சை ஆயுதமாக மாறி இப்போ மீண்டும் அகிம்சை வழிதான,; வேறு வழி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏன் இலங்கையில் ஒற்றுமையும் நியாhயத்தன்மையும் இல்லை என்பதே ஆகும்.  (மேலும்)  21.03.10

_____________________________________________________________________________________________

இலங்கை நிலைவரத்தை உன்னிப்பாக அவதானிக்கிறோம் இடம்பெயர்ந்தவர்களின் மீள் குடியேற்றம் முக்கியமான விடயம் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கூறுகிறார்

smithயுத்தத்தின் இறுதிக் கட்டங்களின்போது இடம்பெயர்ந்த பொதுமக்களின் நிலைமை உட்பட இலங்கையின் மனிதாபிமான நிலைவரத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.வட பகுதியில் மீளக்குடியமர்த்தப்படும் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான மானியமாக 20 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்குவதாக அவுஸ்திரேலியா இந்த வாரம் அறிவித்திருக்கிறது. இந்த நிதியுதவியானது உலகவங்கி மற்று ஆசிய அபிவிருத்தி வங்கி செயல்திட்டங்கள் ஊடாக வழங்கப்படும். வடக்கில் மீள்குடியேற்ற,மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்காக இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்று கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் நேற்று விடுத்துள்ள பத்திரிகைச் செய்தி தெரிவித்துள்ளது. இந்தப் புதிய நிதியுதவி தொடர்பான அறிவிப்பை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீபன் ஸ்மித் கடந்த புதன்கிழமை அவுஸ்திரேலியப் பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஸ்ரீபன் ஸ்மித், இலங்கையின் மனிதாபிமான நிலைவரத்தை நெருக்கமாக அவதானித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.  (மேலும்)  21.03.10

_____________________________________________________________________________________________

பொன்சேகா கைப்பட எழுதிய கடிதம் சனல்4 க்கு சென்றது எவ்வாறு? விசாரணை நடத்த அரசிடம் வலியுறுத்தல்

கடற்படைத் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேகாவின் கையால் எழுதப்பட்ட கடிதமானது பிரிட்டனின் சனல்4 தொலைக்காட்சிச் சேவைக்கு எவ்வாறு கடத்திச் செல்லப்பட்டது என்பது தொடர்பாக அரசாங்கம் விசாரணையொன்றை நடத்த வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணி எம்.பி. எம்.முஸாமில் தெரிவித்திருக்கிறார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார். இராணுவ நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கும் பொன்சேகாவின் கடிதமானது எவ்வாறு கடத்திச் செல்லப்பட்டது? அந்தக் கடிதம் கொண்டு செல்லப்படுவதற்கு உதவியவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் முஸாமில் கூறியுள்ளார். விடுதலைப்புலிகளின் சர்வதேச வலைப்பின்னலமைப்பானது இராணுவப் பிரிவை மீள ஏற்படுத்திக் கொள்வதற்கு முயற்சி செய்து வருகிறது. புலிகளின் இராணுவப்பிரிவு இப்போது அழிக்கப்பட்டுள்ளது.ஆனால், இந்த நடவடிக்கையை ஆதரவானதாக புலிகள் அமைப்பு கவனத்தில்கொள்ளக்கூடும் என்றும் முஸாமில் கூறியுள்ளார்.

_____________________________________________________________________________________________

'இலங்கை ஒரு கவலைக்குரிய நாடு''-பிரிட்டன் அறிக்கை

- BBC News

britishதமது பார்வையில் இலங்கை ஒரு கவலைக்குரிய நாடாகவே இருப்பதாக பிரிட்டன் கூறியுள்ளது. அங்கு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு கடுமையான வன்செயல் மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்து அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரித்தானியாவின் வெளியுறவு அலுவலகம் அதில் இலங்கையை கவலை தருகின்ற நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ளது. இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் அங்கு மனித உரிமைகள் நிலவரங்களில் முன்னேற்றம் காணப்படுகின்ற போதிலும், நிலைமை இன்னமும் மிகவும் மோசமானதாகவே இருப்பதாக அந்த அறிக்கை கூறுகின்றது.மோசமான மனித உரிமை நிலவரங்களை பலவீனமான பொலிஸ் மற்றும் நீதித்துறை மேலும் மோசமாக்கியது என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.  (மேலும்)  21.03.10

_____________________________________________________________________________________________

வன்னியில் மீட்கப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு

யுத்தம் காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தங்களது வாகனங்கள் உடைமைகளை விட்டு வந்தவர்கள் அவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் உடனடியாக விபரங்களை சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்விரு மாவட்டங்களிலும் இதுவரை 50,000 சைக்கிள்கள், 20,000 மோட்டார் சைக்கிள்கள், 500 டிராக்டர்கள் (உழவு இயந்திரங்கள்) 20,000 தண்ணீர்ப் பம்புகள் மற்றும் ஒரு தொகை சிறியரக உழவு இயந்திரங்கள் (லேண்ட் மாஸ்டர்) என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கிளிநோச்சிக்குக் கொண்டு வரப்படவுள்ளதுடன் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் திருத்த வேலைகள் செய்து புதுப்பிக்கப்படவுள்ளன. கிளிநொச்சியில் 16 ஏக்கர் நிலப்பரப்பு தெரிவு செய்யப்பட்டு சுத்தப்படுத்தும் வேலைகள் செய்ய ப்படுகின்றன. சேகரிக்கப்பட்ட அனைத்து வாகனங்களும் இங்கு கொண்டு வரப்பட்டு திருத்த வேலைகள் நடத்தப்படவுள்ளன என்றும் குறிப்பிட்டார். (மேலும்)  21.03.10

_____________________________________________________________________________________________

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழரசுக்கட்சி தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இனப்பிரச்சினையின் தோற்றம், அதன் வளர்ச்சி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இனப்பிரச்சினையின் ஆரம்ப காலத்தில் இருந்து தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கிய தலைவர்களால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாமல் போனதில் அவர்கள் வகித்த பங்குபற்றி எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை. இந்த தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு கூட்டத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன் பேசியபோது, தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழர் தன்னாட்சி உரிமை என்பவற்றை இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தின்மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விட்டுக்கொடுக்கவில்லை என்பதை தெரிவித்திருக்கிறது. ஒஸ்லோவில் புலிகளும் அரசாங்கமும் ஏற்றுக்கொண்ட உள்ளக சுயநிர்ணய கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்வுத்திட்டம் அமையும் என குறிப்பிட்டிருந்தார். கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கி வந்தது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கை தமிழ் அரசுக்கட்சி, பின்னர் இவர்கள் இணைந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவைதான். இவர்களது காலத்தில் ஆரம்பித்த இனப்பிரச்சினை இவர்களது தவறான அணுகுமுறையால் காலத்துக்கு காலம் இருந்த உரிமைகளையும் இழந்து இன்று தமிழ் மக்கள் அகதி வாழ்க்கைக்கு தள்ளப்பட்டுள்ளனர். (மேலும்) 20.03.10

_____________________________________________________________________________________________

A man who loves his country

ravi_rajapaksaIN AUGUST 2008, after spending a week in Colombo, I stuck my neck out to suggest in a long article for the Straits Times that Sri Lanka's long drawn civil war may finally be heading for a close. At the time some thought I was too optimistic. The Tigers were considered invincible. But the Tamil Tiger "headquarters" of Killinochchi fell in late December and suddenly the world sat up and took notice of an entirely new scenario developing on the island. In May last year, I was in Colombo again when Sri Lankan troops fished out Tiger supremo Velupillai Prabhakaran's body from a lagoon. Alongside, the army had managed to wipe out the entire leadership of the Tigers, who had, suprisingly for a guerilla force, apparently congregated at one location. The exact circumstances of the end of the war will never be known for years. Some say the Tigers were eliminated even as they sought a surrender. The end of the war was followed by a surge of majority-Sinhala triumphalism with huge cutouts of President Rajapaksa, Defence Secretary Gotabaya and army chief Sarath Fonseka appearing all over the populous central and south of the island. (Read) 20.03.10

_____________________________________________________________________________________________

பாராளுமன்றத் தேர்தல் 2010 – உங்கள் வேட்பாளர் அரியம் மாஸ்டர் அவர்களை ஆதரியுங்கள்

பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

அரியம் மாஸ்டர் (நீக்கிளஸ் அரியரட்ணம் பி.எஸ்.சி., சமாதான நீதவான்) அவர்கள் தமிழ் தேசிய இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். 1970 களின் முற்பகுதியில் தமிழ் மாணவர் பேரவையின் தலைவராக இருந்தவர். 1965 தொடக்கம் 1983 வரை தமிழ் இளைஞன் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். யாழ் சம்பத்திரிசியர் கல்லூரியிலும், பேராதனை பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றவர். தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக பல மாதங்கள் சிறையில் இருந்தவர். குறிப்பாக ஏழாலைப் பகுதியில், அதன் சுற்றுவட்டத்திலும் பொதுவாக யாழ் குடாநாட்டிலும் பொதுமக்களால் நன்கு அறியப்பட்ட கண்ணியமான மென்மையான போக்குடைய மனிதர். சமாதான நீதவானாக நேர்மையுடனும், நீதியுடனும் பாரபட்சமில்லாமலும் செயற்பட்டு வருபவர். பிரதிபலனை எதிர்பார்க்காத ஒரு மக்கள் சோவையாளன். சொந்த ஊரிலே இருந்து கொண்டு மக்களுக்குப் பணி செய்பவர். சில போலி அரசியல்வாதிகள் போல் உணர்ச்சி ஊட்டி விட்டு ஐரோப்பாவிலோ, இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ வாழ்பவர் அல்ல அவர். அவர் மக்களின் நன்மை தீமைகளுடன் ஒன்றாக வாழ விரும்புபவர்தமிழ் மக்களின் தீராத அழிவிலும் துயரத்தி;லும் ஆழ்ந்து போயிருக்கிறார்கள். இந்நிலையில் மக்களின் பிரதிநிதியாக மக்கள் மத்தியில் இருந்துகொண்டு தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கும், அபிவிருத்திப் பணிகளை செய்யவும் விரும்புகின்றார். (மேலும்) 20.03.10

_____________________________________________________________________________________________

தேசிய வீர மாணவர் விருது' நிகழ்வில் தமிழ் மாணவிக்குத் தங்கம் 

thansiga தேசிய வீர மாணவர்களுக்கான விருது' நிகழ்வு இன்று பத்தரமுல்லையிலுள்ள கல்வி அமைச்சில் இன்று நடைபெற்றது. நிகழ்வில் மானிப்பாய் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த சின்னராசா தனன்சிகா என்ற தமிழ் மாணவிக்குத் தங்க விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. தனது உயிரை துச்சமென மதித்து உயிராபத்தை எதிர்நோக்கிய மாணவர்களுக்குத் தக்கசமயத்தில் உதவிபுரிந்த மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தேசிய வீர மாணவர்களாக கௌரவிக்கப்பட்டு வருகின்றனர். இரண்டாவது தேசிய வீர மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வே இன்று நடைபெற்றது. உக்கிரமாக யுத்தம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், செல் தாக்குதல்களுக்கு மத்தியில், பதுங்குக் குழிக்குள் சிக்கிக்கொண்ட 11வயது மாணவரை பேராபத்திலிருந்து காப்பாற்றியமைக்காகவும் மேலும் சிலரை உயிராபத்திலிருந்து காப்பாற்றியமைக்காகவும் இந்த விருது மேற்படி மாணவிக்கு வழங்கப்பட்டது.

_____________________________________________________________________________________________

புதிய பாதை புதிய சிந்தனை

நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளனர். தமிழ் மக்கள் ஐக்கியப்பட வேண்டும், கட்சியின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடாமல் பார்க்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் ஒப்புவிக்கும் பழைய பல்லவியினால் வழிநடத்தப்படுவதா அல்லது புதிய சிந்தனைக்கு இடமளிப்பதா என்பதையிட்டு வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வரவேண்டும். சுதந்திர இலங்கையில் தமிழ் மக்களைத் தொடர்ச்சியாகப் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் தலைமையின் வழிவந்தவர்களே இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். முதலாவது பாராளுமன்ற காலத்திலேயே பேசுபொருளாக இருந்த இனப் பிரச்சினை இதுவரை தீர்க்கப்படாதிருப்பதற்கான பொறுப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் சார்பிலும் முன்னைய தலைவர்களின் சார்பிலும் ஏற்றாக வேண்டும். இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சி சமஷ்டிக் கோரிக்கையுடன் ஆரம்பமாகியது. சமஷ்டிக் கோரிக்கையை வென்றெடுப்பது சாத்தியமில்லை என்ற நிலை இப்போது உருவாகியிருக்கின்றது.  (மேலும்) 20.03.10

_____________________________________________________________________________________________

இந்தியாவில் விமானக் கடத்தலுக்கு மரண தண்டனை : இன்றைய அமைச்சரவையில் ஒப்புதல் 

  விமானத்தைக் கடத்தினால் மரண தண்டனை வழங்கப்படும். இதற்கு வழி வகுக்கும் வகையில் விமானக் கடத்தல் தடுப்புச் சட்டம் திருத்தப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை இந்த புதிய விதிமுறைக்கு ஒப்புதல் அளித்தது. மேலும், முக்கியப் பாதுகாப்பு மையங்களைத் தாக்கும் வகையில் விமானத்தைக் கடத்திச் சென்றால் அந்த விமானத்தை உடனடியாக சுட்டு வீழ்த்தவும் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது. நியூயோர்க் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது போன்ற முயற்சியைத் தடுக்கும் வகையில் இப்புதிய திருத்தம் அமுல்படுத்தப்படுகிறது. இந்தியாவில் இனி எந்த விமானம் கடத்தப்பட்டாலும் அது எந்த நிலையிலும் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது. இதற்கான திருத்தமும் 1982 விமானக் கடத்தல் தடுப்புச் சட்டத்தில் கொண்டு வரப்படுகிறது.

_____________________________________________________________________________________________

சரத்தின் ஆட்கொணர்வு மனு : விசாரணையிலிருந்து விலகினார் நீதியரசர் ஒருவர்

ஜெனரல் சரத் பொன்சேகாவை நீதிமன்றம் முன் நிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு விசாரணையிலிருந்து ஒரு நீதியரசர் இன்று விலகிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தல் இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியசர் சத்யா ஹெட்டிகே, நீதியரசர்களான ரஞ்சித் சில்வா, என்.லேகம்வசம் ஆகியோர் முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அத்தருணத்தில் தனிப்பட்ட காரணங்களால் இந்த வழக்கு விசாரணயிலிருந்து தாம் ஒதுங்குவதாக நீதியரசர் என்.லேகம்வசம் தெரிவித்தார். இதன்படி இம்மனு தொடர்பான விசாரணை இம்மாம் 25 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய உட்பட பலருக்கு எதிராக இம்மனுவை ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா தாக்கல் செய்திருந்தார். தனது கணவர் பெப்ரவரி 8 ஆம் திகதி இராணுவத்தினரால் பலவந்தாகக் கடத்தப்பட்டு, நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படாமல் சட்ட விரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக மனுவில் அவர் குற்றஞ் சாட்டியிருந்தார்.

_____________________________________________________________________________________________

யாழ். தேர்தல் மாவட்டத்திற்கு ஒரு அடி 8அங்குல நீளமான வாக்குச் சீட்டு

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பின் போது ஒரு அடி எட்டு அங்குல நீளமான வாக்குச் சீட்டு பயன்படுத்தப்படும். அதற்கான நடவடிக்கையை தேர்தல் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம் முறை 15அரசியல் கட்சிகளும் 12 சுயேச்சைக் குழுக்களும் போட்டி யிடுகின்றன. இதன்காரணமாகவே ஒரு அடி 8 அங்குலமான வாக்குச் சீட்டு பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.   

_____________________________________________________________________________________________

உழைக்கும் பெண்கள் தினம் நூற்றாண்டு

-மாலதி சிட்டிபாபு, செயலாளர், சிஐடியு, தமிழ்நாடு

உலகம் முழுவதுமுள்ள பெண் தொழிலாளர்கள் தங்களது ஜனநாயக உரிமைகளுக்காக குரலெழுப்பும் நாள் “சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம்”. சர்வதேச உழைக்கும் பெண்கள் நூற்றாண்டு தின விழா என்பது உலகம் முழுவதும் உள்ள பெண் தொழிலாளர்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம். நமது சமுதாயத்தில் சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஆணுக்கு நிகராக பெண்களுக்கு உரிமை வேண்டும் என்று பல தொடர் போராட்டங்களை நடத்தியதன் விளைவாக கிடைத்த வெற்றிகளின் எதிரொலியே நூற்றாண்டு தின கொண்டாட்டங்கள். நடைபெற்ற அனைத்து எதிர்ப்பியக்கங்களிலும், போராட்டங்களிலும், சமூக புரட்சி இயக்கங்களிலும், அது அடிமை சமுதாய மானாலும், நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பானாலும் அல்லது தற்போதைய முதலாளித்துவ அமைப்பானாலும் ஆண்களுடன் பெண்களும் ஈடுபாட்டுடன் கலந்துகொண்டுள்ளனர் என்பது வரலாறு.  (மேலும்) 20.03.10

_____________________________________________________________________________________________

ஊடகம்  இனியும் பூடகமில்லை.

பாகம் (நான்கு)

- எஸ்.எம்.எம்.பஷீர்

"சுடரொளி"  வித்தியாதரன் சென்ற வருடம் மாசியில் கொழும்பில் புலிகள் நடத்திய வான் தாக்குதல்கள் பற்றி அறிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைதாகி விடுதலை செய்யப்பட்டார். உண்மையில் இலண்டனில் புலிக்கு தீவிர ஆதரவாளராக  நிதி உதவி,  பிரச்சாரம் , அரசியல் ரீதியில் ஆதரவு திரட்டுதல் என பல வருடங்கள் செயற்பட்டு , பின்னர் அவர் இலங்கைக்கு சுனாமியின் பின்னர் சென்றபோது அங்கு புலிகளால் தண்டிக்கப்பட்டு, இலண்டன் திரும்பியதும் புலிகளுக்கு எதிராக மாறிய நபரை வித்தியாதரன் இலண்டனில் தன்னை சந்தித்து மீண்டும் புலிகளுடன் இணைந்து வேலை செய்யுமாறு வேண்டிக்கொண்டதாக அந்த நபரே என்னிடம் கூறினார்.  மேலும் வீரகேசரிப் பத்திரிக்கையில்  பணியாற்றிய ஸ்ரீ கஜன் என்பவர் முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிக்காவினை சதிகொலை செய்ய முனைந்த கரும்புலியுடன் தொடர்புகொண்டிருந்தார் என்றதன் பேரில் கைது செய்யப்பட்டு 25 அக்டோபர் 1998 ல்  பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.  இவர் இப்போது வீரகேசரி செய்தி ஆசிரியராக இருக்கும் ஸ்ரீ கஜநேயாவார் என்று தகவல்கள் கூறுகின்றன.  மேலும் இம்முறை இவர் யாழ்ப்பணத்தில் ஐக்கிய தேசிய கட்சியினால் உருவாக்கப்பட்ட கூட்டணியின் சார்பில் போட்டியிடுகிறார் எனபது இன்னுமொரு சுவாரசியமான செய்தி.  மேலும்   வீரகேசரி பத்திர்கையில் பணியாற்றி பின்னர் ஐரோப்பாவிற்கு அகதியாக வந்த இன்னுமொருவர் , புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய வானொலியொன்றில் கருத்துரைப்பவர் இலங்கை சென்று தனது ஊரான வாழைச்சேனைக்கு சென்றபோது அங்கு வைத்து புலிகளால் இந்த ஊடகவியலாளரின் தகவலின் பேரில் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தன (மேலும்) 19.03.10

_____________________________________________________________________________________________

தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த்தரப்பை நிச்சயமாக பேச்சுக்கு அழைப்பேன் புலிகள் கேட்பதை அவர்கள் கோரக்கூடாது; ஜனாதிபதி ராஜபக்ஷ

 பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த் தரப்பை நிச்சயமாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பேன். ஆனால், புலிகள் கேட்டதை அவர்கள் கோர முடியாது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழர்களின் புதிய தலைமுறையினர் பேச்சுவார்த்தையில் பங்கேற்பர் என்று குறிப்பிட்டிருக்கும் ஜனாதிபதி, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படமாட்டாது என்று தெரிவித்திருப்பதுடன் சமஷ்டி முறையிலான தீர்வும் இலங்கைக்கு பொருத்தமற்றது என்று உறுதியாக நிராகரித்திருக்கிறார். சிங்கப்பூரின் ஸ்ரெய்ட்ஸ் ரைம்ஸ் பத்திரிகையின் நிருபர் ரவி வெல்லூருக்கு அளித்த பேட்டியிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்திருக்கிறார். பேட்டியில் ஜனாதிபதி தெரிவித்திருப்பதாவது;கிராமப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே எனது நோக்கம். வடக்கு, தெற்கு உட்பட முழு நாட்டையும் அபிவிருத்தி செய்வோம்.சமாதானம் இல்லாமல் அபிவிருத்தி இல்லை. அபிவிருத்தியின்றி சமாதானம் இல்லை முகாம்களில் இருப்பவர்களிடம் கேட்டால் அரசியலமைப்பு திருத்தத்தை விட வீடு தேவை, பிள்ளைகளை படிப்பிக்க வேண்டும் என்றே கூறுகின்றனர். (மேலும்) 19.03.10

_____________________________________________________________________________________________

புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தலைமையிலான புளொட் வேட்பாளர்கள் மன்னாருக்கு விஜயம்-

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நங்கூரம் சின்னத்தில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரான கந்தையா சிவநேசன் (பவன்), புளொட் மன்னார் மாவட்ட அமைப்பாளர் சுந்தர்ராஜ் (சிவசம்பு), மாதர் சங்கத் தலைவி இந்திரா என்கிற வரோனிகா மற்றும் புளொட் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உள்ளடங்கலாக நேற்றையதினம் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தனர். இதன்போது பெரியமடுப் பகுதியிலுள்ள ஈச்சலவக்க தமிழ் கிராமத்திற்கும் இடம்பெயர்ந்த மக்கள் அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட கிராமங்களுக்கும் விஜயம் செய்திருந்தனர். இதன்போது வாமதேவபுரம், கண்ணாட்டி(அடம்பன்) ஆகிய மீள்குடியேற்றப்பட்ட கிராமங்களுக்கு சென்றிருந்த புளொட் பிரதிநிதிகள், அங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அவர்களின் அத்தியாவசிய தேவைகள் உள்ளிட்ட விடயங்களை கேட்டறிந்து கொண்டனர். (மேலும்) 19.03.10

_____________________________________________________________________________________________

மன்னார் பாலம், தாம்போதி ஜனாதிபதியால் நேற்று திறந்து வைப்பு

  • ரூ. 2460 மில். செலவு
  • 157 மீற்றர் நீளம், 10.4 மீற்றர் அகலம்

புpres_600-2திதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மன்னார் பாலத்தையும் தாம்போதியையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ pres_main_600நேற்று (18 ம் திகதி) வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார். மன்னார் தீவையும், பெரு நிலப் பரப்பையும் இணைக்கும் இப்பாலமும் தாம்போதியும் 2460 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் 1836 மில்லியன் யென் நன்கொடையையும் 640 மில்லியன் ரூபா உள்ளூர் நிதியையும் கொண்டு நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இப் பாலத்திற்கு இலங்கை ஜப்பான் நட்புறவு பாலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப் பாலம் 157 மீட்டர் நீளமாகவும் 10.4 மீட்டர் அகலமாகவும் அமைக்கப் பட்டுள்ளது. இரு வழிப் பாதை கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இப் பாலம் முதல் 3.14 கிலோ மீட்டர் வரை (தள்ளாடி சந்தி), தாம்போதியும் அமைக்கப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகவும், இலங்கையில் கடமையாற்றும் ஜப்பான் தூதுவர் குனியோ தகஹசி விசேட அதிதியாகவும் கலந்து கொண்டு இப் பாலத்தைத் திறந்து வைத்தனர். . (மேலும்) 19.03.10

_____________________________________________________________________________________________

பொன்சேகாவுக்கு நான் மன்னிப்பு அளிக்கப் போவதில்லை’ – மகிந்த ராஜபக்ஸ அறிவிப்பு

கோலாலம்பூர் : 'ராணுவ கோர்ட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பொன்சேகாவுக்கு மன்னிப்பு கிடையாது. அவர் ஒரு முட்டாள் என, இலங்கை அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் பத்திரிகைக்கு இலங்கை அதிபர் ராஜபக்ஷே அளித்த பேட்டி: ராணுவத்தில் இருந்து கொண்டே அரசியலில் ஈடுபட்டதற்காக முன்னாள் தளபதி பொன்சேகா மீது, ராணுவ கோர்ட்டில் விசாரணை நடக்கிறது. பொன்சேகா ஒரு முட்டாள். கடந்தாண்டு நவம்பரில் அதிபர் மாளிகைக்கு அவர் வந்திருந்தார். அப்போது, அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புகிறீர்களா? என, அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், அது போன்ற எண்ணம் எதுவும் எனக்கு இல்லை என்றார். அரசியல் தொடர்பாக அவரது விருப்பத்தை கடைசி வரை என்னிடம் கூறவில்லை. அரசியல் என்பது ராணுவம் போன்றது இல்லை என, அவருக்கு அறிவுரை கூறினேன். அவருக்கு மன்னிப்பே கிடையாது. ராணுவ சட்டப்படி விசாரணை நடத்தி, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவரை மன்னித்தால், ராணுவத்தில் ஒழுங்கீனம் அதிகரித்து விடும். விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்ட பின், என்னை சந்தித்த அவர், இந்தியாவிடமிருந்து நமக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே, ராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றார். ஆனால், இந்திய ராணுவத்தின் பலம் என்ன என்பதை அவருக்கு தெரிவித்தேன். விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக ரகசியமாகச் செயல்படுவோர் இன்னும் உள்ளனர். குறிப்பாக, இலங்கைக்கு வெளியில், வெளிநாடுகளில் செயல்படுகின்றனர். (மேலும்) 19.03.10

_____________________________________________________________________________________________

சனல்-4 க்கு பொன்சேகா ரகசிய கடிதம்; பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

அமைச்சர் டலஸ்

n5இலங்கைக்கு எதிராகப் பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்ட “சனல் – 4” தொலைக் காட்சியுடன் சரத்பொன்சேகா கொண்டுள்ள தொடர்பு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்தார். தாம் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தமக்கு சுடுதண்ணீர் கூட இல்லையென்றும் சனல் - 4 இற்கு ரகசிய கடிதம் எழுதும் அளவுக்கு சரத் பொன்சேகா தொடர்பு வைத்தி ருந்தால், இலங்கைக்கு எதிராக வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய வீடியோவைத் தயாரிக்கும் பின்னணியிலும் அவர் செயற்பட்டிருப்பார் என்ற சந்தேகமும் எழுவதாக அமைச்சர் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டி லேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். ‘சனல் – 4’ என்பது புலிகளின் குரலின் ஆங்கில வடிவம் என்றே கருத வேண்டியுள்ளது. அவ்வாறான ஒரு தொலைக்காட்சிக்கு ரகசிய கடிதம் எழுதுகிறாரென்றால், இராணுவச் சட்டத்தையும் ஒழுங்கையும் அவர் எவ்வாறு பேணி இருப்பார் என்ற சந்தேகம் எழுகிறது. அந்தக் கடிதம் சோவியத் இலக்கியத்தின் வார்த்தைப் பிரயோகத்தில் காணப்படுகிறது.  (மேலும்) 19.03.10

_____________________________________________________________________________________________

சரத் மீதான விசாரணைக்குப் புதிய குழு நியமனம் குறித்து ஜனாதிபதியிடம் தெரிவிப்பு : ஜகத் ஜயசூரிய

ஜெனரல் சரத் பொன்சேகா மீதான விசாரணைகளைத் தொடர்ந்து நடத்துவதற்குப் புதிய நீதியரசர் குழுவை நியமிப்பது குறித்து ஜனாதிபதிக்குக் கடிதமூலம் அறிவித்திருப்பதாகவும் ஜனாதிபதியின் பதில் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிடப்படும் எனவும் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். பொன்சேகா மீதான இரண்டாவது கட்ட விசாரணையின் போதுஇ தற்போது நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய நீதியரசர் குழு விசாரணை நடத்துவதற்கு அவரது தரப்பு நேற்று ஆட்சேபனை வெளியிட்டிருந்தது. இதன் அடிப்படையில் நேற்று விசாரணை காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டது .இது தொடர்பாக இராணுவத் தளபதியிடம் கருத்துக் கேட்ட போதே அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

_____________________________________________________________________________________________

பொட்டு அம்மான் தற்கொலையா? தப்பித்தாரா?

pottu ammanகொழும்பு, மார்ச்.17 (டிஎன்எஸ்) இலங்கையில் இறுதிகட்ட போரின்போது பொட்டு அம்மான் தன் உடம்பில் கட்டி இருந்த குண்டுகளை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவர் மனைவியும் அது போல தற்கொலை தாக்குதல் மூலம் தன்னைத் தானே அழித்துக் கொண்டதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது. பொட்டு அம்மான், உடலை மீட்க முடியவில்லை என்றும் இலங்கை அரசு தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் பொட்டு அம்மானின் மரணச்சான்றிதழைக் கொடுக்க இயலவில்லை என்று இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது. லங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த உச்சக் கட்ட சண்டையில்  பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனையும், சுட்டுக் கொன்று விட்டதாக அறிவித்த  ராணுவம் அறிவித்து பிரபாகரன் உடலையும் காட்டியது. ஆனால் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக விடுதலைப்புலிகள் இயக்கம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. இதனால் பிரபாகரன் விஷயத்தில் சர்ச்சை நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் பொட்டு அம்மான். இவர் தப்பிச்சென்று விட்டதாக தகவல்கள் வெளியானது. (மேலும்) 18.03.10

_____________________________________________________________________________________________

விருப்பு வாக்கு உருவாக்கும் வெறுப்பு

விருப்பு வாக்குகளுக்கான மோதல்கள் இனிவரும் நாட்களில் உச்சக்கட்டத்தையடையும் வாய்ப்புகளே அதிகம் காணப்படுகின்றன. அளவுக்கு மிஞ்சிய வேட்பாளர்களின் களமிறக்கம் கட்சிகளுக்குள் மோதல்களையும் போட்டிகளையும் ஏற்படுத்தியுள்ள அதேவேளை, மக்களிடையே குழப்ப நிலைமையையும் தோற்றுவித்துள்ளது.

election196 பாராளுமன்ற ஆசனங்களுக்காக 7 ஆயிரத்துக்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுவதும் அடிப்படை அரசியல் அறிவற்ற, நாகரிகமற்றவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருப்பதுமே வன்முறைகள் அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ளதுடன், விருப்பு வாக்குகளைப் பெற வேண்டிய தேவையும் ஒரே கட்சி ஆதரவாளர்கள், வேட்பாளர்களிடையே மோதல்களை ஏற்படுத்தியுள்ளது. 6,7 ஆசனங்கள் உள்ள தேர்தல் மாவட்டங்களுக்கு 200,300 வேட்பாளர்கள் கள மிறக்கப்பட்டிருப்பதும் விருப்பு வாக்குகளைப் பெறுவதற்கான போட்டியையும் மோதல்களையும் ஒரே கட்சியினருக்கிடையில் உருவாக்கியுள்ளது. இதனால் விருப்பு வாக்குகளுக்கான மோதல்கள் இனிவரும் நாட்களில் உச்சக்கட்டத்தையடையும் வாய்ப்புகளே அதிகம் காணப்படுகின்றன. அளவுக்கு மிஞ்சிய வேட்பாளர்களின் களமிறக்கம் கட்சிகளுக்குள் மோதல்களையும் போட்டிகளையும் ஏற்படுத்தியுள்ள அதேவேளை, மக்களிடையே குழப்ப நிலைமையையும் தோற்றுவித்துள்ளது. வேட்பாளர்களில் அதிகமானோர் தமக்கு வேண்டப்பட்டவர்களாக இருக்கின்ற நிலையில் அவர்கள் அனைவரும் ஒரே மாவட்டத்தில் போட்டியிடுவதால் யாருக்கு வாக்களிப்பது, யாருக்கு விருப்பு வாக்களிப்பது, என்பது தொடர்பிலேயே மக்களிடையே குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் வேட்பாளர் பட்டியலைத் தாங்கிய வாக்குச் சீட்டும் வழமையை விட இம்முறை மிக நீண்டதாக இருக்கப் போவதும் தமக்கு விருப்பமானவர்களைத் தேர்வு செய்வதில் வாக்காளர்களிடையே ஒரு தடுமாற்ற நிலை ஏற்படக் காரணமாகியுள்ளது. (மேலும்) 18.03.10

_____________________________________________________________________________________________

பொன்சேகா மீது விசாரனை செய்ய இராணுவ நீதிமன்றம் காலவரையறையின்றி ஒத்திவைப்பு 

 சரத்பொன்சேகா மீது விசாரனை செய்ய இன்று இரண்டாவது நாளாக கூடிய இராணுவ நீதிமன்றம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக இராணுவ நீதிமன்றம் இன்று காலை 9.30 மணயவில் கூடியதோடு சரத்பொன்சேகா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இதில் முதலாவது நளான நேற்று கூடிய நீதிமன்றத்தின் தலைவர்கள் உட்பட நீதிபதி குழாம் இன்றைய தினமும் 2ஆவது நீதிமன்றத்தின் உறுப்பினர்களாக செயற்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய இரானுவநீதிமன்றத்தை கூட்டுமாறு ஜனாதிபதி பிரப்பித்த உத்தரவை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியிடம் சமர்பிப்பதாக அதன் உறுப்பினர்கள் அறிவித்ததாக ஜெனரல் சரத்பொன்சேகா சார்பில் இராணுவ நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டதரனிகளின் குழுவின் உறுப்பினரான நுவான் தெரிவித்துள்ளார். இதன் பிறகு இன்று கூடிய இராணுவ நீதிமன்றம் காலவரையன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. (மேலும்) 18.03.10

_____________________________________________________________________________________________

மோட்டார் வாகன உற்பத்தியில் உலகின் 10 முன்னணி மையங்களில் ஒன்றாக சென்னை உருவாக்கப்படும் - கருணாநிதி

சென்னை, மார்ச்.18-

stalin"மோட்டார் வாகன உற்பத்தியில், உலகின் 10 முன்னணி மையங்களில் ஒன்றாக சென்னை உருவாக்கப்படும்'' என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.சென்னையை அடுத்த ஓரகடத்தில் ரெனால்ட்-நிசான் கூட்டு நிறுவனத்தின் சார்பில் ரூ.4,500 கோடியில் (990 மில்லியன் டாலர்) கார் தயாரிப்பு தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, `ரெனால்ட்-நிசான்' கூட்டு நிறுவனத்தின் தலைவர் கார்லஸ் கோன் தலைமை தாங்கினார். ஜப்பான் முன்னாள் பிரதமர் யோஷிரோ மோரி முன்னிலை வகித்தார். நிறுவன நிர்வாக இயக்குனர் ஆகிரா சகுராய் வரவேற்று பேசினார். விழாவில் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி கலந்து கொண்டு புதிய கார் தயாரிப்பு தொழிற்சாலையை தொடங்கிவைத்தார்.அப்போது அவர் பேசியதாவது:- இங்கு முன்னாள் ஜப்பான் பிரதமர் வந்திருப்பதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். ஜப்பான்-இந்திய சங்கத்தின் தலைவர் என்ற முறையில் ஜப்பானிலிருந்து தமிழ்நாட்டுக்கு மேலும் அதிகமான முதலீடுகளுக்கு அவர் வழிவகுப்பார் என்று நம்புகிறேன். பல்வேறு வளர்ச்சி, நலத்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தி தமிழகத்தின் சகலவிதமான வளர்ச்சிக்கு அரசு முயன்று வருகிறது. தொழில் முன்னேற்றத்திற்கும் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. 
(மேலும்) 18.03.10

_____________________________________________________________________________________________

கிழக்கு பல்கலைக்கழகம் 22 இல் மீண்டும் திறப்பு: நிதி மோசடி தொடர்பு விசாரணைக்கு பணிப்பு; அமைச்சர் முரளி - விஸ்வ வர்ணபால பேச்சில் முடிவு

மூடப்பட்டுள்ள கிழக்கு பல்கலைக்கழகம் மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 22 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடி க்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு உயர் கல்வி அமைச்சர் விஸ்வா வர்ணபால நேற்று பதில் உபவேந்தர் கலாநிதி பிரேம்குமாருக்கு பணிப்புரை விடுத்தார். கிழக்கு பல்கலைக்கழகம் கடந்த 12 ஆம் திகதி மூடப்பட்டதன் பின்னர் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் கவனத்திற்கு கொண்டு வந்தது. உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால, பல்கலைக்கழக மானி யங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க, உப தலைவர் மற்றும் செயலாளர் மாலினி பீரிஸ், அமைச்சர் கருணா அம்மான் ஆகியோர் நேற்று உயர் கல்வி அமைச்சில் விசேட கூட்டம் ஒன்றை நடத்தினர்.

_____________________________________________________________________________________________

சிறுவர்களுடன் பாதிரியார்கள் தகாத உறவு வாடிகனுக்கு தலைவலி; போப் கண்டிப்பு

வாடிகன்:அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் உள்ள பாதிரியார்கள், சிறுவர்களுடன் தகாத உறவு வைத்து கொண்டது தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதால், இது தொடர்பாக அனைத்து தேவாலய பாதிரியார்களுக்கும் எச்சரிக்கை கடிதத்தை அனுப்ப உள்ளதாக போப் பெனிடிக்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, அயர்லாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ரோமன் கத்தோலிக்க பாதிரியார்கள், சிறுவர்களிடம் தகாத உறவு வைத்துக் கொள்வதாக நூற்றுக்கணக்கான புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனால், வாடிகன் நகரில் உள்ள போப் பெனிடிக்ட் வருத்தமடைந்துள்ளார். போப் பெனிடிக்ட் ஜெர்மனியில் பிறந்தவர். முனிச் நகர பிஷப்பாக 77ம் ஆண்டு முதல் 81ம் ஆண்டு வரை பதவி வகித்தவர். ஜெர்மனியில் உள்ள பாதிரியார்கள், சிறுவர்களுடன் செக்ஸ் வைத்து கொண்டது தொடர்பான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த புகார்களுக்கு தீர்வு காண்பது குறித்து வாடிகன் நகரில் போப் பெனிடிக்ட் உயர் மட்ட ஆலோசனை நடத்தினார். (மேலும்) 18.03.10

_____________________________________________________________________________________________

யாழ்-முல்லைத்தீவு - கிளிநொச்சி .பஸ் சேவை விரைவில் ஆரம்பம்

 மீள்குடியேற்றம் நிறைவு பெற்றதும் பஸ் சேவைகள் விரிவுபடுத்தும் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களிலிருந்து விரைவில் யாழ்ப்பாணத்திற்கு தனியார் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதியுடன் முல்லைத்தீவு - யாழ்ப்பாணத்திற்கென ஆறு தனியார் பஸ் சேவைகளும் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு 10 தனியார் பஸ் சேவைகளும் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். முல்லைத்தீவு - கிளிநொச்சி மாவட்டங்களில் மீள்குடியேற்றம் முழுமையாக நிறைவு பெற்றதன் பின்னர் பஸ் சேவைகள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பணிமனையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் பஸ் நடத்துனர் கழக உறுப்பினர்களது கலந்துரையாடல் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

_____________________________________________________________________________________________

சொந்த பந்தத்தைப் பார்க்காது கொள்கை அடிப்படையில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பது அவசியம் சம்பந்தன் வேண்டுகோள்; தமிழ் காங்கிரஸை மீண்டும் இணையுமாறு அழைப்பு

பிரிந்துபோயுள்ள அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தங்கள் முடிவை மீள் பரிசீலனை செய்து திரும்பி வந்து எம்முடன் சேர வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினதும் தலைவரான இரா.சம்பந்தன் அழைப்பை விடுத்துள்ளார். வவுனியா, சாஸ்திரி கூழாங்குளத்தில் சித்திவிநாயகர் மைதானத்தில் நேற்று முன்தினம் திங்கள் மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சம்பந்தன் பகிரங்க அழைப்பை விடுத்தார். வவுனியா நகரசபையின் உப தலைவர் ரதன் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். சம்பந்தன் கூறியதாவது; பிரிந்துபோயுள்ள இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தனது தவறை உணர்ந்து திரும்பி வந்து எம்முடன் இணையவேண்டுமென்று அழைக்கின்றேன். தமிழ்க் காங்கிரஸின் தலைவர் எங்களுடனேயே இருக்கிறார். அவர் அனுபவம் வாய்ந்தவர். தமிழ் மக்களை இக்கால கட்டத்தில் பிரிக்காதீர்கள் என்று தமிழ்க் காங்கிரஸை வேண்டுகின்றேன். தமிழ் மக்களை இக்கட்டத்தில் பிரித்து பலவீனப்படுத்துவது மன்னிக்க முடியாத செயலாகும்.ஒற்றுமையாக நின்று நிலையான , நிரந்தரமான, நியாயமான நடைமுறைப்படுத்தக்கூடியதான ஒரு அரசியல் தீர்வைப் பெற வேண்டிய கட்டத்தில் நாம் நிற்கின்றோம். ஆகவே பிரிந்து நிற்காமல் எம்முடன் சேர்ந்து உழைக்க முன்வாருங்கள் என்று தமிழ்க் காங்கிரஸை அழைக்கின்றேன். அவர்கள் தொடர்ந்து பிரிந்து செயற்பட்டாலும் தமிழ் மக்கள் அவர்களுக்கு துணை போகக் கூடாது என்று வேண்டுகின்றேன் என்று சம்பந்தன் கூறினார். (மேலும்) 17.03.10

_____________________________________________________________________________________________

இலங்கை அரசின் எதிர்ப்பை ஏற்க முடியாது:பான் கீ மூன்

 ba ki moonநிபுணர் குழுவை நியமிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், உரிய நேரத்தில் நிபுணர்கள் குழு நியமிக்கப்படும் எனவும் பான் கீ மூன் செய்தியாளர் மாநாடொன்றில் குறிப்பிட்டுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை தொடர்பிலான நிபுணர்கள் குழு நியமிப்பதற்கான பூரண அதிகாரம் காணப்படுகிறதென தெரிவித்த ஐ.நா செயலாளர், தமது அதிகாரங்களை மீறி ஐ.நா. செயற்படுவதாக அணிசேரா நாடுகள் அமைப்பு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசேட நிபுணர்கள் குழுவினர், பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கவுள்ளனர். நிபுணர் குழுவொன்றை ஐ.நா. செயலாளார் பான் கீ மூன் நியமிக்கவுள்ளதாக அறிவித்ததையடுத்து இந்நியமனம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். ஐக்கிய நாடுகளின் இந்த நடவடிக்கை எதிர்வரும் பொதுத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் எனவும், இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி செயலகம் கடந்த 6 ஆம் திகதி அறிக்கை வெளியிட்டிருந்தது. (மேலும்) 17.03.10

_____________________________________________________________________________________________

த.தே.கூ.வன்னி மாவட்ட வேட்பாளர் அறிமுகம் 

 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்களின் அறிமுகமும், பிரசாரக் கூட்டமும் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் த.தே.கூ. நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஆர்.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா, டெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் செயலாளர் சுரேஷ் பிரமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வேட்பாளர்களான சூசைதாசன்,டாக்டர் ஜெயகுலராஜா,செல்லத்துரை, சட்டத்தரணி சிராய்வா ஆகியோர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இத்தேர்தல் பிரசாரக் கூட்டம் மன்னார் பொது விளையட்டு மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் அனுமதி மறுக்கப்பட்டமையால் மன்னார் நகரசபை மண்டபத்தில் நடத்தப்பட்டது. பொலிஸாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பலநூற்றுக் கணக்கான ஆதரவாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

_____________________________________________________________________________________________

கொந்தளிக்கும் இலங்கையின் எதிர்காலம்: சிறுபான்மை பெரும்பான்மை இனங்களுக்கு வெளியேயான வலை

-    கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்

rajapakshaஇலங்கை நிலவரம் ஒரு கொந்தளிப்பான சூழலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. உள்நாட்டிலும் குழப்பமான நிலை. வெளியேயும் மேற்குலகின்   அதிகரித்து வரும் நெருக்கடிகள்@ அழுத்தங்கள். அத்துடன் இந்தியாவா சீனாவா அமெரிக்காவா தங்கள் கால்களை பலமாக ஊன்றிக் கொள்வது என்ற போட்டிகள். இந்தப் போட்டிகள் உள் நாட்டில் உருவாக்கும் குழப்பங்கள். அரசியல் கட்சிகளின் அணிப் பெருக்கம். வெளியே புலம் பெயர்ந்த தமிழர்களைக் கையாள முற்படும் மேற்கின் போக்கு என ஒரு வெப்ப வளையம். இதில் யப்பானும் ஐரோப்பிய நாடுகளும் தாங்கள் எங்கே, எப்படி நிற்பது என்று தெரியாது தடுமாறிக் கொண்டும் போட்டியிட்டுக் கொண்டுமிருக்கும் நிலைமை. இதற்காக சுருக்குக் கயிறுகளோடு சில நாடுகளும் கத்தி, பொல்லு, குண்டாந்தடிகளோடு சிலநாடுகளும் சவக்குழி, பொறிக் கிடங்குகளோடு சில நாடுகளும் என்று ஒரு மாபெரும் பொறிவெளியில் இலங்கை இப்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. போர் முடிந்து விட்டது என்று யாரும் ஆறுதலடைய முடியாதபடி நிகழ்ச்சிகள் நடக்கின்றன. எல்லாமே எதிர் மறை நிகழ்ச்சிகள். ‘மரம் சும்மா இருந்தாலும் காற்று அதைச் சும்மா விடாது’ என்பது உலகப் பொதுக்கூற்றல்லவா! முன்னர், நிலைமைகளை சமநிலையில் வைத்திருப்பதற்கு போர் இருந்தது. புலிகள் இருந்தார்கள். இலங்கை அரசாங்கம் கொஞ்சம் விலகினால் புலிகளுக்கு நெருக்கமாக வந்து (இந்த நெருக்கம் இரகசிய வழிகளிலானது) அரசாங்கத்தைப் பணியவைக்கும் உத்தியை இந்த நாடுகள் பயன்படுத்தின. அல்லது ஆட்சியிலிருக்கும் தரப்புக்கு எதிராக இருக்கும் தரப்பைப் பலப்படுத்திப் பணிய வைக்க முயற்சித்தன. இதில் சிங்களம் தமிழ் என்ற பேதங்களிருக்கவில்லை. எது வாய்ப்பான தரப்பு என்பதே கவனிக்கப்பட்டது.  (மேலும்) 17.03.10

_____________________________________________________________________________________________

இலங்கைத் தேர்தல் – ஈ.பி.ஆர்.எல்.எவ்.(பத்மநாபா) கனடா

இலங்கையில் ஏப்ரல் 8ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எவ்.(பத்மநாபா) இனர் புளொட் அமைப்பினருடன் ஐக்கிய முன்னணி அமைத்து போட்டியிடுகின்றனர். யாழ்ப்பாணம, திருகோணமலை மாவட்டங்களில் ஈ.பி.ஆர்.எல்.எவ்.(பத்மநாபா) இன் மெழுகுதிரிச் சின்னனத்திலும் வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் புளொட்டின் நங்கூரம் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைகான வாழ்வுரிமையை ஐக்கிப்பட்ட இலங்கைகுள் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசத்தில் நிறுவுதற்கான முன்னெடுப்புகளில் இலங்கை அரசுடன் பலமான நிலையில் இருந்து பேசுதல் என்பது அவர்களின் வியூகமாக இருக்கின்றது என்று இலங்கையில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் சகல இனங்களும் சக, சம உரிமையுடன் வாழ்வதை உறுதிப்படுத்தல் என்ற வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல் என்ற ஈ.பி.ஆர்.எல்.எவ்.(பத்மநாபா) அடிப்படையான கொள்கையுடன் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக செயற்பட்டு வருகின்றனர். இவர்கள் முழு இலங்கை மக்களுக்குமான வாழ்வுரிமையை உறுதிப்படுத்தல் என்பதன் அடிப்படையில் சமகால, எதிர்கால அரசியல் செயற்பாடுகளை கொண்டிருக்கின்றனர். இதன் அடிப்படையில் நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். (மேலும்) 17.03.10

_____________________________________________________________________________________________

யாழ்ப்பாணத்தில் பணம் பறிக்கும் கும்பல் எச்சரிக்கையுடன் இருக்கக் கோருகிறது ஈ.பி.டி.பி.

அரசியல் கட்சிகளின் பெயராலும் ஒருசில நிறுவனங்களின் பெயராலும் யாழ் குடாநாட்டில் பொதுமக்களிடம் இருந்து பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு வருவதாக ஈ.பி.டி.பி. தலைமை அலுவலகத்திற்கு தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. எனவே யாழ். குடாநாட்டு மக்கள் இந்த விடயத்தில் விழிப்பாக இருந்து செயற்பட வேண்டுமென ஈ.பி.டி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன் கேட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், யாழ் மாநகர சபைத் தேர்தல் காலத்திலும் நலன்புரி நிலையங்களில் இருப்போரை விடுவித்துத் தருவதாகக் கூறி சில சக்திகள் இதேபோன்று பொது மக்களிடமிருந்து பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

_____________________________________________________________________________________________

சரத் பொன்சேகா அவர்களுக்கு எதிரான முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணை

Sarath_Fonsekaஇலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்களுக்கு எதிரான இராணுவ நீதிமன்ற விசாரணை ஒன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது.இந்த விசாரணைகளின் போது, அவர் இராணுவ பதவியில் இருந்தபோதே அரசியலில் ஈடுபட்டதான குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டன. இந்த இராணுவ நீதிமன்ற விசாரணைகளை சரத் பொன்சேகா அவர்கள் புறக்கணிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இன்றைய விசாரணைகளில் அவர் தனது சட்டத்தரணிகளுடன் கலந்து கொண்டிருக்கிறார். அதேவேளை அவர் மீதான வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பான மற்றுமொரு விசாரணை புதன்கிழமை ஆரம்பமாகின்றது. அந்த விசாரணையின் போது இராணுவ தளபாடங்களின் கொள்வனவு குறித்த விதிகளை அவர் மீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்படும். இன்றைய இராணுவ நீதிமன்ற விசாரணைகள் கடற்படைத்தலைமையகத்தில் ஆரம்பமானதாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க அவர்கள் கூறினார். . (மேலும்) 17.03.10

_____________________________________________________________________________________________

இந்திய - சீன உறவில் முன்னேற்றம்' சொல்கிறார் நிருபமா

வாஷிங்டன்:"இந்திய - சீன உறவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆப்கனில் இந்தியர்கள் மீதான தாக்குதலையடுத்து, அங்கு இந்தியா மேற்கொள்ளும் வளர்ச்சிப் பணிகளைக் குறைப்பது என்ற பேச்சுக்கே இடம் இல்லை' என்று வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் தெரிவித்தார். வாஷிங்டனில் விட்ரோ வில்சன் மையத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:கடந்த 20 ஆண்டுகளாக இந்திய - சீன உறவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது இருக்கும் உறவு வெறும் எல்லைப் பிரச்னைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதல்ல. அது பரந்து விரிந்த பரிமாணம் கொண்டது.இருநாடுகளுக்கிடையிலான எல்லைப் பிரச்னைகளினால் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம், வர்த்தகம் மற்றும் தொழில் ரீதியான உறவுகள் பாதிக்கப்படாது. இருநாடுகளின் எழுச்சியும் உலக நாடுகளை ஈர்த்துள்ளது. நமது எல்லைகளில் சீனாவுடன் அமைதி நிலவுகிறது.ஆப்கனில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பது குறித்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இதனால் அங்கு இந்தியா மேற்கொள்ளும் பணிகள் குறைக்கப்பட மாட்டாது. தற்போது அங்கு ஐயாயிரம் கோடி ரூபாய் செலவில், இந்தியா வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.ஆப்கனில் ஜனநாயகமும், முன்னேற்றமும் ஏற்பட வேண்டும் என்ற உணர்வோடுதான் செய்யப்படுகின்றன. தலிபான்களில் நல்லவர் கெட்டவர் கிடையாது. அது ஆப்கனில் மிகப் பெரிய பேரழிவை உண்டாக்கி விடும்.இவ்வாறு நிருபமா ராவ் கூறினார்.

_____________________________________________________________________________________________

பிரச்சினையின் தீர்வுக்காக ஐக்கியம்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகா ணங்களிலிருந்து 34 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வுள்ளனர். இவ்விரு மாகாணங்களிலும் மொத்தம் 1814 வேட் பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். இதற்கு முன் நடைபெற்ற எந்தத் தேர்தலிலும் இவ்வளவு பெருந்தொகையான வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் இவ்விரு மாகாணங்களிலும் போட்டியிடவில்லை. தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று கடந்த காலங்களில் மரண அச்சுறுத்தல் நிலவிய பின்னணியில் பார்க்கும்போது, இவ்வளவு கூடுதலான எண்ணிக்கையில் வேட்பாளர்கள் களத்துக்கு வந்திருப்பது அந்த அச்சுறுத்தல் முற்று முழுதாக நீங்கிச் சுதந்திரமாகச் சிந்தித்துச் செயற்படும் சூழ்நிலை உருவாகியிருப்பதை வெளிப்படுத்துகின்றது. தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் நடக்கும் தேர்தல்களில் யார் போட்டியிடலாம், யார் போட்டியிடக் கூடாது என்பதைப் புலிகளே தீர்மானித்தார்கள். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முன்னெடுத்த இராணுவ நடவடிக்கையில் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் இப்போது அச்சமற்ற சூழ் நிலையில் வாழ்கின்றார்கள். அதனால் துணிச்சலுடன் வேட்பாளர் களாக முன்வந்திருக்கின்றார்கள். இது ஜனநாயகத்தைப் பொறுத்த வரையில் ஆரோக்கியமான வளர்ச்சிப்போக்கு. . (மேலும்) 17.03.10

_____________________________________________________________________________________________

ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம்

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சி கூட்டணியாகிய, ஐக்கிய தேசிய முன்னணி, நாடாளுமன்றத் தேர்தலுக்கான தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருக்கிறது. இந்த தேர்தல் அறிக்கையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை சீர்திருத்துவது, நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை ஐந்து ஆண்டுகளாகக் குறைப்பது போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆனால், கடந்த இரண்டரை தசாப்தங்களாக நாட்டில் நடந்த போர் முடிவுக்கு வந்த நிலையில், அந்தப் போருக்குகாரணமாக இருந்த இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து, இந்த அறிக்கையில் பெரிதாக எதுவும் சொல்லப்படவில்லை. இதற்கு காரணம் என்ன என்று, அந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கீம் தமிழோசை தொடர்பு கொண்டு கேட்டபோது, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது என்பது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கும் நிலையிலேயே சாத்தியமான விஷயம் எனவே அது குறித்து பெரிதாக இந்த அறிக்கையில் பிரஸ்தாபிக்கப்படவில்லை என்றார். (மேலும்) 17.03.10

_____________________________________________________________________________________________

தமிழில் பொலிஸ் முறைப்பாட்டுப் பிரதி

Policeஇந்த நாட்டில் சிறுபான்மையினர் என்று எவரும் இல்லை என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கூற்றை செயற்படுத்தும் நோக்கில் நேற்று (15) வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் மேல் மாகாண வடக்கு பிரதேச பிரதி பொலிஸ் மா அதிபர் ஆனந்த ஹெட்டியாராச்சியின் தலைமையில் ஒரு நடவடிக்கை இடம்பெற்றது. இலங்கையில் எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் தமிழர் ஒருவர் தமிழ் மொழியில் தனது முறைப்பாட்டை தெரிவிக்கும் இந்த நடவடிக்கை ஏற்கனவே மேல் மாகாணத்தில் வெலிக்கடை, கொஹ¤வலை, தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையங்களில் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. படிப்படியே நாட்டில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இந்த நடவடிக்கை விஸ்தரிக்கப்படும். மேல் மாகாண வடக்கு பிரதேச பிரதி பொலிஸ் மா அதிபர் ஆனந்த ஹெட்டியாராச்சி வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் நேற்று தமிழில் செய்யப்பட்ட முறைப்பாடொன்றை பரீட்சித்தார். நுகேகொடை பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி தேசபந்து தென்னக்கோன், ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ராஜபக்ஷ, உதவி பொலிஸ் அதி காரி (நுகேகொடை பிரிவு) நிஷாந்த சொய்சா மற்றும் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி சரத் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

_____________________________________________________________________________________________

வடக்குக்கு சுதந்திரமாகச் சென்றுவாருங்கள்: நூறு வீத பாதுகாப்பு நாம் தருகிறோம் - இராணுவம்

 கண்ணி வெடி அகற்றப்படாத பிரதேசங்கள் தவிர கிளிநொச்சி,முல்லைத் தீவு உள்ளிட்ட வடக்கின் எந்தப் பகுதிக்கும் எந்தவொரு இலங்கையரும் சுதந்திரமாகச் சென்றுவரலாம் என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். வீரகேசரி இணையத்தளத்துக்கு இன்று அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வடக்கு கிழக்குக்கு செல்லும் மக்களின் நடமாடும் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு குறித்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “ஆரம்ப காலங்களில் வடக்குக்கு செல்வதற்கு வரிகள் அறவிடப்படும். வரிப் பணத்தை கொடுத்த பின்னர் தான் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. இலங்கையர்கள் ஒவ்வொருவருக்கும் அங்கு சென்றுவர முழுச் சுதந்திரம் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் கூட எமது அனுமதியின்றி செல்லலாம். வெளிநாட்டில் நிரந்தர வதிவிடம் பெற்றவர்கள் இலங்கையில் பிறந்திருந்திருப்பின் அவர்கள் செல்வதற்கும் நாம் தடைகள் எதுவும் விதிப்பதில்லை. ஆனால் இலங்கையில் பிறக்காத வெளிநாட்டவர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடனேயே சென்றுவர முடியும். வெளிநாட்டவர்கள் தொடர்பில் நாம் சில நடைமுறைகளை பின்பற்றுகிறோம்

_____________________________________________________________________________________________

நெலிந்து மெலிந்து அனைத்தையும் இழந்து போய் உள்ள எமது சமூகத்தையும் அவர்களின வளத்தையும் பாதுகாக்க புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முன்வரவேண்டும்

- ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி-பத்மநாபா அணி செயலாளர் தோழர் சிறிதரன்

eprlf-sritharanதமிழ் தேசிய வியாபாரிகள் தேர்தல் பிரச்சாரத்திற்காக வர்ணச் சுவரொட்டிகளுக்கு செலவிடும் பணத்தில் ஒரு பகுதியைத் தன்னும் மக்களுக்கு பகிர்ந்தளிப்பார்களா? நெலிந்து மெலிந்து அனைத்தையும் இழந்து போய் உள்ள எமது சமூகத்தையும் அவர்களின வளத்தையும் பாதுகாக்க புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முன்வரவேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா அணியின் பொதுச்செயளாலரும் அக்கட்சியின் யாழ் மாவட்டத்தின் தலைமை வேட்பாளருமான தோழர் சிறிதரன் சுகுமார் ரிபிசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலின் போது  வேண்டுகோள் ஒன்றை புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு விடுத்துள்ளார். கடந்த யுத்த காலங்களின் போது இம் மக்களின் நன்மை தீமைகளில் அம் மக்களுடன் மக்களாக நின்ற பணியாற்றியவர்களை மக்கள் இனம் கண்டு கொள்ளுவார்கள் கடந்த தேர்தலின் போது இம்மக்களால் தெரிவுசெய்யபட்ட 22 பாரளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளையும் அவர்களின் குடும்பங்களை வெளிநாட்டில் குடியேற்றிவிட்டு உலகம் எல்லா பயணங்களை மேற்கொண்டுவிட்டு தேர்தல்காலங்களில் மட்டும் மக்களின் நன்மை தீமைகளை பற்றியும் தன்னாட்சி சுயநிர்ணயம் பற்றி பேசுவதையும் எம்மக்கள் நன்கு உணர்ந்து உள்ளதோடு அவர்களை இனங்கண்டு உள்ளார்கள் எனவும் குறிப்பிட்டார். (மேலும்) 16.03.10

_____________________________________________________________________________________________

அதிகரிக்கும் நிலநடுக்கங்களும் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வும்

erdbeben_பூகம்ப ஆபத்து வலயங்களென அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிராந்தியங்களையும் தாண்டி உலகில் தற்போதெல்லாம் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதை நாம் அறிகிறோம். புவியின் கடந்த கால இயற்கை அனர்த்தப் பதிவுகளை ஆராய்ந்து பார்க்குமிடத்து நிலநடுக்கங்கள் உலகில் பரவலாக அதிகரித்து வருவது நன்கு தெரிகிறது. அண்மைக்கால பூகம்பத் தரவுகள் அச்சம் தருவனவாக உள்ளன. ஹெய்ட்டியில் இடம்பெற்ற மோசமான பூகம்பம் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட மனித உயிர்களைப் பலி கொண்டது. அங்கு மக்களின் அவலம் இன்னுமே தணியவில்லை. ஹெய்ட்டி பூகம்ப அனர்த்தத்தின் துயரம் அடங்குவதற்கிடையில் சிலி, துருக்கி ஆகிய நாடுகளில் அடுத்தடுத்து பூகம்பங்கள் ஏற்பட்டன. சிலியில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை சுமார் இருநூறு ஆகும். துருக்கியில் அறுபதுக்கு மேற்பட்டோர் மரணமடைந்தனர். இந்நாடுகளில் காயமடைந்தோரின் எண்ணிக்கை மிக அதிகம். உடைமைகளுக்கு ஏற்பட்ட சேதம் கணக்கிட முடியாதது. இவையெல்லாம் தவிர கடந்த 2004ம் ஆண்டு சுனாமி பேரனர்த்தம் ஏற்படக் காரணமாகவிருந்த பூகம்பத்தையடுத்து இந்து சமுத்திரப் பிரா ந்தியத்தில் அமைந்துள்ள இந்தோனேஷியாவில் நூற்றுக்கணக்கான நில அதிர்வுகள் இதுவரை உணரப்பட்டுள்ளன. (மேலும்) 16.03.10

_____________________________________________________________________________________________

தேர்தலைக் கண்காணிக்க 20 வெளிநாட்டவர் வருகை : பெப்ரல்

தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியளவில் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் இங்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு 20 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதனை பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு தேர்தல் ஆணையாளர் அனுமதி வழங்கியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். சுதந்திரமானதும், நியாயமானதுமான ஆசிய தேர்தல் வலையமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களே கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். ஜப்பான், தாய்லாந்து, மலேசியா, ஆப்கானிஸ்தான், பர்மா, இந்தோனேஷியா, பங்களாதேஷ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 20 தேர்தல் கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். இதற்கு மேலதிகமாக ஆயிரக்கணக்கான உள்நாட்டு கண்காணிப்பாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என தேர்தல் ஆணையாளர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

_____________________________________________________________________________________________

கிளிநொச்சி முல்லைத்தீவு தனியார் போக்குவரத்து சேவையினை இயல்பு நிலைக்கு கொண்டுவர அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை.

renganகிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவடங்களின் தனியார் போக்குவரத்து சேவைகளை இயல்பு நிலைமைக்கு கொண்டுவரும் பொருட்டு விரிவான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் இடம்பெற்றுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் யாழ். பணிமனையில் இன்று காலை இடம்பெற்ற மேற்படி கூட்டத்தில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் நிர்வாகத்தினர் மற்றும் நூற்றிற்கு மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதன்போது தனியார் போக்குவரத்து சேவைகளை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் பொருட்டு அதுதொடர்பான கோரிக்கைகள் சங்க நிர்வாகத்தினரால் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக கடந்த இரு தசாப்த காலத்திற்கு மேலாக எதுவித பதிவுகளும் இல்லாத நிலையில் மாவட்ட தனியார் பஸ் சேவையின் மார்க்க அனுமதிப்பத்திரத்தை புதிதாக பதிவு செய்தல் மற்றும் சாரதிகள் எவருக்குமே சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாத நிலையில் அதனைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தல் என்பனவே பிரதான காரணிகளாக காணப்பட்டன.  (மேலும்) 16.03.10

_____________________________________________________________________________________________

ரஷிய மாகாணத் தேர்தல்: புதின் கட்சி வெற்றி

மாஸ்கோ, மார்ச் 15: ரஷியாவில் நடைபெற்ற மாகாணத் தேர்தலில் பிரதமர் விளாதிமிர் புதின் தலைமையிலான ஐக்கிய ரஷியக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.  ஆனால் முந்தைய தேர்தலில் பெற்ற வாக்குகள் அளவுக்கு இந்த தேர்தலில் புதின் கட்சியால் பெற முடியவில்லை. அனைத்துப் பிராந்தியங்களிலுமே 50 சதவீதத்துக்கு குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. அந்நாட்டின் பிரதான கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து பிராந்தியங்களிலும் 20 சதவீத அளவிலான வாக்குகளையே பெற்றுள்ளது. லிபரல் ஜனநாயகக் கட்சி குறைவான வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. முந்தைய தேர்தலில் ஐக்கிய ரஷியக் கட்சி பெரும்பாலான மாகாணங்களில் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தது. ஆனால் இந்த தடவை எதிர்பார்த்த அளவுக்கு அக்கட்சிக்கு வாக்கு கிடைக்கவில்லை. இது, புதினின் செல்வாக்கு சரிந்து வருவதையே காட்டியுள்ளது.  (மேலும்) 16.03.10

_____________________________________________________________________________________________

ஐ.நா.வுக்கு எதிரான சொற்போரில் இலங்கை பெற்ற இராஜதந்திர வெற்றி

யுத்தத்தைக் கடந்த வருட மே மாதம் வெற்றிகொண்ட இலங்கை தற்போது ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கெதிரான சொற்போரில் இராஜதந்திர வெற்றியை ஈட்டியுள்ளது. இலங்கையின் இராணுவம் மனித உரிமை மீறல்களையும் யுத்தக் குற்றச் செயல்களையும் புரிந்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் யுத்தத்தின் பின்னரான இலங்கையின் பொறுப்பு சொல்லும் தன்மை குறித்து தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எடுத்த தீர்மானத்தை மிகப்பெரும் தனி அரசியல் கூட்டமைப்பான அணிசேரா நாடுகள் இயக்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. தற்போது எகிப்து தலைமை வகிக்கும் 118 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட அணிசேரா நாடுகள் இயக்கம் உத்தேச நிபுணர்கள் குழுவை நியமிக்க பான் கீ மூன் தன்னிச்சையாக எடுத்த தீர்மானம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. இதன் மூலம் செயலாளர் நாயகம் ஐக்கிய நாடுகள் சாசனத்தை மீறியுள்ளார் என்றும் அங்கத்துவ நாடொன்றின் உள்விவகாரத்தில் தலையீடு செய்துள்ளார் என்றும் அணிசேரா இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. (மேலும்) 15.03.10

_____________________________________________________________________________________________

யாழ்ப்பாண பொது நூலகத்தை எரித்தவர்கள் இன்று தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கின்றனர் அமைச்சர் மித்திரபால

ஐக்கிய தேசியக் கட்சியினர் தமது ஆட்சிக்காலத்தில் ஆசியாவில் சிறந்து விளங்கிய யாழ்ப்பாணம் பொது நூலகத்தை எரித்தவர்கள் இன்று தமிழ் மக்களிடம் வடக்கே வாக்கு கேட்பதாக வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் எச்.ஆர்.மித்திரபால தெரிவித்தார். தெரணியகலை பொல்கஸ்வத்தயில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அங்கு தொடர்ந்து பேசிய அவர்;ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று நாட்டை முன்னேற்றப்போவதாகவும் சகல இன மக்களையும் ஒற்றுமையாக வாழ வைக்கப்போவதாகவும் கூறிவருகின்றனர். இந்த நாட்டில் ஒற்றுமையை சீர்குலைத்து 1977, 1983 இனக்கலவரங்களை ஏற்படுத்தி தமிழ் மக்களை விரட்டி அடித்தவர்கள் தான் ஐக்கிய தேசியக் கட்சியினர். அத்துடன் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் இதயம் என்று கூறப்பட்ட பொது நூலகத்தையும் எரித்தவர்கள்.அதுமட்டுமல்ல இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்கவும் சமஷ்டி தீர்வு ஒப்பந்தத்துக்கு எதிராக பாதயாத்திரை செய்து அதனை செயற்படாமல் தடுத்தவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியினரே. (மேலும்) 15.03.10

_____________________________________________________________________________________________

ஒரேகட்சி ஆதரவாளர்களிடையே மோதல்கள் மோசமாக அதிகரிப்பு கட்டுப்படுத்துமாறு கண்காணிப்பு அமைப்புகள் வலியுறுத்தல்

தேர்தல் வன்முறைகள் மோசமாக அதிகரித்துவரும் நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்துமாறு அரசியல் கட்சிகளிடம் கண்காணிப்பு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. குறிப்பாக ஒரே கட்சியைச்சேர்ந்த ஆதரவாளர்கள் மத்தியிலான மோதல்களே வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கு அதிகளவு பங்களிப்புச் செய்யும் காரணிகளாக அமைந்திருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்னரான வன்முறைச் சம்பவங்களில் 50 சதவீதமானவை ஒரே கட்சி அல்லது ஒரே குழுவின் ஆதரவாளர்கள் மத்தியிலான மோதல் சம்பவங்கள் என்று பவ்ரல்,சி.எம்.ஈ.வி. போன்ற கண்காணிப்பு அமைப்புகள் கூறியுள்ளன. அதேசமயம், இதுவரை 66 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக தேர்தல் பொலிஸ் செயலகத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண கூறியுள்ளார். இவற்றில் 35 சதவீதமானவை ஒரே அரசியல் கட்சி ஆதரவாளர்களுக்கிடையிலானதாகும்.

_____________________________________________________________________________________________

''எமது வேட்பாளர்களுக்கு கிளிநொச்சி செல்ல அனுமதியில்லை'' – த.தே. கூட்டமைப்பு விசனம்

-B.B.C.News

தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த வேட்பாளர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் சென்று தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதாக அந்தக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவராகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு கிளிநொச்சியில் வசிக்கின்றவர்களும் வேட்பளார்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அப்படி இருந்தும் அந்த வேட்பளார்கள் அங்கு மக்கள் மத்தியில் தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்வதற்குச் செல்வதற்கு இராணுவத்தின் அனுமதி பெறப்பட வேண்டும் என சுட்டிக்காட்டி கிராமங்களுக்குள் செல்வதற்கு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார். ஏனைய கட்சிகளுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். (மேலும்) 15.03.10

_____________________________________________________________________________________________

கடன் சுமையில் ரஷ்யா மூழ்கும்: கோர்பசேவ் எச்சரிக்கை

மாஸ்கோ:

Gorbatschowஷ்யாவில் ஜனநாயக நடைமுறை முடக்கப்பட்டு விட்டது என, முன்னாள் சோவியத் யூனியன் தலைவர் மிகைல் கோர்பசேவ் தெரிவித்துள்ளார்.சோவியத் யூனியன் அதிபராக இருந்த கோர்பசேவ், ஜனநாயக நடைமுறைகளை மேற்கொண்டதன் விளைவாக கடந்த 91ம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்தது. இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:ஜனநாயகத்தின் மூலம் தான் நாடு வளர்ச்சியடையும் என்பதில் எனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை. சோவியத் யூனியன் உடைந்த உடன், ரஷ்யாவில் ஜனநாயக நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. ஆனால், சமீப காலமாக அந்த நடைமுறை இல்லை. ரஷ்ய அதிபர் புடின் முதல் முறையாக அதிபரான போது, ஜனநாயக நடைமுறை இருந்தது. இரண்டாவது முறை அவர் அதிபரான போது, ஜனநாயக நடைமுறைகளை காணவில்லை. ரஷ்யாவின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவது பற்றி கவலை கொள்ள தேவையில்லை. நவீன மயமான, வளர்ச்சியடையும் ரஷ்யாவை உருவாக்க வேண்டும்.ரஷ்யாவின் தற்போதைய நிலைமை கவலை அளிக்கிறது. அதிகாரங்கள் பகிர்ந்து கொடுக்கப்படவில்லை. ஓரிடத்தில் மட்டுமே குவிந்து கிடக்கின்றன. அதிகாரத்தில் இருப்பவர்கள் எடுக்கும் முடிவுக்கு, பார்லிமென்ட் உடனடியாக ஒப்புதல் வழங்கி விடுகிறது.மக்களிடம் அதிகாரம் சென்றால், இன்னும் குழப்பம் மேலோங்கி விடுமோ என அதிகாரிகளும், ஆட்சியில் உள்ளவர்களும் பயப்படுகின்றனர். (மேலும்) 15.03.10

_____________________________________________________________________________________________

திருக்கேதீச்சர சிவராத்திரி நிகழ்வுகளில் பெருமளவு பக்தர்கள்

வரலாற்றுச் சிறப்புமிக்க பாடல்பெற்ற திருத்தவமான மன்னார் திருக்கேதீச்சர சிவாலயத்தில் மஹா சிவராத்திரி விழா நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன. சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் விழாவில் கலந்துகொண்டனர். இதனை முன்னிட்டு திருத்தலத்தில் சகல ஏற்பாடுகளும் செய் யப்பட்டிருந்ததென மன்னார் திருக்கேதீச்சர ஆலய பரிபாலன சபை தெரிவிக்கிறது. வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த போர் நடவடிக்கைகள் முடிவுற்ற பின்னர் முதன் முறையாக நடைபெறும் இவ் விழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். அனைத்து பிரதேசங்களிலும் இருந்து பக்த அடியார்கள் திருக்கேதீச்சர ஆலயத்திற்கு வருகைதர அரச தனியார் போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. புத்தளம், கொழும்பு ஆகிய இடங்களில் இருந்த பெருமளவான மக்கள் திருக்கேதீச்சர திருத்தலத்திற்கு வருகை தந்திருந்தனர். (மேலும்) 15.03.10

_____________________________________________________________________________________________

14-03-2010 ரிபிசியின் ஞாயிற்றுக்கிழமை விசேட அரசியல் கலந்துரையாடல்

இலங்கையின் தேர்தல் மற்றும் அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற உள்ள இந் நிகழ்ச்சியில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – பத்மாநாபா அணியின் செயலாளாரும் யாழ்மாவட்டத்தில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் தலைமை வேட்பாளருமான தோழர் சிறிதரன் சுகுமார்  ஜேர்மனிய ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் செ ஜெகநாதன் அரசியல் அவதானியும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – பத்மாநாபா அணியின் மத்திய குழு உறுப்பினருமான தம்பா மற்றும் ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாட உள்ளனர் மாலை 3மணி முதல் 5 மணி வ  நடைபெற உள்ளது நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவும். தொலைபேசி தொடர்புகளுக்கு    00 44 208 930 5313   -   00 44 208 930 5313      

_____________________________________________________________________________________________

எமது தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளும் வகையில் அரசுடன் புரிந்துணர்வுடன் நாம் செயற்படுவோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் (புளொட்) இயக்கத் தலைவர் த. சித்தார்த்தன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பேட்டி நேர்காணல்: ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

Plote leaderதேர்தல் கூட்டுச் சம்பந்தமாகவே பல கட்சிகளாலும் முயற்சி எடுக்கப்பட்டது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாகவோ அல்லது அந்தத் தீர்வுக்கான திட்டங்கள் தொடர்பிலோ நாங்கள் பேசவில்லை. இது ஒரு தேர்தல் கூட்டுக்கான பேச்சுவார்த்தையாக மட்டுமே அமைந்திருந்தது. இவ்வாறான பேச்சுவார்த்தையை முன்னெடுத்துக் கொண்டிருந்தபோது பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க நேர்ந்தது. வேட்பாளர் தெரிவு, வேட்பாளர்களை நியமித்தல், மாவட்டங்களை விட்டுக் கொடுத்தல் போன்ற பல பிரச்சினைகள் எமது பேச்சுவார்த்தையின் போது எழுந்தன. இதன் காரணமாக இந்த முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது. எது எப்படியிருப்பினும் யுத்தம் முடிந்து நடைபெறும் இத்தேர்தலானது ஜனநாயகத்தை மிளிர வைப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் தேர்தலாகவே நான் பார்க்கிறேன். அது மட்டுமல்ல.. நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கற்பனையிலும் இருப்பதனைப் பார்க்கிலும் மக்கள் யாரைச் சரியாகத் தெரிவு செய்து கொள்ளப் போகிறார்களென்பதனை இந்தத் தேர்தலில் நாம் அறிந்து கொள்ள கூடியதாகவிருக்கும். சில தரப்பிலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம். ஆனாலும் இந்தத் தேர்தலை ஜனநாயக ரீதியாக இடம்பெறப்போகும் தேர்தலாகவே நான் கருதுகிறேன். அதுவே எமது கட்சியின் எதிர்பர்ப்புமாகும். அவ்வாறு இந்தத் தேர்தல் இடம்பெற்று தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அனைத்தும் ஒரு புரிந்துணர்வுடன் செயற்பட்டால் அதன் ஊடாகக் கூட நாம் பலவற்றைச் சாதித்துக் கொள்ள முடியும். (மேலும்) 14.03.10

_____________________________________________________________________________________________

ஊடகம் இனியும் பூடகம் இல்லை.

(பகுதி மூன்று)                                                                     

 எஸ்.எம்.எம்.பஷீர்

selvaraja5அரசு மீது குற்றம் சாட்டப்பட்ட பத்திரிக்கையாளர் கொலைகளில் தராக்கி சிவராம் பற்றி சுனந்தா குறிப்பிட்டு அவரது புகைப்படத்தை அம்மண்டபத்தில் காட்சிக்கு வைத்தும்; ரேலங்கி செல்வராஜா அங்கு குறிப்பிடப்படாமைக்கு கூறிய பகிரங்க காரணம் அந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரான பத்திரிக்கையாளர்களின் கொலைகளை , கடத்தல்களை மட்டும் தான் குறிப்பிடுவதாக கூறியமை அவரது பொய் முகத்தை தோலுரித்துக்காட்ட மட்டுமல்ல அவரைப்போன்ற பலர் ஒரு குறிப்பட்ட  பகுதியினரான சுதந்திர ஊடகவியலாளர்கள் பற்றி மட்டும் அக்கறை கொண்டிருக்கிறார்கள் , யாரின் நலன்களுக்காக வேலை செய்கிறார்கள் என்பதையும் சொல்லாமல் சொல்லி நிற்கிறது. ஏனெனில் ரேலங்கியும் அவரது கணவரும் கொல்லப்பட்டது சிவராமுக்கு பின்னர்தான். ஏனெனில் சிவராம் கொள்ளப்பட்டு (28.04.2005) சுமர்ர் நான்கு மாதத்தின் பின்னரே நாடறிந்த பல்துறை ஊடகவியலாளர் ரேலங்கி செல்வராஜாவும் அவரது கணவரும் (12.08.2005) கொல்லப்பட்டனர்.  அது மாத்திரமல்ல அதற்கு சரியாக ஒரு வருடத்திற்கு முன்புதான் பாலநடராஜ ஐயர் கொல்லப்பட்டார் (16.08.2004) . முதலாமவர் புலிகளுக்கெதிரான இதயவீணை நிகழ்ச்சிகளுடனும்;  பின்னையவர் புலிகளை கடுமையாக விமர்சித்த ஒரே ஒரு தமிழ் வாராந்த பத்திரிக்கையினுடனும் தொடர்புபட்டவர்கள் (மேலும்) 14.03.10

_____________________________________________________________________________________________

தங்குமிட விடுதிகளால் தவிக்கும் மக்கள்; பூனைக்கு மணி கட்டுவது யார்?

jaafnaநின்ற வெள்ளத்தை  வந்த வெள்ளம் கொண்டு போன கதையாக யாழ்ப்பாணத்தின் பல வீடுகளின் நிலை மாறியிருக்கிறது. கொஞ்சக்காலத்துக்கு முன்னர்  போர் உக்கிரமடைந்திருந்த போது  யாழ்ப்பாணத்தில் யாருமே தேடுவாரற்று பல வீடுகள் வெறிச்சோடிக்கிடந்தன. வன்னியில் மூண்ட யுத்தம் யாழ்ப் பாணத்திலும் தாக்கங்களை உண்டுபண்ணும் என்பதாலும் இங்கிருப்பதை காட்டிலும் கொழும்பிலோ அல்லது வேறுநாடுகளிலோ தங்கிருப்பதே பாதுகாப்பானது என்ற உணர்வு எல்லோரிடமும் தொற்றிக் கொண்டதால் பலரும் யாழ்ப்பாணத்தை "அம்போ' என்று விட்டுவிட்டு தமது உயிர் வாழ்தலைத் தக்க வைத்துக் கொள்வதற்காகப் பறந்தோடினர். உரிமையாளர்கள் வீட்டில் இல்லாவிட்டால் உரிய பராமரிப்பு இன்றி கால்நடைகளின் கூடாரமாகத் தமது வீடுகள் மாறிவிடக் கூடும் என்ற எண்ணத்தில் பலரிடமும் காலில் விழாத குறையாக மன்றாடி தமது வீடுகளில் தங்கியிருக்குமாறு உரிமையாளர்கள் வேண்டிக் கொண்டனர். இதற்கு ஒருபடி மேலே சென்ற சிலர் தமது வீடுகளில் தங்கியிருந்து அங்குள்ள மரம் செடிகளைப் பராமரித்தால் அதற்கு ஒரு குறித்த தொகைப் பணத்தையும் மாதாமாதம் வழங்குவதற்கு முன் வந்தனர். எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிவிட்ட சில அரசியல், களநிலை மாற்றங்களால் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை மண்ணில் மையம் கொண்டிருந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதன் பின்னர் தான் யாழ்ப்பாண வீடுகளுக்கு திரும்பவும் மவுசு ஏற்படத்தொடங் கியது.  (மேலும்) 14.03.10

_____________________________________________________________________________________________

நீதி நியாயத்துக்கான மாணவர் அமைப்பு

நீதி நியாயத்துக்கான மாணவர் அமைப்பானது இன்று (13.03.2010) மக்கள் பாராளுமன்றம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் நிகழ்த்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்விற்காக அரசியற்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் யாழ்ப்பாணம், வன்னி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 250 மக்கள் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தோம். இருந்த போதிலும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், சோசலிச சமத்துவக் கட்சி, மக்கள் நீதிக் கட்சி (சுயேட்சைக் குழு) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் நிகழ்விற்காக வருகை தந்திருந்தனர். ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் வருகை தரவில்லை. ஏற்கனவே திட்டமிட்டு அரசியற் பிரதிநிதிகளுக்கு அறிவித்திருந்த போதும் எல்லாக் கட்சிப் பிரதிநிதிகளும் நிகழ்வில் கலந்து கொள்ளாமையால் மக்கள் பாராளுமன்றம் விவாதமின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் எமது அழைப்பை ஏற்று வருகை தந்த அரசியற் பிரதிநிதிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் வரமறந்த, மறுத்த கட்சியினருக்கு எமது அதிருப்பியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். (மேலும்) 14.03.10

_____________________________________________________________________________________________

புலிகளின் தற்கொலைத் தாக்குதல் அச்சுறுத்தல் கொழும்பில் இல்லை குற்றப் புலனாய்வுப் பணியகம் அறிவிப்பு

கொழும்பில் விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதல் அச்சுறுத்தல் இல்லை என்று குற்றப்புலனாய்வு பணியக வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன.  கடந்த வருடத்தில் யுத்தகாலத்தில் சுமார் நூறு தற்கொலைப் படையினர்   கொழும்புக்குள் ஊருடுவியிருப்பதாக தகவல்கள் வெளியாகி யிருந்தன. அவர்களில் சிலர் தாக்குதல் நடத்த இருந்தனர் ஆனால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் எஞ்சியவர்கள் காணாமற் போய்விட்டனர் என்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக ஆங்கில இணை யத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கொழும்புக்குள் ஊருடுவியிருந்தவர்களுக்கு உத்தரவு வழங்குவதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர்கள் இல்லை. விடு தலைப் புலிகளின்   தலைவர் பிரபாகரன் மற்றும் தளபதிகள் கொல்லப்பட்டதால் உத்தரவு இடுவதற்கு ஆள்கள் இல்லா ததால் தற்கொலைதாரிகள் காணாமற் போவிட்டனர் என்றும் "வெளிநாடுகளில் புலிகளுக்குச் சார்பாக செயற்படுபவர்களால் நாட்டுக்கு அச்சுறுத்தல் இல்லை. அவர்களுக்கு இராணுவ பலம் இல்லை மீண்டும் விடுதலைப் புலிகள் எழுச்சி பெற்று வருவதற்கு வாய்ப்பு இல்லை'' என்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவுப் பிரிவு அதிகாரி தெரிவித்தார்.

_____________________________________________________________________________________________

எதிரணி அரசியலை விடுத்து இணக்கப்பாட்டு அரசியலுக்கு வாருங்கள்

- அமைச்சர் விநாயகமுர்த்தி முரளிதரன்.

karunaரம்ப கால கட்டத்தில் புலிகள் மீது தமிழ் மக்கள் பற்று வைத்திருந்தார்கள். இதன் காரணமாகத்தான் இந்த ஆதங்கம் இருக்கிறது. புலிகள் அனைத்து தமிழ் மக்களையும் ஏமாற்றி விட்டார்கள் என்பது இறுதியில் தான் அவர்களுக்குப் புரிந்தது. ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்ததால்தான் தமிழ் மக்கள் இன்று நிம்மதியாக வாழ்கிறார்கள். சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வில்லை. உண்மையிலேயே தமிழ் மக்களுக்கு இது உணர்த்தப்பட வேண்டும். ஆனால் தமிழ் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். புலம்பெயர்ந்தவர்கள் உதவி செய்தாலே தமிழர் பகுதிகளில் பாரிய அபிவிருத்திகளை செய்திருக்கலாம். அவர்கள் வெளிநாடுகளில் வீடு வாசல் என செட்டில் ஆகிவிட்டார்கள். அங்கிருந்து அவர்கள் குரல் கொடுப்பதால் அவர்களுக்கு பாதிப்புகள் வரப்போவதில்லை. இங்குள்ள மக்களுக்குத்தான் பாதிப்புகள் வரும். அதனை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாக உருத்திரகுமாரன் தலைமையில் நாடு கடந்த தமிbழம் அமைக்கப் போவதாக கூறிக்கொணடுள்ளனர். இவ்வாறான அறிவித்தல்களால் பாதிக்கப்படப் போவது இங்குள்ள தமிழ் மக்கள்தான். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதும் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற தாக்கமும் இதற்கு ஒரு காரணம். தமிழர் பகுதிகளில் சிறந்த ஒரு அபிவிருத்தியை வழங்க அரசாங்கம் ஆயத்தமாக இருக்கிறது. குறிப்பாக தமிழ் மக்களின் பாதுகாப்பு கருதியே நான் அரசுடன் இணைந்து கொண்டேன். நான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்கும் போது தமிழ் மக்கள் எவ்வளவு அச்சத்துடன் இருந்தனர். ஒருவித அச்ச உணர்வுடன்தான் இருந்தனர். எங்கு பார்த்தாலும், சோதனைச்சாவடிகள், சோதனைகள் என பலவிதமான கெடுபிடிகள் செயற்பாடுகள் இருந்தன. இவை தொடர்பாக தொடர்ந்தும் உரியவர்களுடன் பேசிப்பேசி அனைத்தும் அகற்றப்பட்டு விட்டன. மக்கள் அச்சமின்றி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். குறிப்பாக கிழக்கில் சட்டமும் ஒழுங்கும் சரியான முறையில் பேணப்படுகின்றன. (மேலும்) 14.03.10_

Home / Page-2 / Page-3 / Page-4 / Page-5

wanni

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி் தேர்தல் விஞ்ஞாபனம்

புலிகளின் யுத்தத்தால் சீரழிந்து போன வடபகுதி நூலகங்கள் அரசால் புனரமைக்கப்படுகின்றன!

வன்முறையாளர்களுக்கும ் பிரிவினையாளர்களுக்கும ் தருகிற ஆதரவுகளை இலங்கைத் தமிழர்கள் விலக்கிக் கொண்டால், அவர்களது பிரச்சினை தீரும்!

தமிழ்த் தேசியம் என்பது வாக்குகளுக்கான கோஷமல்ல

பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை முற்றுமுழுதாகத் தோற்கடிப்பதே, தமிழ் மக்களின் விமோசனத்துக்கான ஒரேயொரு வழியாகும்!