|
விடுதலைப் புலிகள் சரண் அடைந்து ஜனநாயக வழிக்கு திரும்பவேண்டும் - இலங்கை ஜனாதிபதி கோரிக்கை
விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கைவிட்டு, படையினரிடம் சரணடைந்து, தேசிய ஜனநாயக வழிக்குத் திரும்ப வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். சனிக்கிழமையன்று விசேட அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்றினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் கூட்டியிருந்தார். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளிற்கு மத்தியில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டின் தற்போதைய சூழ்நிலை குறித்தும், பயங்கரவாதத்தினை முற்றாக ஒழித்துக்கட்டி, நாட்டின் சகல பாகங்களிலும் அமைதியினையும் ஜனநாயகத்தினையும் ஏற்படுத்த தனது அரசு எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் கருத்து வெளியிட்டார். இந்தக் அனைத்துக்கட்சிக் கட்சிக் கூட்டத்தினை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், மூன்றாவது பெரிய அரசியல் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி எனப்படும், ஜே.வி.பியும் புறக்கணித்திருக்கின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமக்கு இதில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும் இந்தக் கூட்டத்தில் கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணா அம்மான் கலந்து கொண்டார். - B.B.C
____________________________________________________________________________________________________________
கிளிநொச்சி பிரதேச இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் வயிற்றோட்ட நோய். பாம்புக்கடி தொல்லையும் ஆரம்பம்
கிளிநொச்சி நகரப்பகுதி வெறுமையடைந்து செல்வதனால், கிளிநொச்சி வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தர்மபுரத்தில் உள்ள சுற்றயல்கூற்று வைத்தியசாலை நோயாளர்களினால் நிரம்பி வழிவதாக சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓரிரு தினங்கள் மழை பெய்தபோதிலும், இன்னும் முறையான மாரிகால பருவ மழை ஆரம்பிக்கவில்லை. இந்த நிலையில் இடம்பெயர்ந்த மக்களில் 50 வீதத்திற்கு அதிகமான மக்கள் முறையான வாழ்விட வசதிகளின்றி வாழ்ந்து வருவதாகவும், 90 வீதமான இடம்பெயர்ந்த மக்கள் மலசலகூட வசதிகளின்றி இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வயிற்றோட்டம் மற்றும் பாம்புகடியினால் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றார்கள். பருவால மாரி மழை முழுவீச்சில் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில், வாழ்விட வசதிகளற்ற மக்கள் மேலும் பாதிக்கப்படலாம் என்றும், தொற்று நோய்கள் அதிகரித்து சுகாதார நிலைமைகள் மோசமடையலாம் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி வைத்தியசாலையின் தளபாடங்கள், உபகரணங்கள் ஒரு தொகுதி விசுவமடு மகாவித்தியாலய கட்டிடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும், எனினும் கிளிநொச்சி வைத்தியசாலையின் ஒருபகுதியை அங்கு இயங்கச் செய்யும் முயற்சி இன்னும் கைகூடவில்லை என்றும் கிளிநொச்சி வைத்தியசால வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. (மேலும்) 12.10.08
____________________________________________________________________________________________________________
தெருவில் தேங்காயை எடுத்து வழியில் பிள்ளையாருக்கு அடிக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரன்!
- வன்னியூரான்
வன்னியில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், யுத்தத்தால் இடம் பெயர்ந்து அகதிகளாக அல்லல்படும் மக்களை சென்று பார்த்து ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்கு விரைந்து அனைத்து உதவிகளையும் செய்யும்படி தனது அமைப்பினருக்கு பணிப்புரை விடுத்ததாகவும், புலிகளின் ஊடகங்கள் கடந்த வாரம் செய்தியொன்றை அவிழ்த்துவிட்டன. இந்த செய்தியில் உண்மை இருந்ததோ இல்லையோ, (வழமையாக இப்படி ஒரு நிகழ்வு என்றால் படங்கள் எடுத்து அமர்க்களப்படுத்தும் புலி ஊடகங்கள், பிரபாகரன் எந்த இடத்தில் சென்று அகதிகளைப் பார்த்தார் என மூச்சும் விடவில்லை) கடந்த வாரத்தின் பிரதான நகைச்சுவைச் செய்தியாக இது பலராலும் நோக்கப்பட்டது. ஒரு பெரிய இயக்கத்தின் தலைவர் பற்றிய ஒரு செய்தி, இவ்வளவுதூரம் நகைச்சுவையாக நோக்கப்பட்டதற்கு காரணம் இல்லாமலில்லை. ஏனெனில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அத்தியாவசியமாகவும் உடனடியாகவும் தேவைப்படுபவை, உணவும் மருந்தும் தங்குமிட வசதிகளுமாகும். இவை எதுவும் போதியளவு வன்னியில் இல்லையென்றும், வன்னிமக்கள் மரங்களின் கீழ் தங்கியிருக்கிறார்கள் என்றும், எனவே இலங்கை அரசாங்கம் வன்னிமக்களுக்கத் தேவையானவற்றை உடனடியாக அனுப்பிவைக்கவேண்டும் என்றும், புலிகள் பெரும் எடுப்பில் பிரச்சாரம் செய்துவருகின்றனர். இலங்கை அரசாங்கம் அனுப்பாதுவிட்டால், புலிகள் மக்களின் அத்தியாவசியத் தேவைகளை எப்படி பூர்த்தி செய்யப்போகின்றார்கள்? மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக, தாமாகவே உற்பத்திசெய்யும் கட்டமைப்புகள் எதுவும் புலிகளிடம் கிடையாதே? மக்களிடம் இருந்த உற்பத்தி முயற்சிகளையும் புலிகள் மக்களிடம் இருந்து பறித்துக் கொண்டவர்களல்லவா? கிளிநொச்சியில் 1ம் 2ம் 3ம் 4ம் 6ம் 6ம் 7ம் வாய்க்கால்களில் இருந்த அமோக விளைச்சலுள்ள செழிப்பான வயல் நிலங்களை பொதுமக்களிடமிருந்து பிடுங்கிக்கொண்ட புலிகள், அவற்றில் தாமும் பயிர் செய்யாமல், உரியவர்களையும் பயிர் செய்யவிடாமல் ‘வைக்கல்பட்டடை நாய்களாக’செயல்பட்டதை வன்னிமக்கள் அனைவரும் அறிவர். (மேலும்) 11.10.08
____________________________________________________________________________________________________________
நெருக்கடியில் உலகப் பொருளாதாரம்: மீட்பு முயற்சிகள் வெற்றியளிக்குமா?
அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தோன்றியிருக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடிகள் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுகொண்டிருப்பதாக உலகப் பொருளாதாரச் சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்கும் வகையில் 700 பில்லியன் டொலர் பொருளாதார மீட்புத் திட்டத்தை அமெரிக்கா முன்னெடுத்தபோதும், அது எதிர்பார்த்த பிரதிபலன்களைத் தரவில்லை என்பதை அமெரிக்க பொருளாதார நிலைமைகள் எடுத்துக்காட்டுகின்றன. அமெரிக்கப் பொருளாதார பிரதான சந்தையான ‘வோல் ஸ்ட்ரீட்’, அமெரிக்காவின் 700 பில்லியன் டொலர் மீட்புத் திட்டத்தினால் அதிக மாற்றங்களுக்கு உட்படவில்லை. ஐரோப்பிய பொருளாதார நிலைமைகளும் நெருக்கடியைச் சந்தித்துள்ள நிலையில், 700 பில்லியன் டொலர் மீட்புத் திட்டம் அங்கு எதிர்பார்த்தளவு பயனைத் தரவில்லை. இதேவேளை, ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதார நிலைமைகளும் வரலாற்றில் முன்னெப்போதும் இருந்திராதளவு நெருக்கடிக்கு முகம் கொடுத்திருக்கிறது. இந்தப் பொருளாதார நெருக்கடியைக் கட்டுப்படுத்தும் உறுதிமொழிகளை பல ஐரோப்பிய நாடுகளும் வழங்கிவருகின்றபோதிலும், அது பொருளாதார சந்தையில் எதிர்பார்த்தளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வங்கிகள் வங்குரோத்து நிலைக்குச் சென்றுவரும் நிலையில், வங்கிகளில் பண வைப்புச் செய்வதற்கு இப்போது அங்கு மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். பண வைப்புக்களுக்கு உத்தரவாதம் வழங்குவதாக ஐரோப்பிய அரசாங்கங்கள் அறிவித்து வருவதையும் மீறி, மக்கள் வங்கிகளிலிருந்து பணத்தை மீளப் பெறுவதுடன், பங்குகளையும் விற்று வருகின்றனர். (மேலும்) 11.10.08
____________________________________________________________________________________________________________
வன்னியிலிருந்து தப்பமுயலும் பொதுமக்கள் புலிகளால் சுட்டுக்கொல்லப்படுகின்றனர்!
முல்லை ஈஸ்வரன்
பொதுமக்களை தமது பாதுகாப்பு கேடயமாக வைத்திருக்கும் புலிகளின் காட்டுமிராண்டித்தனமான செயலால், வன்னிமக்கள் தாங்கமுடியாத துன்பத்துக்கு உள்ளாகி வருகின்றனர்;. யாரையும் என்ன காரணத்துக்காகவும் வன்னியைவிட்டு நகரவிடாமல் புலிகள் இரும்புபிடியை இறுக்கிவைத்துள்ளனர். புலிகளது கோரநடவடிக்கையை புரிந்து கொள்ளவதற்கு, ஒர் உதாரணத்தை குறிப்பிடலாம்.. கிளிநொச்சியில் வேலைபார்த்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரை (கட்டுரையாளருக்குத் தெரிந்தவர்) கடந்த பல வருடங்களாக வன்னியைவிட்டு வெளியேறிச்சென்று தனது குடும்பத்தினரை பார்த்துவர முடியாதபடி புலிகள் தடுத்துவந்துள்ளனர். இப்பொழுது அவருக்கு 60 வயதாகி பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஓய்வு பெற்றபின்னரும்கூட நோயாளியான அவர் யாழ்ப்பாணம் சென்று தனது குடும்பத்தினருடன் இணைந்து வாழ புலிகள் அனுமதிக்கிறார்கள் இல்லை! இப்படி எத்தனையோ சோகவரலாறுகளுடன் வன்னியில் பலர் புலிகளின் கொடும் சட்டங்களின் கீழ் காலத்தை ஓட்டிவருகின்றனர். புலிகளின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக வன்னியைவிட்டு வெளியேறமுடியாத மக்களில் சிலர் இரகசியமான முறையில் படகுகள் மூலம் தப்பி அரசகட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்துள்ள செய்தியை நாம் ஊடகங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. அதை அறிந்த புலிகள் அதையும் தடுப்பதற்கு கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அண்மையில் இரகசியமானமுறையில் காட்டுப்பகுதிகளுக்கூடாக வன்னியைவிட்டு வெளியேற முயன்ற சில பொதுமக்களை,புலிகள் சுட்டுக்கொன்றுள்ளதாக வன்னித்தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவங்களின்போது மணலாறு,கொக்காவில் பகுதிகளில் 16 பொதுமக்கள் வரையில் புலிகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. (மேலும்) 11.10.08
____________________________________________________________________________________________________________
இலங்கை பிரச்னைக்கான அனைத்துக் கட்சி கூட்டம்: அதிமுக, மதிமுக புறக்கணிப்பு பாமக பங்கேற்கும்
சென்னை, அக். 10: இலங்கைப் பிரச்னை தொடர்பாக விவாதிக்க முதல்வர் கருணாநிதி அக்டோபர் 14ம் தேதி கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிமுகவும் மதிமுகவும் வெள்ளிக்கிழமை அறிவித்தன. பா.ம.க. இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் என்று அந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா: இலங்கைப் பிரச்னை தொடர்பாக ம.தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கட்சி பேனர்களையும், கொடிகளையும் போலீஸôர் கிழித்து எறிந்துள்ளனர். இதற்குக் காரணம் கேட்டால், மேலிடத்தின் உத்தரவு என்று காவல்துறையினரால் கூறப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. சார்பில் வாழ்த்துரை வழங்கப்பட இருக்கிறது என்றவுடன், காவல்துறையின் மூலம் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. காவல்துறைக்கும் முதல்வர் கருணாநிதிக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை ராணுவத்துக்கு மத்திய அரசு உதவி செய்வதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் முதல்வர் கருணாநிதி. இந்தப் பிரச்னையை அதிமுக கையில் எடுத்ததாலும், பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்ததாலும் தற்போது இலங்கைத் தமிழர்கள் பிரச்னை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். இது ஒரு கண்துடைப்பு நாடகம். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதற்கான எந்தவித தார்மிக உரிமையும் கருணாநிதிக்கு இல்லை. (மேலும்) 11.10.08
____________________________________________________________________________________________________________
உறவுப்பாலம்
கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் டான் தமிழ்அலை வானொலியில பிரதி சனிக்கிழமை தோறும் இடம்பெறும் உறவுப்பாலம் நிகழ்ச்சி ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிமுதல் 12 மணிவரை ஒலிபரப்பாகிவருகின்றது. 11.10.2008 சனிக்கிழமை இடம்பெறவுள்ள உறவுப்பாலம் நிகழ்ச்சியில் ஈபிஆர்எல்எவ் பத்மநாபாஅணியின் செயலாளர்நாயகம் தோழர் தி. சிறிதரன் (சுகு) அவர்கள் கலந்துகொள்கின்றார். நாட்டின் இன்றைய நிலை குறிப்பாக வன்னி மக்கள் நிலைமை தொடர்பாக நீங்களும் உங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0044 207 047 0655
____________________________________________________________________________________________________________
இலங்கைத் தமிழரும் தமிழகத்தின் அரசியல் பிரதிபலிப்புகளும்
-அகதித்தமிழன்-
இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை பிழையாக விளங்கிக் கொண்டு வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் புலி ஆதரவு சக்திகளின் கனவு கோட்டைகள் தகர்ந்து விழுவதும் வெகு தூரத்தில் இல்லை.
இலங்கை தமிழர்கள் எதிர்நோக்கும் மனிதாபினமான நெருக்கடி, இரண்டாந்தர பிரஜைகளாக வாழும் நிலை அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு ஐக்கிய இலங்கைக்குள் சமாதானமாக வாழ முடியாத சூழ்நிலை ,கடந்த 30 ஆண்டுகளாக இலங்கைத் தமிழர் வாழ்வில் அவலங்களும், துன்பங்களுமே மிச்சமாகி இருக்கிற நிலை நியாயமாகவே தமிழகம் பிரதிபலிக்கவே செய்யும். புவிசார் அரசியல் சூழ்நிலைகளும், மொழி, பண்பாட்டு உறவுகளும் அதற்கு காரணமாய் அமையலாம். தமிழகத்தில் இன்று உருவாகியிருக்கும் உணர்வலைகள் புலிகளுக்கு ஆதரவானவை என்றும் ,அவர்களுக்கு செய்யப்படும் மாலை மரியாதை என்பது போலவும் செங்கம்பள வரவேற்பு என்பது போலவும் புலி ஊடகங்களும், புலிசார்பு ஊடகங்களும் பிரச்சாரம் செய்து வருகின்றன. உண்மையில் இந்த பிரச்சாரம் மிகவும் வெட்கக் கேடானதும், அவமானகரமானதுமாகும். இலங்கையில் எவ்வாறு தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று தம்மை தமிழ் மக்கள் மீது வலிந்து திணிக்கிறார்களோ அதேபோல் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களுக்கும் ஏக உரிமையாளர்கள் தாங்களே என்பது போல் புலிகள் அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். அண்மையில் புலிகளின் பேச்சாளர் நடேசன் தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்தப்படும் போராட்டங்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். ஏதோ தங்கள் சார்பாக தமிழகத்தில் போராட்டம் நடைபெற்றது போல களவாணித்தனமாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள உணர்வலைகளை தமது ஏகபிரதிநிதித்துவத்துவத்தின் அந்தப்புரத்தில் இவற்றை சேர்க்க முனைகின்றனர். (மேலும்) 10.10.08
____________________________________________________________________________________________________________
வடக்கின் முதல்வராக விரும்பும் அந்த வன்னி தலைவர் யார்? வடக்கின் முதல்வர் பதவிக்கு வன்னிக்குள் போட்டியா?
- அர்ச்சுனன்
தமிழ் ஈழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அடுத்த படியாக விடுதலை புலிகளின் இரண்டாம் கட்ட தலைவராக இருந்த (2nd in command) கருணா ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவிபிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜயசிக்குறு (வெற்றி நிட்சயம்) இராணுவ நடவடிக்கைக்கு எதிராக புலிகள் நடத்திய தாக்குதலுக்கு தலைமை தாங்கிய புலிகளின் இரண்டாம் கட்ட தலைவர் கருணா ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற பதவியை ஏற்பார் என்று 6 வருடங்களுக்கு முன்னர் யாராவது நினைத்தது உண்டா? ஆனால் நடந்திருக்கின்றது. அத்துடன் மகிந்தவின் சிந்தனையின் மகிமை குறித்து பேசியுள்ளதோடு, நாங்களே கிழக்கிற்கு அழிவை கொண்டுவந்தோம் , கடந்த காலத்தினை மறந்து கிழக்கினை முன்னேற்றுவோம் என்றும் கூறியிருக்கின்றார். கருணா விடுதலை புலிகளின் இரண்டாம் கட்ட தலைவராக ஒரு போதும் இருந்ததில்லை என்று அவர்களில் யாராவது கூறக்கூடும் எனபதினால் அதனை விளக்க வேண்டியிருக்கின்றது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பத்திரிகையாளர்களை அழைத்து புலிகள் வன்னிக்குள் நடத்திய பத்திரிகையாளர்கள் மகாநாட்டில் , கொப்பேகடுவ உங்களுக்கு பெரும் சவாலாக , மிரட்டலாக இருந்தாரா என ஒரு பத்திரிக்கையாளர் பிரபாகரனை கேட்டிருந்தார். அதற்கு அவர் பதில் வழங்குகையில் “எனக்கு அவர் ஒன்றும் மிரட்டலாக இருந்ததில்லை, கருணா உனக்கு அப்படி இருந்தாரா?” என அருகில் இருந்த கருணாவை பார்த்து பிரபாகரன் கேட்டிருந்தார். இதன் அர்த்தம் என்ன என்பது உங்களுக்கு புரியும் என நினைக்கின்றேன். தனக்கு அடுத்த படியாக கருணாவே இயக்கத்திற்குள் பலமானவர் என்பதினை தன்னை அறியாது அவர் கூறியிருந்தார். (மேலும்) 10.10.08
____________________________________________________________________________________________________________
தமிழர்களின் சுய உரிமைப் போராட்டத்துக்கு எங்கள் ஆதரவு, பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு
- அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா
ச ென்னை, அக். 9: அடிப்படை வசதியில்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருள்களை திரட்டித் தர மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இலங்கைத் தமிழர் பிரச்னையில் தந்திகள் அனுப்புவதாலோ, இலங்கை தூதரக அதிகாரிகளை அழைத்து கண்டிப்பதாலோ எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து, வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:- இலங்கைத் தமிழர் பிரச்னையில் நான் நிலையில்லாமலும், மனம் போனபடியும் பேசுவதாகப் பழி சுமத்துகிறார் முதல்வர் கருணாநிதி. இலங்கைப் பிரச்னையில் எனது நிலைப்பாடும், அதிமுக நிலைப்பாடும் எல்லாருக்கும் நன்கு தெரிந்தது. சட்டத்தின் முன் சமத்துவம் வேண்டியும், கல்வி, வேலை வாய்ப்பில் சமத்துவம் பெறவும், இலங்கைத் தமிழர்கள் நடத்தும் நெடிய போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறோம். சுய நிர்ணய உரிமை வேண்டிய அவர்கள் நடத்தும் தார்மிக போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறோம். தமிழர்கள் தங்களுக்கென சுயாட்சி உரிமையுள்ள தமிழ்த் தாயகம் உருவாக்கிக் கொள்ள அவர்களுக்கு இருக்கும் வேட்கையைப் புரிந்து ஏற்றுக் கொள்கிறோம். அதேசமயம், பகை மூண்டு, திசை மாறிப்போன ஆயுதப் போராட்டத்தினால் பல்லாயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதைக் கண்டு வேதனைப்படுகிறோம். அதற்குக் காரணமான ஆயுதப் போராட்டத்தை எதிர்க்கிறோம். இருவேறு பக்கங்கள்... இலங்கைத் தமிழர் பிரச்னையில் இருவேறு பக்கங்கள் உள்ளன. சுய நிர்ணய உரிமைக்கென்ற தமிழர்களின் போராட்டம் என்பது ஒருபுறம்; ஆயுதம் ஏந்தியவர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடுவது என்பது மறுபுறம். முதலாவதை ஆதரிக்கிறோம். இரண்டாவதை எதிர்க்கிறோம். தமிழர்களின் சுய உரிமைப் போராட்டத்துக்கு எங்கள் ஆதரவு, ஒத்துழைப்பு, நல்லெண்ணம் என்றைக்கும் மாறாது. பயங்கரவாதச் செயல்களை, ஆயுத மோதல்களை, அதிலும் அத்தகைய மோதல்களால் இந்தியாவின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதை ஏற்க முடியாது. (மேலும்) 10.10.08
____________________________________________________________________________________________________________
அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை இலக்குவைத்து குண்டுத் தாக்குதல்: ஒருவர் பலி
பொரளஸ்கமுவ பிரிவெனா சந்திப் பகுதியில் விவசாய அபிவிருத்தி அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை இலக்குவைத்து இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.15 மணியளவில் தற்கொலைக்குண்டுத் தாக்குதலொன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தக் குண்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் விவசாயத்துறை அமைச்சின் செயலாளரும் உள்ளடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்தக் குண்டுத் தாக்குதலில் அமைச்சர் எந்தவித பாதிப்புமின்றி உயிர்தப்பியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இன்றைய குண்டுத் தாக்குதலில் பிரதி அமைச்சர் சிறிபால கம்லத் காயமடைந்திருப்பதாக பாதுகாப்பு பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறினார். காயமடைந்தவர்கள் களுபோவில போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
____________________________________________________________________________________________________________
முல்லைத்தீவு பதுங்குழிகளில் இருந்து கட்டளை பிறப்பிக்கும் பிரபாகரன்:
முல்லைத்தீவில் உள்ள பல பதுங்குகுழிகளில் ஒன்றில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்ந்து வருகிறார். இத்தகைய பதுங்குகுழிகளில் இருந்து கொண்டுதான் வீரச்சாவடைந்த தனது போராளிகளுக்கு அவர் இறுதி வணக்கத்தை செலுத்தி வருகிறார். ஆனால் புலி ஆதரவு இணையத்தளங்களோ போராளிகளின் வித்துடல்கள் வைக்கப்பட்ட இடத்துக்குச் சென்று பிரபாகரன் இறுதி வணக்கம் செலுத்துவதாகக் கூறுகின்றன. இருப்பினும் இது உண்மையல்ல. தீபன் பானு லக்ஸ்மன் பொட்டு அம்மான் மற்றும் சூசை போன்ற சில தளபதிகளை மட்டுமே பிரபாகரன் தனது பதுங்கு குழிகளுக்கு அழைத்து ஆலோசனை நடத்துகிறார். இந்தத் தளபதிகள் இரவு 7 மணி முதல் 10 வரை பிரபாகரனுடன் ஆலோசனை நடத்துகின்றனர். சிறிலங்கா படைத்தரப்பின் தீவிர கண்காணிப்பினால் பகலில் நடமாட வேண்டாம் என்று தமது தளபதிகளுக்கு பிரபாகரன் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். இச்சந்திப்புக்காக வரும் தளபதிகளை பிரபாகரனின் பாதுகாப்புப் படையினராக உள்ள இம்ரான் - பாண்டியன் சிறப்புப் படையினர் முற்று முழுதாக சோதனையிட்ட பின்னரே தங்களது தலைவரை சந்திக்க அனுமதிக்கின்றனர். பிரபாகரன் இப்போது தனது செய்மதி தொலைபேசிகளைப் பயன்படுத்துவதில்லை. செய்மதி தொலைபேசியூடாக தான் இடும் கட்டளைகளை சிறிலங்கா படைப் புலனாய்வு இடைமறித்து கேட்பதை பிரபாகரன் அறிந்திருப்பதால் அவர் செய்மதி தொலைபேசிகளைப் பயன்படுத்துவதில்லை. ஆகையால் தனது நம்பிக்கைக்குரிய போராளிகளின் ஊடாக தகவல் பரிமாற்றங்களை அவர் மேற்கொள்கிறார்.200 சிசி மற்றும் 500 சிசி திறன் கொண்ட தற்கொடைப்படகுகளை கட்டமைப்பது குறித்து கடற்படை தளபதி சூசையுடன் பிரபாகரன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்தப் படகுகள் தளபாடங்களை இறக்குதல் சிறிலங்கா கடற்படையினர் கப்பல்களைத் தாக்குதல் ஆயுதங்களை எடுத்துச் செல்லுதல் தப்பிச் செல்லுதல் எனும் பணிகளுக்காக இந்தப் படகுகளை பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். (மேலும்) 09.10.08
____________________________________________________________________________________________________________
கனடாவில் நிதி சேகரிக்க புலிகள் புதியவழிகளில் முயற்சி!
பார்த்திபன் -
கனடா கனடிய அரசாங்கம் புலிகள் அமைப்பையும் அதன் முக்கியமான முன்னணி அமைப்பான உலகத்தமிழர் இயக்கத்தையும் தடைசெய்த பின்னர்,சற்று குறைவடைந்திருந்த புலிகளின் நிதி வசூல் வேட்டை அண்மைக்காலங்களில் மீண்டும் புதிய வடிவங்களில் ஆரம்பமாகியுள்ளது. வன்னியில் தற்போது புலிகளுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கையை பொதுமக்களுக்கு எதிரான நடவடிக்கையாக சித்தரித்து, இந்த கொள்ளையடிப்பை புலிகள் நடாத்தி வருகின்றனர். நேரடியாக தாம் பணம் வசூலித்தால் பொலிசாரின் வலையில் சிக்கிக்கொள்ள நேரிடும் என்ற காரணத்தால், கனடாவில் செயற்படுகின்ற பாடசாலை பழையமாணவர் சங்கங்கள், ஊர் சங்கங்கள் என்பவற்றின் மூலம் தற்போது நிதி வசூலிப்பு நடைபெறுகின்றது. ஆனால் புலிகளின் இந்த தந்திரம் பற்றியும் பொலிசாரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதால், இந்த சங்கங்களில் பொறுப்பான பதவி வகிக்கும் பலர் மிரள ஆரம்பித்துள்ளனர். ஏனெனில் எப்படி நிதி சேகரிக்கப்படுகின்றது, எவரெவர் அதில் முன்னணியில் நின்று செயல்படுகிறார்கள் போன்ற விபரங்கள் யாவும் புலனாய்வுப்பிரிவினருக்கு கனடிய தமிழ் சமூகத்திலிருந்தே அச்சொட்டாக வழங்கப்பட்டு வருகின்றன. தாயகத்தில் புலிகளால் சொத்து, சுகம் எல்லாவற்றையும் இழந்து, கனடா போன்ற நாடுகளுக்கு ஓடிவந்த தமிழ்மக்களை,‘பனையாலை விழுந்தவனை மாடேறி மிதித்த கதை’யாக, இங்கும் புலிகள் நிம்மதியாக இருக்க விட்டபாடாயில்லை என பலர் அலுத்துக்கொள்வதை காணமுடிகிறது. (மேலும்) 09.10.08
____________________________________________________________________________________________________________
சர்வதேச நிதி நெருக்கடிக்கு தீர்வு காண ஐ.நா.சபை, ஐஎம்எஃப் தவறிவிட்டன: இந்தியா குற்றச்சாட்டு
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் ஏழை நாடுகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஐஎம்எஃப் எந்த வகையில் உதவ முடியும் என்பது குறித்த தொலை நோக்கு சிந்தனையோ அல்லது அதற்கான வழிவகைகளோ இதுவரை காணப்படவில்லை. உலகம் என்பது அமெரிக்க பங்குச் சந்தை அமைந்துள்ள "வால் ஸ்டிரீட்டில்"மட்டும்தான் அடக்கம் என்பதான சிந்தனை மிகவும் தவறா
|