|
ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு பலம்மிக்க பாராளுமன்றம் அவசியம்
உழைக்கும் வர்க்கத்திடம் ஜனாதிபதி வேண்டுகோள்
மஹிந்த சிந்தனையை வெளியிட்டு நாம் அதன் மூலம் செயற்பட்டோம். மக்கள் பிரசாரங்களால் அதனை அறிந்து கொள்ளவில்லை. நாட்டில் மேற்கொள்ளப் பட்ட அபிவிருத்தித் திட்டங்களே மஹிந்த சிந்தனையை மக்களுக்குக் காண்பித்தன. அதன் மூலம் நாம் சொன்னதைச் செய்தோம். அதுவே அத்திட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் மூலம் நாம் 350 ரூபாவுக்கு உரம் வழங்குகிறோம் என்றதையும் நாட்டை ஒன்றிணைப்போம் என்று உறுதியளித்ததையும் நம் தலைவர்கள் பலர் நம்பவில்லை. அதை பகற்கனவு என்றனர். பிரபாகரன் கூட இதெல்லாம் மஹிந்தவின் கனவு எனவும் குறிப்பிட்டதை மறந்துவிட முடியாது. கடினமானது கஷ்டமானது என எதனையும் நாம் செய்யாமலிருக்கவில்லை. கைவிட்டு தப்பியோடவும் நினைக்கவில்லை. கஷ்டம் கடினம் என்றில்லாமல் நாட்டுக்கு எதுதேவையோ அதனை முன்கொண்டே தீர்மானங்களை நிறைவேற்றினோம். மஹிந்த சிந்தனையானது இந்நாட்டு மக்கள் இழந்ததை மீளப்பெற்றுக் கொடுக்கும் கொள்கைத் திட்டமாகும். பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு பெற்றோருக்கு உரிமையில்லாத நிலை இருந்தது. ஒன்றிணைந்த நாடு எமக்கு இழக்கப்பட்டிருந்தது. மஹிந்த சிந்தனை மூலம் இவற்றை நாம் நிறைவேற்றியது மட்டுமன்றி நாட்டிற்கும் மக்களுக்குமான கெளரவத்தையும் பெற்றுக்கொடுத்தோம். (மேலும்) 13.03.10
_____________________________________________________________________________________________
1000 தமிழர்களுக்கு செயற்கைக் கால் வழங்க இந்தியா முடிவு
கொழும்பு:இலங்கையில் நடந்த உள்நாட்டு சண்டையில் கால்களை இழந்த 1,000 தமிழர்களுக்கு, செயற்கை கால்களை வழங்கும் நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த உள்நாட்டு சண்டையில், ஏராளமான தமிழர்கள் காயமடைந்தனர். கண்ணி வெடி மற்றும் வெடி குண்டு தாக்குதல் போன்ற சம்பவங்களால் பலர் கால்களை இழந்தனர்.இவர்களுக்கு, ஜெய்ப்பூரில் தயாரிக்கப்பட்ட செயற்கை கால்களை வழங்கும் நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. பகவான் மகாவீர் விக்லங் சமிதி என்ற தனியார் தொண்டு நிறுவனம் மூலம், இந்த செயற்கை கால்கள், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்கப்படுகின்றன. மொத்தம் 1,000 செயற்கை கால்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.முதல் கட்டமாக, நேற்று வவுனியாவில் செயற்கை கால்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்திலும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 19 பேர் கொண்ட தொழில்நுட்ப குழு ஒன்று, இலங்கையில் முகாமிட்டுள்ளது.
_____________________________________________________________________________________________
ஒடுக்கபட்ட மக்களின் உரிமைகளை அங்கீகரிக்காமல் தமிழ்மக்களின் ஒற்றுமைபற்றி பேசுவது தங்களின் பாராளுமன்ற கதிரைகளை பாதுகாத்து கொள்ளுவதற்காகவேதான்
ரி.பி.சி வானொலி கலந்துரையாடலின்போது இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் பேச்சாளாரும் இலக்கியவாதியுமான தெணியான்
யாழ்ப்பாண மாவட்டத்தில் பாரளுமன்றதேர்தலில் சுயோட்சை குழுவாக போட்டியிடும் இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் உறுப்பினர்கள் பாரளுமன்றத்திற்க்கு தெரிவு செய்யபட்டால் தமிழ்மக்களின் இனப்பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுக்கும் அதேவேளை சிறுபான்மைத் தமிழரின் பிரச்சனைகளையும் முன்வைக்கபடும் என தோழர் தெணியான ரிபிசியில் நடைபெற்ற வியாழக்கிழமை அரசியல் கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார் கடந்த 30 ஆண்டுகளாக ஒடுக்கபட்ட மக்களின் நலண்களை பாதுகாக்கும் வகையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அதேவேளை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இடதுசாரிகட்சிகள் சிறுபான்மை தமிழர்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் எனவும் அந்த நிலமை தற்போதைக்கு இல்லை எனவும் இதனால் தான் ஒடுக்கபட்ட மக்களின் உரிமைகளையும் அவர்களின் நலண்களையும் பாதுகாக்கும் பொருட்ட ஒரு அரசியல் அங்கீகாரத்தை பெற்றுகொள்ளுவதற்க்காகவே இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் உறுப்பினர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் பாரளுமன்றதேர்தலில் சுயோட்சை குழுவாக போட்டியிடுகிறது என தோழர் தெணியான் ரிபிசியில் நடைபெற்ற வியாழக்கிழமை அரசியல் கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார். (மேலும்) 13.03.10
_____________________________________________________________________________________________
நிவாரணக் கிராமங்களில் இன்னும் 93 ஆயிரத்து 800 பேர் மட்டுமே: வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டோரில் 4942 பேர் திரும்பவில்லை - அமைச்சர் சமரசிங்க
இடம்பெயர்ந்த மக்களுள் இன்னமும் 93,823பேர் மட்டுமே மீளக் குடியமர் த்தபடவுள்ளதாக இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். கடந்த மார்ச் 10ஆந் திகதிய கணக்கின்படி வவுனியாவில் உள்ள முகாம்களில் 61,898பேர் உள்ளனர். யாழ்ப்பாணத்தில் 1347பேர் உள்ளனர். வைத்தியசாலைகளில் 1604பேருமாக மொத்தம் 64849 பேர் முகாம் களில் உள்ளனர் என்று கூறிய அமைச்சர் சுதந்திரமாக நடமாட 24032பேர் அனுமதிக் கப்பட்டதாகவும் மேலும் 4942பேர் குறித்த தினத்தில் திரும்பி வரவில்லை யென்றும் கூறினார். இவ்வாறு 28974பேர் சுதந்திரமாக நட மாட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
_____________________________________________________________________________________________
அரசியல் தீர்வு பற்றிய சரியான கருத்து
இலங்கையின் இனப் பிரச்சினைக்கான தீர்வை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மாத்திரமே நடைமுறைப்படுத்த முடியும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ்வுக்குக் கூறியதாக பத்திரிகைச் செய்தியொன்று தெரிவிக்கின்றது. இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது ரவூப் ஹக்கீம் இவ்வாறு கூறியதாக அவரது கட்சியின் முக்கியஸ்தரொருவர் பத்திரிகைக்குத் தெரிவித்திருக்கின்றார். ஹக்கீம் கூறியது முற்றுமுழுதான உண்மை. இன்றைய பாராளுமன்றத் தேர்தலில் பிரதான அணிகளாக மூன்று அணிகள் களத்தில் நிற்கின்றன. இம் மூன்று அணிகளுக்கும் தலைமை தாங்குபவர்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே சிங்கள மக்களின் மத்தியில் மிகப் பெருமளவு ஆதரவு உண்டு. மற்றைய இருவரும் சிங்கள மக்களால் ஏறக்குறைய நிராகரிக்கப்பட்டவர்கள் என்றே கூறலாம். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கையில் தீர்வு காணலாமேயொழிய அதற்குப் புறம்பான எந்தத் தீர்வும் எக்காலத்திலும் சாத்தியமாகாது. ஐக்கிய இலங்கையில் தீர்வு காண்பதற்குச் சிங்கள மக்களின் ஆதரவு அத்தியாவசியமானது. இந்த ஆதரவுடன் நடைமுறைக்கு வரும் தீர்வு தான் நின்று நிலைக்க முடியும். எனவே, சிங்கள மக்களின் ஏகப்பட்ட ஆதரவைப் பெற்றிருப்பவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே, இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்துவதற்குப் பொருத்தமானவர் என்ற கருத்து அர்த்தபூர்வமானது. (மேலும்) 13.03.10
_____________________________________________________________________________________________
உலகின் சிறந்த அரசியல் தலைவராக பிரதமர் மன்மோகன் தேர்வு
வாஷிங்டன் : இந்தாண்டுக்கான உலகின் சிறந்த அரசியல் தலைவர் விருதுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள "அப்பீல் ஆப் கன்சைன்ஸ்' என்ற அறக்கட்டளை அமைப்பு, ஆண்டுதோறும், உலகின் சிறந்த அரசியல் தலைவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இதற்கு முன், பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன், பிரான்சு அதிபர் சர்கோசி போன்றோர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்தாண்டுக்கான உலகின் சிறந்த அரசியல் தலைவராக, பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் செப்டம்பரில், இந்த விருது பிரதமருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
_____________________________________________________________________________________________
பள்ளிபாளையத்தில் கந்துவட்டி கும்பல் வெறியாட்டம்: சிபிஎம் ஊழியர் வேலுச்சாமி படுகொலை
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கந்து வட்டி கும்பலின் அட்டூழி யத்தை அம்பலப்படுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் சி.வேலுச்சாமி (வயது 38) புதன்கிழமை இரவு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். விசைத்தறித் தொழில் நகரமான பள்ளிபாளையத்தில் உள்ள அக்ரஹாரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராக இருந்தவர் சி.வேலுச்சாமி. விசைத்தறி தொழில் நகரமான பள்ளிபாளையத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருக்கின்றனர். இப் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விசைத்தறி தொழிலாளி குடும்பம் ஒன்று கந்து வட்டி கும்பலிடம் கடன் வாங்கியுள்ளது. வாங்கிய கடனைச் செலுத்த முடியாத நிலையில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண், கந்து வட்டி உரிமையாளர் வீட்டுக் குச் சென்று வட்டிப் பணத்தைக் கொடுத்திருக்கிறார். (மேலும்) 13.03.10
_____________________________________________________________________________________________
பிரபாகரனின் தாயார் கனடா பயணம்
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மா அவர்கள் கனடாவுக்கு செல்ல உள்ளதாக முன்னாள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். பிரபாகரனின் தாயார் அவர்களை சிங்கபூரில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் இதனை தொடர்ந்து கனடாவில் உள்ள பிரபாகரனின் சகோதரி அவரை கனடாவுக்கு அழைத்து செல்வார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
_____________________________________________________________________________________________
தேர்தல் களம்: மக்களை ஏமாற்றும் முயற்சியில் மீண்டும் த.தே.கூட்டமைப்பு
- 10.03.2010 தாயகக்குரல்
ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களிலும் அரசியல்ரீதியான செயற்பாடுகளிலும் நாம் தொடர்ந்து தமிழ் இனத்துக்கு விமோசனங்களைப் பெற்றுக்கொடுக்காது ஏமாற்றி வந்திருக்கிறோம். தவறுகளை உணர்ந்து திருந்தாவிட்டால் எமது இனம் எம்மை குப்பைக் கூடைக்குள் வீசிவிடும் என்று கடந்த ஆண்டு யூன் மாதம் வினோநோகராதலிங்கம் தெரிவித்திருந்தார். இவர்கள் மாத்திரமல்ல இரா சம்பந்தன் அண்மையில் பத்திரிகைகளுக்கு விடுத்த செய்தியில் 1994ம் ஆண்டு மற்றும் 2001ம் ஆண்டுகளில் இரு சந்தர்ப்பங்கள் எமக்கு கிடைத்தன. அவை தவறவிடப்படடுவிட்டன என்று தெரிவித்திருக்கிறார். கிடைத்த சந்தர்ப்பங்களை தவற விட்டவர்கள் இப்போது மீண்டும் மக்களிடம் ஆணைகேட்டு வருகின்றனர். கூட்டமைப்பினர் சுயநிர்ணய உரிமை பற்றி பேசுகின்றனர். இவர்கள் கூறும் சுயநிர்ணய உரிமை பிரிந்து செல்வதா அல்லது ஐக்கிய இலங்கைக்குள் தீர்வா என்பது பற்றி எதுவும் கூறாமல் வெறுமனே சுயநிர்ணய உரிமை எனக் கூறுவது மக்களை ஏமாற்றும் செயலாகும். ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையில் தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தன் திருமலையில் நடந்த பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றைக் காண்பதற்கான சாத்தியக்கூறை ஆராய்வதுதான் ஒஸ்லோ பிரகடனம். எனவே சமஷ்டி அடிப்படையில் தீர்வுத்திட்டம் கூட்டமைப்பால் தயாரிக்கப்பட்டிருந்தால் அந்த தீர்வை மக்கள் முன்வைத்து மக்கள் ஆணையைக் கேட்காமல் ஏன் ஆளுக்கு ஆள் சுயநிர்ணய உரிமை, சமஷ்டி, சர்வதேச சமூகத்தின் அங்கீகாரம் என்று வாக்கு கேட்கவேண்டும். அப்படி தொடர்ந்து கேட்பது மக்களை ஏமாற்றும் முயற்சியேயாகும். (மேலும்) 12.03.10
_____________________________________________________________________________________________
சட்டவிரோதமாக தங்கியதற்காக 12 இந்தியர்கள் பிரிட்டனில் கைது
லண்டன் : சட்டவிரோதமாக பிரிட்டனில் தங்கி வேலைபார்த்துவந்ததாக, ஒரு பெண் உட்பட 12 இந்தியர்களை பிரிட்டன் குடியேற்ற அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது அந்நாட்டு அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஹீத்ரூவில் உள்ள ஒரு சரக்கு கிட்டங்கியில் வேலைபார்த்த பணியாளர்களிடம் குடியுரிமை பற்றி விசாரணை நடத்தினர். அதில், இந்தியாவைச் சேர்ந்த எட்டுப் பேரும், சட்டவிரோதமாக குடியேறியுள்ளது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அந்தக் கிட்டங்கி நிறுவனத்துக்கு 58 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல், ஹேஸ் மற்றும் சவுத்ஆல் என்ற பகுதிகளிலுள்ள மூன்று குடியிருப்புகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அதில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் இந்தியர்கள். இருவர் தென்னாப்ரிக்காவை சேர்ந்தவர்கள். இந்த 14 பேரில் ஏழு பேருக்கு, குடியுரிமையை ரத்து செய்து சொந்த நாட்டிற்கு திரும்ப அனுப்பவும் , மற்றவர்களுக்கு நிறுவனம் மூலம் சுற்றுலா விசா எடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். பிரிட்டனில் முறையாக தங்கி வேலை பார்ப்பதற்குரிய ஆவணங்கள், பணியாளர்களிடம் இருக்கிறதா என்று சோதனை செய்யாத நிறுவனங்களுக்கு, ஒரு நபருக்கு ஆறு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என்ற விகிதத்தில் அந்நாட்டில் அபராதம் விதிக்கப்படும்.
_____________________________________________________________________________________________
இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கு
எண்ணிய நூலகத்தூடாக எழுத்தாளர்களை ஆவணப்படுத்தல்
டிகிட்டல் நூலகக் கருத்தரங்கு • ஆவணப்படுத்தல் • வாசிப்பு • பாதுகாத்தல்
இடம்: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம். 58, தர்மராம வீதி. கொழும்பு – 6 - காலம்: மார்ச் 14, 2010 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.30 மணி
தலைமை: கலாநிதி சபா.ஜெயராசா
உரைஞர்கள்: ஜீ.சஜீவன் (நிர்வாக இயக்குநர் – நூலக நிறுவனம்) செல்வி திருச்சந்திரன் ந.ரவீந்திரன்
ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நீர்வை பொன்னையன் இணைப்பாளர் இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்
E-mail – kailashpath@yahoo.com
_____________________________________________________________________________________________
ஊடகம் இனியும் பூடகமில்லை! (பகுதி இரண்டு)
- எஸ்.எம்.எம். பஷீர்
2004ம் அண்டு புது வருடப்பிறப்பினையொட்டி அம்மாத முதல் வார இலண்டன் புலிச்சார்பு பத்திரிகை ஒன்றில் முன்னாள் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன ஒலிபரப்பாளராக பணியாற்றி , அங்கிருந்து இங்கிலாந்துக்கு வந்தபின்னர் , இங்கிலாந்தில் இன்றுவரை பீ. பீ சியின் தமிழோசையில் பகுதிநேர அல்லது ஓய்வு நேர மாற்று அறிவிப்பாளராக பணியாற்றும் சட்டத்தரணியும் , சொலிசிடோருமான விமல் சொக்கநாதன் பிரபாகரனை எவ்வாறு வாழ்த்தினார் என்பதை பார்த்தால் புரியும், இவரெல்லாம் எப்படி நடுநிலை ஊடகவியலாளராக தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அல்லது ஊடக தர்மத்தின் குறைந்த பட்ச நியமங்களை கடைப்பிடிக்க இலாயக்கற்றவர்கள் என்பது. சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் இலங்கையின் வடபுலத்தில் வன்னியில் நிலவிய புலியாட்சிக்காலத்தில் இலங்கைக்கு சென்று, வடக்கிலே புலியாட்சி பிரதேசத்துள் சென்று அங்கு "தமிழீழ ஊடகவியலாளர்களுக்கு " ஊடகம் குறித்து பயிற்சிபாசறை நடத்திவிட்டு வந்தவர் இவர். இவர் ஊடக (அ)தர்மத்தை எவ்வாறு பேணியிருப்பார் என்பதை நீங்களே இனி தீர்மானியுங்கள். இவரது பிரார்த்தனை என்னவாயிற்று என்பது ஒரு புறமிருக்க, இவரது இந்த புகழுரைக்கும் புலியுரைக்கும், பொழிப்புரை தேவையில்லை (மேலும்) 12.03.10
_____________________________________________________________________________________________
சரத் பொன்சேகாவை விசாரிக்க இரண்டு இராணுவ நீதிமன்றங்கள்
-B.B.C News
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகா அவர்கள் இரண்டு இராணுவ நீதிமன்றங்களை எதிர்கொள்ளவுள்ளார். அவற்றின் நீதிபதியாக ஒரு ரியர் அட்மிரல் இருப்பார். அவருக்கு துணையாக மூன்று மேஜர் ஜெனரல்கள் செயற்படுவார்கள். சீருடையில் இருந்தபோதே அவர் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டதாகக் கூறும் மூன்று குற்றச்சாட்டுக்களை ஒரு நீதிமன்றம் விசாரிக்கும். இராணுவ தளவாடங்கள் வாங்குவது தொடர்பில் அவர் விதிகளை மீறியதாக கூறுப்படும் 4 குற்றச்சாட்டுக்களை மற்றொரு நீதிமன்றம் விசாரிக்கும். சரத்பொன்சேகா அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்படைத் தலைமையகத்தில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் அவர் மீது சுமத்தப்படும். இந்தக் குற்றச்சாட்டுக்களின் முழுமையான விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை. அத்துடன் அவர் மீதான விசாரணைகள் மூடிய அறையில் வெளியாருக்கு அனுமதி இல்லாத நிலையில் நடத்தப்படும். தான் எந்தவிதமான தவறையும் செய்யவில்லை என்று சரத் பொன்சேகா கூறிவருகிறார். (மேலும்) 12.03.10
_____________________________________________________________________________________________
எழுவைதீவுக்கு மருத்துவமனை
இலங்கையில் சப்ததீவுகள் என வர்ணிக்கப்படும் சில தீவுகளில் ஒன்றுதான் எழுவைதீவு. கடலையும் மண்ணையும் கடவுளையும் மாத்திரம் நம்பி வாழ்ந்த மக்கள் அச்சிறுதீவிலே பல்லாண்டுகள் வாழ்ந்துவந்தபோதிலும் அவர்களின் அடிப்படைத்தேவைகளில் ஒன்றான மருத்துவமனை என்பது இற்றைவரையில் இல்லை. சுமார் 250 தமிழ்க்குடும்பங்கள் வாழும் இத்தீவில் சைவாலயங்கள், ஆரம்பப்பாடசாலைகள், தேவாலயங்கள் ஒரேஒரு உபதபாற்கந்தோர் ஆகியன இருக்கின்றன. ஆனால் மருத்துவமனைதான் இல்லை. எத்தனையோ அரசுகள் பதவிக்கு வந்தன. அந்தத்தீவுப்பகுதியை உள்ளடக்கிய ஊர்காவற்துறையிலிருந்து பல பாராளுமன்ற அங்கத்தவர்கள் கடந்த காலங்களில் தெரிவாகியிருக்கின்றனர். மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கப்படவில்;லை. எழுவைதீவு மக்கள் தமது மருத்துவதேவைகளுக்காக ஊர்காவற்றுறைக்கோ அல்லது யாழ்ப்பாணத்துக்கோதான் செல்லவேண்டியிருக்கிறது. இந்த சிறுதீவில் கடலையும் மண்ணையும் நம்பி வாழும் மக்களுக்கு காய்ச்சல், தடிமன், இருமல், வயிற்றுவலி, நெஞ்சுவலி வந்தாலும் படகில் ஏறி அக்கரை சென்றுதான் சிகிச்சை பெறவேண்டியிருக்கிறது. அப்படியாயின் கர்ப்பிணித்தாய்மாரின் நிலைமை என்ன? (மேலும்) 12.03.10
_____________________________________________________________________________________________
புளொட் முக்கியஸ்தர்கள் நெடுங்கேணியில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுடன் சந்திப்பு-
புளொட் முக்கியஸ்தர்கள் அடங்கிய தூதுக்குழுவினர் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) வவுனியாவின் நெடுங்கேணிக்கு விஜயம் செய்துள்ளனர். புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் புளொட் வேட்பாளருமான திரு .சிவநேசன் (பவன்), புளொட் முக்கியஸ்தரும்; முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினரும், பொதுத் தேர்தலில் புளொட் வேட்பாளருமான திரு.வை.பாலச்சந்திரன், புளொட் இயக்க முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான திரு.ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் உள்ளிட்ட குழுவினரே நெடுங்கேணிக்கு விஜயம் செய்துள்ளனர். மேற்படி விஜயத்தின்போது இந்த தூதுக்குழுவினர் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களின் அத்தியாவசியத் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், அவர்களுக்கான நிவாரணம், போக்குவரத்து, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட விடயங்களில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததுடன், இவ்விடயங்களை உரியவர்களின் கவனத்திற்கும் கொண்டுவருவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
_____________________________________________________________________________________________
அதிகாரம் மிக்க கிழக்கு மாகாண சபைக்கான ஆணையை கோரும் எமது போராட்டத்தில் புலம்பெயர் மக்களாகிய நீங்களும் இணைந்த கொள்ளுங்கள்.
எதிர்வருகின்ற ஏப்ரல் மாதம் 08ம் திகதி இடம்பெற உள்ள பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளாகிய நாம் தனித்து களமிறங்கியுள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள் கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல இலங்கையில் பல பாகங்களிலும் எமது கட்சி இத்தேர்தலின் ஊடாக தன்னை விரிவு படுத்தியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து குறுகிய கால இடைவெளிக்குள்ளேயே மக்களின் இயல்பு வாழ்வையும் ஜனநாயகச் சூழலையும் மீளக்கட்டியமைப்பதில் நாம் வகித்த பங்கு அளப்பரியது என்பது உலகு அறிந்த உண்மையாகும். இதற்கு எமது கட்சியும் கட்சி உறுப்பினர்களும் தலைமைப்பீடமும் கொண்டிருந்த ஜனநாயகத்தின் மீதான பற்றுறுதியும் அர்ப்பணிப்புகளுமே அடிப்படைக் காரணங்களாகும். கிழக்கு மாகாண சபையை உருவாக்குவதிலும் அதனை திறன்பட இயங்கச் செய்வததிலும் நாம் மும்முரமாக செயற்பட்டோம். கடந்த 30வருட போராட்டங்களில் விளைவுகளாக அழிவுகள் மட்டுமே எஞ்சி நிற்கின்ற இன்றைய நிலையில் எமது மக்களுக்காக கிடைத்துள்ள மிகக் குறைந்த பட்ச தீர்வாக “மாகாணசபை முறைமை” மட்டுமே எஞ்சியுள்ளது. (மேலும்) 12.03.10
_____________________________________________________________________________________________
இலங்கை விவகாரத்தில் அணிசேரா இயக்கம் ஐக்கிய நாடுகள் சபையுடன் முரண்பாடு
இலங்கை விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அணி சேரா நாடுகள் அமைப்பு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர்கள் குழுவொன்றை அமைக்கும் திட்டத்தை தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் கருத்தறியாது பான் கீ மூன், தன்னிச்சையாக நிபுணர்கள் குழுவை நியமிக்க தீர்மானித்துள்ளது குறித்து விசனம் தெரிவித்துள்ள அமைப்பு இது குறித்து தமது அதிருப்தியை கடித மூலம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அதிகாரம் கிடையாதெனவும் குறிப்பிட்ட சில நாடுகள் மீது மட்டும் ஐக்கிய நாடுகள் சபை அழுத்தங்களை பிரயோகித்து வருவதை ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
_____________________________________________________________________________________________
பதுளையில் தொண்டமான் தங்கியிருந்த விடுதி மீது துப்பாக்கிப் பிரயோகம்
நேற்று இரவு பதுளையில் இ.தொ.க தலைவர் ஆறுமுகம் தொண்டமான் தங்கியிருந்த விடுதி மீது இனந்தெரியாதநபர்கள் சிலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். அதேவேளை நேற்று மாலை பதுளை நகரில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த சமயம், அவர்களது வாகனத் தொடரணி மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ்விரு சம்பவங்களையும் கண்டித்து கொட்டகலை, ஹட்டன், பொகவந்தலாவை உள்ளிட்ட பெருந்தோட்டப் பகுதிகளில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய நிருபர் தெரிவித்தார் _
_____________________________________________________________________________________________
யாழ்ப்பாணத்தில் கடவுச் சீட்டு வழங்கும் நிலையம் திறக்க நடவடிக்கை
வடமாகாண மக்களின் நன்மை கருதி கடவுச் சீட்டு வழங்கும் நிலையம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கட்டுப்பாட்டாளர் பி.பி. அபயகோன் தெரிவித்தார். கொழும்பைத் தவிர அநுராதபுரம் மற்றும் மாத்தறை ஆகிய நகரங்களில் கடவுச் சீட்டு வழங்கும் காரியாலயங்கள் இப்போது இயங்கிவருகின்றன. தற்போது இலங்கைக்கு அதிகளவில் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் வர ஆரம்பித்துள்ளதால் கடவுச் சீட்டு வழங்கும் நடைமுறையை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கட்டுப்பாட்டாளர் கூறியுள்ளார்.
_____________________________________________________________________________________________
தெல்லிப்பழை வைத்தியசாலைப் பிரதேசம் பாதுகாப்பு வலயத்திலிருந்து நீக்கம்! யாழ்.நிகழ்வில் வைத்து இராணுவத் தளபதி அறிவிப்பு
தெல்லிப்பழையில் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்கள் குடியிருப்புப் பகுதிகள் சிலவும் பயிர்ச்செய்கை நிலங்களும் மக்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி கூறினார். சிவில் நிர்வாக அலுவலகத் திறப்பு விழாவில் பேசுகையில் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்ததாவது: கடந்த முப்பது வருடங்களாக நடை பெற்று முடிந்த கொடூர யுதத்தினால் யாழ்ப் பாணத்தைச் சேர்ந்த எங்கள் மக்கள் வலுவற்றவர்களாக்கப்பட்டு உறவுகளை இழந்து நிற்கின்றனர். இவ்வாறான தறுவாயில் இப்படியான ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதை என வாழ்வில் ஒரு பாக்கியமான நிகழ்வாகத்தான் கருதுகின்றேன். 1948ஆம் ஆண்டு நாம் பெற்ற சுதந்திரம் சிங்களவர் தமிழர் முஸ்லிம் அனைவரினதும் வேறுபாடற்ற அர்ப்பணிப்புச் சிந்தனைகளினால் கிடைக்கப்பெற்ற ஒன்றாகும். இந்தச் சுதந்திரத்தை அர்த்த முள்ளதாக்குவதற்கு ஈடு இணையற்று உழைத்து அதற்காகப்பாடுபட்ட இலங் கைத் தேசிய சங்கமும் அதிலே அங்கம் வகித்த சேர்.பொன்.இராமநாதன் சேர். பொன்.அருணாசலம் போன்றவர்களின் அர்ப்பணிப்பு போற்றப்படவேண்டியது. (மேலும்) 11.03.10
_____________________________________________________________________________________________
இலங்கையில் சீன முதலீடுகளும் நிதியுதவிகளும்
- B.B.C News
இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமானநிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்கான நிதியுதவிகளை சீனா வழங்குவது தொடர்பான ஒப்பந்தமொன்று இரு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையின் நிர்மாணத்துறை மற்றும் அபிவிருத்தித்துறைகளுடன் தொடர்புடைய மொத்தக் கடன் தொகையில் அரைவாசிக்கும் அதிகமான அளவு சீனாவிடமிருந்தே கிடைத்து வருவதாக கடந்த வாரம் இலங்கை அரசாங்கம் கூறியிருந்தது. நாட்டின் தென் பிராந்தியத்தில் அமைக்கப்படும் இந்த விமான நிலையம் சர்வதேச விமானங்களுக்கான இரண்டாவது தளமாக திகழவுள்ளது. அதிகரித்துவரும் இவ்வாறான பல்வேறு வேலைத்திட்டங்களுக்கும் சீனாவிடமிருந்து இருநூறு மில்லியன் டொலர்கள் வரையான நிதி கிடைக்கின்றது. விமான நிலையத்தின் நிர்மாண வேலைகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. இதற்கு சற்று அயலிலேயே ஹம்பாந்தோட்டையில் பெருந்துறைமுகமொன்றுக்கான நிர்மாணப்பணிகளும் பெருமெடுப்பில் நடந்துவருகின்றன. இதற்கான நிதியும் சீனாவின் பாரிய கடனுதவி வழங்கும் நிறுவனமான ஏற்றுமதி இறக்குமதி வங்கியினால் வழங்கப்பட்டுள்ளது. (மேலும்) 11.03.10
_____________________________________________________________________________________________
ஐரோப். ஆணைக்குழுவிடம் பேச்சு நடத்த அரச உயர்மட்ட குழு பிரஸல்ஸ் பயணம்
சர்வதேச அரங்கிற்கு உண்மை நிலையை விளக்க நடவடிக்கை: பாங் கீ மூனின் நடவடிக்கை ஐ.நா கொள்கைக்கு முரண்
சர்வதேச அரங்கிற்கு இலங்கையின் உண்மை நிலையை எடுத்துச் செல்லும் வகையில் அரசாங்கம் ஐரோப்பிய ஆணைக் குழுவிடம் உயர்மட்ட பேச்சுவார்த்தை யொன்றை நடத்தவுள்ளது. இதற்கென அரசாங்கத்தின் உயர்மட்ட தூதுக் குழுவொன்று எதிர்வரும் 15 ஆந் திகதி திங்கட்கிழமை பிரஸல்ஸ் செல்கின்றது. இந்தக் குழுவில் நிதியமைச்சின் செயலாளர் பீ. பி. ஜயசுந்தர, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க, நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் சுகத கம்லத், சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோர் இடம்பெறுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார். ஜீ. எஸ். பீ. பிளஸ் சலுகை உட்பட இலங்கை நலன் தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து ஐரோப்பிய ஆணைக் குழுவுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படுமென அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (10) முற்பகல் நடைபெற்ற செய்தியா ளர் மாநாட்டில் பேரா சிரியர் பீரிஸ் தெரிவித்தார். (மேலும்) 11.03.10
_____________________________________________________________________________________________
தீர்வுக்கான கொள்கையை முன்வையுங்கள்
- தினகரன் தலையங்கம்
இலங்கையின் உள்விவகாரத்தில் சில உலக நாடுகள் தலையிடுவதற்கு அரசாங்க தரப்பிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்துக்காக ஆணை வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றது. வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தெளிவான ஆணையே சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பு என்று கூட்டமைப்பின் தலை வர் இரா. சம்பந்தன் அண்மையில் கூறியிருக்கின்றார். தமிழ் பேசும் வாக்காளர்கள் எதற்கு ஆணை வழங்க வேண்டுமெனக் கூட்டமைப்புத் தலைவர்கள் கேட் கின்றார்களோ தெரியவில்லை. இனப் பிரச்சினையின் தீர்வுக்காக ஆளுமையுடன் செயற்படுவோம் என்று கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மேலோட்டமாகக் கூறுகின்றார்களேயொழியத் தீர்வுக்காக அவர்கள் முன்வைக்கும் கொள்கைத் திட்டம் என்ன என்பதை மக்களுக்கு இன்னும் வெளிப்படுத்தவில்லை. இந்த நிலையில் எந்தக் கொள்கைக்காக மக்கள் ஆணை வழங்குவது என்ற கேள்வி எழுகின்றது. கடந்துபோன நாட்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனிநாட்டுக் கோரிக்கையுடன் தன்னை நெருக்கமாக இனங்காட்டியது. கூட்டமைப்பு ஒருபோதும் தனிநாட்டை ஆதரிக்கவில்லை என்று சில தலைவர்கள் இப்போது கூறுகின்றனர். அது சந்தர்ப்பத்தையொட்டிய பேச்சே யொழிய உண்மையான நிலைப்பாடாகக் கொள்வதற்கில்லை. (மேலும்) 11.03.10
_____________________________________________________________________________________________
'ரா' மீதான குற்றச்சாட்டுக்கு நிருபமா மறுப்பு
இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்தபோது, இந்திய உளவு அமைப்பான ரா, ராஜபக்ஷவுக்கு எதிராகவும், பொன்சேகாவுக்கு ஆதரவாகவும் செயல்படவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் கூறியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தக் குற்றச்சாட்டை சமீபத்தில், இலங்கை அமைச்சர் நந்தன குணதிலக தெரிவித்திருந்தார். இதுகுறித்து கடந்த வாரம் இலங்கை சென்று திரும்பிய நிருபமாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "உளவுத்துறைக்கு என்று சில வரம்புகள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றை உளவுத்துறை அதிகாரிகள் நன்கு உணர்ந்தே இருக்கிறார்கள். அவர்கள் எக்காரணத்தைக் கொண்டும், இந்த வரம்புகளை மீறிச் செயல்பட மாட்டார்கள். இதை நான் சமீபத்தில் இலங்கை சென்றபோது, அதிபர் ராஜபக்ஷவிடமும், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் தெளிவுபடுத்தி இருக்கிறேன்" என்றார்.
_____________________________________________________________________________________________
பொட்டு அம்மானுடன் தொடர்புகளை பேணிய சுங்க உத்தியோகத்தர்கள் கைது
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானுடன் தொடர்புகளைப் பேணிய இரண்டு சுங்க உத்தியோகத்தர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். யுத்த நிறுத்த உடன்படிக்கை காலப் பகுதியில் குறித்த இரு சந்தேக நபர்களும் பொட்டு அம்மானைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விமான நிலையம் மற்றும் துறைமுகம் ஆகியவற்றின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பொருட்களை அனுப்பி வைத்ததாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் பொருட்களை வன்னிக்கு எடுத்துச் செல்ல விமான நிலையம் மற்றும் துறைமுகம் ஆகியவற்றில் முகவர்களை புலிகள் பயன்படுத்தியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. _____________________________________________________________________________________________
பொது மக்களுடன் நல்லுறவு பேண யாழில் இராணுவ அலுவலகம்
பொது மக்களுடனான உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்தில் இலங்கை இராணுவம் யாழ்ப்பாண த்தில் நேற்று அலுவலகமொன்றை திறந்துள்ளது. இராணுவ தளபதி லெப்டினெட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் உத்தரவின்பேரில், பாதுகாப்பு படைகளின் யாழ். தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த அதுருசிங்க இந்த அலுவலகத்தை நேற்று திறந்து வைத்தார். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு காண இந்த அலுவலகம் உதவும் அதேவேளை, இங்கு பொதுமக்கள் பாதுகாப்பு படையின் யாழ். தளபதியையும் சந்தித்து பேச முடியும். யாழ். குடாநாட்டு மக்களின் வாழ்க்கை நிலையை மீண்டும் வழமைக்கு கொண்டுவரும் நோக்கத்துடனேயே இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
_____________________________________________________________________________________________
மறுபக்கம் (6)
- அஹ்மட் ஷா
நாம் வாழும் உலகு மிகக் கொடுமையானது. அமெரிக்காவில் ஒரு நாள் வீசப் படுகிற உணவு, சோமாலிய மக்கள் ஒரு வாரம் உண்ணப் போதுமானது. 'ரோட்டல் கம்பனிக்கு' (Total Company) எதிரான ஆபிரிக்க மக்களின் போராட்டத்தைத் தேடி வாசியுங்கள். நம் மூத்த பெரியோர்களைப் பார்த்ததுமே மரியாதை, மத ஞாபகங்கள் மனதில் வந்தன. எப்போதும் உள்ள ஒரே ஒரு உண்மையைப் பத்தியம் கட்டி வாழ்ந்தவர்களாக அவர்களைக் காண்கின்றோம். அவர்களின் பலம் அவர்களின் அகச் சுத்தத்தால் புடம் போடப் பட்டு மக்களை ஈர்த்து நின்றது. அது தனியே அவருக்கானதாக இருக்கவில்லை. உதாரணமாக காந்தியைச் சூழ அவரை நம்பி உயர்ந்த ஒவ்வொரு பிரதேசப் பெரிசிகளின் அணிவகுப்பு அவர் பலமாகவே காட்டப் பட்டது. நமக்கு அவர்களெல்லாம் வெறும் தத்துவங்களாயினர். எல்லா மதங்களினதும் மூல அடிப்படை ஒன்றுதான். "நீ சாகப் போகிறவன், அடுத்தவரை அநியாயம் செய்யாதே" மொத்த மானிடமும் அழிகிற இறுதி நாள் பற்றி இஸ்லாத்தில் சேதி ஒன்று உண்டு. இறுதியாக ஊதப் படுகிற பயங்கர ஓசையில் மிருகங்கள் பயந்து போய் மனிதரின் வாழுமிடம் வந்து சேருமென்று. அது வரை மிருகங்கள் எந்த விதப் பயமுமற்று ஒவ்வொரு பொழுதும் அனுபவித்தே வாழ்ந்தன. அவை திகதி போட்டு துக்கமோ சந்தோசமோ கொண்டதில்லை. (மேலும்) 10.03.10
_____________________________________________________________________________________________
நாடாளுமன்றத்தில் மனோ கணேசன் சுலோகம் ஏந்திப் போராட்டம்
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன் நாடாளுமன்றம் கூடிய வேளை சுலோகம் ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டார். "பிரதமர் அவர்களே, கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி நகரத்தில் அராஜக 'கமகே' அரசியலை உடனடியாக தடுத்து நிறுத்தி நீதியும் நியாயமானதுமான தேர்தலை உறுதி செய்யுங்கள்" என சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்தது. கண்டி மாவட்டத்தில் அராஜகமான அரசியல் சூழ்நிலை நிலவுவதாகவும் இதனால் மக்களின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும் அங்கு அவர் தெரிவித்தார். ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் கண்டி மாவட்ட வேட்பாளரான மஹிந்தானந்த அளுத் கமகேவின் தேர்தல் பிரசார நிலையமாக நாவடிப்பிட்டி பொலிஸ்நிலையம் இயங்குவதாக மனோ கணேசன் ஏற்கனவே குற்றம் சுமத்தியிருந்தார். பெரும்பான்மை இனத்தவர்களின் இவ்வாறான செயற்பாடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதன் மூலமே மக்கள் உண்மைகளை தெரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது என வேட்பாளர் மனோ கணேசன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
_____________________________________________________________________________________________
ஊடகம் இனியும் பூடகமில்லை !
எஸ்.எம்.எம். பஷீர்
"நாங்கள் பத்திரிகையாளர்கள் என்ற வகையில் தோல்விகளை பகுப்பாய்வு செய்வதில் மிகச் சிறந்தவர்களாக இருக்கிறோம்; ஆனால் வெற்றிகளை பகுப்பாய்வு செய்வதில் அதிகம் சிறந்தவர்களாக இல்லை " .( “We are very good as journalist at analyzing failures; but we are not so good at analyzing success”- Martyn Lewis ) - மார்ட்டின் லூயிஸ் முன்னாள் பீ.பீ.சீ செய்தி வாசிப்பாளர்.
நடுநிலை ஊடகம் என்று ஒருபக்க மேளம் அடித்த ஊடகவியலாளர்கள் அல்லது அரச ஊடகங்களில் எதிர்தரப்பு கருத்துக்களை இருட்டடிப்பு செய்தவர்கள் எனப்பலர் தமது அரசியல் சார்பு நிலையினை வெளிப்படையாக இன்று கட்சி அரசியலில் தம்மை இணைத்து தேர்தலில்போட்டியிடுவதன் மூலம் இனிமேலும் அவர்கள் தம்மை நடுநிலயாளர்களாக நிறுவுவது சாத்தியமில்லை. அண்மையில்சிங்கள தமிழ் ஊடகவியலாளர்களில் சக்தி தொலைக்காட்சியின் மின்னல் எனும் அரசியல் கலந்துரையாடல் விவாத நிகழ்ச்சியை வாரந்தோறும் நடத்தும், அந்நிகழ்ச்சியூடாக தமிழ் முஸ்லிம் மக்களிடையே நன்கு அறியப்பட்ட யாழ்ப்பாணம் மானிப்பாயை சேர்ந்த ஸ்ரீ ரங்கா ஜெயரத்தினம் இன்று ஐக்கிய தேசியக்கூட்டனியின் வேட்பாளராக மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில் போட்டியிடுகிறார். இவ்வருட ஆரம்பத்தில் இவர் மீது மலையகத்திலுள்ள அரச தரப்பு அரசியல் வாதி ஒருவரினால் தாக்குதல் மேற்கொள்ள முயட்சித்ததாகவும் அதில் அவரது வாகனமும் சகாக்களும் தாக்கப்பட்டதாகவும் செய்தி மிகுந்த பரபரப்பான செய்தியாக்கப்பட்டது. (மேலும்) 10 .03.10
_____________________________________________________________________________________________
இலங்கையில் அவசர காலச் சட்டம் நீட்டிப்பு
இலங்கையில் அவசர காலச் சட்டத்தை நீட்டிப்பதற்கான பிரேரணையை இலங்கை அரசாங்கம் இலகுவாக நிறைவேற்றியுள்ளது. மாதா மாதம் நடக்கின்ற ஒரு வழமையான நிகழ்வுதான் இது என்றாலும், இத்தடவை பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருப்பதால், வாக்களிப்பில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அவசரகாலச் சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டவர்களை விசாரணைகள் இன்றி வருடக்கணக்கில் தடுத்து வைக்க முடியும். 90 நாட்களுக்கு ஒரு தடவை அவர்களை ஒரு நீதிபதியின் முன்பாக நிறுத்தினால் போதும். அரசாங்கம் போரில் வெற்றிபெற்றுவிட்ட போதிலும், நாட்டில் இன்னமும் பயங்கரவாத சக்திகள் எஞ்சியிருப்பதாக கூறுகின்ற அமைச்சர் ராஜித செனிவிரட்ண அவர்கள், நாடு மேலும் ஸ்திரநிலையை எட்டும் வரை அவசரகால சட்டம் அவசியம் என்று கூறினார். இந்த அவசர காலச் சட்டம் சிவப்பு நாடா முறையை - அதிகார வர்க்கத்தின் அளவுக்கதிகமான தலையீட்டை குறைக்கும் என்பதால், அது வடக்கில் அகதிகளின் மீள் குடியேற்றத்துக்கும் உதவியாக உள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனால், ஊடக சுதந்திரம் உட்பட பலவிதமான சுதந்திரங்களை இந்த அவசர காலச் சட்டத்தைக் கொண்டு அரசாங்கம் ஒடுக்குகிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கரு ஜயசூரிய குற்றஞ்சாட்டியுள்ளார்.
_____________________________________________________________________________________________
இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆலோசனைக் குழு நியமிக்கப் போவதாக ஐ.நா. தலைமைச் செயலர் வலியுறுத்தல்
B.B.C News
இலங்கையில் போர்க்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தனக்கு ஆலோசனைகளை கூறுவதற்காக நிபுணர்கள் குழு ஒன்றை நியமிக்கப்போவதாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்கள் கூறியுள்ளார். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தான் நடத்திய தொலைபேசி உரையாடலின்போது இதனை தான் மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களின் நடமாட்டம் மற்றும் அவர்களது நிலைமைகளில் முன்னேற்றத்தைக் காணுவது, ஒரு அரசியல் நல்லிணக்கத்தை காணுவது மற்றும் நடந்த நிகழ்வுகளுக்கான பொறுப்புக்கூறும் நிலைமையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைககளில் முன்னேற்றத்தைக் காணுவது ஆகியவை தொடர்பாக ஜனாதிபதியிடம் பேசியதாகவும் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இலங்கை நிகழ்வுகள் தொடர்பில் பொறுப்புக்கூறல் குறித்த கரிசனைகளை முன்னெடுப்பதற்கான பரந்துபட்ட எல்லைகள் மற்றும் நியமங்கள், அளவீடுகள் குறித்து தனக்கு ஆலோசனை கூறுவதற்காக ஒரு நிபுணர் குழுவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னேடுக்கப்போவதை ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்தியதாக அவர் கூறினார். இதற்காக அரசியல் விவகாரங்கள் குறித்த துணைத் தலைமைச் செயலரான லின் பாஸ்கோ அவர்களை விரைவில் இலங்கை வருவார் என்பதும் ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
_____________________________________________________________________________________________
அமோக ஆதரவுடன் பெண்கள் மசோதா வெற்றி : ராஜ்யசபாவில் மூன்றில் இரண்டு பங்கு கிடைத்தது
பு துடில்லி : லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா நேற்று ராஜ்யசபாவில் அமோக ஆதரவுடன் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 186 எம்.பி.,க்களும், எதிர்ப்பாக ஒரே ஒரு எம்.பி.,யும் ஓட்டளித்தனர். மூன்றில் இரண்டு பங்கிற்கு மேலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். மசோதா நிறைவேறியதன் மூலம், 14 ஆண்டு கால கனவு நனவாகியுள்ளது. லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுந்தது. இதையடுத்து, பெண்கள் இடஒதுக்கீடு மசோதா தயார் செய்யப் பட்டு, ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மசோதாவில், இதர பிற்பட்ட மற்றும் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கும் உள்ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என, முலாயம்சிங்கின் சமாஜ்வாடி, லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம், மாயாவதியின் பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் வலியுறுத்தின.அதனால், ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா, பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழுவும், மசோதாவை தற்போதைய நிலையிலேயே நிறைவேற்ற ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து, மசோதாவை மீண்டும் பார்லிமென்டில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தது. (மேலும்) 10 .03.10
_____________________________________________________________________________________________
பொன்சேகா உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளார்
ஜெனரல் சரத் பொன்சேகாவுக்குக் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்த பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டிருந்த அந்த அனுமதி கடந்த சனிக்கிழமை இரவு முதல் வாபஸ் பெறப்பட்டதையடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்சேக்கா உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டார். இதனால் அரசு அவரது நலன் கருதி நேற்றுமுதல் தொலைபேசி பாவனைக்கான அனுமதி வழங்கியது. இதனையடுத்து பொன்சேகா தனது இரு மகள்மாருடன் மட்டும் உரையாடமுடியும் என அனுமதி அளித்ததை தொடர்ந்து பொன்சேகா சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளார்.
_____________________________________________________________________________________________
எந்தவொரு வெளிநாட்டிற்கும் நாம் அடிமை அல்ல’ மக்களை வாட்டி வதைக்க எந்தச் சட்டத்தையும் அரசு அமுல்படுத்துவதில்லை
சட்டத்தின் ஊடாக பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு எந்தளவு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவார்கள். வடக்கில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் மக்கள் இன்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். பெரும் சுமையிலிருந்து விடுபட்டதைப் போன்று உணர்கிறார்கள். இவ்வாறான ஒரு சுமையை மீண்டும் மக்களின் தலையில் சுமத்த நாம் விரும்பவில்லை. நாட்டையும், சமுதாயத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருந்த புலிப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனினும் புலிகளின் ‘உறுமல்கள்’ ஆங்காங்கே ஒலித்துக் கொண்டிருக்கின்றன. சற்று மாறுதலாக புலிகளின் புள்ளிகளின் நிறம் மட்டும் இன்று மாறியிருக்கிறது. மனித உரிமைகள் பேணப்படுவது குறித்து எம்மிடம் கேள்விகள் கேட்பதன் ஊடாக எமது சுதந்திரத்தில் தலையீடு செய்கிறார்கள். நாம் எந்தவொரு நாட்டினதும் அடிமையல்ல. எந்தவொரு நாட்டினதும் காலனித்துவ நாடும் அல்ல. நிலைமை இவ்வாறு இல்லாவிடினும் சிலர் இப்படித்தான் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் நன்மைக்காக, நாட்டு மக்களின் நன்மைக்காக எடுக்கப்படுகின்ற எந்தவொரு நடவடிக்கைக்கும் பொது இணக்கப்பாடு இல்லாதது பெரும் குறையாக உள்ளது. நாட்டின் மீதும், மக்களின் மீதும் பற்றுள்ளவர்கள் என நீங்கள் நினைப்பீர்களா னால் அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக இருப்பீர்களா? என்பதை கேட்க விரும்புகிறேன். (மேலும்) 10.03.10
_____________________________________________________________________________________________
நிருபமா ராவின் இலங்கை விஜயம்
- தேசாபிமானி
இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி ராஜபக்ஷ மற்றும் தமிழ் அரசியல் கட்சி தலைவர்களை நேற்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது இனப்பிரச்சினை மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பாக பேசப்பட்டதாக தெரிகிறது. 2000ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டுவரை இலங்கைக்கான இந்தியத் தூதுவராக பணிபுரிந்திருப்பதால் இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை நிருபமா ராவுக்கு அனுபவம் அதிகம். எனவே இந்திய வெளியுறவுச் செயலாளராக நிருபமாவின் இலங்கை விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இலங்கை இனப்பிரச்சினைக்கு தமிழர்கள் உட்பட அனைத்து தரப்பினரினதும் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் அரசியல் தீர்வு காண்பதற்கு இலங்கை அரசு அக்கறை காட்டவேண்டும் என அண்மையில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஸ்ரீகிருஷ்ணா வலியுறுத்தியிந்த நிலையில் வெளியுறவுச் செயலாளரின் இலங்கை விஜயம் முக்கியத்துவம் பெறுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. நேற்று 7ம் திகதி தமிழ் கட்சிகள் பல நிருபமாவை சந்தித்துள்ள போதிலும் இலங்கை தமிழ் தினசரிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்தித்தது பற்றியே முக்கியத்துவம் கொடுத்திருந்தன. இந்த பேச்சுவார்த்தையில் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, அரசியல் தீர்வு ஆகியன முக்கியமாக பேசப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. (மேலும்) 09.03.10
_____________________________________________________________________________________________
யாழ்ப்பாணத்தில் தூதரகம் திறக்க இந்திய அரசு ஆர்வம்
கொழும்பு: ""யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரக அலுவலகத்தை விரைவில் துவக்க இந்தியா ஆர்வமாக உள்ளது,'' என வெளியுறவு செயலர் நிருபமா ராவ் கூறியுள்ளார். இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில், அங்கு இந்திய தூதரக அலுவலகத்தை அமைக்க, இந்திய அரசு ஆர்வமாக உள்ளது. இதுகுறித்து, அதிபர் ராஜபக்ஷேயுடன் பேசிய போது, அவர் சாதகமாக பதிலளித்தார். இதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு, மேலும் பலப்படும். உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட மக்களை, மறு குடியமர்த்தும் இலங்கை அரசின் நடவடிக்கைக்கு இந்தியா உதவும். இலங்கை வடக்கு பகுதி மக்கள், மீண்டும் அமைதியான சூழ்நிலையில் வசிக்க வேண்டும் என விரும்புகின்றனர். அவர்கள் பயங்கரவாதத்துக்கு ஆதரவானவர்கள் அல்ல. இவ்வாறு நிருபமா ராவ் கூறினார். இதற்கிடையே, இலங்கை அரசின் நடவடிக்கைகளை கண்டித்து, கடற்படை முகாமில் உண்ணாவிரதம் இருந்து வரும் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா, நேற்றும் தனது போராட்டத்தை தொடர்ந்தார். அவரது மனைவி அனோமா கூறுகையில், ""வெளிநாட்டில் வசிக்கும் எங்கள் மகளோடு தொலைபேசியில் பேசுவதற்கு, அரசு அவருக்கு அனுமதி அளிக்கவில்லை. அவருக்கு இந்த அனுமதி கிடைக்கும் வரை, தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பார்,'' என்றார்.
_____________________________________________________________________________________________
தற்போதை சூழ்நிலையில் தமிழ்கட்சிகள் ஒன்றினைந்து செயற்பட வாய்ப்புகள் இல்லை
- தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன்
புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் தி.சிறீதரன் ஆகியோர் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவுடன் சந்திப்பு
சிறுபான்மை தமிழ்கட்சிகள் தமிழ்மக்களின் அரசியல் பிரச்சனைகளை எடுத்து கூறுவதற்க்காக தனித்துவத்துடன் செயல்படவேண்டியது தமிழ் அரசியல் கட்சிகளின் கடமை என ரிபிசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலின் போது தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும் அக்கட்சியின் வன்னி மாவட்ட தலைமைவேட்பாளருமான தருமலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார் இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறுதுறை செயலாளர் நிருபாமா ராவ்யை சந்தித்தித்து அம்மக்களின் நாளாந்த தேவைகள் தொடர்பாக எடுத்து கூறியதாகவும் அதனை மிகவும் அக்கறையுடன் செவிமடுத்தாகவும் தெரிவித்த அவர் வன்னிமக்கள் தமது உடமைகள் அனைத்தையும் இழந்த நிலையில் வாழ்வதால் அவர்களின் அடிப்படை தேவைகளை நிவிர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதோடு தமிழ் மக்களின் பிரச்சனைக்கான அரசியல் தீர்வினை எட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுகொள்ளுவதாகவும் தெரிவித்தார். (மேலும்) 09.03.10
_____________________________________________________________________________________________
Miliband bracing for parliamentary elections:
Global Tamil Forum latest LTTE front - Prof. Rohan Gunaratna
by Manjula Fernando
Although Britain defended its decision to patronize the inaugural conference of the Global Tamil Forum (GTF) as part of its effort to promote peaceful reconciliation in Sri Lanka in line with its stance to engage with all communities, International Terrorism Expert Prof. Rohan Gunaratna says the GTF is the premier front organization of the LTTE, a designated terrorist organization in Britain. “The LTTE is a designated terrorism organization in the UK. They cannot operate in the UK as the LTTE. Their latest front is the London based GTF,” Prof. Gunaratna said adding that GTF was effectively backed by the pro-LTTE British Tamil Association (BTA) whose chief was arrested by the UK law enforcement authorities in 2007 for aiding the LTTE. He said although most people were not aware, the connection between the GTF and the LTTE remnants is known among the intelligence community. Thus it could not be assumed that Britain was all oblivious to this piece of information. President of GTF, Fr. S.J. Emmanuel former Vicar General of Jaffna was Prabhakaran’s designated ambassador to Europe. He now lives in Germany helping the cause of Eelam. In a newspaper interview he once compared Prabhakaran, a ruthless terrorist who was responsible for mass scale massacres and training human bombs, to Jesus Christ. (Read) 09.0310
_____________________________________________________________________________________________
தி ஹர்ட் லாக்கர் படத்துக்கு ஆறு ஆஸ்கார் விருதுகள்
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஈராக் போர் தொடர்பான திரைக்கதையை அடிப்படையாக கொண்ட "தி ஹர்ட் லாக்கர்' என்ற படம் ஆறு ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளது. "அவதார்' படத்துக்கு மூன்று விருதுகள் கிடைத்துள்ளன. உலக அளவில் சிறந்த திரைக்கதை, தொழில்நுட்பம், நடிப்பு, இயக்கம் போன்றவற்றை பாராட்டி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் விழாவில் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படுகின்றன. நேற்று முன்தினம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த கேத்ரீன் பிகிலோ(58) என்ற பெண் இயக்குனர் தயாரித்த "தி ஹர்ட் லாக்கர்' என்ற படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஈராக் போரின் போது எதிரிகள் வைத்த வெடிகுண்டுகளை அகற்றும் வீரரின் கதையை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படம், திரைக்கதை, சிறந்த இயக்குனர், சிறந்த ஒலிகலவை, ஒலி தொகுப்பு, படத்தொகுப்பு ஆகியவற்றுக்காக இந்த படம் ஆறு ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளது. கேத்ரீனின் முன்னாள் கணவர் ஜேம்ஸ் கேமரூன். இவர் இயக்கிய படம் தான் "அவதார்'. இந்த படத்துக்கு மூன்று விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த கேமரா, கலை இயக்கம், விஷுவல் எபெக்ட் ஆகியவற்றுக்காக அவதார் படத்துக்கு மூன்று விருதுகள் தரப்பட்டுள்ளன. "தி கிரேசி ஹார்ட்' படத்தில், கதாநாயகனாக நடித்த ஜெப் ப்ரிட்ஜஸ், சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார். சிறந்த நடிகைக்கான விருது "தி பிளைன்ட் சைட்' படத்தில் நடித்த சான்ட்ரா புல்லக்குக்கு வழங்கப்பட்டுள்ளது.
_____________________________________________________________________________________________
வடக்குத் தெற்கு வர்த்தகப் பாலம்
தென்பகுதி உற்பத்திப் பொருட்களின் விலைகள் யாழ்குடாநாட்டில் நியாய விலையில் கிடைப்ப தற்கும், யாழ்குடாநாட்டு உற்பத்திப் பொருட்கள் தென்பகுதியில் தாராளமாகக் கிடைப்பதற்கும் தற்போது வழியேற்பட்டுள்ளது. தென்பகுதியில் இருந்து ஏ-9 பாதை ஊடாக யாழ்குடா நாட்டுக்குப் பொருட்களைக் கொண்டு செல்லும்போது பாதுகாப்புக் கருதி இடைவழியில் பொருட்களை ஏற்றி இறக்குவதற்காக அறவிடப்பட்டு வந்த கட்டணம் இப்போது நீக்கப்பட்டுள்ளது. அதேபோல யாழ்குடாநாட்டில் இருந்து உற்பத்திப் பொருட் களை தென்னிலங்கைக்குக் கொண்டு வரும்போது பாதுகாப்புக் கருதி ஏற்றி இறக்குவதற்காக அறவிடப்பட்டு வந்த கட்டணமும் உடனடியாக நீக்கப்பட்டுள்ளது. ஒரு தொன் பொருட்களை ஏற்றி இறக்குவதற்கான கட்ட ணமாக இதுவரை நான்காயிரத்து நூற்றைம்பது ரூபா அற விடப்பட்டு வந்தது. வர்த்தகர்களைப் பொறுத்தவரை மேற் படி கட்டண அறவீடானது பெரும் சுமையாகவே காணப் பட்டது. பொருட்களை ஏற்றியிறக்கும் கட்டணத்துக்கான செலவினத்தை வர்த்தகர்கள் வேறுவழியின்றி நுகர் வோரிடமிருந்தே பெற வேண்டியிருந்தது. (மேலும்) 09.03.10
_____________________________________________________________________________________________
துருக்கியில் நில நடுக்கம்: 57 பேர் சாவு
அங்காரா (துருக்கி), மார்ச் 8: துருக்கியில் திங்கள்கிழமை ஏற்பட்ட கடுமையான நில நடுக்கத்தில் 57 பேர் பலியாகினர். துருக்கியின் கிழக்குப் பகுதியிலுள்ள இலாசிக் என்ற இடத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. நில நடுக்கம் காரணமாக ஏற்பட்ட அதிர்வுகள் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானது. இதில் அங்குள்ள 6 கிராமங்கள் மிகவும் மோசமாக பாதிப்படைந்தன. வீடுகள், மசூதிகள் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அரசின் பேரிடர் உதவிமையம் தெரிவித்துள்ளது. நில நடுக்கம் அதிகாலை 4.32 மணி அளவில் ஏற்பட்டதால் பெரும்பாலானோர் தூக்கத்திலேயே உயிரிழக்க நேரிட்டுள்ளது. அடுத்தடுத்து 30 முறை ஏற்பட்ட தொடர்ச்சியாக நில அதிர்வுகள் ஏற்பட்டன என இஸ்தான்புல்லிலுள்ள நில நடுக்க ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதனால் கிராமங்களிலுள்ள வீடுகள் அனைத்தும் சேதமடைந்தன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட கிராமத்தின் நிர்வாக அதிகாரி கூறுகையில், இங்கு ஒரு வீடு மீதியில்லாமல் அனைத்தும் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இதனால் மக்கள் தங்குவதற்கு இடமின்றி தவித்து வருகிறார்கள் எனக் குறிப்பிட்டார். இந்த கிராமங்களில் உள்ள சாலைகள் குறுகலாக இருப்பதால், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகளில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என இலாசிக் மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
_____________________________________________________________________________________________
இந்திய அதிகாரிகள் ராஜபக்ஷேயை தோற்கடிக்க சதி
கொழும்பு: "அதிபர் தேர்தலில் ராஜபக்ஷே தோற்க வேண்டுமென, சில இந்திய அதிகாரிகள் விரும் பினர்' என்று இலங்கை அமைச்சர் குணதிலகே, பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதை இந்தியா மறுத்துள்ளது. இலங்கை தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் நந்தன குணதிலகே கூறியதாவது: சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில், ராஜபக்ஷேயை தோற்கடிக்க வேண்டும் என்ற முயற்சியுடன் ல இந்திய அதிகாரிகள் செயல்பட்டனர். இதில், இந்திய அரசுக்கோ, பிரதமருக்கோ எந்த தொடர்பும் இல்லை. தனிப்பட்ட ஒரு சில அதிகாரிகள் தான் இவ்வாறு செயல் பட்டனர். கடந்த காலங்களில், விடுதலைப் புலிகளை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் இந்திய உளவு அமைப்பான "ரா' ஈடுபட்டது. இவ்வாறு குணதிலகே கூறினார். இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது.
_____________________________________________________________________________________________
முல்லைத் தீவில் விரைவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு
கொழும்பு, மார்ச், 7: இலங்கையில் முல்லைத் தீவு பகுதியில் போரின் போது தகர்க்கப்பட்ட ஒளிபரப்பு கோபுரம் சீரமைக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து விரைவில் அப்பகுதி மக்களுக்கு தொலைக்காட்சி வசதி மீண்டும் கிடைக்கும் என இலங்கை அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "இறுதி கட்ட போரின் போது விடுதலைப் புலிகளால் முல்லைத்தீவு பகுதியில் உள்ள ஒளிபரப்பு கோபுரம் தகர்க்கப்பட்டது. இந்த கோபுரத்தை சீரமைக்கும் பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. தற்போது பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்த கோபுரம் சீரமைக்கப்பட்டால் வட பகுதியில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களுக்கும் அது பயனுள்ளதாக இருக்கும். இந்த கோபுரத்தை சீரமைக்கும் பணிக்கு ராணுவமும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது' என அந்த அறிக்கை கூறுகிறது.
_____________________________________________________________________________________________
சர்வதேச மகளிர் தினத்தில் முழுவதும் மகளிரே இயக்கும் விமானம்: மும்பை-அமெரிக்காவுக்கு 14 மணி நேர தொடர் பயணம்
சர்வதேச மகளிர் தினம் இன்று (திங்கட்கிழமை) உலக முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாராளுமன்றத்தில் மகளிருக்கான இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்படுகிறது. மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் ஏர் இந்தியா நிறுவனம் முழுக்க முழுக்க மகளிரே இயக்கும் விமான போக்குவரத்தை இன்று முதல்முறையாக இயக்குகிறது. மும்பையில் இருந்து அமெரிக்காவில் உள்ள நிïயார்க் நகருக்கு வழியில் எங்கும் நிற்காமல் 14 மணி நேரம் தொடர்ந்து பயணம் செய்யும் வகையில் போயிங் 777-200 என்ற ரக விமானத்தை முழுவதும் பெண்களே இயக்கும் வகையில் ஏர் இந்தியா நிறுவனம் ஏற்பாடு செய்து உள்ளது. பெண்களே இயக்கும் இந்த விமானத்தில் பெண் கேப்டன்கள் ரஷ்மி மிரன்டா, சுனிதா நகருல்லா ஆகியோர் விமானத்தின் கமாண்டர்களாகவும், பெண் கேப்டன்கள் சுவாதி ரவால், நேகாகுல்கர்னி ஆகியோர் விமானத்தின் முதல் அதிகாரிகளாகவும் இருப்பார்கள். இது தவிர நாட்டின் முக்கிய பகுதிகளுக்கும் பெண்களே இயக்கும் விமானங்களும் இன்றைய தினம் இயக்கப்படுகிறது என்றும் ஏர் இந்தியா தெரிவித்து உள்ளது.
_____________________________________________________________________________________________
பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் வெற்றிச்சின்னம் ராணுவம் அமைக்கிறது
இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடைபெற்று வந்த போர், கடந்த ஆண்டு மே மாதம் முடிவடைந்தது. அப்போது நடந்த சண்டையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. பிரபாகரன் உடல், முல்லைத்தீவு மாவட்டம் நந்திக்கடல் ஏரிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறியது. இந்நிலையில், விடுதலைப்புலிகளுடனான போரில் வெற்றி பெற்றதன் அடையாளமாக, பிரபாகரன் கொல்லப்பட்ட நந்திக்கடல் ஏரி அருகே இலங்கை ராணுவம் வெற்றிச்சின்னம் அமைத்து வருகிறது. இத்தகவலை கொழும்பில் இருந்து வெளிவரும் ஓர் ஆங்கிலப்பத்திரிகை தெரிவித்துள்ளது. பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தை குறிக்கும் வகையிலும், இந்த வெற்றிச்சின்னம் அமைக்கப்பட்டு வருவதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. மேலும், இறுதிக்கட்ட போர் நடைபெற்ற புதுக்குடியிருப்பில் ஒரு வெற்றிச்சின்னம் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது. அதில், போரில் பங்கேற்ற ராணுவப் படைப்பிரிவுகளின் பெயர்கள் செதுக்கப்பட்டுள்ளன. (மேலும்) 08.03.10
_____________________________________________________________________________________________
வடக்கு கிழக்கில் மட்டும் 1000பேர் போட்டி ;மக்களின் ஜனநாயக ஆர்வத்தைக் காட்டுகிறது
- ஜனாதிபதியைச் சந்தித்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் கருத்து
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிடுவது ஜனநாயக நடைமுறையின் மீது மக்கள் வைத்துள்ள ஆர்வத்தை காட்டுவதாக உள்ளது. சமாதானம் மீண்டும் உருவாக்கப்பட்டதையடுத்தே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. தான் சென்ற இடங்களில் எல்லாம் மிகுந்த நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் கூடிய நிலையை காண முடிந்தது என்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமாராவ் கூறியுள்ளார்.இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமாராவ் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து உரையாடினார். அச்சமயமே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது அவர் மேலும் கூறியதாவது, இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்தும் விடயத்தில் இலங்கை குறிப்பிடத்தக்க வெற்றியை கண்டுள்ளது. 70 ஆயிரத்துக்கு குறைவான இடம்பெயர்ந்தவர்களே தற்போது நிவாரணக் கிராமங்களில் உள்ள நிலையில் இந்த விடயம் சர்வதேச சமூகத்தின் அவதானத்திலிருந்து விடுபட்டுள்ளதாக குறிப்பிட்ட இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தும் விடயத்தில் இந்தியா தொடர்ந்து உதவுவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார். (மேலும்) 08.03.10
_
|