|
கோவையில் உலகத்தமிழ் மாநாடு, ஜனவரி 21 முதல் 24-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும்
கருணாநிதி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு
9-வது உலகத்தமிழ் மாநாடு கோவையில் வருகிற ஜனவரி மாதம் 21-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் - அமைச்சர் கருணாநிதி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.இதையொட்டி, மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்வது குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் நேற்று கலந்தாலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் க.அன்பழகன், துணை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய மந்திரி ஆ.ராசா, அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, பொங்கலூர் பழனிசாமி, தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, நிதித்துறை செயலாளர் ஞானதேசிகன், பொதுத்துறை செயலாளர் ஜோதி ஜெகராஜன், தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் முத்துசாமி, சுற்றுலாத்துறை செயலாளர் இறையன்பு, காவல் துறை தலைவர் (நுண்ணறிவு) ஜாபர்சேட் மற்றும் கோவை மாவட்ட கலெக்டர் டாக்டர் உமாநாத் ஆகியோர் கலந்து கொண்டார்கள். மேலும் 20.09.09
__________________________________________________________________________________________
தொப்பிகலையில் புலிகளின் ஆவணங்கள் கண்டுபிடிப்பு
மட்டக்களப்பு மாவட்டம் தொப்பிகலை பிரதேசத்திலுள்ள நாரக்கமுல்லையில் விடுதலைப் புலிகளின் மாவீரர் குடும்ப விபரங்கள் மற்றும் பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய முக்கிய ஆவணங்கள் விசேட பொலிஸ் குழுவொன்றினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. வவுனியா இடைத் தங்கல் முகாம் ஒன்றில் கைதாகிப் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினரிடமிருந்து கிடைத்த தகவலையடுத்தே இவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. நேற்று அந்தப் பகுதிக்கு சென்றிருந்த பயங்கரவாத தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர் மறைவிடம் ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த பெருந் தொகையான இந்த ஆவணங்களில், விடுதலைப் புலிகளின் மாவீரர் குடும்ப விபரங்கள், சுமார் 10 ஆயிரம் பயிற்சி பெற்ற அங்கத்தவர் விபரம், வங்கி மற்றும் நிதி தொடர்பான ஆவணங்களுடன் தகவல் கருவிகளும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட லண்டனிலிருந்து வெளியாகும் ' ஜேன்ஸ் டிபென்ஸ்' பிரதியும் காணப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நடத்தும் பொறுப்பு பொலிஸ் குற்றப் புலனாய்வத் துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்
__________________________________________________________________________________________
மனத்தடைகள் நீங்க வேண்டும்
- தி.ஸ்ரீதரன் - பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு அவசியமில்லை. இந்த நாட்டில் சமத்துவமான வாழ்வொன்றை ஏற்படுத்தினால் சரி என்று பிரச்சினைகளில் இருந்து நழுவிக்கொள்ளும் பொத்தம் பொதுவான போக்கொன்று காணப்படுகிறது. தனிநாடு, சமஷ்டி 13வது திருத்தச் சட்டம், பொலிஸ், நிலத்தின் மீதான அதிகாரம் தவிர்ந்த அதிகாரங்கள் வழங்கப்படுதல் பற்றி இனப்பிரச்சினை தீர்வுக்கான யோசனைகள் நலிவடைந்து சென்றிருக்கின்றன. நாட்டில் இனப்பிரச்சினை ஒன்று ஒன்றில்லை, பயங்கரவாதப் பிரச்சினைதான் காணப்பட்டது அதற்கு தீர்வு காணப்பட்டு விட்டது என்ற பாணியில் காரியங்கள் நடைபெறுகின்றன. பயங்கரவாதத்திற்கு வேராக இருந்தது எது என்பது பற்றிய பிரக்ஞை இல்லாதது போல் பேச முனைகிறார்கள். உண்மையில் தமிழ் பாசிசத்தின் மூல ஊற்றாக இருந்ததில் பௌத்த சிங்கள இனவாதத்தின் பங்களிப்பை யாரும் மறுத்துவிட முடியாது. இவை ஒன்றையொன்று போசித்து சகல இலங்கை மக்களினதும் வாழ்வை நாசமாக்கின. இன்றும் இதே சிந்தனை போக்குகள் காணப்படுகின்றன. தமிழ் மக்கள் மத்தியிலிருந்த ஜனநாயக விரோத போக்கு பாசிசம் தோற்கடிக்கப்பட வேண்டிய அவசியம் இருந்தது. அது தோற்கடிக்கப்பட்டு விட்டது. அது இலங்கையின் அனைத்து சமூகங்களுக்கும் தேவைப்பட்டது. ஆனால் அது சிங்களவர்கள் தமிழர்கள் மீது பெற்ற வெற்றியாக மடத்தனமான உணர்ச்சிகளுடன் சித்தரிக்கப்படுகிறது. மேலும் 19.09.09
__________________________________________________________________________________________
கல்முனையில் இந்திய வியாபாரிகளின் கடவுச் சீட்டுக்கள் பறிமுதல்
கல்முனை பிரதேசத்தில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 82 இந்திய வியாபாரிகளின் கடவுச் சீட்டுக்களை குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இவ்வியாபாரிகள் சுற்றுலா விசா பெற்று நாட்டில் பரவலாக வியாபாரத்தில் ஈடுபடுவதாகக் கிடைத்த தகவல்களையடுத்து கொழும்பிலிருந்து கல்முனை பிரதேசத்திற்குச் சென்றிருந்த குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் விசேட குழுவொன்று இவர்களுடைய கடவுச் சீட்டுக்களைப் பறிமுதல் செய்து தடுத்து வைத்துள்ளது. குறிப்பிட்ட வியாபாரிகளை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்குச் சமூகமளிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்கியிருந்த வீடுகள் மற்றும் விடுதிகளை முற்றுகையிட்ட திணைக்கள அதிகாரிகள் கடவுச் சீட்டுக்களை பறிமுதல் செய்தனர். கடந்த 4 - 5 வருடங்களாக கிழக்கு மாகாணத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மேற்படி வியாபாரிகள் தெருத் தெருவாகச் சென்று வீடுகளிலும் மற்றும் தொழில் நிறுவனங்களிலும் புடவைகளை விற்று வருகின்றனர். மேலும் 19.09.09
__________________________________________________________________________________________
இந்திய இடதுசாரிகள்
- பிரபாத் பட்நாயக்
எகானமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி, 11.7.09
சமீபத்திய இந்திய தேர்தல்களில் இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட தோல்வியே அநேகமாக மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இடதுசாரிகளுக்கு ஓரளவு தோல்வி ஏற்படும் என்பதைப் போலவே, பாஜகவின் தோல்வியும் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டதுதான்; கருத்து கணிப்பாளர்கள் தவிர. ஆனால், இடதுசாரிகளுக்கு ஏற்பட்டுள்ள தோல்வியின் உண்மையான அளவுநிலை தடுமாறச் செய்கிறது. அவர்களின் வாக்குவீதம் ஓரளவு மட்டுமே குறைந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், வங்கத்தில் மொத்தமுள்ள தொகுதிகளில் மூன்றில் ஒருபங்கு சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே அவர்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது. கேரளத்தில் நிலைமை இன்னும் மோசம். இது ஒரு கடும் பின்னடைவாகும். தற்போது மத்தியில் அதிகாரத்தைப் பிடிக்கும் போட்டியில் இடதுசாரிகள் இல்லை என்ற போதும், அவர்களின் தோல்வி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் ஒரு நவீன, மதச் சார்பற்ற, ஜனநாயக சமுதாயத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் முக்கியமான உந்து சக்தியாக அவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மட்டுமே அத்தகையதொரு சக்தியாக இருக்கவில்லை. ஏராளமான முற்போக்கான சமூக, அரசியல் அமைப்புகளும் அத்தகைய பாத்திரத்தை வகித்து வருகின்றன. ஆனால் இடதுசாரிகள் ஒரு முக்கிய அம்சத்தில் அவற்றிடமிருந்து வேறுபடுகின்றனர். மேலும் 19.09.09
__________________________________________________________________________________________
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை நிலைமை சிறப்பானது'
ஜனாதிபதியை சந்தித்த ஐ.நா. பிரதிநிதி பெஸ்கோ தெரிவிப்பு
இலங்கையின் தற்போதைய நிலவரத்தை உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறப்பானதாக உள்ளதென ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் லின் பெஸ்கோ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ள்ள அவர் நிவாரணக் கிராமங்களின் நில வரம், வவுனியா மற்றும் வடக்கில் ஏனைய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும், கண்ணிவெடி, மிதிவெடி அகற்றல், மீள்குடி யேற்றம் ஆகியவற்றை நேரில் அவதானித்ததன் பின்னர் அலரி மாளிகையில் ஜனாதிபதியை அவர் நேற்று சந்தித் தார்.இதன்போது கண்ணிவெடி, மிதிவெடி அகற்றுவதில் நவீன இயந்திரங்களை பயன்படுத்தி மேற்கொண்டுவரும் துரித நடவடிக்கைகளை பாராட்டிய அவர், இது தொடர்பில் மேலும் உதவிகளை வழங்குவதற்கு ஐ.நா. தயாராகவுள்ளதென்றும் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஒரே நாளில் சுமார் 2 இலட்சத்து 50,000 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்ததுடன் அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் வழங்குவதுடன் அவர்களின் சுகாதார நிலையை பேணுவதோடு மீளக் குடியேற்றப் படுவதுடன் முக்கியத்துவ த்தையும், அவசியத்தையும் புரிந்து கொண்டு அரசாங்கம் அவற்றுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு ள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும் 19.09.09
__________________________________________________________________________________________
முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் ஜனவரிக்குள் மீள்குடியேற்றம் செய்யப்படுவர்: இலங்கை ஜனாதிபதி
- பி.பி.சி.
இலங்கையில் அண்மையில் முடிந்த போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் திடமான காலஅட்டவணை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் என்பது ஜனவரி மாதத்தின் இறுதிக் குள் நிறைவடையும் என்று தாம் நம்புவதாக ஜனாதிபதி ராஜபக்ஷ இலங்கை வந்திருக்கும் ஐ.நா. மன்றத்தின் உயர்ஸ்தானிகரிடம் பேசியபோது தெரிவித்திருக்கிறார். இதேவேளை, அரசாங்கத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள், அதாவது குறைந்தது 70 சதவீதம் பேர் நவம்பர் மாதத்தின் இறுதிக்குள் முகாம்களை விட்டு வெளியேறி இருப்பார்கள் என்கிற தமது முந்தைய நிலைப்பாட்டில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படி நடக்கவேண்டுமானால் ஏராளமான வேலைகள் செய்யப்படவேண்டியிருக்கிறது. சுமார் இரண்டுலட்சத்து அறுபத்தைந்தாயிரம் பேர் இன்னமும் முகாம்களில் இருப்பதாக ஐ.நா.மன்றத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மேலும் 19.09.09
__________________________________________________________________________________________
முகாம் மக்களைப் பொறுப்பேற்கும் விண்ணப்பங்களை ஏற்கக் கோரி ஆர்ப்பாட்டம்
வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களை உறவினர்கள் பொறுப்பேற்பதற்கான விண்ணப்பங்களை ஏற்குமாறு கோரி வவுனியா செயலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களைப் பொறுப்பேற்க விரும்புபவர்கள் அதற்கென மீள்குடியேற்ற அமைச்சு வெளியிட்டுள்ள விண்ணப்பப் படிவங்களில் விபரங்களைத் தெரிவித்து வவுனியா அரசாங்க அதிபரிடம் கையளிக்குமாறு ஊடக விளம்பரத்தின் மூலம், மீள்குடியேற்ற அமைச்சு கோரியிருந்தது. இதற்கமைய வவுனியாவில் உள்ள பலர் இதற்கான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து வவுனியா செயலகத்தில் கையளித்து வந்தார்கள். கடந்த புதன்கிழமை முதல் இந்த விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கான அறிவித்தல் பிரதேச செயலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் முகாம்களில் உள்ளவர்களைப் பொறுப்பேற்பதற்கு விரும்பிய பலர் ஏமாற்றமடைந்தனர். இதனையடுத்து, இவ்வாறு ஏமாற்றமடைந்த பலர் நேற்று வவுனியா செயலகத்தில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், வவுனியா அரசாங்க அதிபரைச் சந்திக்க வேண்டும் எனக் கோரிய போதிலும், அவ்வாறான சந்திப்பு இடம்பெறவில்லை
__________________________________________________________________________________________
இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுப் பணிகள்: இந்தியா தலையிட பிரதமரிடம் திமுக வலியுறுத்தல்
சென்னை, செப்.18- இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிப்பது தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று திமுக சார்பில் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பிரதமரை இன்று காலை சந்தித்துப் பேசினார். அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் உடன் இருந்தார். இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உரிய நிவாரண உதவிகள் விரைவாக வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களின் மறுவாழ்வுக்கான பணிகள் தொடங்கப்பட மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்றும் தயாநிதி மாறன் பிரதமரிடம் வலியுறுத்தினார். அப்போது இலங்கைத் தமிழர்களின் நலனைக் காப்பாற்றும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் மாறனிடம் பிரதமர் உறுதியளித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
__________________________________________________________________________________________
ஆனையிறவு ரயில் நிலைய புனரமைப்பு: சேகரிப்பு நிதி ஒரு கோடியை விஞ்சியது
அக்டோபர் 30 வரை மாணவர் பங்களிப்புக்கு சந்தர்ப்பம்
ஏ-9 வீதியில் ஆனையிறவு ரயில் நிலையத்தை நவீன மயப்படுத்துவதற்காக ஆசிரியர்கள் மாணவர்களினூடாக சேகரிக்கப்பட்ட நிதியின் தொகை ஒரு கோடி ரூபாவை விஞ்சிவிட்டதாக கல்வி அமைச்சு தெரிவிக்கிறது. ‘வடக்கிற்கான நட்புப்பாதையில் பாசத்தின் உறைவிடத்தை ஒற்றுமையாகக் கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளில் கலவி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் பணிப்பிற்கமைய ஆனையிறவு ரயில் நிலைய புனரமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தைத் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள மாணவர்களின் உதவியுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இலங்கை வங்கியின் இல. 9393439 என்ற கணக்கு இலக்கத்திற்கு நிதியுதவிகளை வைப்பிலிடுமாறு வேண்டப்படுகின்றனர். மாணவர்கள் பங் களிப்புச் செய்ய வேண்டிய ஆகக்குறைந்த தொகை 2 ரூபாவாகும். மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட அனைவரும் இதற்கு பங்களிப்புச் செய்வதற்கு ஆர்வமாக உள்ளனர். ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை இத்திட்ட த்திற்கு நிதி வழங்க பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.
__________________________________________________________________________________________
கொழும்பு அரசியல் சிறைக்கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம்
சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு, நீண்டகாலமாக கொழும்பு தடுப்புக் காவல் சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் அரசியல் கைதிகள் சுமார் 250 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். தம்மை பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும் அல்லது புலிகள் இயக்கத்தில் மிக முக்கிய பதவிகளில் இருந்த தயா மாஸ்டர், ஜோர்ஜ் ஆகியோரை விடுவித்தது போல பிணை அடிப்படையிலாவது விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தே தாம் உண்ணாவிரதப் போராட் டத்தில் குதித்துள்ளனர் என்று கைதிகள் கூறினர். சட்ட மா அதிபர், திணைக்கள சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமை சட்டத் தரணிகள் வழங்கிய உறுதிமொழிகளின் பிரகாரமே ஏற்கனவே நடத்திய போராட்டங்களைத் தாம் கைவிட்டனர் என்றும், ஆனா லும் தமது விடுதலைக்கான நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் கைதிகள் தெரிவிக்கின்றனர். நாடு முழுதும் கிட்டத்தட்ட 1600 பேர் கைது செய்யப்பட்டு பல சிறைகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தமது கோரிக்கையை ஜனாதிபதி செவிமடுப்பார் என நம்புவதாகவும் மேலும் தெரிவித்தனர்
__________________________________________________________________________________________
வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்கள் செயல்களை முடக்க இலங்கை அரசு தீவிரம்
கொழும்பு: புலிகளின் வெளிநாட்டு தொடர்பை, தகர்க்கும் முயற்சியில் இலங்கை அரசு இறங்கியுள்ளது. விடுதலைப் புலிகளை ராணுவ ரீதியாக தோற்கடித்த போதும், அதன் வெளிநாட்டு தொடர்பு, இன்னும் தொடர்ந்து கொண்டே உள்ளது. இதனால், அதை அழிப்பதற்கான முயற்சியில், இலங்கை இறங்கியுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்களால், நிதி திரட்டல் மற்றும் கொழும்புக்கு எதிரான போராட்டங்கள், நடந்து வருகின்றன. இதனால் இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதன் பின்னணியில், விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு தொடர்புகள் செயல்படுவதாக இலங்கை அரசு நம்புகிறது. விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலர், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனர், செல்வராசா பத்மநாதன் கைதால், இடம்பெயர்ந்த இலங்கை தமிழர் களின் நடவடிக்கைகள் ஒடுக்கப் படும் என நினைத்தது. மேலும் 18.09.09
__________________________________________________________________________________________
ஐ.நா.விசேட பிரதிநிதி பெஸ்கோ வவுனியா, யாழ்., மன்னார் விஜயம்'
மீள்குடியேற்றத்திற்கு ஐ.நா. உதவுமென உறுதி ஜனாதிபதி, அரசியல் கட்சிகளுடன் இன்று சந்திப்பு
இலங்கையில் இடம்பெயர்ந்து ள்ளவர்களை விரைவில் மீள குடியமர்த்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை பூரண உதவிகளை வழங்குமென ஐ. நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியாக இலங்கை வந்திருக்கும் ஐ. நா. அரசியல் விவகாரங்களுக்கான திணைக்களத்தின் தலைவர் லின் பெஸ்கோ நேற்றுத் தெரிவித்தார். நேற்று முன்தினம் இரவு, இலங்கை வந்த லின் பெஸ்கோ நேற்றுக் காலை யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடியகற்றும் வேலைத் திட்டங்களையும் கண்டறிந்தார்.வடக்குக்கான தனது சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பிய பெஸ்கோ நேற்று மாலை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல் லாகமவை அமைச்சில் சந்தித்து இருதரப்பு பேச்சு நடத்தினார். மேலும் 18.09.09
__________________________________________________________________________________________
தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண தமிழ்-மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் : ஆர். சம்பந்தன்
நீங்கள் வழங்குவது ஓர் உண்மையான தீர்வாக இருக்க வேண்டும். நிலை நிற்கக் கூடியதாக மாற்றி அமைக்க முடியாததாக அது இருக்க வேண்டும். எமது மக்கள் பாதுகாப்பாக, சுதந்திரமாக, கெளரவமாக வாழ்வதற்கு அது வழி சமைக்க வேண்டும். சிங்கள மக்களை நாங்கள் நேசிக்கின்றோம். அவர்களை நாங்கள் வெறுக்கவில்லை. அவர்கள் எங்களுடைய அன்புச் சகோதரர்கள். இந்த நாட்டில் அவர்களுக்கும், அவர்களது பிரதேசத்திற்கும் இருக்கும் உரிமையைத்தான் எங்களுடைய பிரதேசத்திலும் இருக்க வேண்டும் என எமது மக்கள் சார்பில் நாங்கள் கேட்கின்றோம். அதற்கு மேலதிகமாக எதனையும் நாங்கள் கேட்கவில்லை. அவர்களுடைய பிரதேசங்களில் அவர்களுக்கு எவை இருக்கின்றனவோ அவை அனைத்தும் எங்கள் பிரதேசத்தில் எங்களுக்கும் இருக்க வேண்டும் என்பதைத்தான் நாங்களும் வலியுறுத்துகின்றோம். இதைத் தருவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துக் கொண்டிருக்க முடியாது. தரவேண்டிய கட்டாய நிலைமைக்கு அரசாங்கம் தள்ளப்படும். ஆனால் அதை நாங்கள் அடைவதற்கு விசேடமாக வட கிழக்கில் உள்ள தமிழ் பேசுகின்ற தமிழ்-முஸ்லிம் மக்களுடைய சக்தியும் பலமும் எங்களுக்குப் பின்னால் நிற்க வேண்டும். மேலும் 18.09.09
__________________________________________________________________________________________
இலங்கை தமிழருக்கு வாழ்வாதார பணிகள் : பிரதமர் தகவல்
சென்னை : "இலங்கைத் தமிழருக்காக ஒதுக்கப்பட்ட 500 கோடி ரூபாயில், தமிழர்களுக்கான வாழ்வாதாரம், உள்கட்டமைப்பு பணிகள், வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு திட்டங்களை மேற்கொள்ளும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது' என, முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதம்: இந்திய மீனவர்கள் மற்றும் இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழர்களின் நிலைமை குறித்து தாங்கள் எழுதிய கடிதங்கள் கிடைத்தன. மீனவர்களைப் பொறுத்தவரை, மூன்று இந்திய மீனவர்கள் வங்கதேச போலீஸ் பாதுகாப்பில் பத்திரமாக உள்ளனர். அவர்களை விரைவாக இந்தியா அனுப்ப கோரியுள்ளோம். மீதமுள்ள ஐந்து மீனவர்களைக் கண்டுபிடிக்கும் பணியைத் தொடருமாறு வங்கதேச அரசை வலியுறுத்தியுள்ளோம். இலங்கையைப் பொறுத்த வரை, அங்குள்ள இடம்பெயர்ந்த தமிழர்களின் நலன் பற்றிய தங்களது கவலையை பகிர்ந்துகொள்கிறோம். இலங்கை அரசிடமும் நமது கவலையை பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளோம். மேலும் 18.09.09
__________________________________________________________________________________________
Manmohan reiterates Centre's commitment to rehabilitation of Sri Lankan Tamils
The Centre is committed to working on a priority basis for the relief and rehabilitation of the internally displaced civilians in northern Sri Lanka, Prime Minister Manmohan Singh has informed Chief Minister M. Karunanidhi. “Our humanitarian assistance has been substantial. The field hospital set up by us has now treated more than 38,000 patients. Our demining teams are in the process of clearing tracts in the North to expedite the resettlement process. We have also sent shelter material to facilitate resettlement,’ Dr Singh wrote to Mr Karuananidhi in his letter of September 9. The Prime Minister’s communication was in response to Chief Minister’s letters of August 14 and 17 on Indian fishermen and the situation of Tamil internally-displaced persons in Sri Lanka. (Read) 18.09.09
__________________________________________________________________________________________
இந்து சமுத்திர விளையாட்டில் அமெரிக்காவுக்கு ஒரு சிறந்த ஆயுதமாக பிரபாகரன் இருந்தார்: ஊடகவியலாளர் நிதின் கோகல்
ஒரு சிறிய நாடு பயங்கரவாதத்தை முற்றாக வெளியேற்றிவிட்டதுடன் மேற்குலகுக்கு எதிராகத் தொடர்ந்தும் உறுதியான நிலைப்பாட்டில் நின்று வருகின்றது என்பதை ராஜபக்ச இறுதி ஆய்வு முடிவாக எடுத்துக் கொள்ளலாம். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அதிகளவிலான விளையாட்டுக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சிறிலங்காவுடன் விளையாடுவதற்கு அமெரிக்காவுக்கு ஒரு நெம்புகோல் தேவைப்படுகிறது. அதற்குப் பயன்படுத்தவதற்கான சிறந்த ஆயுதமாகப் பிரபாகரன் இருந்தார். அதேபோன்று ஸ்கண்டிநேவிய நாடுகள் புலிகளுக்கான ஆயுத வழங்குனர்களாக இருந்தார்கள். ஜெனரல் சரத் பொன்சேகா என்னிடம் கூறினார், அவர்கள் (புலிகளின் தலைவர்கள்) கொல்லப்படுவதற்கு 10 நிமிடங்கள் முன்னதாக அவர்களைப் பாதுகாப்பதற்காக பாதுகாப்புச் செயலாளருக்கு (கோத்தபாய ராஜபக்ச, அரச தலைவரின் சகோதரர்) தொலைபேசி அழைப்பை தூதுவர்கள் ஏற்படுத்தினார்கள் என்று. அந்த நேரத்தில் போர் நிறுத்தத்தைக் கோருவது என்பது புலிகளின் தலைவர்களைப் பாதுகாப்பதற்காகத்தானே ஒழிய மக்களைப் பாதுகாப்பதற்காக அல்ல என்பதை எந்த ஒரு முட்டாளும் புரிந்துகொள்வான். ஏனென்றால் அப்போது அங்கே மக்கள் யாரும் இல்லை எனத் தெரிவித்திருந்தார் சரத் பொன்சேகா. இந்தப் பிரச்சினை இரண்டு விடயங்களைக் கொண்டது: . மேலும் 17.09.09
__________________________________________________________________________________________
தமிழ் மக்களின் பொறுப்பும் - அரசின் கடமையும்
- தி. ஸ்ரீதரன் - பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்
இன்றுள்ள சமூக அரசியல் நிலைமைகள் தொடர்பாக தமிழ் மக்கள் பொறுப்புணர்ச்சியுடனும், நிதானமாகவும், தீர்க்கதரிசனத்துடனும் செயற்பட வேண்டும். குறுந்தேசியவாத கற்பனை போதையூட்டல்களுக்கு எடுபடாது, சுதந்திரமானதும் செழுமைமிக்கதுமான வாழ்வொன்றை தமது சொந்த பிரதேசங்களில்- யுத்தத்தினால் அழிவுண்ட பிரதேசங்களில் ஸ்தாபிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். சக சமூகங்களுடன் வௌ;வேறு பிரதேசங்களில் வாழும் மக்களுடன் எவ்வாறு உறவுகளை வளர்த்துக் கொள்வது என்பது பற்றி சிந்திக்க வேண்டும். புலம் பெயர் தமிழர்களில் உழைப்பும் அறிவும் எவ்வாறு ஆக்கபூர்வமான வழிகளில் பங்காற்ற முடியும் என்பது பற்றி சிந்திக்க வேண்டும். இதில் நிதானமும், தூரதிருஷ்டியும் அவசியப்படுகின்றன. 30 வருடங்களாக இழப்புக்களுடனும் துயரங்களுடனுமான வாழ்விலிருந்து விடுபட வேண்டும். எமதும், எமது சந்ததியினதும் வாழ்வு இந்த நாட்டில் சக சமூகங்களுடன் இணைந்ததாக சுதந்திரமானதாகவும், சமத்துவமானதாகவும் அமைய வேண்டும். மேலும் 17.09.09
__________________________________________________________________________________________
இலங்கையில் முதலீடு செய்வதன் மூலம் இழந்த பிரஜாவுரிமையை மீளப் பெறலாம் :அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் தகவல்
அமெரிக்காவில் குடியேறிய பின் இலங்கைப் பிரஜாவுரிமையை இழந்த இலங்கையர்கள் தற்போது இலங்கையில் நிரந்தர சேமிப்புக் கணக்குகளிலும் திறைசேரி முறிகளிலும் உண்டியல்களிலும் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் தங்களுக்கு இருக்கும் அமெரிக்க பிரஜாவுரிமையுடன் இலங்கைப் பிரஜாவுரிமையையும் பெற்றுக் கொள்ளலாம் என்று அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதுவர் ஜாலியா விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார். இலங்கையில் வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்கில் 25,000 அமெரிக்க டொலரை வைப்பிலிடுவதன் மூலம் கட்டணம் செலுத்தாமலே இரட்டை பிரஜாவுரிமையை பெற்றுக் கொள்ளலாம் என்று விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார். இலங்கை அமெரிக்காவிலிருந்து புதிய வர்த்தகத்தையும் முதலீட்டையும் கவருவதற்கு இலங்கைக்கு உதவுமாறும் அமெரிக்காவிலுள்ள புலம்பெயர் இலங்கையர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார். பல்வேறு விடயங்களில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றி விளக்குவதற்காக அமெரிக்க ராஜாங்க திணைக்கள அதிகாரிகள், அமெரிக்க பிரதிநிதிகள், மூதவை உறுப்பினர்கள் மற்றும் கொள்கை ஆக்காளர்கள் ஆகியோரை தாம் சந்திக்க இருப்பதாகவும் விக்கிரமசூரிய தெரிவித்தார். மேலும் அமெரிக்காவிலுள்ள புலம்பெயர் இலங்கையர்களுடன் பகிரங்க பேச்சுவார்த்தைகளை தாம் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்
__________________________________________________________________________________________
முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர்கள் நிலை என்ன? நேரடியாக பார்வையிடுகிறார் ஐ.நா., சிறப்பு பிரதிநிதி
கொழும்பு:முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களின் நிலையை நேரடியாக ஆராய்வதற்காகவும், அங்குள்ள தமிழ் மக்களை விரைவில் விடுவிக்க வலியுறுத்தியும், ஐ.நா., பொதுச்செயலரின் சிறப்பு பிரதிநிதி, நேற்று கொழும்பு புறப்பட்டார்.இடம்பெயர்ந்த மக்களின் நிலை தொடர்பாக, ஐ.நா., செயலர் பான் கீ மூன், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன் தொலைபேசியில் நேற்று முன்தினம் உரையாடினார்.தனது சிறப்புப் பிரதிநிதியாக பாஸ்கோவேயை கொழும்புக்கு அனுப்பி வைப்பதாக, அப்போது அவர் தெரிவித்தார்.இன்று கொழும்பு சென்றடையும் பாஸ்கோ, கொழும்பு மற்றும் வவுனியாவில் தங்கியிருப்பார். வடபகுதி முகாம்களில் உள்ள மக்களை நேரில் பார்வையிட்டு, அவர்கள் முகாம்களை விட்டு விரைவில் வெளியேற, வேண்டிய நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.மேலும், இலங்கை அதிபர் ராஜபக்ஷே, முக்கிய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தமிழ்க் கட்சி உறுப்பினர்களுடனும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.மேலும் 17.09.09
__________________________________________________________________________________________
அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் : இலங்கைக்கு முற்றுகிறது நெருக்கடி
கொழும்பு : "வன்னி தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும், உடனடியாக தங்கள் வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்க வேண்டும்' என, பிரிட்டன் கத்தோலிக்க பிஷப்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை போருக்கு பின், கரித்தாஸ் தொண்டு அமைப்பின் செயற்பாடுகளை காண, ஷிபீல்ட் பிஷப் ஜோன் ரோவ்ஸ்தோர்ன் மற்றும் வெஸ்ட் மினிஸ்டர் பிஷப் ஜோன் ஆர்னல்ட் ஆகிய இருவரும், இலங்கை சென்றனர். எளிதில் யாருமே அனுமதிக்கப்படாத தடுப்பு முகாம்களுக்கு சென்று வரும் வாய்ப்பு, இவர்கள் இருவருக்கும் கிடைத்தது. அங்கு எட்டு நாள் தங்கியிருந்த அவர்கள், அகதிகள் முகாம்களை சென்று பார்வையிட்டனர். அத்துடன் முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்கள், மதகுருக்கள், கன்னியாஸ்திரிகளையும் சந்தித்து பேசினர். இதுகுறித்து, ஜோன் ரோவ்ஸ்தோர்ன் மற்றும் ஜோன் ஆர்னல்ட் கூறியதாவது: முகாம்களில் உள்ள மக்கள் நிலை கண்டு துயரடைந்தேன். அங்கு ஜனநெருக்கடி அதிகமாக இருப்பதால், போதிய அளவு உணவு, சுகாதார சேவை இல்லை. அண்மையில் பெய்த மழையால், அவர்களின் அரைகுறை இருப்பிடங்களைக் கூட இழந்துள்ளனர். மேலும் 17.09.09
__________________________________________________________________________________________
மலையகம் தந்த பாடம்
வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?
(சாகரன்)
கடந்த 12 நாட்களாக தமது வாழ்வு ஆதாரமான சம்பள உயர்வுப் போராட்டத்தை மலையக தோட்டத் தொழிலாளர்கள் நடத்தி வந்தனர். பிரிட்டஷ் ஆட்சிக்காலத்தில் தென் இந்தியாவில் இருந்து வாழ்வு அளிப்பதாக பசப்பு வார்த்தை காட்டி இராமேஸ்வரம் துறைமுகத்தில் ஆடு மாடுகள் போல் ஏற்றப்பட்டு தலைமன்னார் துறைமுகத்தில் இறக்கப்பட்டனர் இத் தொழிலாள அடிமைகள். மன்னாருக்கு இன்னொரு தியாக வரலாறும் உண்டு. ஈழவிடுதலைப் போராட்டத்தில் 1986 மார்கழி மாதம் ஈபிஆர்எல்எவ் ஐ புலிகள் தங்கள் ஆயுதக்கரங்கள் கொண்டு நசுக்கிய காலகட்டத்தில் இதே மன்னாருக்கு ஈபிஆர்எல்எவ் இன் மலையகத் தலைவர்கள் இந்தியாவில் இருந்து புலிகளினால் நயவஞ்சமாக அழைக்கப்பட்டனர். பின்பு அவர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்ட துரோகத்தனமும் அங்குதான் அரங்கேறி முடிந்தது. இதில் அன்பரசன் உட்பட 10 இற்கும் மேற்பட்ட மலையக போராளிகள் புலிகளினால் நயவஞ்சகமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். மன்னார் மண் மலையக மக்களின் சுருதியாலும் வியர்வையினாலும் நனைந்து ஈரமான மண். அதுதானோ புவியியல் ரீதியில் வறட்சி நிறைந்த இம்மண்ணில் இன்றும் ‘ஈரம்’ உள்ளதோ? நல்ல விளை நிலங்கள் உள்ளனவோ? என்று எண்ணத் தோன்றுகின்றது. மேலும் 17.09.09
__________________________________________________________________________________________
தாய்நாட்டுக்கு துரோகம் செய்யும் சதிகாரர்கள் மீண்டும் நாட்டை காட்டிக் கொடுக்க முயற்சி: ‘உயிருடன் இருக்கும் வரை இடமளியேன்’
- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
தாய்நாட்டுக்கு துரோகம் செய்த சில சதியாளர்கள் மீண்டும் நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கு முயற்சி செய்கின்ற போதிலும் தான் உயிருடன் இருக்கும் வரையும் அதற்கு இடமளியேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் தெரிவித்தார். எமது பாதுகாப்பு படையினர் தமது உயிர்களை அர்ப்பணித்துப் பாதுகாத்திருக்கும் தாய்நாட் டைக் காட்டிக் கொடுக்க எவருக்குமே இடமளிக்க முடியாது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். மாத்தறை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்பாட்டாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.அலரி மாளிகையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், குரூர பயங்கரவாதம் காரணமாக இந்நாட்டு மக்கள் மூன்று தசாப்த காலம் பீதி கொண்டிருந்தார்கள். அந்த பயங்கரவாதம் இப்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போது முழு நாட்டுக்கும் சுதந்திரம் கிடைத்துள்ளது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத எதிரணியைச் சேர்ந்த சிலர் அரசாங்கத்திற்கு எதிராக வெவ்வேறு விதமான குற்றச் சாட்டுக்களை எழுப்பு கின்றார்கள். மேலும் 17.09.09
__________________________________________________________________________________________
ஐக்கிய தேசிய கட்சி கூட்டணியிலிருந்து தொழிலாளர் தேசிய சங்கம் வெளியேறியது.
தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சி உரிய அழுத்தத்தினை வழங்காத காரணத்தினால் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியிலிருந்து விலகி தொழிலாளர் தேசிய சங்கம் தனித்து செயற்படுவதற்கு முடிவெடுத்துள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார். தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 500 ரூபா எதிர்பார்க்கப்பட்ட போதும் 405 ரூபா சம்பளத்தினை வழங்கக்கூடிய கூட்டொப்பந்தத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்கமான இலங்கைத்தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் கைச்சாத்திட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் தோட்டத்தொழிலாளர்களுக்கு 500 ரூபாவுக்குக்குறைந்த கூட்டொப்பந்தத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்கமான இலங்கைத்தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் உடன்படுமானால் ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து விலகி தனித்துவமாக செயற்பட போவதாக சவால் விட்டிருந்தேன். மேலும் 17.09.09
__________________________________________________________________________________________
அறிவியல் தொழில் நுட்பத் துறையிலான வளர்ச்சி
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 60 ஆண்டுகளில், சீனாவின் அறிவியல் தொழில் நுட்ப நிலை பெருமளவில் உயர்ந்துள்ளது. மக்களின் உடை, உணவு, உறைவிடம், போக்குவரத்து, முதலிய துறைகளுடன் அறிவியல் தொழில் நுட்பம் இணைந்துள்ளது. கடந்த நூற்றாண்டின் 40, 50ம் ஆண்டுகளில், பின்டைந்த வேளாண் உற்பத்தி வழிமுறையாலும், இயற்கைச் சீற்ற பாதிப்பினாலும், சீனாவில், முக்கிய வேளாண் உற்பத்திப் பொருட்கள் கடும் பற்றாக்குறையாக இருந்தன. உணவுப் பிரச்சினை சீனா எதிர்நோக்கிய முக்கிய பிரச்சினையாக மாறியது. அப்போது, தானிய விளைச்சலை உயர்த்தும் வகையில், உயர் விளைச்சல் தரும் நெல்லை வளர்க்க சீனாவின் நெல் நிபுணரான Yuan Longping முடிவு செய்தார். எனவே, உலக சிக்கல் என்று கருதப்படும் கலப்பு நெல் ஆய்வில் அவர் கவனம் செலுத்தத் துவங்கினார். மேலும் 17.09.09
__________________________________________________________________________________________
ஜீ.எஸ்.பி சலுகை:ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று பேச்சு நடத்த ஜனாதிபதி பணிப்பு
ஜீ. எஸ். பி. பிளஸ் நிவாரணத்தைத் தொடர்ந்து பெறுவது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்து மாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். ஆடைத் தொழிற்துறை சார்ந்த வியாபாரிகளின் பங்களிப்புடன் இந்த நிவாரணத்தை மீளப்பெற தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படுவதாக பிரதிநிதி அமைச்சரும் பொது நிர்வாக உள்நாட்டலுவல் கள் அமைச்சருமான சரத் அமுனுகம தெரிவித்தார். மகாவலி நிலையத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமை ச்சர் மேலும் கூறியதாவது, ஜீ. எஸ். பி. பிளஸ் எம க்குக் கிடைப்பதை தடுக்க முற்பட்ட ரணில் விக்கிரம சிங்க, இன்று கரு ஜயசூரிய மூலமாக ஜீ.எஸ்.பி. பிளஸ் நிவாரணத்தை வழங்குமாறு கோரியுள்ளார். ஏன் ஐ.தே.க. தலைவருக்கு இந்தக் கோரிக்கையை முன் வைக்க முடியாது. இந்த வருட இறுதி வரை ஜீ.எஸ்.பி பிளஸ் நிவாரணம் எமக்குக் கிடைக்க உள்ளது. தொடர்ந்து இந்த நிவாரணத்தை பெற சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் 17.09.09
__________________________________________________________________________________________
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தப்பிப் பிழைப்பதற்கு செய்ய வேண்டிய மாற்றங்கள்!
- வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)
புலிகள் என்ற கொலைகார ஆயுதக்கும்பல் உருவான பின்னர் ‘புலியின் வாலைப்பிடித்த’ நிலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தள்ளப்பட்டிருந்தது ஓரளவு உண்மைதான். ஆனால் இந்த தமிழ்த் தேசியக் கூட்மைப்பினரின் முன்னோடி அப்பனான தமிழர் விடுதலைக்கூட்டணி தான், தமிழ்மக்கள் மத்தியில் இளைஞர்களின் ஆயுதப்போராட்ட இயக்கங்கள், அதிலும் குறிப்பாக கேடுகெட்ட இந்த புலிகள் இயக்கம் தோன்றுவதற்கு காரணகர்த்தாவாக இருந்தது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. தற்போதுள்ள தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என்பது, ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக்கூட்டணியை கைப்பற்றி புலிகளுக்கு எதிராகக் கொண்டுபோன பின்னர், புலிகளால் நேரடியாக உருவாக்கப்பட்டது என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. எனவே இன்று புலிகளை அரசாங்கம் அழித்துவிட்டாலும், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தனது பழைய கொள்கைகளைக் கைவிடாதவரை, இனிமேலும் கூட புலிகளை ஒத்த நாசகார இயக்கங்களை அவர்களால் மீண்டும் மீண்டும் உருவாக்க முடியும் என்பதையும் நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் ஜனாதிபதியை சந்தித்துப் பேசியதை, அவர்களது நல்ல மாற்றத்தின் ஒரு அறிகுறியாக எடுத்துக் கொள்வதானால், அவர்களது சந்திப்பு மட்டும் வெறுமனே போதுமானதல்ல. அவர்கள் தம்மை முற்றுமுழுதாக ஒரு நல்ல ஜனநாயக அரசியல் கட்சியாக நிரூபிப்பதற்கு, முக்கியமான சில விடயங்களை அவசியம் செய்தாக வேண்டும். மேலும் 16.09.09
__________________________________________________________________________________________
மாநில சுயாட்சிக்கு குரல் கொடுப்போம்: முதல்வர் கருணாநிதி
1970-ம் ஆண்டில், சென்னை அண்ணா நகரில் திமுக நடத்திய மாநில சுயாட்சி மாநாட்டில் அப்போது "பங்களா கட்சி' என்ற மாநிலக் கட்சியின் தலைவரான பிரணாப் முகர்ஜியும் கலந்து கொண்டார். மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிந்துள்ளன. முக்கியமான அதிகாரங்கள் மத்திய அரசிடமும், முக்கியத்துவம் இல்லாத அதிகாரங்கள் மாநில அரசுகளிடமும் உள்ளன. மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும். அதற்காக அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்'' என்று அப்போது பிரணாப் பேசினார். கேட்கும், கொடுக்கும் இடங்கள்... இப்போது நான் கேட்கும் இடத்திலும், அவர் கொடுக்கும் இடத்திலும் இருக்கிறார். உடனடியாக இல்லாவிட்டாலும் எல்லா இடையூறுகளையும் கடந்து மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் கிடைக்க பிரணாப் முகர்ஜி முன்வர வேண்டும். ""எந்த மொழிக்கும் திமுக எதிரானது அல்ல. தமிழ் மொழிக்கு மத்தியில் உரிய இடம் வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை வங்காளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட அனைத்து மொழி பேசுபவர்களும் எழுப்பலாம். மேலும் 16.09.09
__________________________________________________________________________________________
சட்ட விரோத காணி சுவீகரிப்பைத் தடுக்க வேண்டும் : கி.மா.ச. உறுப்பினர் இரா.துரைத்தினம் வலியுறுத்து
- மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் சட்ட விரோத காணி சுவீகரிப்பை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைத்தினம் மாகாண முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் சமீப காலமாக காணி தொடர்பான அத்துமீறல்கள் தமிழ் - முஸ்லிம், தமிழ் - சிங்கள எல்லைப் புறங்களில் இடம்பெற்று வருவதாகவும், இது தொடர்பாக முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். "குறிப்பாக வாகரைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள எல்லைப் புறமான தோணி, தாண்டமடு, புச்சாக்கேணி போன்ற கிராமக் காணிகள், பொலன்னறுவை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு சட்ட விரோதமாகக் கையாளப்படுகின்றன. தமது கடிதத்தில், "இப்பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பணிச்சங்கேணி, சுங்காங்கேணி, காயாங்கேணி, சேத்துக்குடா ஆகிய பகுதிகளை உள்ளடக்கி 300 ஏக்கர் காணி நன்னீர் மீன் வளர்ப்புக்கு என பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிய முடிகின்றது. கொக்கட்டிச்சோலை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கெவிலியாமடு பிரதேசத்தில் தமிழர்களுக்குரிய காணிகளில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டு விவசாயம் செய்யப்படுகின்றது. மேலும் 16.09.09
__________________________________________________________________________________________
நாட்டுக்கு எதிரான தலைவராகவே ரணில் விக்கிரமசிங்க செயற்படுகிறார்
அலரி மாளிகை நிகழ்வில் ஜனாதிபத
எமது எதிர்க் கட்சித் தலைவர் பாராளுமன்றத்துக்கு எதிர்க் கட்சித் தலைவராக இல்லாமல் நாட்டுக்கு எதிராக செயற்பட்டு நாட்டுக்கு எதிர்க் கட்சித் தலைவராகச் செயற்படுகிறார். இப்படியொரு எதிர்க்கட்சித் தலைவர் இந்நாட்டுக்குத் தேவையா? நாட்டைக் காட்டிக்கொடுக்கும் அவருக்கு மக்கள் சிறந்த பதில் கொடுக்கும் யுகம் தற்போது உருவாகியுள்ளது. தென் மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கன்றி இரண்டாவது இடத்தையாவது தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி முய ற்சி செய்கிறது. முப்பது வருடகால பயங்கரவாதத்தை குறுகிய காலத்தில் நாம் இல்லாதொழித் துள்ளோம். புலிகள் ஸ்ரீமாபோதி மீதும், தலதா மாளிகை மீதும் தாக்குதல் நடத்தியதை நாம் சாதாரணமாக நினைக்க முடியாது. இது முழு இனத்தின் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல் என்றே நாம் கருதவேண்டும். எமது அடையாளத்தையே அவர்கள் அழிக் கத் துணிந்தார்கள். அப்பாவித் தாய்மார், குழந்தைகள், மதத் துறவிகள் என சகலரையும் கொன்றுகுவி த்த அவர்கள் கொழும்பில் மட்டுமன்றி தென் மாகாணத்தில் அக்குறஸ்ஸவிற்கும் வந்து குண்டுத் தாக்குதலை நடத்தும் அளவுக்கு முன்னேறிச் சென்றனர். அத்தகைய பயங்கர வாதம் ஒன்றையே நாம் ஒழித்துள்ளோம். மேலும் 16.09.09
__________________________________________________________________________________________
அன்று அண்ணா எடுத்த சரியான முடிவு!
-உ.ரா.வரதராசன்
திமுக தனி அரசியல் கட்சியாக இயங்கத் தொடங்கிய பின்னரும் கூட “திராவிடத் தனி அரசு” என்கிற திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையை முன்வைத்தே செயல்பட்டது. 1962 இந்திய - சீன எல்லைப் போர்க்காலத்தில், இந்தப் பிரிவினைக் கோரிக்கையைத் தொடர்ந்தால், இந்திய அரசியல் சட்டத்துக்கு உள்ளிட்ட சட்டப்பூர்வமான அரசியல் கட்சியாக நீடிக்க முடியாது என்ற நிலை எழுந்தது. அந்தத் தருணத்தில், நாட்டு ஒற்றுமையை முன்னிறுத்தி திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டவர் அண்ணா. இது திராவிட இயக்கம் எடுத்துத் தீரவேண்டிய அரசியல் முடிவாக ஆனது வரலாற்றுக் கட்டாயம். தாய்க்கழகமான திராவிடர் கழகமும், தனிநாடு கோரிக்கையைத் தொடரவில்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. இன்றைக்கு திமுகவும் சரி, அதிலிருந்து பிரிந்து உருவான அதிமுகவும் சரி, தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்து செயலாற்றுகிற நிலை ஏற்பட்டுள்ளதற்கு, அன்று அண்ணா எடுத்த சரியான முடிவே அடித்தளம் இட்டது. மேலும் 16.09.09
__________________________________________________________________________________________
தலைமைப் பண்புகளுக்கு உதாரண புருஷர் அஷ்ரப்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் தலைவராகவும் விளங்கிய எம். எச். எம். அஷ்ரபின் 9 ஆவது நினைவு தினம் இன்று.
தலைமைப் பண்புகளுக்கு பொருத்தமான உதாரணப் புருஷராக வாழ்ந்து வரலாறு படைத்தமையினால் தான், மக்களுக்குப் பிடிக்கும் மக்கள் தலைவனாக மலர்ந்தார் மர்ஹ¥ம் அஷ்ரப். தலைவர்கள் என்போர் மூன்று வழிகளில் உருவாகுகின்றனர். கூட்டமொன்றில் தெரிவு செய்யப்படும் ஒருவர், சமூகத்தின் முன் தலைவராக அறிவிக்கப்படுகின்றார். இவர் தெரிவான தலைவர். அதிகார பீடத்திலிருக்கும் அக்கிராசனர் தன் விருப்பம் போல் ஒருவரைத் தலைவராக நியமிக்கப்பட்டு, சமூகத்தின் முன் தலைவராக நிறுத்தப்படுகின்றார். இவர் நியமிக்கப்பட்ட தலைவர். மக்களால் விரும்பி ஏற்று மக்களாலே போற்றிப் புகழப்படும் ஒருவரே, மக்கள் தலைவராக - சமுதாயத்தின் தலைவராக சமுதாயத்தால் அங்கீகரிக்கப்படுகின்றார். இம்மூன்று வகை தலைவர்களில் முதலிரு தலைவர்களும் பதவி மாற்றம் ஆட்சி மாற்றம் கால மாற்றம் காரணமாக, இடையில் காணாமல் போய்விடுவர். மேலும் 16.09.09
__________________________________________________________________________________________
புதியதொரு - பழைய தலைவன் வேண்டும் !
(16.09.2000 அன்று இறையடி சேர்ந்த எமதெழுச்சி நாயகனின் ஒன்பதாமாண்டு நிறைவினை நினைக்கையில்)
சவூதியிலிருந்து ஏயெம்.ஹஸன் அலி
பெரியதொரு உருண்டை – அது உலகளவு மட்டிருக்கும் என் தொண்டைக்குள் இன்னும் ஒன்பது வருடங்களாக ஒருக்கணித்துப் படுத்திருப்பதால் இன்னும் உயிர் வாழ்கிறேன்
மேலும் 16.09.09
__________________________________________________________________________________________
மீள்குடியேற்ற நடவடிக்கைக்கு அவுஸ்திரேலியா 5 மில்லியன் டொலர் உதவி
வட பகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் அவுஸ்திரேலியா ஐந்து மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் ஊடாகவும், புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பின் ஊடாகவும் இந்நிதி மூலம் பருவ பெயர்ச்சி மழை காலத்திற்கு முன்னரான அவசர மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதேவேளை இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நீர் மற்றும் அடிப்படை சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவென யுனிசெப் ஊடாக 5.25 மில்லியன் டொலர்களையும் அவுஸ்திரேலியா ஏற்கனவே வழங்கியுள்ளது.
__________________________________________________________________________________________
எம்ஜிஆரைப் பின்தொடர்தல்: நடிகர்களின் கவனத்திற்கு...
ஜி. ஆர். சுரேந்தர்நாத்
தமிழ்நாட்டில் வாழ்வதை விட மிகவும் சுவாரஸ்யமான விஷயம் உலகில் வேறெதுவும் இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. அதுவும் தமிழ்நாட்டின் அரசியலை தொடர்ந்து கவனித்து வருவது, அனைத்து விஷயங்களும் சரிசமமாகக் கலந்த ஒரு மசாலாப் சினிமாவைப் பார்ப்பது போல் உள்ளது. திரையுலகைச் சேர்ந்தவர்கள் அரசியலில் நுழைவது அதிகரிக்க, அதிகரிக்க... திரைப்படத்திற்குரிய பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் திருப்பங்கள் தமிழக அரசியலிலும் நுழைந்துவிட்டது. சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் விஷயம், நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம். நடிகர் விஜய்க்கு ஏறத்தாழ 3500 ரசிகர் மன்றங்களும், அவற்றில் 9.5 லட்சம் உறுப்பினர்களும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் விஜய் தனது ரசிகர்களுக்கிடையே தனது அரசியல் ஆர்வத்தை வெளிப்படையாக அறிவித்தார். பிறகு விஜய் ராகுல்காந்தியை சந்தித்ததும் விஷயம் மேலும் சூடு பிடித்தது. மேலும் 15.09.09
__________________________________________________________________________________________
வடக்கு வங்கிகளில் உரிமை கோரப்படாத பணம் மக்களுக்குக் கடனாக வழங்கப்படும் : டக்ளஸ் திட்டம்
வடக்கு வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ள உரிமை கோரப்படாத பணத்தைக் கொண்டு மக்களுக்குக் கடன் வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டமிட்டுள்ளார். அரசாங்க வங்கிகளில் இவ்வாறு உரிமை கோரப்படாத பெருந்தொகை பணம் வைப்பிலிடப் பட்டுள்ளதாகவும், இவற்றை விவசாய மற்றும் கைத்தொழில் முயற்சிகளை மேற்கொள்ளும் மக்களுக்குக் கடனாக வழங்க அனுமதி வழங்குமாறும் அமைச்சர், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கில் உள்ள வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புக்களின் தொகை ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று, உரிமை கோரப்படாத பெருந்தொகையான நகைகள் வங்கிப் பாதுகாப்புப் பெட்டகங்களில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு உரிமை கோரப்படாத பணம் மற்றும் நகைகளின் விபரங்களை வழங்குமாறு மத்திய வங்கியிடம் தாம் கோரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பின்னர், வட மாகாண பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தப் பணத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். வடக்கு வங்கிகளில் சுமார் இரண்டு பில்லியன் ரூபா பெறுமதியான நகைகள் பாதுகாப்புப் பெட்டகங்களில் பேணப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
__________________________________________________________________________________________
மக்கள் சந்தித்த அழிவுகள் ,இழபபுகள் , அவலங்கள் அதிகமாகும் - ஆயர் வண.கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை
" கிழக்கு மாகாண யுத்த அனர்த்தங்களுடன் ஒப்பிடும் போது வன்னி யுத்தத்தின் போது மக்கள் சந்தித்த அழிவுகள் ,இழப்பகள் , அவலங்கள் அதிகமாகும் ."என மட்டக்களப்பு திருகோணமலை ஆயர் வண.கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை கூறுகின்றார். 2006 ம் ஆண்டு மூதூர் கிழக்கிலிருந்து யுத்த அகதிகளாக இடம் பெயர்ந்து உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக சொந்த கிராமங்களில் மீள் குடியேற்றமின்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியிருக்கும் குடும்பங்கள் மத்தியல் உரையாற்றி யபோதே இவ்வாறு அவர் கூறினார். இக் குடும்பங்களை கிளிவெட்டி இடைத்தங்கல் முகாமிற்கு அனுப்பி வைக்கம் நடவடிக்கைகள் நடை பெற்று வரும் நிலையில் " உதவிய உள்ளங்களுக்கு நன்றி தெரிவிப்போம் " என்ற தலைப்பில் மூதார் இடம் பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கத்தினால் நேற்று மாலை கொக்குவில் இடைத் தங்கல் முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் ஆயர் உட்பட பல வேறு தரப்பினர்களும் கலந்து கொண்டனர் சங்கத்தின் தலைவர் குமாரசாமி நாகேஸ்வரன் தலைமையில் நடை பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண யுத்த அனர்தத்தையும் வன்னி யுத்த அனர்த்தததையும் ஒப்பிட்டு உரையாற்றிய ஆயர் வண.கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை மேலும் 15.09.09
__________________________________________________________________________________________
புலி உறுப்பினர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை அமெரிக்காவின் ஆதரவுடன் நடத்த தீர்மானம்-
பயங்கரவாத தடுப்புச்சட்டம் மற்றும் அவசரகால விதிகள் சட்டங்களின்கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலி உறுப்பினர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆதரவுடன் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி சர்வதேச பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான சட்ட ஆராய்வுபற்றி விசாரணைகளை கண்காணிக்கும் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அனுசரணையுடன் சட்டமா அதிபர் திணைக்களமும், பாதுகாப்பமைச்சும் இணைந்து புலிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன. ஜனாதிபதியின் பணிப்பின்பேரில் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் ஆராயவென சட்டமா அதிபர் மொகான் பீரிஸ் மற்றும் சட்ட புனரமைப்பு அமைச்சின் செயலர் சுகத் கம்லத் ஆகியோர் இவ்வார இறுதியில் அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகின்றது.
__________________________________________________________________________________________
சத்திய வழியில் நின்று சாமானிய மக்களின் முகங்களை முன்னிறுத்துவோம்
- தி. ஸ்ரீதரன், பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்
நாட்டில் அரசு, சிவில் சமூகம், அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்புக்கள், சுற்றாடல் பாதுகாப்பு இயக்கங்கள் இவையெல்லாம் செயற்படுவது நாட்டின் பெருவாரியான மக்களுக்கு நல்வாழ்வொன்றை அமைத்துக் கொடுப்பதாக அமைய வேண்டும். இலங்கை அந்தப் பாதையில் தடம் பதிக்க வேண்டும். ஆக்கபூர்வமான சிந்தனைகள், சமத்துவமான வாழ்க்கை என்பன இங்கு முன்னுரிமை பெற வேண்டும். மேலாதிக்க குறுங்குழுவாத உணர்வுகள் களையப்பட வேண்டும். மக்களை அலைக்கழிப்பதாகவும், துன்புறுத்துவதாகவும் ,சமூகத்தினுள்ளேயும், சமூகங்களிடையேயும் சமத்துவமின்மை நிலவும் வரை மக்களின் முகங்களில் மகிழ்ச்சியை காண முடியாது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களில் பெருந் திரளானவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி நிலவவில்லை. முஸ்லீம்கள், மலையக, சிங்கள மக்கள் உட்பட தற்போதைய வாழ்க்கை முறைமீது கடும் அதிருப்தியே நிலவுகின்றது. எனவே முதலும் முக்கியமாக இன சமூகங்களிடையே சமத்துவமான வாழ்வொன்று கட்டியமைக்கப்பட வேண்டும். மேலும் 15.09.09
__________________________________________________________________________________________
அரசின் முக்கிய அரசியல் பிரமுகரை படுகொலை செய்யும் திட்டம் அம்பலம்: தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் போர்வையில் திட்டம்
அரசாங்கத்தின் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரைப் படுகொலை செய்ய முயற்சிகளை மேற்கொண்டிருந்த பெரும்பான்மை இன சர்வதேச நபர் ஒருவரை கொழும்பு பயங்கரவாத ஒழிப்பு விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். மேற்படி சந்தேக நபர் தென் மாகாண சபை தேர்தல் நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்கும் போர்வையில் இத்தகைய திட்டத்தைத் தீட்டியுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளன. தென் மாகாண சபை தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சமயம் மேற்படி விசாரணைப் பிரிவினர் கடந்த 12ம் திகதி அந் நபரைக் கைது செய்துள்ளனர். ஏற்கனவே பயங்கரவாத ஒழிப்பு விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள புலி சந்தேக நபரிடம் விசாரணை செய்தபோதே அவர் மேற்படி பெரும்பான்மை இன சந்தேக நபர் சம்பந்தமான தகவல்களை வெளியிட்டுள்ளார். பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அந்த சந்தேக நபர் தென் மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவருக்கு ஒத்துழைப்பு வழங்கும் தோரணையில் செயற்பட்டுள்ளார். இவர் வேறொரு கொலைக்கும்பலின் கைக் கூலியாக முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரைக் கொலை செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பொறுப்பேற்றுள்ளார் எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது. மேலும் 15.09.09
__________________________________________________________________________________________
‘ஏங்கெல்ஸ்’ என்றொரு கவிஞர்
தமிழில்: நெல்லை எஸ். வேலாயுதம்
பிரஷ்ய நாட்டின் ரீனிஸ் மாநிலத்திலுள்ள பார்மென் நகரில் 1820ஆம் ஆண்டு நவம்பர் 28ம் நாள் பிரெடெரிக் ஏங்கெல்ஸ் பிறந்தார். ார்மெனில் நகராட்சிப் பள்ளியில் படித்தபின் எல்பர் பீல்ட் இலக்கணப் பள்ளியில் பயின்றார். தனது அசாதாரணத் திறமை காரணமாக வெகு சீக்கிரத்தில் சகமாணவர்களில் முதல் மாணவனாகத் திகழ்ந்தார். வரலாறு மற்றும் கிரேக்க, இலத்தீன், ஜெர்மானிய இலக்கியங்களில் அவர் பேரார்வம் காட்டினார். அந்தக் காலத்தில் அவர் எழுதிய கவிதைகள் பேணிப் பாதுகாக்கப்பட்டுள்ளன. அவரது கடற்கொள்ளைக்காரர்கள் காதை கிரேக்க நாட்டின் சுதந்திர இலட்சியத்தின்பால் ஆழ்ந்த அனுதாபத்தை வெளிப்படுத்தும் காவியமாகும். ஜெர்மன் நாட்டின் தலைசிறந்த இலக்கியங்களை மட்டுமல்லாது சமகாலத்து ஜெர்மானிய எழுத்தாளர்களான, கதே, ஷில்லர், வைலாண்ட், டீய்க், குட்ஸ்கோவ், கார்ல் பெக் ஆகியோரின் படைப்புக்களையும் அவர் கற்றார். அவரது சொற்றொடரில் கூறுவதென்றால் “உலகத்தின் அனைத்து இலக்கியங்களும்” அவரால் படிக்கப்பட்டன. புதினங்களோடு தத்துவஞானம் மற்றும் வரலாற்று நூல்களையும் படித்து அந்நிய மொழிகளில் தனக்குள்ள ஞானத்தை விருத்தி செய்துகொண்டார். ஓவியங்கள் வரைதல் மற்றும் இசைக்காகவும் அவர் குறிப்பிடத்தக்க அளவு நேரத்தைச் செலவு செய்தார். மேலும் 15.09.09
__________________________________________________________________________________________
A MOMENT OF SILENCE, BEFORE I START THIS POEM
Before I start this poem, I'd like to ask you to join me In a moment of silence In honor of those who died in the World Trade Center and the Pentagon last September 11th.
(Read)
__________________________________________________________________________________________
பன்னிரண்டு நாட்களாக நடந்த போராட்டம் முடிவு: தோட்டத் தொழிலாளர்கள் கடமைக்குத் திரும்பினர்
405 ரூபா சம்பள உயர்வு வழங்க இணக்கப்பாடு
தோட்டத் தொழிலாளர்களுக்கு தினமொன்றுக்கு 405 ரூபா சம்பள உயர்வு வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 12 தினங்களாக முன்னெடுக்கப்பட்ட ஒத்துழையாமைப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. நேற்று முதல் தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பி வருவதாகவும் இன்று முதல் தோட்டங்கள் வழமைக்கு திரும்பிவிடும் எனவும் இ. தொ. கா. தலைவரும் பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள உயர்வு வழங்குமாறு கோரி கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்கள் ஒத்துழையாமைப் போராட்டத்தில் குதித்தனர். சம்பள உயர்வு தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்க கூட்டுக் கமிட்டிக்குமிடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. இவற்றில் இணக்கப்பாடு காணப்படாததால் ஒத்துழையாமை போராட்டம் 12 தினங்களாக நீடித்தது. முதலாளிமார் சம்மேளனத்துக்கும் கூட்டுக் கமிட்டிக்குமிடையில் நேற்று முன்தினம் (12) இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்தது. மேலும் 14.09.09
__________________________________________________________________________________________
திசைமாறும் டேவிட் பூபாலபிள்ளையும், கனடிய தமிழ் காங்கிரஸ{ம்?
கனடிய தமிழ் காங்கிரஸ் கடந்த காலங்களில் புலிகளால் நடத்தப்பட்ட நிகழ்வுகளில் மாத்திரம் கலந்து வந்தது என்பது நாம் யாவரும் அறிந்ததே. இது புலிகளின் பினாமி அமைப்பாக செயல்பட்டு வந்ததும் வெள்ளிடைமலை. ஆனால் அண்மைக் காலங்களில் தனது செயற்பாடுகளில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக அவ் அமைப்பின் பொறுப்பாளர் டேவிட் பூபாலப்பிள்ளையின் நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன. இது வரவேற்றகத்தக்கது. குறிப்பாக அண்மையில் கனடா ரொறன்ரோவில் முன்னாள் விடுதலைப்புலிகளின் உறுப்பினரும் தற்போதைய இலங்கை அரசின் அமைச்சர் கருணா ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்ட மட்டுநகர் மக்களின் ஒன்று கூடலில் கலந்து கொண்ட நிகழ்வு அமைகின்றது. இதில் ஜேவிபி, புளொட், ஈரோஸ், பத்தமநாபா ஈபிஆர்எல்எவ் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இவ் நிகழ்வில் இவர் தனது முன்னாள் ‘எதிரி’களுடன் மனம்விட்டு பேசியதாக இவ் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். கிழக்கு மாகாணத்தைப் பிறப்பிடமாக கொண்ட டேவிட் பூபாலப்பிள்ளையை புலிகளின் தற்போதைய ‘தலைமை’ மாற்றான்தாய் கண்ணோட்டத்தில் பார்பதாக செய்திகள் வந்தாலும், இவை எல்லாவிற்கு மேலாக டேவிட் இடம் ஏற்பட்டுவரும் ‘சிந்தனைத் தெளிவு’ இவரின் மனமாற்றத்திற்கு முக்கிய காரணம் என்ற பேச்சுக்களும் எழாமல் இல்லை- நன்றி:சூத்திரம்
__________________________________________________________________________________________
மீள்குடியேற அனுப்பப்பட்ட மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைப்பு
- மாகாண சபை உறுப்பினர் இரா.துரைத்தினம்
இலங்கை வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மீள் குடியேற்றத்திற்காக அனுப்பி வைக்கப்பட்ட 123 குடும்பங்களைச் சேர்ந்த 367 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் இரா.துரைத்தினம் குற்றம் சுமத்துகின்றார் வெள்ளிகிழமை விடுவிக்கப்பட்டு சனிக்கிழமை அதிகாலை மட்டக்களப்பை வந்தடைந்த இக்குடும்பங்கள் சிங்கள மகா வித்தியாலயத்திலும் குருக்கள் மடம் கலைவாணி வித்தியாலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். முன்னர் அழைத்து வரப்பட்ட ஒரு தொகுதியினர் சில மணித்தியாலங்களுக்குள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதை சுட்டிக் காட்டும் அவர், இது தொடர்பாக அரசாங்க அதிபரின் நேரடிக் கவனத்திற்கு கொண்டு வந்த போது இது பாதுகாப்பு தரப்பினர் சம்பந்தப்பட்ட விடயம் என்று பதிலளித்ததாக கூறுகிறார் துரைரட்ணம். இம்முறை அழைத்து வரப்பட்டவர்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட்ட பின்பு அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டதாகவும் இரா .துரைரத்தினம் குறிப்பிடுகின்றார்
__________________________________________________________________________________________
உலக மனசாட்சியை உலுக்கும் நாட்குறிப்புகள்
-அ.குமரேசன்
அடக்குமுறையாளர்களின் ஒடுக்கு முறைகளை மீறி மக்களின் குரல் வரலாற்றில் எதிரொலித்தே வந்திருக்கிறது. ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜி இனவெறி ஆட்சி தலைவெறித்தாடியபோது ஆன் ஃபிராங்க் எழுதிய புத்தகம் அப்படியொரு குரல்தான். ஆன் மேரி ஃபிராங்க் 15 வயதே நிரம்பிய ஒரு யூத இனத்துச் சிறுமி. ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட் நகரில் 1929 ஜூன் 29ல் பிறந்தவள். 13 வயதில் அவள் தன் அனுபவங்களை எழுதத் தொடங்கினாள். அவள் தன் 15வது வயதில் இறந்துபோன பிறகு அது புத்தகமாக வெளிவந்து, உலக சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்கியது. ஹிட்லர் அமைத்த ஒரு சித்ரவதை முகாமில் சுமார் 17,000 யூதர்களைக் கொன்ற, நச் சுக்காய்ச்சலுடன் தோலைப் பழுக்க வைக்கும் ‘டைபஸ்’ என்ற தொற்று நோய்க்கு அவளும் பலியானாள். ஜெர்மனியில் முதலாளித்துவ விதிகளின் கோர நர்த்தனத்தில் வறுமையும் வேலையின்மையும் பாலியல் தொழிலும் தற்கொலைகளும் பெருக, இதற்கெல்லாம் காரணம் யூதர்கள் வந்து குடியேறியது தான் என்ற பிரச்சாரத்தை ஹிட்லர் கூட்டம் கட்டவிழ்த்துவிட்டது. சர்வாதிகாரி ஹிட்லர், ஜெர்மனியைத் “தூய்மைப்படுத்தி” நாஜிகளின் நாடாக மாற்ற ஆணையிட்டான். மேலும் 14.09.09
__________________________________________________________________________________________
மன்னார் கோட்டை சோதனைச் சாவடியில் மக்கள் அசௌகரியம்
வெளி மாவட்டங்களைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டு தற்போது மன்னார் நகர் பகுதியில் வசித்து வரும் மக்கள் அங்கிருந்து வேறு மாவட்டங்களுக்குச் சென்று விட்டுத் திரும்பும் போது, கோட்டை, கடற்படையினரின் சோதனை நிலையத்தில் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மன்னாரில் வசித்து வருகின்றனர். இவர்கள் சுமார் 5 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களின் சொந்த தேவைகளுக்காக அடிக்கடி வேறு மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கின்றது. அவ்வாறு சென்றுவிட்டு மன்னாருக்குத் திரும்பி வரும் போது கோட்டையிலுள்ள கடற்படையினரின் சோதனை சாவடியில் வைத்து இவர்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். மேலும் 14.09.09
__________________________________________________________________________________________
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைப் பெற்றுத்தர ஐரோப்பிய ஒன்றியம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் - கரு ஜயசூரிய
இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை நீக்கிவிடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ள தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்து, அதனை மீண்டும் பெற்றுத்தர வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஒன்றியத்தின் இந்த நடவடிக்கையால் நாட்டிலுள்ள வறிய மக்கள் பெரும் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து கரு ஜெயசூரிய நேற்று சனிக்கிழமை விசேட அறிக்கையொன்றையும் வெளியிட்டார். ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகை நாட்டின் ஆடை உற்பத்தித் தொழிலுக்கான உயிர் மூச்சு. ஆடை உற்பத்தியின் மூலம் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் நேரடியாகவும் ஒரு மில்லியன் பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புப் பெற்றுள்ளனர். தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதியில் 52 வீதத்தை ஐரோப்பிய ஒன்றியமே பெறுகிறது. இது 3.4 பில்லியன் டொலர் வருமானத்தை ஆண்டு ஒன்றுக்கு இலங்கைக்குப் பெற்றுக்கொடுக்கின்றது. நவீன தொழில்நுட்ப வசதிகளையும் குறைந்த தொழிலாளர் ஊதியத்தையும் கொண்ட நாடுகளின் ஆடைகளுடன் இலங்கையின் ஆடைகளும் போட்டி போடுவதற்கான வழிவகையை இந்த வரிச் சலுகையே ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மேலும் 14.09.09
__________________________________________________________________________________________
ஆளுனரின் தலையீடு எம்மை அதிருப்திக்குள்ளாக்குகின்றது-கிழக்கு மாகாணசப அமைச்சரவை கூட்டாக ஜனதிபதிக்கு கடிதம்
கிழக்கு மாகாண ஆளுநரின் நடவடிக்கைகள் காரணமாக அமைச்சர்களும் மாகாண சபை உறுப்பினர்கள் பெரும்பாலானோரும் ஏமாற்றமடைந்துள்ளனர். நாம் புதிதாக எந்த அதிகாரத்தையும் கேட்கவில்லை. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தவும் எமது மக்களின் ஒரு சில எதிர்பார்ப்புகளை மாத்திரமாவது பூர்த்தி செய்யவும் எமக்கு அதிகாரமளிக்கப்பட வேண்டுமென்றே கேட்கிறோம். எமது நியாயபூர்வமான பணிகளில் ஆளுநரின் தலையீடு எம்மை அதிருப்திக்குள்ளாக்குகின்றது. இவ்வாறு கிழக்கு மாகாண சபை முதல்வர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான முழு அமைச்சரவையும் ஒப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கிழக்கு மாகாண சபை முதலமைச்சரான சிவனேசதுரை சந்திரகாந்தன், அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், துரையப்பா நவரத்னராஜா, எம். எஸ். உதுமாலெப்பை, விமலவீர திஸாநாயக்க ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்
__________________________________________________________________________________________
கூட்டமைப்பைக் கலைத்துவிட்டு தனித்தனிக் கட்சிகளாக இணைந்து செயற்படுவதே பலனளிக்கும்
புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்: நேர்கண்டவர் பி. வீரசிங்கம்
ஆயிரக்கணக்கான சிறுவர்களை புலிகள் தமது படையில் பலவந்தமாக சேர்த்தபோது உலகமே அதைப்பற்றி பேசியது. அப்போதும் த. தே. கூட்டமைப்பு அதனை நியாயப்படுத்திப் பேசியது. பாராளுமன்றத்திற்குள்ளேயும் வெளியிலும் அச்சிறுவர்கள் தாங்களாகவே சென்று சேர்ந்துகொள்வதாக கூறினர். ஒரு விடயத்தில் நாம் அனைவரும் தெளிவுடன் இருப்போமானால் அனைத்து பிரச்சினைகளும் ஒரு முடிவுக்கு வரும். அதாவது மே 18 இற்கு முந்திய காலம், மே 18 இற்கு பிந்திய காலம் அல்லது பிரபாகரனுக்கு முன்பு, பிரபாகரனுக்கு பின்பு என தமிழ் மக்களின் பிரச்சினைகளை வகுக்க வேண்டும். மே 18 இற்கு முன் நடந்தது நடந்தவையாகவே இருக்கட்டும். மே 18 இற்குப் பின் நடப்பவை நல்லவையாகவே இருக்கட்டும். நாம் அனைவருமே ஒரு கருத்தொருமையுடன் சிந்தித்து செயற்படுவோமேயானால் நிச்சயம் தமிழ் மக்களுக்கு ஏதோ எங்களால் முடிந்த சேவையை ஆற்ற முடியுமென்று நான் நம்புகிறேன். மேலும் 13.09.09
__________________________________________________________________________________________
இலங்கை ராணுவத்துக்கு வெற்றி கிடைத்தது எப்படி? அறிந்து கொள்ள பல நாடுகளின் ராணுவம் ஆர்வம்
கொழும்பு: விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றி பெற, இலங்கை ராணுவத்தினர் கையாண்ட உத்திகளை ஆய்வு செய்ய, வெளிநாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் கொழும்பு வந்துள்ளனர். அமெரிக்கா, பரிட்டன், ஜப்பான், சீனா, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளும், இலங்கைப் படையினர் கையாண்டிருக்கக் கூடிய புதிய உத்திகள் தொடர்பாக அறிந்து கொள்வதில், அதிகளவு ஆர்வம் காட்டுகின்றன. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், பசிபக் நாடுகளின் ராணுவ அதிகாரிகளுக்கான மாநாடு, இரு வாரங்களுக்கு முன் நடந்தது. இந்த மாநாட்டை, அமெரிக்காவும், ஜப்பானும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இதில், ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, இந்தியா, அமெரிக்கா உட்பட 22 நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை தரைப்படைத் தளபதி ஜகத்ஜயரிய, 13 நாடுகளைச் சேர்ந்த ராணுவ தளபதிகளுடன் தனிப்பட்ட முறையில் பேச்சு நடத்தியதாக தெரிகிறது. அப்போது, புலிகளுக்கு எதிரான போரை, இலங்கைப் படை எவ்வாறு முன்னெடுத்தது என்பதை அறிவதிலேயே, அவர்கள் அக்கறை காட்டியுள்ளனர். மேலும் 13.09.09
__________________________________________________________________________________________
மக்கள் சார் அரசியல் கல்வியின் அவசியம்
தி. ஸ்ரீதரன் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்
கோட்டை கொத்தளங்கள் எல்லாம் சரிந்து விழுந்த பின்னர் ஒருவாறு தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டு சம்பந்தர் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை எச்சரிக்கும் தொனியிலும், மிரட்டல் பாணியிலும் பாரிஸில் இருந்து வெளிவரும் ஈழநாதம் பத்திரிகையில் பாலச்சந்திரன் என்ற ஒருவர் கட்டுரை வரைந்துள்ளார். அவர் சம்பந்தரின் ‘விதி’ பற்றி எச்சரித்துள்ளார். அது மாத்திரமல்லாமல் இனி மேல் ஈழத் தமிழரின் தலைவிதியை புலம் பெயர்ந்த தமிழர்கள் பார்த்துக் கொள்வார்கள் நாட்டிலுள்ள எவருக்கும் அந்த பாத்தியதை இல்லை என்று அகங்காரமாக எழுதப்பட்டுள்ளது. பிரான்ஸ் போன்ற ஜனநாயக நாடுகளில் இந்த புலியிச சிந்தனை எவ்வளவு சுதந்திரமாக முன்னெடுக்கப்படுகிறது என்பதற்கு இதுவொரு மிகச்சிறிய எடுத்துக்காட்டு. அதாவது ஈழத் தமிழர்களுக்கு பரகதியடைவதைத் தவிர வேறு எந்த விமோசனமும் கிடையாது என்றவாறே இந்த வக்கிர புத்திக்காரர்கள் செயற்படுகிறார்கள். ஈழத் தமிழரின் அழிவில் சுகபோகம் அனுபவித்த ஒரு கூட்டம் கடந்த இரண்டரை தசாப்தங்களாக செயற்பட்டு வருகிறது. இது இப்போதும் நிழல் அரசாங்கம் தொடர்பான கனவுகளை உருவாக்கி பணம் பண்ணும் வேலையில் ஈடுபட்டிருக்கிறது. இத்தகைய சக்திகள் அம்பலப்படுத்தப்படுவதோடு முறியடிக்கப்படவும் வேண்டும். மேலும் 13.09.09
__________________________________________________________________________________________
இடம்பெயர்ந்த மக்களை வைத்து அரசியல் நடத்துவது அநாகரிகம்
சமகால அரசியலில் இந்த நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் புலிகளின் பிடியில் சிக்கிச் சில காலம் சொல்லொணாத் துயர் அனுபவித்தவர்கள். புலிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இவர்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினார்கள். அரசாங்கம் புலிகளிடமிருந்து இம்மக்களை விடுவித்து நிவாரணக் கிராமங்களில் தங்க வைத்துப் பராமரிக்கின்றது. இவ்வாறு பராமரிப்பதில் இம்மக்களின் நலனும் நாட்டின் நலனும் சம்பந்தப்பட்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. வன்னிப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் உடனடியாகத் தங்கள் சொந்த இடங்களில் குடியேற முடியாத அளவுக்கு அங்கு கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கின்றன. அப்பிரதேசங்களில் கண்ணி வெடிகளை முற்றாக அகற்றிய பின்னரே இம் மக்கள் அங்கு குடியேற முடியும். மேலும் 13.09.09
__________________________________________________________________________________________
யுத்த அகதிகள் மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டும் வரையறையின்றி நிதி வழங்க முடியாது - ஐ.நா.கூறுகிறது
யுத்தத்தால் அகதிகளாகியுள்ள மக்கள் வெகுவிரைவில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் சபை இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொண்டுள்ள முகாமுக்கு வரையறையின்றி நிதி வழங்கப்படமாட்டாதெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் கோர்டன் வேய்ஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் என "வொய்ஸ் ஒப் அமெரிக்கர்' செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் போராளிகளை இனம் காணும் முயற்சியில் அரசாங்கத்திடமிருந்து மேலும் வெளிப்படைத்தன்மை வேண்டுமென கோர்டன் வேய்ஸ் கூறினார். இடம்பெயர்ந்த மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்புவதில் போதிய முன்னேற்றத்தைக் காண முடியவில்லை. தற்போதைய நிலையை விட மிகத் துரிதமாக மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்த நாம் விரும்புகிறோம். மேலும் 13.09.09
__________________________________________________________________________________________
மலேசிய இந்திய காங்கிரஸ் தேர்தலில் சாமிவேலு ஆதரவாளர்கள் மகத்தான வெற்றி
கோலாலம்பூர், செப். 12: மலேசியாவில் உள்ள இந்திய காங்கிரஸின் (எம்ஐசி) தேர்தலில் டத்தோ சாமிவேலுவின் ஆதரவாளர்கள் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளனர். எம்ஐசி தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. பெரும் பரபரப்புக்கிடையே இத்தேர்தல் நடைபெற்றது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவராக உள்ள டத்தோ சாமிவேலுவின் ஆதரவாளர்கள் வெற்றி பெறுவார்களா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி காணப்பட்டது. கடந்த ஏப்ரலில் கட்சியின் தலைவராக சாமிவேலு மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் பதவிக்கு சாமிவேலுவின் முக்கிய எதிரியான எஸ். சுப்பிரமணியன் போட்டியிட்டார். ஆனால் அவரை மிக அதிக எண்ணிக்கையிலான வாக்கு வித்தியாசத்தில் சாமிவேலுவின் ஆதரவாளரான ஜி. பழனிவேல் தோற்கடித்து துணைத் தலைவரானார். இதில் முன்னாள் துணைத் தலைவராக பதவி வகித்த எஸ். சோதிநாதனும் தோற்றுப் போனார். மேலும் 13.09.09
__________________________________________________________________________________________
இலங்கை மீது ‘நெற்றிக்கண்ணை’த் திறக்கும் மேற்குலக ‘சிவபெருமான்களும்’, அடிபணிய மறுக்கும் ‘நக்கீர’ மகிந்த அரசும்!
- வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)
தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதற்காக இலங்கை அரசு வன்னியில் தொடுத்த இறுதி யுத்தத்தின் போது இது நன்கு தெளிவாகியது. புலிகளின் தலைமைத்துவத்தை நேரடியாகவே தலையிட்டுக் காப்பாற்றுவதற்கு அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல மேற்கு நாடுகள் பகீரதப் பிரயத்தனம் எடுத்தன. இந்தியா மட்டும் இலங்கைக்கு அருகில் உள்ள ஒரு நாடாக இல்லாமல் இருந்திருந்தால், இந்த மேற்கு நாடுகள் இலங்கைக்குள் அத்துமீறிப் புகுந்து பிரபாகரனையும் அவரது சகாக்களையும் காப்பாற்றிச் சென்றிருப்பார்கள். மேற்கு நாடுகள் இறுதி நேரத்தில் தலையிட்டு எப்படியும் காப்பாற்றும் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தபடியால் தான், பிரபாகரனுக்கு ஆரம்பத்திலேயே தப்பியோட வாய்ப்பிருந்தும், அவர் அவ்வாறு ஓடாமல் கடைசி நிமிடம் வரை காத்திருந்து மரணிக்க நேர்ந்தது. அமெரிக்கா எப்படியும் காப்பாற்றும் என பிரபாகரன் உறுதியாக நம்பியிருந்ததாக, வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து தப்பியோடி தமிழகத்தில் புகலிடம் தேடியிருக்கும், புலிகளின் மிகமுக்கிய ஆலோசகரான மு.திருவாவுக்கரசு ‘ஜூனியர் விகடன்’ இதழுக்கு வழங்கிய நேர்காணலில் ஒப்புக்கொண்டிருக்கறார் என்பது முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விடயமாகும். மகிந்த ராஜபக்ச அரசு மேற்குலகின் தொடர்ச்சியான வற்புறுத்தல்களையும் மீறி, புலிகளை முற்றுமுழுதாக அழித்தொழித்து விட்டதே இன்று மேற்குலகம் இலங்கை மீது அறிவிக்கப்படாத ஒரு ‘போரை’த் தொடுத்திருப்பதற்குக் காரணமாகும். மேலும் 12.09.09_
|