|
விஸ்வமடு-ஒட்டுசுட்டானில் 10 கிலோமீற்றர் துரம் வரையான பகுதி யுத்த சூனியப் பிரதேசமாகப் பிரகடனம்: கிளிநொச்சியை நெருங்கியது ராணுவம்
புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளைக் கைப்பற்ற இலங்கை ராணுவம் ஆவேசமான தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது. அதன் விமானப்படை, கடற்படை ஆகியவையும் முழு பலத்தையும் பயன்படுத்தி, தரைப்படைக்கு உதவி வருகின்றன. கடந்த ஒரு மாதமாகவே தமிழர்களுடைய பகுதிகளின் மீது இலங்கை விமானப்படை குண்டுமாரிப் பொழிந்து வருகிறது. விமானப்படையின் "ஜெட்' போர் விமானங்களும் சிறு பீரங்கிகள் பொருத்திய "எம்.ஐ.-24' ரக ஹெலிகாப்டர்களும் வானில் பறந்தபடியே விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது சரமாரியாகச் சுடுகின்றன. தரைப்படையின் சக்திவாய்ந்த பீரங்கிகள் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகளையும், காவல் அரண்களையும் சரமாரியாகத் தாக்கி அழிக்கின்றன. வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய இந்த தாக்குதலில் 21 விடுதலைப் புலிகளும் 3 ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார். விடுதலைப் புலிகளின் தாக்குதல் திறனுக்கு உற்ற இடமாக கிளிநொச்சி விளங்கியது. கிளிநொச்சியை இலங்கை ராணுவத்தால் நெருங்கவே முடியாது என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. கிளிநொச்சி வீழ்ந்துவிட்டால் விடுதலைப் புலிகள் பின்வாங்கி முல்லைத்தீவுக்கு செல்ல நேரிடும். அப்படி இல்லாவிட்டால் கொரில்லா முறையில்தான் ராணுவத்தைத் தொடர்ந்து தாக்கிக் கொண்டிருக்க வேண்டும். ராணுவரீதியாக விடுதலைப் புலிகளுக்கு இது பெருத்த பின்னடைவாகவே கருதப்படும். (மேலும்) 05.10.08
____________________________________________________________________________________________________________
இலங்கையின் வடக்கே இரண்டு மோதலற்ற பகுதிகளை அறிவித்துள்ளது இலங்கை அரசு: புலிகளின் மண் அரணை ஊடுருவிச் சென்ற படையினர்; இராணுவத் தளபதி பாராட்டு
இலங்கையின் வடக்கே கிளிநொச்சியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அங்கே ஒட்டுசுட்டான் மற்றும் விஸ்வமடு ஆகிய பகுதிகளை மோதலற்ற பகுதிகளாக அறிவித்துள்ளார் இலங்கை இராணுவத்தின் தளபதி லெப்டினனட் ஜெனரல் சரத் பொன்சேகோ. இது தொடர்பாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான பிரிகேடியர் உதய நாணயக்கார கூறும் போது, விடுதலைப் புலிகள் மக்களை மனித கேடயங்களாக வைத்துள்ளார்கள் என்றும், அவர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி இந்த பகுதி வரலாம் என்று கூறினார். மேலும் இவ்வாறு வரும் மக்களுக்கு தேவையான வசதிகளை அப்பகுதி அரசாங்க அதிபர்கள் செய்வார்கள் என்றும், அப்பகுதிக்கு ஏற்கனவே உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார். வன்னிச் சண்டைக் களத்தில் கிளிநொச்சி நோக்கி முன்னேறிவரும் படையினரைத் தடுத்து நிறுத்தும் வகையில் புலிகள் அமைத்திருந்த மண் அரண்களை படையினர் ஊடுருவிச் சென்று முன்னேறியிருப்பதாக படைத்தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வன்னிப் படைத் தலைமையகத்துக்கு தனது வாராந்த விஜயத்தை நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொண்ட இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு, வன்னிப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா களநிலைமைகளை விளக்கினார். இதன்போது, விடுதலைப் புலிகளின் மண் அரண்களை ஊடறுத்து கிளிநொச்சிக்குள் படையினர் நுழைந்திருப்பதாக அறிந்துகொண்ட இராணுவத் தளபதி படையினரைப் பாராட்டியதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. (மேலும்) 05.10.08
____________________________________________________________________________________________________________
தலைவர் விடமாட்டாராம் என்கிறார் கனடாவில் உதயன் ஆசிரியர்
- தேசப்பிரியன் ரொரன்ரோ
யு.என.;பி கட்சியின் ஆதரவாளரும் இப்போது அக்கட்சியின் அரசியல் பீட உறுப்பினரும் உதயன் பத்திரிகை உரிமையாளருமான சரவணபவான் கனடா வந்துள்ளார். இவர் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் சப்றா என்ற நிதிநிறுவனத்தை நடாத்திவந்தார். அந்த நிதிநிறுவனத்தில் முதல் இட்டவர்கள்pன் பல இலட்சக்கணக்கான பணத்தை சுருட்டிய கறைபடிந்த வரலாறும் இவருக்கு உண்டு அரச ஆதரவினால் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக்கொண்டார். இப்போது அவரது மைத்துனரான உதயன் பத்திரிகை ஆசிரியர் வித்தியாதரன் கனடா வந்துள்ளார்.; உதயன் பத்திரிகையை குறிப்பாக தமிழர்கள் அதிகமாக வாழும் கனடாவிலும் புலம்பெயர்நாடுகளிலும் வெளியிடுவதற்கு முன்னேற்பாடாக இங்கு வந்துள்ளார்கள். தமிழர்தகவல் திருச்செல்வத்தின் தமிழர் தகவல் சஞ்சிகையிலும் கனடாவில் உதயன் பத்திரிகை வெளிவரவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் இங்குள்ள குடிசைக்கைத்தொழில் பத்திரிகை வியாபாரிகளுக்கு கெடிக்கலக்கம் ஏற்பட்டுள்ளது ஏற்கனவே ரொரன்ரோவில் கிட்டத்தட்ட பதினைந்து தமிழ் வாரப் பத்திரிகைகள் வெளிவருகின்றது (இப்போது இதை எழுதும்போது இந்த எண்ணிக்கை சிலவேளை கூடலாம் அல்லது குறையலாம்) இதில் கிட்டத்தட்ட பன்னிரண்டு பத்திரிகைகள் இலவசப்பத்திரிகைகள் எல்லாப்பத்திரிகைகளும் வர்த்தகர்களின் விளம்பரங்களால்தான் உயிர்வாழ்கின்றன. தொன்னூறு விகிதம் விளம்பரங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அதுமட்டுமல்ல இலகுவாக புலிகளின் இணையத்தளசெய்திகளை அப்படியே பிரசுரிக்கின்றன. எல்லாப்பத்திரிகைளும் ஒரே செய்தியைத்தான் பிரசுரிக்கின்றன அது சரியா பிழையா என்று எல்லாம் பார்ப்பதில்லை எல்லாப்பத்திரிகைகளையும் இணைத்து ஒற்றுமையாக ஓரு பத்திரிகையாக வெளியிடலாமே என்று கூட பலர் கேட்டிருக்கிறார்கள். (மேலும்) 05.10.08
____________________________________________________________________________________________________________
சிறுவர் போராளிகளை படையில் இணைத்துக் கொள்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை - அமெரிக்காவில் சட்டத்திருத்தம்
சிறுவர் போராளிகளை படையில் இணைத்துக் கொள்ளும் இராணுவக் குழுக்களின் தலைவர்களை அமெரிக்காவில் கைது செய்து தண்டனை விதிக்கக் கூடிய வகையிலான சட்டமூலமொன்றுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ்.டபிள்யூ.புஷ் அங்கீகாரம் வழங்கியுள்ளார்.. எனவே, இலங்கையில் சிறுவர் போராளிகளை படையில் இணைத்துக் கொள்ளும் அமைப்புக்களது தலைவர்கள் தண்டிக்கப்படலாம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. உலகின் எந்தவொரு நாட்டிலாவது சிறுவர் போராளிகளை படையில் இணைக்டகும் நடவடிக்கையில் தொடர்புடையவருக்கு அமெரிக்க சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கக் கூடிய வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, 15 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ள சகல இயக்கங்களின் முக்கியஸ்தர்களுக்கு எதிராகவும் வழக்குத் தொடர முடியும் என சுட்டிக்காட்டப்படுகிறது. இவ்வாறான செயல்களில் ஈடுபடுவவோருக்கு 20 வருட கடூழியச் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இவ்வாறான குற்றங்களை புரிவோருக்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதற்கான வீசா மறுக்கப்படும் அதேவேளை, அமெரிக்காவில் வசிப்போர் நாடு கடத்தப்படவுள்ளனர். (மேலும்) 05.10.08
____________________________________________________________________________________________________________
தாக்குதலுக்குள்ளாகும் கிளிநொச்சியிலிருந்து வெளியேறும் மக்கள்: "யுனிசெவ்' அலுவலகமும் குடியிருப்புகளும் பலத்த சேதம்
இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிளிநொச்சி நகரை அரச படைகள் நெருங்கி வருவதாக தகவல்கள் வரும் நிலையில், அந்நகர் மீது வான் தாக்குதல்களும், ஷெல் தாக்குதல்களும் தொடர்ந்து நடப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. இந்த சூழலில் கிளிநொச்சியை விட்டு, நகர மக்கள் பெரும்பாலோனோர் வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது. நகரில் உள்ள பெரும்பாலான தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. அத்துடன் கிளிநொச்சியின் அஞ்சல் அலுவலகம் உட்பட பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இன்று நடத்தப்பட்ட விமானக் குண்டு தாக்குதலில், கிளிநொச்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் காவல்துறைத் தலைமையகம் அழிக்கப்பட்டிருப்பதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நானயக்கார தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலை விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலகமும் உறுதிப்படுத்தியிருக்கிறது. அத்துடன் இதற்கு அருகில் அமைந்திருந்த தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் களஞ்சியசாலை ஒன்றும் அழிக்கப்பட்டிருப்பதாகவும் புலிகளின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் கிளிநொச்சி நகரைச்சேர்ந்த ஏழு பொதுமக்கள் காயமடைந்திருப்பதாகவும் விடுதலைப்புலிகள் கூறியிருக்கின்றனர். கிளிநொச்சி நகரைச் சூழ்ந்த பல களமுனைகளில் இன்றும் நேற்றும் நடந்த மோதல்களில் நான்கு படையினரும், 26 விடுதலைப்புலிகளும் கொல்லப்பட்டிருப்பதாக ராணுவம் கூறியிருக்கிறது. மோதல்களில் உயிர்ச்சேதங்கள் குறித்து பக்கச்சார்பற்றவகையில் உறுதிப்படுத்த முடியவில்லை. (மேலும்) 04.10.08
____________________________________________________________________________________________________________
மன்மோகன்சிங் பிரதமரானது இந்திய நாட்டின் துரதிர்ஷ்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் திரு. தா. பாண்டியன்
இலங்கை அரசு தான் முன்வைக்கவேண்டும் எங்கள் தமிழ் மக்கள் இலங்கையில் கொல்லப்படுகிறார்களே என்று கொதித்தெழுந்து தமிழக மக்கள் போராடியதன் அடிப்படையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, விரும்பினாரோ விரும்பவில்லையோ அவரை நாங்கள் நிர்பந்தித்து, அரசியல் தீர்வு காண அனுப்பிவைத்தோம். அவரும் முயற்சி எடுத்து, அந்த நாட்டு தலைவர்களுடன் பேசி, ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கினார். அதில் இருசாராருக்கும் முழு திருப்தியில்லை, ஆனால் ஏற்றுக்கொண்டதை, இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தியதா! என்பது இன்றைக்கு வரலாற்றில் ஒரு பெரிய கேள்விக்குறியாக நிற்கிறது. அதன் பிறகு ஏற்பட்ட துயர நிகழ்ச்சிகளையெல்லாம் நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை. ஏனென்றால் அது மேலும் புண்ணை ஆழப்படுத்தும். இரு பக்கங்களிலும் தவறுகள் நிகழ்ந்திருக்கலாம். ஆனால் உரிமைக்காகப் போராடுகிற மக்கள், கோரிக்கைகளை வைப்பதோ, போராடும் முறைகளோ வேறு. ஆனால் ஒரு நாட்டின் மக்களை ஆளுகின்ற அரசாங்கம் கடைபிடிக்கும் கொள்கை மற்றும் நடைமுறை என்பது வேறு. இவ்விடயத்தில் ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு அதிகம். அதுவும் இந்த நாகரீக உலகில், சனநாயத்தில் நம்பிக்கையுள்ள அரசு, மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு என்ன வழி என்று பார்க்கவேண்டும். அங்கு நூற்றுக்கு நூறு தமிழர்களும் ஆயுதம் ஏற்தி நிற்கவில்லை. அவர்கள் சார்பில் சிலர் போராடுகிறார்கள். அரசு ஆயுதம் ஏந்திய இராணுவத்தை அனுப்புவது, விமானம் மூலம் குடிமக்கள் மீது குண்டு போடுவது என்பது கண்டும் கேட்டிராத போர்முறை. அதுவும் ஒரு நாளல்ல, இரண்டு நாளல்ல, இரண்டாண்டு காலமாக தொடர்ந்து விமானங்கள் மூலம் குண்டு வீச்சு நடைபெற்றிருக்கிறது. விமானத் தாக்குதல் நடத்துகிறபோது தங்களுக்கெதிராக துப்பாக்கி ஏந்தி போராடுகிறவர்களை மட்டும் குறி பார்த்து குண்டு வீச இயலுமா? இயலாது. அதனை ஒட்டி வாழ்கிற நிரபராதிகளின் தலைகளிலும் குண்டு விழும். இவ்வகையில் இங்கு நாள்தோறும் அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள். (மேலும்) 04.10.08
____________________________________________________________________________________________________________
படுகொலைகள் நிறுத்தப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் - இரா. துரைரெத்தினம்(ரட்ணம்)
கிழக்கில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைகள், சகோதரப் படுகொலைகள் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டுமென, கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான இரா. துரைரெத்தினம் கிழக்கு மாகாணசபை முதலமைச்சருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அக்கடிதத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு தமிழர் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டு சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையிலேயே மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, மாவட்டங்களில் படுகொலைகள் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக இரண்டு தசாப்தங்களாக அப்பாவி பொதுமக்கள் கொலை செய்யப்பட்டுக் கொண்டே வருகின்றனர். சகல அதிகாரங்களும் முதலமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசு பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் முதலமைச்சர் ஆயுத வன்முறைகளை நிறுத்தி அப்பாவிப் பொது மக்கள் கொலை செய்யப்படுவதை தடுத்துநிறுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை தொடர்பாக முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். அண்மைக் காலத்தில் கிழக்கில் பலர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் கடத்தப்பட்டும் காணாமல் போயும் உள்ளனர். இந்நிலை தொடர அனுமதிக்க முடியாது. தடுத்துநிறுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக முதலமைச்சர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். (மேலும்) 04.10.08
____________________________________________________________________________________________________________
வேண்டாம் பிரிவினை அரசியல்!
நீரஜா செüத்ரி
அண்மையில் நடந்த குண்டுவெடிப்புகள் குறித்த ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் பார்வை முற்றிலும் வெவ்வேறானவை. இரு சமூகங்களும் விலகிச் சென்று கொண்டிருக்கின்றன என்பதைத்தான் இந்த வேறுபாடு காட்டுகிறது. குண்டுவெடிப்புகள் குறித்து முஸ்லிம்களிடம் பேசினால், "அவை போலீஸôர் திட்டமிட்டு நடத்தியவை' என்கிறார்கள். ஐ.பி. உள்ளிட்ட உளவு அமைப்புகளுக்கும் பங்கிருக்கும் என வெளிப்படையாகவே கூறுகிறார்கள். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் இந்தச் சம்பவங்களுக்குப் பின்னணியில் இருக்கின்றன என இன்னும் சிலர் கருதுகிறார்கள். ஜாமியா நகரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மோகன் சர்மா என்ற போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், போலீஸôர்தான் தவறுதலாக அவரைச் சுட்டுவிட்டார்கள் என முஸ்லிம் மதகுருக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இவையெல்லாம் தில்லி குண்டுவெடிப்புகள் குறித்த உண்மைகள் அல்ல; ஆனால் சிறுபான்மை சமூகம் இப்படித்தான் நம்பிக் கொண்டிருக்கிறது. அடிப்படையில் தீவிரவாதத்துக்கு வக்காலத்து வாங்கும் வழக்கம் முஸ்லிம்களிடம் இல்லை. ஆனால், குண்டுவெடிப்புகள் குறித்து அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளைப் பார்த்தால், போலீஸ் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையின் பொறுப்புணர்வு மீது அவர்களுக்கு நம்பிக்கை போய்விட்டதாகவே தெரிகிறது. (மேலும்) 04.10.08
____________________________________________________________________________________________________________
ஈழத்தமிழரின் துயரில் குளிர்காய முயலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI)!
- நம்பியூரான்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை மிகவும் மோசம். எனவே இழந்துபோன செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தமிழ்தேசியவாதத்தை கையிலெடுப்பது என அக்கட்சியின் தேசியசெயலர்களில் ஒருவராக இருக்கும் தமிழரான டி.ராஜாவும் தா.பாண்டியனும் தீர்மானித்து செயல்பட ஆரம்பித்துள்ளனர். அதன் பொருட்டு அவர்கள் கையில் எடுத்திருப்பதே இலங்கைத் தமிழர் பிரச்சினை. அதற்காக அவர்கள் இன்று, திராவிடக் கட்சிகளின் நிலைக்குத் தரம் தாழ்ந்து செயல்படும் நிலைக்குச் சென்றுள்ளனர். பொதுவாக கம்யூனிஸ்ட்டுகள் சர்வதேசியத்துவம் மிக்கவர்களாக இருப்பார்கள். ஆனால் ராஜாவும் பாண்டியனும் அயல்நாடான சின்னஞ்சிறிய இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை,இந்தியா தனக்கு சொந்தமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என குதர்க்கம் பேசுகின்றனர். இந்த விடயத்தில் வழமையாக கம்யூனிஸ்ட் கட்சிகள் பின்பற்றும் வழிமுறையின்படி சகோதர இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட கலந்து ஆலோசித்ததாகத் தெரியவில்லை. கச்சதீவு உடன்படிக்கையை இலங்கை அரசுடன்செய்துகொண்ட இந்திராகாந்தியிடம் இருந்த அயலக நட்புணர்வு கூட இவர்களிடம் இல்லாதது விந்தைதான். அதைவிட கச்சதீவை இந்தியா பெற்றுக் கொள்வதின் மூலம் தமிழக மீனவர் பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்து இன்னொரு நகைச்சுவையாகும். தமிழக மீனவர்கள் பாக்குநீரிணை கடலில் வைத்து சுடப்படும் பிரச்சினையிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒருபக்க சார்பான ஒரு நிலையையே எடுத்து வருகின்றது. இந்த சம்பவங்கள் சிலவற்றில் புலிகளுக்கு உள்ள தொடர்புகளை அக்கட்சி கவனத்தில் எடுக்க தவறுகிறது. (மேலும்) 03.10.08
____________________________________________________________________________________________________________
உறவுப்பாலம்
கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் டான் தமிழ்அலை வானொலியில் பிரதி சனிக்கிழமை தோறும் இடம்பெறும் உறவுப்பாலம் நிகழச்சி ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிமுதல் 12 மணிவரை ஒலிபரப்பாகிவருகின்றது.04.10.2008 சனிக்கிழமை இடம்பெறவுள்ள உறவுப்பாலம் நிகழ்ச்சியில் ஈபிடிபி செயலாளர்நாயகமும், சமூகசேவைகள், சமூகநலத்துறை அமைச்சரும் வடமாகாண செயலணிக்குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துகொள்கின்றார்.நாட்டின் இன்றைய நிலை குறிப்பாக வடக்கு மாகாண நிலைமை தொடர்பாக நீங்களும் உங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0044 207 047 0655
____________________________________________________________________________________________________________
கொஸாவோ : மனிதாபிமானத் தலையீடும் தேசிய விடுதலையும்
எஸ்.வி.ராஜதுரை
பல தசாப்தங்களாக யூகோஸ்லேவியா என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்ததும், 1989 முதல் துண்டுதுண்டாக் கப்பட்டதுமான ஒரு நாட்டின் வரலாற்றுரீதியான வாரிசாகத் தன்னைக் கருதிக் கொண்டிருப்பதும், ஏறத்தாழ 20 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர்களாலும் ஏகாதிபத்திய இராணுவத் தலையீடுகளாலும் அலைக்கழிக்கப்பட்டு, அரசியல்,பொருளாதார சரிவையும் சிதைவையும் மட்டுமே கண்டு வந்துள்ளதுமான சின்னஞ்சிறு கிழக்கு ஐரோப்பிய நாடான செர்பியாவிலிருந்து, தன்னை முற்றிலும் துண்டித்துக் கொண்ட ஒரு சுதந்திரநாடாகத் தான் இருக்கப் போவதாக அந்த நாட்டின் ஒருபகுதியாக இருந்து வந்த கொஸோவோ மாநில நாடாளுமன்றம் சென்ற பிப்ரவரி 17ஆம் நாள் அறிவித்தது. 1999 ஆம் ஆண்டு முதற்கொண்டே செர்பியாவுக்கு அந்த மாநிலத்தின் மீதான கட்டுப்பாடு ஏதும் இருக்கவில்லை என்றாலும், அந்த சுதந்திரப் பிரகடனம் அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியம் தனக்கு ஏற்படுத்திய மற்றொரு அவமானம் என்று அது கருதியதில் வியப்பில்லை.செர்பியாவும் அதன் மக்களும் கடந்த இரு தசாப்தங்களுக்கும் மேலாக அனுபவித்து வருவது ஏகாதிபத்திய அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் அரசியல், பொருளாதார, இராணுவத் தலையீடுகளும் ஒடுக்குமுறைகளும் மட்டுமல்ல; உலகின் மிக வலுவான அச்சு, மின்னணு ஊடகங்கள், வல்லரசுகளின் அரசு யந்திரங்கள், ஐ.நா. அவை ஆகியவற்றின் திட்டமிட்ட, சாதுரியமான, கோயபல்ஸிய பொய்ப் பிரச்சாரங்கள் அவர்களைப் பற்றி உருவாக்கியுள்ள கோரமான பிம்பங்கள் அவர்களை உளவியல் வல்லாங்குக்கு (rape) உட்படுத்தியுள்ளன. செர்பியர்களையும் அவர்களது தேசத்தையும் உலகின் கண்களுக்கு அரக்கத்தனமானவர்களாகக் காட்டுவதில் வெற்றியடைந்த ஊடகங்களின் அசுர பலம் நம்மை மலைக்கவைக்கிறது. ஏனெனில், உலகம் முழுவதிலுமுள்ள இடதுசாரிகளிலும் தாராளவாதிகளிலும் கணிசமானோர் இப்பொய்ப் பிரச்சாரத்தில் மயங்கியுள்ளனர். (மேலும்) 03.10.08
____________________________________________________________________________________________________________
கொக்காவிலை முழுமையாகக் கைப்பற்றவில்லை': புலிகளின் சமாதானச் செயலகம், அரசியல்துறை அலுவலகம் விமானக்குண்டு வீச்சில் சேதம்
படையினர் கிளிநொச்சியை அடைவதற்கு இன்னமும் 3 1/2 கிலோ மீற்றர் தூரமே இருப்பதாகத் தெரிவித்திருக்கும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார,கொக்காவில் பகுதியை படையினர் இதுவரை கைப்பற்றவில்லை எனவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிடும் போது பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார். பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இராணுவப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது; படையினர் தற்போது கிளிநொச்சியில் நாச்சிக்குடாவை நோக்கி முன்னேறி வருகின்றனர். பண்டாரிக்குளம், அக்கராயன்குளம் பகுதிகளிலும் படையினர் தமது நிலையை உறுதிப்படுத்தியுள்ளனர். முல்லைத்தீவு பகுதியில் புலிகளின் பிரதான முகாம் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், கடற்புலிகளின் தளமும் அழிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் கொக்காவில் ரயில் நிலையப் பகுதிக்குள் படையினர் பிரவேசித்துள்ளனர். ஆனால், கொக்காவில் முழுமையாகக் கைப்பற்றப்படவில்லை. சில ஊடகங்கள் கொக்காவில் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியிட்டிருந்தன. இது தவறானதாகும். உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட முன்வர வேண்டும். கிளிநொச்சிக்கு 3 1/2 கிலோ மீற்றர் தொலைவில் படையினர் உள்ளனர். அவசரப்பட்டு எதனையும் செய்ய படைத்தரப்பு முற்படவில்லை. சரியான உத்திகளைக் கையாண்டு படிப்படியாகவே இராணுவம் முன்னேறி வருகின்றது. படைத்தரப்பைப் பொறுத்தளவில் வெற்றி இலக்கு வெகு தொலைவில் இல்லை. ஆனால், ஒரே இரவுக்குள் கிளிநொச்சியை கைப்பற்றுவோம் என்று கூறத் தயாராக இல்லை எனவும் அவர் தெரிவித்தார். (மேலும்) 03.10.08
____________________________________________________________________________________________________________
உணவுப்பொருள்கள் வன்னி சென்றடைந்தன; இன்றே விநியோகம்
வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கென ஐ.நா. வழித்துணையுடன் நேற்று வியாழக்கிழமை 51 லொறிகளில் அனுப்பிவைக்கப்பட்ட உணவுப்பொருள்கள் உரிய இடங்களைச் சென்றடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உணவுப்பொருள்கள் வந்து சேர்ந்துவிட்டதை அவ்வப்பகுதி அரசாங்க அதிபர்கள் தமக்கு உறுதிப்படுத்தியிருப்பதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். இந்த உணவுப்பொருள்கள் இன்றையதினமே மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தெரிவித்த அவர், அடுத்த வாரம் மேலும் 60 லொறிகளில் உணவுப்பொருள்களை வன்னிக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். நேற்றையதினம் உணவுப் பொருள்களுக்கு வழித்துணையாக வன்னிசென்ற ஐ.நா. அலுவலர்கள், உணவு விநியோகம் முடிவடையும் வரையில் அங்கு தங்கியிருந்து உணவுப் பொருள்கள் நேரடியாக மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்துவர் என்று முன்னதாக ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கென வவுனியாவில் மூன்று இடைத்தங்கல் முகாம்களை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா அரசாங்க அதிபர் தலைமையில் இதற்கென ஒரு விசேட குழு அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (மேலும்) 03.10.08
____________________________________________________________________________________________________________
இன்றைய நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியிலும் யாழ்.பல்கலைக்கழகம் சிறப்பாக செயற்படுகின்றது
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு பொறியியல் பீடத்தை ஆரம்பிக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் பல தரப்பாலும் விடுக்கப்பட்டு வருகின்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பல படிமங்கள் மூலம் சமர்ப்பிக்கின்றபோது, அது சாத்தியமாகும். இலங்கையில் மொறட்டுவ, பேராதனை, றுகுணு பல்கலைக்கழகங்களிலே பொறியியல் பீடம் இயங்குகின்றது. யாழ்ப்பாண மாணவர்கள் மொறட்டுவ பல்கலைக்கழகத்திலே கல்வியைத் தொடர விரும்புகின்றனர். அங்கு பொறியியல் பீட மேம்பாடு அதிகமாகவுள்ளதாக அவர்கள் கருதுகின்றனர். இன்று எமக்குள்ள பிரச்சினை, கல்வியின் மேம்பாட்டு நிலைக்கு வளவாளர்களை உருவாக்குவதுதான். அவர்க |